tag:blogger.com,1999:blog-79156119354279240532024-03-13T13:01:47.926-07:00தமிழ்த்தேசியம்Unknownnoreply@blogger.comBlogger5557125tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-86785841310381921232011-08-10T11:23:00.000-07:002011-08-10T11:27:04.794-07:00கொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளிபுதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று செவ்வாய்கிழமை இரவு 7.30 தெராடக்கம் 9.30 வரை ஒளிபரப்பியது.
<br />
<br />பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட "இலங்கையின் கொலைக்களங்கள்" என்ற ஆவணப் படத்தை 3 நாட்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பி இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும் இந்த ஹெட்லைன் ருடே தொலைக்காட்சியே ஆகும்.
<br />
<br />இந்த நிலையில் இன்றிரவு இனப்படுகொலையின் கண்கண்ட சாட்சி- இலங்கையில் நடந்த கொலைக்களங்கள் (I witnessed Genocide: Inside Lankas Killing Fields) என்ற ஆவணப்படத்தை இத்தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
<br />
<br />இத் தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் நேரடியாக கிளிநொச்சி சென்று பொதுமக்களைச் சந்தித்துள்ளார். மிகவும் இரகசியமாக எடுக்கப்பட்டுள்ள சில காணொளி ஆதாரங்கள் இப் பதிவில் இடம்பெற்றுள்ளன. <a href="http://www.tamilnet.com/pic.html?path=/img/publish/2011/08/I_Witnessed_Genocide_in_SL_Killing_Fields.jpg&width=720&height=576&caption="><img src="http://www.tamilnet.com/img/publish/2011/08/I_Witnessed_Genocide_in_SL_Killing_Fields_94538_445.jpg" alt="Headlines Today" border="0" width="445" height="356" /></a> <iframe src="http://www.youtube.com/embed/KrIAB6Ntu_o" allowfullscreen="" width="560" frameborder="0" height="349"></iframe>
<br />
<br />எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-26149180485949964962011-08-02T05:50:00.000-07:002011-08-02T06:11:48.824-07:00விடுதலை இராசேந்திரன் ஈழம் படைப்புகள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKfOfp_dhyyq-cprvZzraes47n5bDkXxl5gCb4EULVk8hBvCv8kfCYTPHyBvbMj58rXFOhMAlO03HgMHig2K1IM-WAydab-LJgS3JX1vnpemAb27Y2ocZq-LTbZRCPWjFFCeAfyjF7P5G3/s1600/%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%2588+%25E0%25AE%2587%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 185px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKfOfp_dhyyq-cprvZzraes47n5bDkXxl5gCb4EULVk8hBvCv8kfCYTPHyBvbMj58rXFOhMAlO03HgMHig2K1IM-WAydab-LJgS3JX1vnpemAb27Y2ocZq-LTbZRCPWjFFCeAfyjF7P5G3/s400/%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%2588+%25E0%25AE%2587%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5636245569340607282" border="0" /></a><br /><ul><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15272&Itemid=139">ராஜீவ் கொலை - காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள் (1)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15289&Itemid=139">மாவீரன் கிட்டு வந்த கப்பல் - காட்டிக் கொடுத்தது யார்? (2)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15387&Itemid=139">ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்? (3)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15505&Itemid=139">பிரேமதாசா மீது ஆத்திரம் - இந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம் (4)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15623&Itemid=139">அமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன? (5)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15749&Itemid=139">உளவுத் துறை அதிகாரி உன்னி கிருஷ்ணன்களின் கதை! (6)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15880&Itemid=139">பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்கும் கரங்கள்! (7)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration: none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15881&Itemid=139">பிரபாகரனை 'தீர்த்துக்கட்ட' சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு?</a></li></ul>-------------------------------------------------------------------------------------------<br /><ul><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15621&Itemid=139">ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15286&Itemid=139">இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14333&Itemid=139">இனப்படுகொலைக்கு துணை போன இந்திய அரசே</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14332&Itemid=139">இனப்படுகொலையில் இந்தியாவின் ரகசிய உதவிகள்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14331&Itemid=139">போர்க் குற்றம் புரிந்த ராஜபக்சே: பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14330&Itemid=139">வன்னியில் ஒரு லட்சம் தமிழர்களை ராணுவம் படுகொலை</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14329&Itemid=139">அய்.நா.வில் படுகொலைகளை மறைத்தவர் விஜய் நம்பியார்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14518&Itemid=139">போர்க்குற்றம் - “எங்களை இந்தியா காப்பாற்றும்” - இலங்கை அரசு</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=12349&Itemid=139">கி. வீரமணியின் ‘2010 ஆம் ஆண்டு’ கொள்கை துரோகங்கள்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11284&Itemid=139">அருந்ததிராய் பேசியதில் குற்றம் என்ன?</a></li></ul><br /><a href="http://www.keetru.com/index.php?option=com_aisection&id=15880&Itemid=139">http://www.keetru.com</a>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-64138236612222729082011-08-02T05:39:00.000-07:002011-08-02T05:58:38.198-07:00பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்கும் கரங்கள்! (7)(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு, பகுதி -7)<br /><p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/INDO-SRILANKA-AGREEMENT.png"><img class="alignleft size-full wp-image-2426" title="<p>INDO-SRILANKA AGREEMENT</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/INDO-SRILANKA-AGREEMENT.png" alt="" width="339" height="201" /></a></p><br />இந்திய ராணுவம் ஈழப் பிரதேசத்திலிருந்து வெளியேறுவதற்கு இலங்கை அதிபர் பிரேமதாசா கெடு விதித்ததால் ஆத்திரத்தின் எல்லைக்குச் சென்ற ராஜீவ் காந்தி - பிரேமதாசாவுக்கு எதிராக உளவுத் துறை வழியாக மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். விடுதலைப் புலிகள் இயக்கத்திடமே பிரேமதாசாவை எதிர்க்க சமரசத் தூது அனுப்பியதை முரசொலி மாறன் தந்த பேட்டியிலிருந்தே எடுத்துக் காட்டினோம். பிரேமதாசாவுக்கு எதிரான அரசியல் நெருக்கடிகளையும் உளவு நிறுவனம் உருவாக்கியது.<br /><br />பிரேமதாசாவின் எதிர்கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியைப் பயன்படுத்தி பிரேமதாசா ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளை இந்திய உளவு நிறுவனம் மேற்கொண்டது. இதை விடுதலைப் புலிகள் இயக்கமே மக்களிடம் கூறி எச்சரித்தது. மக்களுக்காக ‘புலிகளின் குரல்’ என்ற வானொலி சேவையை விடுதலைப் புலிகள் நடத்தி வந்தனர். இதைக்கூட புலிகளின் ‘ரகசிய வானொலி’ என்கிறார் ராஜீவ் சர்மா. அது தமிழீழ மக்களுக்காக நடத்திய வெளிப்படையான வானொலி சேவை. அந்த வானொலியில் விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் யோகரத்தினம் என்ற யோகி, இயக்க சார்பாக நாட்டு மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.<br /><br />“பிரேமதாசா அரசாங்கத்தை தூக்கி எறிவதற்காக, இந்திய அரசாங்கம் இலங்கை சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளது. காமினி திசநாயகே மற்றும் அவரது குழுவினரைப் பயன்படுத்தி, பிரேமதாசா ஆட்சியைக் கவிழ்க்க திட்டம் தீட்டினர். ஆனால், அதில் தோல்வி அடைந்து விட்டனர். இப்போது விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையை குலைக்கும் சதியில் இறங்கியுள்ளனர். இதற்கு, இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீது கொண்டு வந்துள்ள தடையைக் காட்டி, பேச்சுவார்த்தையை குலைக்க முயற்சிக்கிறார்கள்” - என்று 1992 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி புலிகளின் வானொலி, நாட்டு மக்களுக்கு அறிவித்தது. இந்தத் தகவலை ராஜீவ் சர்மாவும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.<br /><br />அதே வேளையில், பிரேமதாசா கட்சியிலிருந்தே அவரது ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக இந்திய உளவுத் துறை ஆட்களை தயாரித்தது! பிரேமதாசா ஆட்சியில் ராணுவ அமைச்சராக இருந்தவர் ரஞ்சன் விஜயரத்னே. பிரேமதாசாவின் அய்க்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்தவர். ஆனால் பிரேமதாசாவுக்கு அரசியல் எதிரி. அதிபர் பதவிக்கு அவர் குறி வைத்துக் கொண்டிருந்தார். பிரேமதாசா அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்தார். எனவே, ராணுவம் விஜயரத்னே கட்டுப்பாட்டில் இருந்தது. அதைப் பயன்படுத்தி பிரேமதாசாவுக்கு எதிராக ராணுவப் புரட்சி ஒன்றை நடத்தி, பிரேமதாசாவை வீழ்த்த உளவுத் துறை திட்டங்களை தயாரித்தது. விஜயரத்னேவுக்கு அதிபர் பதவிக்கு முடிசூட்ட வலைவிரித்தார்கள். அந்த திட்டத்தின் அடிப்படையில் அதிபர் பிரேமதாசாவுக்கு தெரியாமலேயே ரகசியமாக தரைப்படை, கப்பல் படை மற்றும் விமானப் படை என்ற முப்படை தளபதிகளின் கூட்டத்தை 1991 மார்ச் 1 இல் விஜயரத்னே கூட்டினார்.<br /><br />இந்த ரகசிய சதித் திட்டம் - பிரேமதாசாவுக்கு தெரிந்து விட்டது. ரகசிய கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே முன்னறிவிப்பின்றி பிரேமதாசா, கூட்டத்துக்குள் திடீர் என்று நுழைந்தார். உள்ளே இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி. பிரேமதாசா எதுவும் பேசாமல் அமைதியாக, சிறிது நேரம் இருந்துவிட்டு, மவுனத்தையே எச்சரிக்கையாக தந்துவிட்டு வெளியேறினார். கூட்டம் கலைக்கப்பட்டது. அடுத்தநாள் காலையே விஜயரத்னே காரில் அலுவலகம் சென்றபோது அவரது காரில் குண்டு வெடித்தது. அது குண்டு துளைக்காத அரசாங்க கார். ஆனாலும் குண்டு வெடித்தது. விஜயரத்னா கொல்லப்பட்டார். இந்த கொலைக்கும் விடுதலைப் புலிகள் மீதே பழி போடுகிறார், ராஜிவ் சர்மா! நியாயமாக பிரேமதாசா தனக்கு எதிராக திட்டமிட்டிருந்த ராணுவப் புரட்சியை ஒடுக்க, அதற்கு சதி செய்தவரை தீர்த்துக் கட்டினார் என்பது கொழும்பு ஊடகங்களே வெளியிட்ட செய்தி. அதை ஏற்றுக் கொள்வதற்கான நியாயமான காரணங்களும் இருக்கின்றன. ஆனால் பழி, ஆதாரம் இல்லாமல் புலிகள் மீதே போடுவதில் என்ன நியாயம்? விடுதலைப் புலிகள் லண்டன் தலைமை அலுவலகத்திலிருந்து தலைமையக பொறுப்பாளர் கிட்டு, புலிகளுக்கு இதில் தொடர்பில்லை என்று மறுத்து அறிக்கையும் விட்டார்.<br /><br />இலங்கையில் காவல்துறை உயர் அதிகாரி தலைமையில் அதிகாரம் கொண்ட குழு ஒன்று செயல்பட்டது. இதன் தலைவராக இருந்தவரின் பெயர் பிரேமதாசா உருகம்பொல என்பதாகும். 34 ஆண்டு அனுபவம் பெற்ற காவல்துறையின் உயர் அதிகாரி. இவர், இந்திய உளவு நிறுவனத்துக்கு ஆதரவாக பிரேமதாசாவுக்கு எதிராக களமிறக்கப்பட்டார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டை இந்திய உளவுத் துறைப் பயன்படுத்தி, பிரேமதாசாவுக்கு எதிரான பேட்டி ஒன்றை அவரிடமிருந்து பெற்று பிரேமதாசாவுக்கு நெருக்கடியை உருவாக்கினார்கள். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ சார்பில் பேட்டி கண்டவர் - ஏதோ அப்பத்திரிகையின் செய்தியாளரோ, உதவி ஆசிரியரோ அல்ல. அந்த ஏட்டின் நிர்வாக இயக்குனராக இருந்த நலபம் என்பவரே பேட்டி எடுத்தார். விடுதலைப் புலிகளுடன் பிரேமதாசா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும், ராணுவ அமைச்சர் விஜயரத்னே கொலைக்கு விசாரணை ஆணையம் நியமிக்க வேண்டும் என்றும் பிரேமதாசாவுக்கு எதிராக இந்தியாவிலிருந்து வெளிவரும் அந்த ஏட்டுக்கு அவர் பேட்டி அளித்தார்.<br /><br />இந்த அதிகாரி, இந்திய உளவு நிறுவனத்தின் சதி வலையில் வீழ்ந்ததைத் தெரிந்து கொண்ட பிரேமதாசா, அவரை உடனே பதவியிலிருந்து நீக்கினார். தலைமறைவாகிவிட்ட அவர் ரகசிய இடத்திலிருந்து இந்தப் பேட்டியை தந்தார். அவர் ரகசியமாக தங்கியிருந்த இடம் இந்தியாவின் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்? இந்திய உளவு நிறுவனத்தின் தொடர்பின்றி அவர், ரகசிய இடத்திற்குப் போய் பேட்டி எடுத்திருக்க முடியுமா?<br /><br />பிரேமதாசா விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசு பிரேமதாவிடம் நிர்ப்பந்தம் தந்தது. பிரேமதாசாவோ அதை ஏற்கவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற உண்மையான கவலை ராஜீவ் காந்திக்கு இருந்திருந்தால், பேச்சுவார்த்தை முயற்சிகளை நியாயமாக ஆதரித்திருக்க வேண்டாமா? இப்படி சீர்குலைப்பது நியாயம் தானா? இந்திய பார்ப்பன ஆட்சியின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.<br /><br />ஆனாலும், விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசா ஆட்சிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னேற்றப் பாதையிலேயே சென்று கொண்டிருந்தது. முதல் கட்டமாக இந்திய ராணுவம் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து உருவானது. அதனடிப்படையில் இந்திய ராணுவம் படிப்படியாக வெளியேற இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதே நேரத்தில் வடக்கு கிழக்கு மாநிலத்தில் இந்தியா, ‘மாகாண சபை’ என்ற ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கி, வரதராசப் பெருமாள் என்ற தனது ‘எடுபிடி’யை முதல்வராக நியமித்திருந்தது. அந்த ஆட்சிக்கு ஆதரவாக ‘தமிழ் தேசிய ராணுவம்’ என்ற ஒரு அமைப்பையும் இந்தியா உருவாக்கி வைத்திருந்தது. இந்த அமைப்பில் இடம் பெற்றிருந்த பெரும்பாலானவர்கள் சிறுவர்கள். அதேபோல் அம்பாறை மாவட்டத்தில் ‘குடிமக்கள் தொண்டர் படைகள்’ என்ற தனக்கு ஆதரவான அமைப்பை உருவாக்கி, அந்த அமைப்புக்கு ஆயுதங்களை இந்தியா வழங்கியிருந்தது. இந்திய ராணுவம் வெளியேறினாலும் இந்தியா உருவாக்கிய ‘விபிஷணப் படை’ ஈழத்தில் நிலை கொண்டிருந்த நிலையில் அந்தப் படைகளையும் கலைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி, பிரேமதாசா விடுதலைப் புலிகளின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை முன்னேறியது. பிரேமதாசாவுக்கும் விடுலைப்புலிகளுக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தை வெற்றிப் பாதையில் விரைந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்திய உளவுத் துறை அது பற்றி ரகசிய அறிக்கை ஒன்றை விரிவாகத் தயாரித்தது. (ectt (R&AW)UO No.1/17-A/89-SLM-346-6959)<br /><br />அதே காலகட்டத்தில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் லலித் அதுலத் முதலி மற்றும் காமினி திசநாயகே இருவரும் விடுதலைப் புலிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தையை நிறுத்த வேண்டும் என்று சிங்களர்களிடையே தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கினர். கடும் நெருக்கடிக்குள்ளான பிரேமதாசா, ஒரு கட்டத்தில் வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார். இந்தியாவை வெளிநாட்டு சக்திகள் என்று குறிப்பிட்ட அவர், “வெளிநாட்டு சக்திகள், நாட்டின் நிலையான தன்மையைக் குலைக்க (Stability) திட்டமிடுகின்றன. அவர்கள் அரசியல் கொலைகளை நடத்த முயற்சிக்கிறார்கள்” என்று பிரேமதாசா பேசத் தொடங்கினார். 1991 அக்டோபர் 19 ஆம் தேதி இலங்கையின் கோவில் நகரமான கண்டியில் தன்னை பதவியிலிருந்து அகற்றிட மேற்கொண்ட சதித் திட்டங்களை வெற்றிகரமாக முறியடித்ததற்காக மாபெரும் பேரணி ஒன்றை பிரேமதாசா நடத்தினார். ‘ஜனநாயகத்தின் வெற்றி’ என்று அந்தப் பேரணிக்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது.<br /><br />அதில் பேசிய பிரேமதாசா, “எனக்கு எதிராக அயல்நாட்டு சக்திகள், சதித் திட்டத்தில் இறங்கியுள்ளன. என்னுடைய அரசியல் எதிரிகளுக்கு இந்த சக்திகள் ஏராளமானப் பணம் தந்து எனக்கு எதிராக அணி வகுப்புகளை நடத்தச் சொல்கின்றன. அதற்கு பெரும் பணம் வாரி இறைக்கப்படுகிறது. அவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பெரிய தொகை வருகிறது? என்னை பதவியிலிருந்து நீக்க அவர்கள் போட்ட சதித் திட்டம் தோற்றுவிட்டதால், நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதுவும் தோற்கடிக்கப்பட்டது. இந்த அயல்நாட்டு சக்திகள் மூலம் எனக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். நான் அரசியல் ரீதியாகப் படுகொலை செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” - என்று பிரேமதாசா பேசினார். இந்திய தேசபக்தி பெருமை பேசுவோரையும், ராஜீவ் காந்தி உண்மையிலேயே ஈழத் தமிழர் பிரச்சினைகளை தீர்க்க முயற்சித்தார்; அவரை கொன்று விட்டார்களே என்று பழித் தூற்றுவோரையும் கேட்கிறோம். இதுதான் இந்தியாவின் உண்மையான முயற்சியா? இதுதான் ஈழத் தமிழர் பிரச்சினையில் ராஜீவ் காந்தி காட்டிய கவலையா?<br /><br />ஈழத் தமிழர் பிரச்சினையில் குழப்பங்களை உருவாக்கிய பார்ப்பன இந்தியாவின் இந்த படுபாதகங்களை மன்னிக்க முடியுமா?<br /><br />பிரேமதாசா கொன்னதுதான் நடந்தது! 1993 ஆம் ஆண்டு பிரேமதாசா மே நாள் பேரணியில் பங்கேற்றபோது மனித வெடிகுண்டுக்கு பலியானார். பிரேமதாசா மே தின அணி வகுப்பில் வந்தபோது அவரது உதவியாளர் மிதிவண்டியை ஓட்டிக் கொண்டு வந்தார். அவர் பிரேமதாசாவின் வீட்டில் வேலை செய்யும் பணியாள். எனவே பாதுகாவலர்கள் பேரணிக்கு உள்ளே செல்ல அனுமதித்தனர். பிரேமதாசாவின் சமையல்காரர் பரிந்துரையில் இந்த பணியாள் வேலைக்கு சேர்க்கப்பட்டவர். பிரேமதாசாவை நெருங்கியவுடன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை அவர் வெடிக்கச் செய்தார். இந்தத் தகவல்களை எல்லாம் ராஜீவ் சர்மாவே தனது நூலில் எழுதியிருக்கிறார். இவ்வளவையும் எழுதிவிட்டு, பிரேமதாசாவைக் கொன்றது விடுதலைப் புலிகள் என்று பழிபோட்டு விடுகிறார். “குண்டு வெடிக்கச் செய்த நபர் தான் ஒரு எல்.டி.டி.ஈ. உளவாளி என்பதை நிரூபித்தார்” என்கிறார் ராஜீவ் சர்மா. இறந்து போனவர் எப்படி தன்னை எல்.டி.டி.ஈ. உளவாளி என்று நிரூபிக்க முடியும்? ‘பிரேமதாசாவை புலிகள் கச்சிதமாக கொலை செய்தார்கள்’ என்று மீண்டும் மீண்டும் இந்த நூல் பல இடங்களில் புலிகளைக் குற்றம் சாட்டுகிறது.<br /><br />விடுதலைப் புலிகள் மீது கொலைக் குற்றம் சாட்டுகிறவர்கள் எப்படி, எங்கே, எந்த முறையில் கொலை செய்தார்கள் என்று எழுதுகிறார்கள். ஆனால் ஒரு கேள்வியை மட்டும் அவர்கள் தந்திரமாக விட்டுவிடுகிறார்கள். ஏன் கொலை செய்ய வேண்டும் என்பதுதான் அந்தக் கேள்வி!<br /><br />பிரேமதாசாவிடம் நெருங்கிச் சென்று வெடிகுண்டை வெடிக்கச் செய்தவன் பெயர் பாபு. பிரேமதாசாவிடம் எப்போதும் நெருக்கமாக இருந்து, அவரது உணவு உள்ளிட்ட அன்றாட பணிகளைக் கவனித்துக் கொண்டு, பிரேமதாசாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் ஈ.எம்.பி. மொய்தீன். இவர் மது, மங்கை போன்ற பலவீனங்களுக்கு உள்ளானவர். இந்தத் தேவைகளை நிறைவேற்றித் தந்தவன் பாபு. மொய்தீனைப் பயன்படுத்தி பாபு, பிரேமதாசாவை நெருங்கி குண்டை வெடிக்க வைத்தான். இந்த உண்மைகளை ஊடகங்களும் வெளியிட்டன. (‘afp’ - செய்தி நிறுவனம். ‘ஜப்பான் டைம்ஸ்’, ஜூன். 5, 1993)<br /><br />பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்பது எவருடைய கரங்கள்?<br /><br />- அடுத்த வாரம்<br /><br />விடுதலை இராசேந்திரன்<br /><ul><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15272&Itemid=139">ராஜீவ் கொலை - காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள் (1)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15289&Itemid=139">மாவீரன் கிட்டு வந்த கப்பல் - காட்டிக் கொடுத்தது யார்? (2)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15387&Itemid=139">ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்? (3)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15505&Itemid=139">பிரேமதாசா மீது ஆத்திரம் - இந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம் (4)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15623&Itemid=139">அமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன? (5)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15749&Itemid=139">உளவுத் துறை அதிகாரி உன்னி கிருஷ்ணன்களின் கதை! (6)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15880&Itemid=139">பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்கும் கரங்கள்! (7)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration: none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15881&Itemid=139">பிரபாகரனை 'தீர்த்துக்கட்ட' சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு?</a></li></ul>-------------------------------------------------------------------------------------------<br /><ul><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15621&Itemid=139">ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15286&Itemid=139">இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14333&Itemid=139">இனப்படுகொலைக்கு துணை போன இந்திய அரசே</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14332&Itemid=139">இனப்படுகொலையில் இந்தியாவின் ரகசிய உதவிகள்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14331&Itemid=139">போர்க் குற்றம் புரிந்த ராஜபக்சே: பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14330&Itemid=139">வன்னியில் ஒரு லட்சம் தமிழர்களை ராணுவம் படுகொலை</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14329&Itemid=139">அய்.நா.வில் படுகொலைகளை மறைத்தவர் விஜய் நம்பியார்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14518&Itemid=139">போர்க்குற்றம் - “எங்களை இந்தியா காப்பாற்றும்” - இலங்கை அரசு</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=12349&Itemid=139">கி. வீரமணியின் ‘2010 ஆம் ஆண்டு’ கொள்கை துரோகங்கள்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11284&Itemid=139">அருந்ததிராய் பேசியதில் குற்றம் என்ன?</a></li></ul><br /><a href="http://www.keetru.com/index.php?option=com_aisection&id=15880&Itemid=139">http://www.keetru.com</a>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-24340962105622323142011-08-02T05:37:00.000-07:002011-08-02T05:58:51.723-07:00அமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன? (5)<h4 class="singlePageTitle"> </h4> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/raw.jpg"><img class="alignleft size-full wp-image-2148" title="<p>raw</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/raw.jpg" alt="" width="246" height="219" /></a>பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைத் தொடங்கியதை குலைத்து பிரேமதாசாவுக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்க திட்டமிட்டது இந்திய உளவுத் துறை! தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இருவரும் 1989 ஜூலை 13 ஆம் தேதி கொழும்பில் அமிர்தலிங்கம் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். அமிர்தலிங்கம் அவர்களோ, யோகேஸ்வரனோ, ஆயுதம் தாங்கிய போராளிகள் அல்ல. காந்திய வழியைப் பின்பற்றியவர் அமிர்தலிங்கம். அவர் செய்த ஒரே தவறு, இந்திய உளவுத் துறையை முழுமையாக நம்பியதுதான். தமிழ் ஈழ விடுதலையை இந்தியா மீட்டெடுத்து, தன்னிடம் ஒப்படைக்கும் என்று அவர் மலை போன்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார். ஆனால் நடந்ததோ வேறு.</p> <p style="text-align: justify;">அமிர்தலிங்கம் – யோகேஸ்வரன் ஆகிய இரு தலைவர்களையும், அவரது வீட்டில் சுட்டுவிட்டு தப்பி வெளியே ஓடி வந்த 3 பேரை அமிர்தலிங்கம் வீட்டில் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட காவலர்கள் சுட்டுக் கொன்றனர். இந்தக் கொலைப் படைக்கு தலைமை தாங்கி காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர் விசு, அலாய்சியஸ், விக்னம் ஆகிய மூன்று பேர். இதில் விசு – யார்? மாத்தையாவின் வலதுகரமாக செயல்பட்டவர்.</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/sl-ltte-peace-talk.jpg"><img class="alignleft size-medium wp-image-2562" title="<p>sl-ltte-peace - talk</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/sl-ltte-peace-talk-300x105.jpg" alt="" width="300" height="105" /></a>இந்திய உளவுத் துறையின் வலையில் சிக்கியிருந்த மாத்தையா – பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தையைக் குழப்பிட இந்திய உளவுத் துறையின் திட்டத்தை ஏற்று நடத்திய கொலைதான் இது! இதைச் செய்தது யார் என்பது பற்றி பத்திரிகைகளிலே குழப்பமான செய்திகள் வந்தன. ‘வீரகேசரி’ நாளேடு விடுதலைப் புலிகள், அமிர்தலிங்கத்தைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுவிட்டதாக செய்தி வெளியிட்டது. அதே நாளில் கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கில நாளேடுகள், இந்தக் கொலையில் தங்களுக்கு தொடர்பில்லை என்று புலிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிட்டன. ஒரே நாளிலேயே இரண்டு செய்திகளும் வெளி வந்ததுதான் வேடிக்கை.</p> <p style="text-align: justify;">“விடுதலைப் புலிகள் தமிழர்களைக் கொல்லும் சக்தியுடனேயே இருக்கிறார்கள். இலங்கை அரசால் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, இந்திய ராணுவம் வடக்கு – கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறுவது ஆபத்து” என்ற கருத்தை உருவாக்குவதே உளவு நிறுவனங்களின் திட்டம். இந்தத் திட்டத்தை அப்படியே ஜே.என். தீட்சத்தும் தனது நூலில் (Assignment in Colombo) வழிமொழிந்து அமிர்தலிங்கம் கொலையை நடத்தியது விடுதலைப் புலிகளே என்று எழுதினார்.</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/amirthalingam.jpg"><img class="alignleft size-full wp-image-2564" title="<p>amirthalingam</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/amirthalingam.jpg" alt="" width="192" height="247" /></a>“இலங்கைத் தமிழர்களை ஜனநாயகப் பாதைக்கு அமிர்தலிங்கம், திருப்பி விடுவார் என்ற அச்சத்தின் காரணமாகவே விடுதலைப் புலிகள் அமிர்தலிங்கத்தைக் கொலை செய்தார்கள்” என்று ஜே.என். தீட்சத் உண்மையை மறைத்து எழுதினார். கொன்றது விடுதலைப் புலிகள் அல்ல; இந்திய உளவு நிறுவனம் – மாத்தையாவைப் பயன்படுத்தி நடத்திய சதி என்பது தெரிந்திருந்தும் புலிகள் மீதே பழி போடும் நோக்கத்தையே பிரதிபலித்தார்.</p> <p style="text-align: justify;">அமிர்தலிங்கத்தைச் சுட்ட 3 பேரும் தப்பி வந்தபோது, அமிர்தலிங்கத்தின் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதும், அவர்கள் மாத்தையாவின் ஆட்கள் என்பதும் உண்மை. இது பற்றி மற்றொரு ஆதாரத்தை நான் முன் வைக்க விரும்புகிறேன். தமிழ் ஈழத்திலே நடந்த அரசியல் படுகொலைகள் பலவற்றுக்கும் காரணமாக இருந்த இந்திய உளவுத் துறை, அத்தனை பழிகளையும் விடுதலைப் புலிகள் மீதே போட்டதும், இங்கே பார்ப்பன ஊடகங்கள் அதையே மீண்டும் மீண்டும் எழுதி, உண்மையாக உறுதி செய்ததும், பாமர மக்களை நம்பச் செய்ததும், எவ்வளவு மோசமான பார்ப்பன சூழ்ச்சி என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும். ராஜீவ் சர்மாவும் கூசாமல் இந்த நூலில் அதே பழியைத்தான் போடுகிறார்!</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/04/ltte.jpg"><img class="alignright size-medium wp-image-587" title="<p>ltte</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/04/ltte-300x168.jpg" alt="" width="300" height="168" /></a>ஒரு மகத்தான விடுதலை இயக்கத்தின் மீது, இப்படி புழுதிவாரி தூற்றி, களங்கப்படுத்திய இந்த கயமைப் பிரச்சாரங்களுக்கு பதில் கூறுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே கருதுகிறேன். அவர்களோ விடுதலைப் புலிகள் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள். அதே வழியில் எந்த ஆதாரங்களும் இல்லாமல், ஏதோ, உணர்வுகளின் அடிப்படையில் நாம் அவற்றை மறுக்கவில்லை. மாறாக, மறுப்புகளை உரிய ஆதாரங்கள் தரவுகளுடன் தான் மறுக்கிறோம். அமிர்தலிங்கத்தை விடுதலைப் புலிகள் ஏன் கொலை செய்ய வேண்டும்? தீட்சத் கூறுவதுபோல் ஈழத் தமிழர்களின் கருத்துகளை அப்படியே தன் பக்கம் திருப்பிவிடக் கூடிய செல்வாக்குள்ள தலைவராகத் தான் அமிர்தலிங்கம் இருந்தாரா?</p> <p style="text-align: justify;">அந்தக் காலக்கட்டத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் முழுமையாக விடுதலைப் புலிகளிடமே தங்கியிருந்தது என்ற உண்மை சிறு குழந்தைகளுக்குக்கூட தெரியுமே! அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் விடுதலைப் புலிகள் கொல்வதற்கு ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறியாக வேண்டிய கட்டாயம் – உளவு நிறுவனத்துக்கும், ஜெ.என். தீட்சத்துக்கும் இருந்தது. எனவே சொத்தையான எவருமே ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தை ஜே.என். தீட்சத் முன் வைக்கிறார்; அவ்வளவுதான்.</p> <p style="text-align: justify;">அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொன்றவர்கள் பற்றிய விவரங்களை அமிர்தலிங்கத்தின் வரலாற்றை எழுதிய டி.சபாரத்தினம் விளக்கிக் கூறியுள்ளார். டி.சபா ரத்தினம், 1996 ஆம் ஆண்டு, அமிர்தலிங்கத்தின் வரலாற்றை எழுதி ‘The Murder of a Moderate’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். அதில் அமிர்தலிங்கம் கொலை பற்றி எழுதப்பட்டுள்ளது. என்ன?</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/ltte-political.jpg"><img class="alignright size-full wp-image-2565" title="<p>ltte-political</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/ltte-political.jpg" alt="" width="212" height="104" /></a>“அமிர்தலிங்கத்தைக் கொன்றவர்கள், எந்த அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெரும் குழப்பமே நீடிக்கிறது. இதில் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. அமிர்தலிங்கத்தை சுட்ட விசு, வவுனியாவுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுக்கு தலைவராக இருந்தவர். அதுவரை அந்தப் பதவியில் இருந்த தினேஷ் என்பவர் காணாமல் போன பிறகு நியமிக்கப்பட்ட விசு, அதன் பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டதாகக் கூறுகிறார்கள். வேறு சிலர், “இல்லை, விசு, அப்போதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில்தான் இருந்தார்” என்றார்கள். லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் தலைமையகம் அமிர்தலிங்கம் கொலையில், விடுதலைப் புலிகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிக்கையே வெளியிட்டது. புலிகளின் அந்த அறிக்கை அமிர்தலிங்கம், கொலையைக் கண்டித்தது. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையை விரும்பாத சக்திகளே, இந்தக் கொலையை செய்து, விடுதலைப் புலிகள் மீது பழிபோட்டு, களங்கம் கற்பிக்கின்றன என்றும் அந்த அறிக்கை குற்றம் சாட்டியது. அத்துடன், “தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் மறைவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் ஆழ்ந்த கவலையுடன் துயரத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது. சில ஈவிரக்கமற்ற கொடூர சக்திகள் விடுதலைப் புலிகளை களங்கப்படுத்தி, அரசுக்கும் புலிகளுக்குமிடையே நடக்கும் பேச்சு வார்த்தையை சீர்குலைக்க திட்டமிடுவதாகவே சந்தேகிக்கிறோம்.”</p> <p style="text-align: justify;">- “The LTTE learned with deep distress the tragic demise of the T.U.L.F. leaders, Amirthalingam and Yogeswaran. We suspect that diabolical forces are at work to discredit the organization and to disrupt the current peace talks between the LTTE and the government of Sri Lanka” – என்று அந்த அறிக்கை கூறியது.</p> <p style="text-align: justify;">ஆக, அமிர்தலிங்கம் வரலாற்றை எழுதியவறே புலிகள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்யவில்லை. இத்தகைய ராணுவ ரீதியான நடவடிக்கைகளை புலிகள் மேற்கொண்டால் அவர்கள் அதை மறுக்கும் வழக்கமுமில்லை என்பது புலிகள் வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/premadasa-rajeev.jpg"><img class="alignleft size-medium wp-image-2563" title="<p>premadasa-rajeev</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/premadasa-rajeev-300x175.jpg" alt="" width="300" height="175" /></a>- இந்திய ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற விடுதலைப் புலிகள் நியாயமான கோரிக்கைக்கு இலங்கை அரசே ஆதரவு தந்து போர் நிறுத்தம் செய்து புலிகள் சம்மதத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்த ஒரு நல்ல வாய்ப்புச் சூழலில் கிடைத்த நல்ல வாய்ப்பை விடுதலைப் புலிகளே குலைப்பார்களா என்பதை நடுநிலையில் சிந்திக்கும் எவருமே புரிந்து கொள்ள முடியும்.</p> <p style="text-align: justify;">இந்த உளவு நிறுவன சதியை அன்றைய பிரேமதாசா அரசும் நன்றாகவே புரிந்து கொண்டது. இலங்கை அரசாங்கமே நடத்தும் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை இது பற்றி வெளியிட்ட செய்தியே (1989 ஜுலை 14) என்ன தெரியுமா?</p> <p style="text-align: justify;">“அமிர்தலிங்கம் கொலையை நடத்தியதே விடுதலைப் புலிகள்தான் என்று தவறாக, புலிகள் மீது பழிபோடும் முயற்சிகள் நடக்கின்றன. இத்தகைய முயற்சிகள் பற்றி, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்” – இதுதான் இலங்கை அரசின் அதிகாரபூர்வ பத்திரிகை வெளியிட்ட செய்தி.</p> <p style="text-align: justify;">ஈழப் போராட்டத்தின் தொடக்கக் காலத்திலிருந்து உன்னிப்பாக ஆராய்ந்து ஜெயரத்தினம் வில்சன் என்ற ஆய்வாளர் ‘Break-up of Srilanka’ என்ற நூலை எழுதியுள்ளார். அதில் 1983-86 ஆம் ஆண்டுகளின் நிலையை இவ்வாறு குறிப்பிடுகிறார்:</p> <p style="text-align: justify;">“எனக்கு தெரிந்தவரை இலங்கையில் தங்களின் தலையீட்டுக்காகவே இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் திட்டங்களை உருவாக்கி வெவ்வேறு கட்டங்களில் அமுல்படுத்தி வந்துள்ளனர். இந்தியாவின் இத் திட்டத்தால் தமிழர் அய்க்கிய முன்னணி தலைவர்களும், போராளி இயக்கங்களும் நம்பிக்கை பெற்றன. தமிழர் தலைவர்களை ஏமாற்றி திசை திருப்புவதுதான் இந்தியாவின் நோக்கம் என்ற கருத்து ஊகமாகக்கூட இருக்கலாம். ஆனால் – ஒன்று மட்டும் உண்மை. தமிழ் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் இந்தியா இந்த உதவிகளை செய்ததன் மூலம் அவர்கள் அனைவரும், இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டார்கள்” என்று எழுதும் ஜெயரத்தனம் வில்சன், மேலும் எழுதுகிறார்:</p> <p style="text-align: justify;">“இந்தியாவின் ‘ரா’ (RAW) உளவு நிறுவனம், இந்தக் கருத்தை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டது. ‘ரா’வின் ஏஜெண்டுகள் தமிழ் போராளி குழுக்களிடையே ஊடுருவினார்கள். அவர்களிடமிருந்து பல முக்கிய ரகசிய தகவல்களை சேகரித்ததோடு, போராளிகள் குழுக்களிடையே பிளவுகளை உருவாக்கி, ஒரு குழு, மற்ற குழுவை அடக்கிடும் வலிமை பெற்று விடாமல், சமநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். இந்த முயற்சியில் முதல் கூட்டத்தில் ‘ரா’ உளவு நிறுவனம் வெற்றிப் பெற்றது என்பது உண்மைதான். ஆனால், கடைசியாக விடுதலைப் புலிகள், வலிமை பெற்று உயர்ந்து நின்றதைத் தடுக்க முடியாமல் ‘ரா’ அவர்களிடம் தோற்றுப் போய் விட்டது” – என்று எழுதுகிறார். ஆக -</p> <p style="text-align: justify;">• அமிர்தலிங்கத்தை சுட்டவர்கள் – மாத்தையாவின் ஆட்கள்.</p> <p style="text-align: justify;">• அமிர்தலிங்கம் மரணத்தைக் கண்டித்த – புலிகள் இயக்கம். அவரைக் கொன்றவர்கள் பேச்சுவார்த்தையை குலைக்க விரும்பும் சக்திகள் என்று பகிரங்க அறிக்கை விடுத்தது.</p> <p style="text-align: justify;">• அமிர்தலிங்கம் வரலாற்றை எழுதியவரே கொலையில் உறுதியான முடிவுக்கு வரவில்லை.</p> <p style="text-align: justify;">• இலங்கை அரசே, அமிர்தலிங்கம் கொலையில் புலிகள் தொடர்பை மறுத்தது.</p> <p style="text-align: justify;">• அமிர்தலிங்கத்தை கொலை செய்யக் கூடிய தேவையோ, அரசியல் சூழலோ புலிகளுக்கு இல்லை – இவ்வளவுக்குப் பிறகு ராஜீவ் சர்மா, அமிர்தலிங்கத்தைக் கொன்றது புலிகள் தான் என்று பழிபோட்டு விடுகிறார்.</p> <p style="text-align: justify;">ஒரு காலத்தில் ஈழத்தில் தமிழர்களின் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்ந்து நின்ற அமிர்தலிங்கம், 1981க்குப் பிறகு இந்தியாவை நம்பினார். இந்திரா காந்தி தமிழ் ஈழத்தை வென்று, தம்மிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால், 1984 இல் இந்திரா, சீக்கியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் அவரது கனவு தகர்ந்தது.</p> <p style="text-align: justify;">அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் 5 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்த 5 ஆண்டுகாலமும் தற்காலிகமாக தமிழ்நாட்டில் அரசு பாதுகாப்போடு தங்கியிருந்தார். இந்திய உளவு நிறுவனத்தோடு அமிர்தலிங்கம் மேற்கொண்ட ரகசிய உடன்பாடுகள் இலங்கை நாடாளுமன்றத்துக்கு வந்த அமிர்தலிங்கம் வழியாக அம்பலமாகிவிடுமோ என்ற அச்சம், ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு வந்திருக்கக் கூடும். தாங்கள் வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கும் ரகசிய திட்டங்கள் அம்பலமாவதற்கு உளவுத் துறை எப்போதுமே வாய்ப்புகளைத் தருவதில்லை, இது உளவுத் துறையின் செயல்பாடுகளை அவதானிப்போருக்கு நன்றாகவே தெரியும். அந்த சதிக்கே அமிர்தலிங்கம் பலியானார்.</p> <p style="text-align: justify;">இதேபோல், 1985 ஆம்ஆண்டில் யாழ்ப்பாணத்தில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.தர்மலிங்கம், எம். ஆலால சுந்தரம் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டபோது அந்தப் பழியும் விடுதலைப் புலிகள் மீது தான் போடப்பட்டது. அது உண்மை தானா? அதையும் தான் பார்த்து விடுவோமே!</p> <p style="text-align: justify;">(தொடரும்)</p><p style="text-align: justify;"><em></em><em><a href="http://keetru.com/" target="_blank">நன்றி கீற்று இணையம்</a></em></p><h4 class="singlePageTitle">விடுதலை இராசேந்திரன்</h4><ul><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15272&Itemid=139">ராஜீவ் கொலை - காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள் (1)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15289&Itemid=139">மாவீரன் கிட்டு வந்த கப்பல் - காட்டிக் கொடுத்தது யார்? (2)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15387&Itemid=139">ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்? (3)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15505&Itemid=139">பிரேமதாசா மீது ஆத்திரம் - இந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம் (4)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15623&Itemid=139">அமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன? (5)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15749&Itemid=139">உளவுத் துறை அதிகாரி உன்னி கிருஷ்ணன்களின் கதை! (6)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15880&Itemid=139">பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்கும் கரங்கள்! (7)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration: none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15881&Itemid=139">பிரபாகரனை 'தீர்த்துக்கட்ட' சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு?</a></li></ul>-------------------------------------------------------------------------------------------<br /><ul><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15621&Itemid=139">ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15286&Itemid=139">இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14333&Itemid=139">இனப்படுகொலைக்கு துணை போன இந்திய அரசே</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14332&Itemid=139">இனப்படுகொலையில் இந்தியாவின் ரகசிய உதவிகள்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14331&Itemid=139">போர்க் குற்றம் புரிந்த ராஜபக்சே: பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14330&Itemid=139">வன்னியில் ஒரு லட்சம் தமிழர்களை ராணுவம் படுகொலை</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14329&Itemid=139">அய்.நா.வில் படுகொலைகளை மறைத்தவர் விஜய் நம்பியார்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14518&Itemid=139">போர்க்குற்றம் - “எங்களை இந்தியா காப்பாற்றும்” - இலங்கை அரசு</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=12349&Itemid=139">கி. வீரமணியின் ‘2010 ஆம் ஆண்டு’ கொள்கை துரோகங்கள்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11284&Itemid=139">அருந்ததிராய் பேசியதில் குற்றம் என்ன?</a></li></ul><br /><a href="http://www.keetru.com/index.php?option=com_aisection&id=15880&Itemid=139">http://www.keetru.com</a>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-32476709317333990252011-08-02T05:36:00.002-07:002011-08-02T05:59:09.365-07:00இந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம் (4)<h4 class="singlePageTitle"> </h4> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/INDO-SRILANKA-AGREEMENT.png"><img class="alignleft size-full wp-image-2426" title="<p>INDO-SRILANKA AGREEMENT</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/INDO-SRILANKA-AGREEMENT.png" alt="" width="339" height="201" /></a></p> <p style="text-align: justify;">1988 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து, பிரேமதாசா அதிபர் பதவிக்கு வந்தார். அப்போது, வடக்கு-கிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்தது. ராஜீவ்-ஜெயவர்த்தனே சமரச ஒப்பந்தத்தை துப்பாக்கி முனையில் இந்திய ராணுவம் திணிக்க முயன்ற நடவடிக்கைகளால், தமிழ் மக்கள் கொதித்துப்போயிருந்தனர். யுத்த மேகம் பரவி மக்கள் அச்சத்துக்குள்ளாகியிருந்த சூழலில், வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு இந்திய ராணுவத்தின் பார்வையில் ஒரு தேர்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டது.தில்லுமுல்லுகள் முறைகேடுகளுடன் நடத்தப்பட்ட தேர்தலில் – ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’ இயக்கத்தைச் சார்ந்த வரதராஜப் பெருமாள், வடக்கு-கிழக்கு மாகாண முதல்வராக திரிகோணமலையில் முடிசூட்டப்பட்டார்.</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/photo31.jpg"><img class="alignleft size-medium wp-image-2432" title="<p>photo31</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/photo31-300x120.jpg" alt="" width="300" height="120" /></a>ஈ.பி.ஆர்.எல்.எப்., இந்திய ராணுவத்தின் ‘செல்லப் பிள்ளையாக’ மாறி, விடுதலைப் புலிகளை ராணுவத்திடம் காட்டிக் கொடுக்கும் வேலைகளைச் செய்து வந்தது. இதனால், விடுதலைப் புலிகள் பக்கம் நின்ற ஏராளமான தமிழர்கள், வீடுகளிலும், வீதிகளிலும், இந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.</p> <p style="text-align: justify;"> </p> <p style="text-align: justify;">அதே நேரத்தில் இலங்கையின் தெற்குப் பகுதியில் ‘ஜெவிபி’ சிங்களர் அமைப்பு, வடகிழக்கில், இந்திய ராணுவம் நிலை பெற்றிருப்பதை எதிர்த்து, கலவரங்களில் இறங்கியது சிங்கள காவல் நிலையங்களும், அரசு அலுவலகங்களும் தாக்கப்பட்டன. இதில் 2500 பேர் வரை கொல்லப்பட்டனர். இத்தகைய பதட்டமான சூழலில் பதவிப் பொறுப்புக்கு வந்த பிரேமதாசா, நிலைமையைப் புரிந்து கொண்டு, இந்திய ராணுவத்தை வெளியேற்றிட வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு வந்தார்.</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/Anton-Balasingham.jpg"><img class="alignright size-full wp-image-2434" title="<p>Anton Balasingham</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/Anton-Balasingham.jpg" alt="" width="240" height="200" /></a>பிரேமதாசா சமுதாயத்தின் கீழ் மட்டத்திலிருந்து வந்த தலைவர்; புத்தமதப் பற்று அதிகம்; தனது பதவி ஏற்பையே கண்டியில் உள்ள புத்தர் பல் இருக்கும் மடாலயத்தில் தான் நடத்தினார். இலங்கை ஒரே நாடு; அது பிரிக்க முடியாது என்ற உணர்வு கொண்டவர். பதவி ஏற்றவுடன் விடுதலைப் புலிகளையும், ஜெ.வி.பி. இயக்கத்தையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ‘இனப்பிரச்சினை எங்களின் உள்நாட்டுப் பிரச்சினை; அதில் அன்னிய சக்திகளைத் தலையிட அனுமதிக்க மாட்டோம்’ என்று சூசகமாக அறிவித்தார். லண்டனிலிருந்த விடுதலைப் புலிகளின் ஆலோசகர் பாலசிங்கத்திடம் தொடர்பு கொண்டு பேசினார் பிரேமதாசா. இந்திய ராணுவம் வெளியேறவேண்டும் என்று பிரேமதாசா வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அந்த நிலையில் விடுதலைப் புலிகளோடு இலங்கை ராணுவத்தின் போர் நிறுத்தத்தை அறிவித்தார். இந்திய ராணுவமும் புலிகளுக்கு எதிராக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.</p> <p style="text-align: justify;">பிரேமதாசா தானாக அறிவித்த இந்த போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்க தயக்கம் காட்டினார். இந்திய ராணுவம் வெளியேறாதவரை, போர் நிறுத்தம் செய்ய முடியாது; அது தங்களுக்கு ஆபத்து என்று விடுதலைப் புலிகள் அறிவித்தனர். இதைப் புரிந்து கொண்ட பிரேமதாசா, கொழும்பு புறநகரில் கோயில் விழா ஒன்றில் பேசுகையில் – இந்திய அரசு, மூன்று மாதங்களில் ராணுவத்தைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார். அதே நாளில், இலங்கை வெளிநாட்டுத் துறை அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே விடுதலைப் புலிகளுக்கு, பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்தார். புலிகள் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தனர்.</p> <p style="text-align: justify;">பிரேமதாசாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களின் குழு – பாலசிங்கம் தலைமையில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளோடு பேச்சு வார்த்தையைத் துவக்கியது. மனித உரிமைக்கு எதிரான இந்திய ராணுவத்தின் அடக்குமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. 5000 தமிழர்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டதையும், அமைதிப்படை ஆக்கிரமிப்புப் படையாக செயல்படுவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்பதையும் விடுதலைப் புலிகள் விளக்கினர். இந்தக் கருத்துகள் கூட்டறிக்கையாக வெளியிடப்பட்டபோது, பிரேமதாசா மீது இந்தியா கோபம் கொண்டது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் பேச்சு வார்த்தையில் இந்திய ராணுவ நடவடிக்கைகளை விமர்சனம் செய்வதற்குக் கண்டனம் தெரிவித்தார்.</p> <p style="text-align: justify;">இதற்கிடையே தெற்கு ஆசிய நாடுகளின் மாநாட்டை (சார்க்) நவம்பரில், இலங்கையில் நடத்தவிப்பதால், ஜூலை 31 ஆம் தேதிக்குள், இந்திய ராணுவத்தை திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு பிரேமதாசா, பிரதமர் ராஜீவுக்குக் கடிதம் எழுதினார். ஆத்திரமடைந்த ராஜீவ் காந்தி, பெங்களூரில் பேசும்போது, “ஈ.பி.ஆர்.எல்.எப். ஆட்சி நடத்தும் மாகாணக் கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்களைப் பெற்றுத் தந்த பிறகுதான், அமைதிப்படை வெளியேறும்” என்று அறிவித்தார். பிரேமதாசா, ராஜீவ்காந்தியின் இந்தப் பேச்சால் மிகவும் வருத்தமடைந்தார். இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளில் இலங்கை – இந்திய முரண்பாடுகள் பற்றியே பெரிதும் விவாதிக்கப்பட்டன. இந்த நிலையில், வரதராஜப் பெருமாள் முதலமைச்சராக இருந்த தமிழர் பகுதியில் பள்ளி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, ‘தமிழ் தேசிய ராணுவம்’ ஒன்றை உருவாக்கினர். சுமார் 4500 சிறுவர்களை ‘ஈ.பி.ஆர். எல்.எப்.’ குழுவினர், பள்ளிகளிலிருந்து கட்டாயப்படுத்தி கடத்திப் போய் பல்வேறு இந்திய ராணுவ முகாமுக்குப் பயிற்சிக்கு அனுப்பினர். விடுதலைப் புலிகள் சிறுவர்களை ராணுவத்தில் சேர்ப்பதாக குற்றம் சாட்டியது இந்தியா. ஆனால் அந்தக் குற்றத்தைச் செய்ததே இந்தியா தான்!</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/photo32.jpg"><img class="alignleft size-medium wp-image-2436" title="<p>photo32</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/photo32-300x120.jpg" alt="" width="300" height="120" /></a>சிறுவர்களின் பெற்றோர்கள், இந்திய ராணுவ முகாம்களின் முன்னால் திரண்டு, தங்கள் பிள்ளைகளை விடுவிக்குமாறு மன்றாடினார்கள். இந்த நிலையில் இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும், ராணுவ மோதலை நிறுத்துவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்திய ராணுவத்தைப் போர் நிறுத்தம் செய்ய வைப்பதற்காக, பிரேமதாசாவின் வேண்டுகோளை ஏற்று, முதலில் தயங்கிய விடுதலைப்புலிகள் பிறகு போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையே மோதல் நிறுத்தப்பட்டு, அமைதிக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டதால், இந்திய ராணுவமும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்திவிட வேண்டும் என்று, பிரேமதாசா இந்திய பிரதமர் ராஜீவுக்கு கடிதம் எழுதினார். இதற்கு ராஜீவ் காந்தி அடுத்த நாளே பதில் கடிதம் ஒன்றை எழுதினார் .</p> <p style="text-align: justify;">பிரேமதாசா கடிதத்தால் ராஜீவ் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ஆசிய நாடுகளின் முடிசூடா மன்னராக வலம் வருவதற்கு ராஜீவ் காந்தி விரும்பினார். அதன் காரணமாகத்தான் ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் பிரதிநிதியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டு ஈழத் தமிழர் விடுதலை இயக்கத்தை ஓரம் கட்டிவிட்டு, ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதைத் தமிழர்கள் மீது திணித்தார். வலிமை மிக்க இந்திய ராணுவத்தின் முன் இந்த சின்னஞ்சிறு நாடுகள் எல்லாம் ‘தூசு’ என்ற சர்வாதிகார மனப்போக்கில் திளைத்திருந்த ஒருவருக்கு பிரேமதாசாவின் இந்த அறிவிப்பு ஆத்திரத்தை ஏற்படுத்தாதா? பிரேமதாசாவுக்கு ராஜீவ் எழுதிய பதிலில் இந்த ஆத்திரத்தின் வெளிப்பாட்டைப் பார்க்க முடியும். இலங்கை அரசுடன் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் செய்ய முன் வந்திருந்தாலும் அந்த போர் நிறுத்தத்தை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ராஜீவ், பிரேமதாசாவுக்கு பதில் எழுதினார்.</p> <p style="text-align: justify;">அமெரிக்காக்காரன் நடத்தி வரும் நாட்டாண்மையை எல்லாம் மிஞ்சக் கூடியதாக, இது இருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ராஜீவ் தனது பதில் கடிதத்தில் புலிகள் போர் நிறுத்தம் செய்தால் மட்டும் போதாது. இலங்கையின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். இலங்கை அரசிடம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றெல்லாம் ராஜீவ் காந்தி நிபந்தனை விதித்தார். இதற்கு அர்த்தம் பிரேமதாசாவைவிட ராஜீவுக்கு இலங்கை ஒருமைப்பாட்டில் கவலை வந்து விட்டது என்பது அல்ல. விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் தமது முயற்சி தோல்வியில் முடிந்ததும், பிரேமதாசா, தனது ராணுவத்தைத் திருப்பி அனுப்ப கெடு விதித்து விட்டாரே என்ற ஆத்திரமும் தான் காரணம். பிரேமதாசா, ராஜீவ் மிரட்டலுக்கு அஞ்சவில்லை.</p> <p style="text-align: justify;">இன்னும் ஒரு படி மேலே போய் அவர் பதிலடி தந்தார். “ஒப்பந்தப்படி இந்திய ராணுவம் எனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. நானே இந்திய ராணுவத்தை வெளியேற உத்தரவிடுவேன்” என்று அறிவித்தார். தெற்கு ஆசியாவின் சக்தி மிக்க தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள துடித்துக் கொண்டிருந்த ராஜீவ் காந்திக்கு பிரேமதாசா விடுத்த சவாலை, ராஜீவால் செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் ராஜீவ் மிரட்டலுக்கு பணிய மறுத்த விடுதலைப் புலிகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டி செயல்பட்டு வந்த உளவுத் துறையின் கவனம், பிரேமதாசாவின் பக்கம் திரும்பியது. பிரேமதாசாவுக்கு எதிரான திட்டங்களை உளவுத் துறை உருவாக்கத் தொடங்கியது. விடுதலைப் புலிகளுக்கு பச்சைக் கொடி காட்டினார்கள். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆயுதங்கள் தரத் தயாராக இருப்பதாகவும், பிரேமதாசாவை எதிர்த்து போராட்டத்தைத் தொடங்கினால், இந்தியா விடுதலைப் புலிகள் பக்கம் நிற்கும் என்று விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு தூது அனுப்பினார்கள். ஆனால், இந்திய சதி வலையில் சிக்கிட பிரபாகரன் தயாராக இல்லை. பிரபாகரன் இத்திட்டத்தை நிராகரித்து விட்டார்.</p> <blockquote> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/v.rajendran.jpg"><img class="alignright size-thumbnail wp-image-2478" title="<p>v.rajendran</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/v.rajendran-150x150.jpg" alt="" width="150" height="150" />V.RAJENDRAN</a></p> </blockquote> <p>இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்கலாம். ஆதாரங்களுடன் தான் ஒவ்வொரு கருத்தையும் நான் உங்கள் முன்னால் கூறிக் கொண்டிருக்கிறேன். நான் கூறிய இந்தக் கருத்துகளுக்கு சாட்சியாக நான் நிறுத்த விரும்புவது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனைத் தான்.</p> <p style="text-align: justify;">முரசொலி மாறன் அப்போது தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர். பிரேமதாசா – ராஜீவ் முரண்பாடு முற்றியிருந்த நேரத்தில் ராஜீவ் முரசொலி மாறனை அழைத்துப் பேசினார். இது பற்றி முரசொலி மாறனே இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் விரிவாகக் கூறுகிறார். இதோ முரசொலி மாறன் பேட்டி:</p> <p style="text-align: justify;">“இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டபோதே அதை எதிர்த்தவர் பிரேமதாசா. இவர் இலங்கை அதிபர் ஆனதும் இந்திய அமைதிப் படையை வெளியேற்றச் சொன்னார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு, இந்தியப் படைக்கு எதிராக புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார். பிரேமதாசா – பிரபாகரன் நெருக்கம் அதிகமாவதைக் கண்ட இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி என்னை (முரசொலி மாறன்) அழைத்துப் பேசினார். பிரபாகரனுக்கு நாம் உதவிகள் செய்யலாம். புலிகள் பற்றி உண்மை நிலவரம் எனக்கு தெரியாமல் போய் விட்டது. எனவே தமிழக முதல்வர் கருணாநிதியை புலிகளுடன் பேசச் சொல்லுங்கள். சுதந்திர தமிழ் மாநிலம் அமைக்க நாம் உதவலாம் என்று கூறினார். நான் (முரசொலி மாறன்) இப்போதே அவர்கள் சுதந்திர தனி மாநிலமாகத்தான் உள்ளனர். வரி வசூல் வரை நீதிமன்றம் வரை நிர்வாகம் செய்கிறார்கள் என்றேன். உடனே ராஜீவ் காந்தி சிரித்தபடி தமிழ் ஈழத்தின் பிதாமகர் தி.மு.க. தான் என்றார்.” (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ 16.12.1997)</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/murasoli_maran.jpg"><img class="alignleft size-full wp-image-2481" title="<p>murasoli_maran</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/murasoli_maran.jpg" alt="" width="160" height="182" /></a>முரசொலி மாறன் அளித்த இந்தப் பேட்டி, விடுதலைப்புலிகளை ஒழிப்பதைக் கூட நிறுத்திக் கொண்டு அவர்களிடம் சமரசம் பேசி ஆயுதம் வழங்கி, பிரேமதாசாவுடன் மோத விடும் நிலைக்கு ராஜீவ் வந்தார் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஆக, விடுதலைப் புலிகளைவிட பிரேமதாசா ராஜீவ் காந்தியின் முதன்மையான எதிரியாகக் கருதும் நிலைக்கு ராஜீவ் காந்தி வந்து விட்டார். அதற்கேற்ப உளவு நிறுவனமும் ‘காய்’களை நகர்த்தியது.</p> <p style="text-align: justify;">ஒரு முக்கியமான செய்தியை சுட்டிகாட்ட வேண்டும். பிரேமதாசா கொழும்பு புறநகர்ப் பகுதியான பட்டாரமுல்லா என்ற இடத்தில் 1989 ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி பேசும் போது இந்திய ராணுவம் இலங்கையிலிருந்து ஒரு மாத காலத்துக்குள் அதாவது ஜூலை 29 ஆம் தேதிக்குள் வெளியேறிட வேண்டும் என்று கெடு நிர்ணயித்து அறிவித்தார். (ஜூலை 29 – என்ற தேதிக்கான முக்கியத்துவம் ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தம் அமுலுக்கு வந்த தேதி என்பதாகும்). ராஜீவ் காந்தியும் இந்திய உளவு நிறுவனமும் பிரேமதாசாவின் இந்த ‘கெடு’வால் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை.</p> <p style="text-align: justify;">அவசர அவசரமாக இந்திய உளவு நிறுவனம் பிரேமதாசாவுக்கு எதிரான சதித் திட்டங்களை உருவாக்கியது. என்ன திட்டம்?</p> <p style="text-align: justify;">1. இந்திய ராணுவம் வெளியேறக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தும், ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை பிரேமதாசா கை விடுவதை எதிர்த்தும், தமிழர் பகுதியில் தங்களின் ‘கைத்தடி’ அமைப்பிலிருந்து ஆட்களைப் பிடித்து பிரேமதாசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்த இந்திய உளவு நிறுவனம் ஏற்பாடு செய்தது.</p> <p style="text-align: justify;">2. விடுதலைப் புலிகள் தாக்கும் நிலையில் பலமாகவே உள்ளார்கள் என்றும், இந்திய ராணுவம் இப்படிப்பட்ட நிலையில் வெளியேறக் கூடாது என்றும், விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பிரேமதாசாவின் இலங்கை ராணுவத்துக்குக் கிடையாது என்றும் சில சம்பவங்களை உருவாக்கி உணர்த்த வேண்டும் என்று திட்டங்களை வகுத்தனர். தமிழ் ஈழத்தில் ‘இந்தியாவின் தலையீடு’ என்ற விரிவான நூலை (Indian Intervention in Srilanka) ரோகனா குணரத்னா என்ற கொழும்பு பத்திரிகையாளர் எழுதியுள்ள இந்த நூலில் இந்திய உளவு நிறுவனத்தின் மேற்குறிப்பிட்ட திட்டங்களை அவர் எடுத்துக் காட்டியிருக்கிறார்.</p> <p style="text-align: justify;">விடுதலைப் புலிகள் வலிமை குறையாதவர்கள் என்றும், அவர்கள் தலைவர்களைக் கொலை செய்யக் கூடியவர்கள் என்றும் பிரேமதாசா இந்திய ராணுவத்தை வெளியேறச் சொல்லும் கருத்துக்கு கடும் எதிர்ப்பை உருவாக்கிவிடலாம் என்ற திட்டத்தின் கீழ் சில கொலைகளுக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள்ளேயே இந்திய உளவு நிறுவனத்தின் வலையில் சிக்கியிருந்த மாத்தையாவின் அணி, இதற்காக, களமிறக்கப்பட்டது.</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/AMIRTHALINGAM-UMA-MAHESWARAN.jpg"><img class="alignright size-medium wp-image-2476" title="<p>AMIRTHALINGAM & UMA MAHESWARAN</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/AMIRTHALINGAM-UMA-MAHESWARAN-300x168.jpg" alt="" width="300" height="168" /></a>பிரேமதாசா இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்று ஒரு மாதம் கெடு விதித்து அறிவித்த நாள், 1989 ஜூன் 1, கெடு முடியும் நாள் ஜூலை 29. இந்த ஒரு மாத இடைவெளியில் தான் சில முக்கிய தலைவர்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களை கொலை செய்தவர்கள் விடுதலைப்புலிகள்தான் என்ற பழியை சுமத்தி ஊடகங்கள் வழியாக பரப்பினர். எந்தத் தேதியில், யார் யார் கொல்லப்பட்டார்கள்?</p> <p style="text-align: justify;">1989 ஜூலை 12 – தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி தலைவர்கள் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன்.</p> <p style="text-align: justify;">1989 ஜூலை 17 – அதாவது, அடுத்த நான்கு நாட்களில் புளோட் இயக்கத் தலைவர் உமா மகேசுவரன்.</p> <p style="text-align: justify;">1989 ஜூலை 23 – அடுத்த 10 நாட்களில் ‘பிரபாகரன்’ மாத்தையால் கொல்லப்பட்டார் என்ற அறிவிப்பு (அனைத்து இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் உயிருடன் இருந்த பிரபாகரன் – மாத்தையாவால் கொல்லப்பட்டதாக இந்திய உளவு நிறுவனம் செய்திகளைப் பரப்பியது).</p> <p style="text-align: justify;">பிரேமதாசா – இந்திய ராணுவம் வெளியேற கெடு விதித்த ஒரு மாத கால இடைவெளியில் மட்டும், இந்தக் கொலைகள் நடந்தன என்றால், அதன் நோக்கம், மூளை, பின்னாலிருந்து இயக்கிய சக்திகளைப் புரிந்து கொள்ள முடியும்.</p> <p style="text-align: justify;">(தொடரும்)</p><p style="text-align: justify;">விடுதலை இராசேந்திரன்<br /></p> <p style="text-align: justify;"><em><a href="http://keetru.com/" target="_blank">நன்றி கீற்று இணையம்</a></em></p><p style="text-align: justify;"><em><a href="http://keetru.com/" target="_blank"></a></em></p><ul><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15272&Itemid=139">ராஜீவ் கொலை - காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள் (1)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15289&Itemid=139">மாவீரன் கிட்டு வந்த கப்பல் - காட்டிக் கொடுத்தது யார்? (2)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15387&Itemid=139">ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்? (3)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15505&Itemid=139">பிரேமதாசா மீது ஆத்திரம் - இந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம் (4)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15623&Itemid=139">அமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன? (5)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15749&Itemid=139">உளவுத் துறை அதிகாரி உன்னி கிருஷ்ணன்களின் கதை! (6)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15880&Itemid=139">பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்கும் கரங்கள்! (7)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration: none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15881&Itemid=139">பிரபாகரனை 'தீர்த்துக்கட்ட' சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு?</a></em></li></ul><em>-------------------------------------------------------------------------------------------<br /><ul><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15621&Itemid=139">ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15286&Itemid=139">இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14333&Itemid=139">இனப்படுகொலைக்கு துணை போன இந்திய அரசே</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14332&Itemid=139">இனப்படுகொலையில் இந்தியாவின் ரகசிய உதவிகள்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14331&Itemid=139">போர்க் குற்றம் புரிந்த ராஜபக்சே: பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14330&Itemid=139">வன்னியில் ஒரு லட்சம் தமிழர்களை ராணுவம் படுகொலை</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14329&Itemid=139">அய்.நா.வில் படுகொலைகளை மறைத்தவர் விஜய் நம்பியார்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14518&Itemid=139">போர்க்குற்றம் - “எங்களை இந்தியா காப்பாற்றும்” - இலங்கை அரசு</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=12349&Itemid=139">கி. வீரமணியின் ‘2010 ஆம் ஆண்டு’ கொள்கை துரோகங்கள்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11284&Itemid=139">அருந்ததிராய் பேசியதில் குற்றம் என்ன?</a></li></ul><br /><a href="http://www.keetru.com/index.php?option=com_aisection&id=15880&Itemid=139">http://www.keetru.com</a><br /><br /></em><p></p>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-91044817315794754892011-08-02T05:36:00.001-07:002011-08-02T05:59:57.017-07:00ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்? (3) )<h4 class="singlePageTitle"> </h4> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/suthumalai-prabaharans-.jpg"><img class="alignleft size-medium wp-image-2239" title="<p>suthumalai prabaharan's</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/suthumalai-prabaharans--300x198.jpg" alt="" width="300" height="198" /></a>இந்திய உளவு நிறுவனம் விரித்த வலையில் மாத்தையா வீழ்ந்தார் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதியான முடிவுக்கு வந்தது. அதற்கு அழுத்தமான காரணங்கள், சூழ்நிலை சந்தர்ப்பங் களின் அடிப்படையிலான சான்றுகள் ஏராளம் இருக்கின்றன. ராஜீவ் சர்மாவின் இந்த நூல் மாத்தையா மீது எந்தக் குற்றமும் இல்லாதது போலவும், பிரபாகரன், அவரை சித்திரவதை செய்து கொன்றார் என்றும் அபாண்டமாக குற்றம் சாட்டுகிறது. நூலாசிரியர் இவ்வாறு எழுதுகிறார்:</p> <p style="text-align: justify;">“பிரகாகரன் ஆயுதமேந்திய சகப் போராளி களுடன் கூட இரக்கமற்ற முறையில் நடந்து கொள் வார். 1980-க்கும் 1990-க்கும் இடைபட்ட காலத்தில் சக தமிழ் இயக்கங்களைச் சார்ந்த 300 போராளிகளை மற்றும் எல்.டி.டி..ஈ. இயக்கத்திற்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பல முக்கிய தலைவர்களைக் கொன்றார். இது சம்பந்தமாக நடந்த மிக அதிர்ச்சி கரமான சம்பவம் மாத்தையாவின் கொலையாகும். பிரபாகரன் மாத்தையாவை இரட்டை வேடம் ஆடுகிறார் என நினைத்தார். மாத்தையா கொடுத்த தகவலின் பேரிலேயே எச்.வி. அகத் கப்பல் (கிட்டு வந்த கப்பல்) அழிக்கப்பட்டது என்ற தகவல் பரவியது. ஏராளமான வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை ஏற்றி வந்த அக்கப்பல் அழிக்கப்பட்டதால் எல்.டி. டி.ஈ.க்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. மாத்தையா துரோகி என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்; தனிச் சிறையில் அடைக்கப்பட் டார்” (பக்.174) என்றெல்லாம் எழுதுகிறார் நூலாசிரியர்.</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/Kittu-anna.jpg"><img class="alignright size-full wp-image-2240" title="<p>Kittu-anna</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/Kittu-anna.jpg" alt="" width="222" height="410" /></a>மாத்தையா மீது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு வீண் பழியை சுமத்தியது போலவும், கிட்டு வந்த கப்பலை மாத்தையா காட்டிக் கொடுத்தார் என்று, ஆதாரம் ஏதுமின்றி தகவல்களைப் பரப்பினார் என்றும் இந்த நூல் பதிவு செய்கிறது. மாத்தையா ஒரு வருட காலம் விசாரணைக் கைதியாக இருந்த போதும் சரி, பிறகு அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோதும் சரி, மாத்தையாவை பிரபாகரன் சந்திக்கவே இல்லை என்றும் நூல் குற்றம் சாட்டுகிறது. இதையெல்லாம்விட மாத்தையாவுக்கு மரண தண்டனை வழங்கியதற்கு பிரபாகரனுக்கு ‘உள்நோக்கம்’ உண்டு என்ற முடிவுக்கும் நூலாசிரியர் வருகிறார். இவ்வாறு எழுதுகிறார்:</p> <p style="text-align: justify;">“மாத்தையாவின் கதை முடிந்து விட்டது. ஆனால், மாத்தையா உண்மையிலேயே இரட்டை வேடம் ஆடினாரா அல்லது அவர் மிகப் பலம் பொருந்திய வராக உருவானதால் பிரபாகரன் அவரை அழித்தாரா என்பது யாருக்கும் தெரியாது” என்று ‘யாருக்கும் தெரியாத’ ஒரு உண்மையை தனக்கும் தெரியாத ஒன்றை, பிரபாகரனை களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு நஞ்சை கக்குகிறார், இந்நூலாசிரியர். பிரபாகரனை இழிவுபடுத்தி, அவரது மாண்பையும் கவுரவத்தையும் நேர்மையையும் களங்கப்படுத்தும் உளவுத் துறையின் எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கிறார் நூலாசிரியர்.</p> <p style="text-align: justify;">மாத்தையாவுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டதைத் தொடர்ந்து ‘இந்தியா டுடே’ வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்றை சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். இத்தனைக்கும் ‘இந்தியா டுடே’ புலிகளின் ஆதரவு பத்திரிகை அல்ல; மாத்தையா இந்தியாவின் வலையில் வீழ்ந்தார் என்பதை, இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது. 1994 ஆம் ஆண்டு ‘இந்தியா டுடே’ இதழில் (மார்ச் 16) அதன் செய்தியாளர்கள் எழுதிய விரிவான கட்டுரையிலிருந்து ஒரு முக்கிய பகுதி இது.</p> <p style="text-align: justify;">“1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி – சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் ‘எம்.வி. அகத்’ கப்பலை – இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலில் இருந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு, தன்னைத் தானே அழித்துக் கொண்டார். கிட்டு கப்பலில் வரும் தகவலை இந்திய உளவு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தந்தது மாத்தையாவும், யோகி யோக ரத்தினமும் தான் என்று பிரபாகரன் குற்றம் சாட்டினார். 1989 – 90 இலங்கை அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வுக்கு மாத்தையா உடன்பட வேண்டும் என்று கூறியதை, பிரபாகரன் ஏற்கவில்லை. இந்தக் கருத்து வேறுபாடு, மேலும் தீவிரமடைந்தது தொடர்ந்து 1991-ல் நடந்த ஆணையிரவு தாக்குதலில் கிடைக்க வேண்டிய வெற்றி, கடும் பின்னடைவை சந்தித்தது. இதற்குக் காரணம் மாத்தையாவே என்று குற்றம் சாட்டினார் பிரபாகரன். தொடர்ந்து 1992 மே மாதத்தில் மாத்தையாவுக்கு தரப்பட்ட பொறுப்புகளி லிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து நவம்பரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த மறைவிடம், குண்டுவீச்சுக்கு உள்ளானது. புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது உதவி யாளர் 1993 ஜன.7-ல் கொல்லப்பட்டார். அடுத்த பத்து நாட்களில் ஜனவரி 16-ல் கிட்டு வந்த கப்பல் இந்திய கப்பல் படையால் சுற்றி வளைக்கப் பட்டது. மாத்தையாவும், அவரது பழைய நண்பரான என்ஜினியர் என்று அறியப்பட்ட மாணிக்கவாசகம் என்பவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மாத்தையாவின் ஆதர வாளர்கள் 120 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளின் ராணுவ நீதிமன்றம் – 1993 டிசம்பர் 19 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானவர் மாத்தையா தான் என்றும், ‘ரா’ (சுயறு) உளவு நிறுவனத்தோடு சேர்ந்து பிரபாகரனை கொல் வதற்கு மாத்தையா சதித் திட்டம் தீட்டினார் என்றும், ‘ரா’வின் முகவராக மாத்தையா செயல் பட்டார் என்றும் புலிகளின் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது”.</p> <p style="text-align: justify;">இதிலிருந்து என்ன தெரிகிறது?</p> <p style="text-align: justify;">1992 ஆம் ஆண்டில் மாத்தையா புலிகள் இயக்கப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுகிறார். 1989 ஆம் ஆண்டிலிருந்தே புலிகள் இயக்கத்தில் மாத்தை யாவின் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் குழு ஒன்று இந்தியாவின் உளவு நிறுவனத்துடன் ரகசிய தொடர்பில் செயல்படத் தொடங்கிவிட்டது.</p> <p style="text-align: justify;">1991 ஆம் ஆண்டு ஆனையிரவில் நடந்த முதல் தாக்குதலில் புலிகள் கடும் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. 123 பெண் புலிகள் உட்பட 573 புலிகள் இந்தப் போரில்தான் உயிர் பலியானார்கள். இயக்கத் துக்குள்ளே மாத்தையா நடத்திய சதிதான் இதற்குக் காரணம் என்ற தகவல் புலிகளின் உளவுப் பிரிவு கண்டறிந்து பிரபாகரனுக்கு தெரிவித்தது. பொறுப்பு களிலிருந்து மாத்தையா விடுவிக்கப்பட்டவுடன், யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த ரகசியமான மறைவிடம் குண்டுவீச்சுக்கு உள்ளானதோடு பொட்டு அம்மான் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவரது உதவியாளர் பலியாகி யுள்ளார். மாத்தையாவிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. 1993 ஜனவரியில் கிட்டுவின் உயிர்த் தியாகத்தை தொடர்ந்து மாத்தையா தலைமையிலான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற புலிகளின் அரசியல் பிரிவு கலைக்கப்படுவதோடு துணைத் தலைவர் என்ற 2 ஆம் நிலையிலிருந்து மாத்தையா நீக்கப்பட்டவுடன் பிரபாகரனுக்கு எதிராக வெளிப்படையாகவே போர்க்கொடி உயர்த்தினார் மாத்தையா. அப்போது கொக்குவில் என்ற பகுதியில் விடுதலைப் புலி ஆலோசகர் பாலசிங்கம் தங்கியிருந்தார். அவரது வீட்டுக்குப் போன மாத்தையா, அங்கே தாம் பிரபாகரனை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப் போவதாக அறிவித்தார். இதை அடேல் பாலசிங்கம் தனது நூலில் சுட்டிக்காட்டியுள்hர்.</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/vellur-jail.jpg"><img class="alignleft size-medium wp-image-2241" title="<p>vellur jail</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/vellur-jail-300x169.jpg" alt="" width="300" height="169" /></a>பிரபாகரனின் மெய்க்காப்பாளராக இருந்த ஒரு விடுதலைப்புலி தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் வேலூர் சிறையிலிருந்து உளவுத் துறை உதவியுடன் ரகசியமாக விடுவிக்கப்பட்டார். பிரபாகரனை கொல் வதற்கு வேலூர் சிறையிலே திட்டங்கள் தயாரிக்கப் பட்டு, அதனடிப்படையிலேதான் விடுதலை செய்யப் பட்டார் என்ற அதிர்ச்சியான தகவல் மாத்தையா விடம் நடத்திய விசாரணையிலிருந்து தெரிய வந்தது. மாத்தையாவின் கொழும்புப் பயணங்களும் இந்திய உளவுத் துறை அதிகாரிகளுடன் அவருக்கிருந்த தொடர்புகளும் விசாரணையில் வெளி வந்தது.</p> <p style="text-align: justify;">இங்கே நான் எடுத்துக்காட்டிய ‘இந்தியா டுடே’ கட்டுரையில் கடைசியாக கூறப்பட்ட, இரண்டு வாக்கியங்கள் மிகவும் முக்கியமானதாகும். <span style="color:#993300;">“பிரபாகரன் இனிமேல் தான் மிகக் கடுமையான சோதனைகளை எதிர்க்கொள்ளப் போகிறார் என்ற கருத்தில் உளவு நிறுவனம் மிகவும் திருப்தியடைந் திருந்தது”</span> (Indian intelligent agencies are convinced, he (Prabhakaran) is facing his toughest test yet); அதாவது மாத்தையாவின் துரோக நடவடிக்கைகள் தொடங்கியதற்குப் பிறகு, அவரது கீழறுப்பு நட வடிக்கைகள் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை யில் உளவுத் துறை திளைத்திருந்தது என்று எழுதி யிருப்பதிலிருந்தே உளவுத் துறையுடன் மாத்தை யாவுக்கு உள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்பட் டுள்ளது. கடைசியாக, ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு “மாத்தையா சிறந்த சொத்துதான் என்றால், மாத்தையாவின் மர்மமான நடவடிக்கைகள் மேலும் அதிகமாகலாம்! – (But if Mahathya was indeed a ‘RAW’ asset, there might be more to Mahathya mystery” – India Today) – இந்தியா டுடே கட்டுரையின் இந்த இறுதி வாசகம் மாத்தையா ‘ரா’ உளவு நிறுவனத்தின் வலையில் சிக்கியதை உறுதிப்படுத்துகிறது.</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/mathaiya.jpg"><img class="alignleft size-full wp-image-2245" title="<p>mathaiya</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/mathaiya.jpg" alt="" width="182" height="222" /></a>இவை எல்லாவற்றையும்விட மற்றொரு முக்கிய செய்தியை சுட்டிக்காட்ட வேண்டும். 1991 ஆம் ஆண்டு ராஜீவ் கொலை நடக்கிறது. அப்போது பிரபாகரனுக்கு அடுத்த இரண்டாம் நிலை தலைவர் மாத்தையா; 1992 ஆம் ஆண்டு, இந்திய உளவுத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறது. அதில் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் இரண்டாம் நிலை தலைவராக இருந்த மாத்தையாவின் பெயர் குற்றப் பத்திரிகையில் இடம் பெறவில்லை. இந்திய உளவுத் துறை அவர் பெயரை மட்டும் விட்டு விடுகிறது; ஏன்? 1989 ஆம் ஆண்டில் மாத்தையா பிரபாகரனை சுட்டுக் கொன்றுவிட்டார் என்ற செய்தியை உளவுத் துறை வெளியிட்டு, அதை ஊடகங்கள் பரப்பியதையும், 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இந்தியா டுடே’ கட்டுரையையும் ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவின் பெயர் சேர்க்கப்படாததையும் இணைத்துப் பார்த்தால் மாத்தையா இந்திய உளவுத் துறையின் சதியில் வீழ்ந்து விட்டார் என்ற முடிவுக்கே வர முடியும். இவ்வளவு பின்னணிகளையும் மறைத்து ராஜீவ் சர்மாவின் இந்த நூல், மாத்தையா தன்னைவிட செல்வாக்குள்ள தலைவராக வளருகிறார் என்ற காரணத்தால், பிரபாகரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை விதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்புவது, என்ன நியாயம்? என்ன நேர்மை? பிரபாகரனை தீர்த்துக் கட்டுவதற்கு இந்திய உளவுத் துறையால் உருவாக்கப்பட்டவரே மாத்தையா என்ற உண்மையை மறைத்து பிரபாகரன் மீதே குற்றம் சாட்டும் இந்த நூலாசிரியர், கண்மூடித்தனமாக ஈழத்தில் நடந்த கொலைகள் எல்லாவற்றையும் விடுதலைப் புலிகள் தான் செய்தனர் என்று எந்த ஆதாரமும் இன்றி குற்றக் கூண்டில் ஏற்றி விடுகிறார்.</p> <p style="text-align: justify;">இலங்கை அதிபர் பிரேமதாசா, தமிழ் அய்க்கிய விடுதலை கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம், புளோட் இயக்கத் தலைவர் முகுந்தன், இலங்கையின் ராணுவ அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே என்று இவர்கள் அனைவரையும் விடுதலைப் புலிகள் கொலை செய்தார்கள் என்று இந்த நூல் திரும்ப திரும்ப குற்றம்சாட்டுகிறது. விடுதலைப் புலிகள்தான் இந்தக் கொலைகளை செய்தார்கள் என்பதற்கு எந்த ஒரு சான்றையும் முன் வைக்கவில்லை. உளவுத் துறை கட்டவிழ்த்துவிட்ட பொய்யுரைகளை அப்படியே திரும்பவும் ‘கிளிப்பிள்ளை’ போல மீண்டும் மீண்டும் கூறுகிறார், நூலாசிரியர். இந்த வீண்பழிகளை நம்மால் ஆதாரங்களுடன் மறுக்க முடியும்.</p> <p style="text-align: justify;">முதலில் பிரேமதாசா பிரச்சினைக்கு வருவோம்; பிரேமதாசா பதவிக்கு வந்த காலம் – சூழ்நிலை எத்தகையது? இதை நாம் பார்க்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">- தொடரும்</p><p style="text-align: justify;">விடுதலை இராசேந்திரன்<br /></p> <p style="text-align: justify;"><em><a href="http://keetru.com/" target="_blank">நன்றி கீற்று இணையம்</a></em></p><p style="text-align: justify;"><em><a href="http://keetru.com/" target="_blank"></a></em></p><ul><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15272&Itemid=139">ராஜீவ் கொலை - காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள் (1)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15289&Itemid=139">மாவீரன் கிட்டு வந்த கப்பல் - காட்டிக் கொடுத்தது யார்? (2)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15387&Itemid=139">ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்? (3)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15505&Itemid=139">பிரேமதாசா மீது ஆத்திரம் - இந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம் (4)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15623&Itemid=139">அமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன? (5)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15749&Itemid=139">உளவுத் துறை அதிகாரி உன்னி கிருஷ்ணன்களின் கதை! (6)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15880&Itemid=139">பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்கும் கரங்கள்! (7)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration: none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15881&Itemid=139">பிரபாகரனை 'தீர்த்துக்கட்ட' சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு?</a></em></li></ul><em>-------------------------------------------------------------------------------------------<br /><ul><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15621&Itemid=139">ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15286&Itemid=139">இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14333&Itemid=139">இனப்படுகொலைக்கு துணை போன இந்திய அரசே</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14332&Itemid=139">இனப்படுகொலையில் இந்தியாவின் ரகசிய உதவிகள்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14331&Itemid=139">போர்க் குற்றம் புரிந்த ராஜபக்சே: பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14330&Itemid=139">வன்னியில் ஒரு லட்சம் தமிழர்களை ராணுவம் படுகொலை</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14329&Itemid=139">அய்.நா.வில் படுகொலைகளை மறைத்தவர் விஜய் நம்பியார்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14518&Itemid=139">போர்க்குற்றம் - “எங்களை இந்தியா காப்பாற்றும்” - இலங்கை அரசு</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=12349&Itemid=139">கி. வீரமணியின் ‘2010 ஆம் ஆண்டு’ கொள்கை துரோகங்கள்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11284&Itemid=139">அருந்ததிராய் பேசியதில் குற்றம் என்ன?</a></li></ul><br /><a href="http://www.keetru.com/index.php?option=com_aisection&id=15880&Itemid=139">http://www.keetru.com</a><br /><br /></em><p></p>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-64421054504824016502011-08-02T05:35:00.000-07:002011-08-02T05:59:23.996-07:00மாவீரன் கிட்டு வந்த கப்பல் - காட்டிக் கொடுத்தது யார்? (2)<h4 class="singlePageTitle"> </h4> <p style="text-align: justify;"><em><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/ltte-leader.jpg"><img class="alignleft size-medium wp-image-2153" title="<p>ltte- leader</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/ltte-leader-289x300.jpg" alt="" width="289" height="300" /></a>ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்….’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, சென்னை (ஜூன் 4) வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் தொகுப்பு.</em></p> <p style="text-align: justify;">ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்’ என்ற இந்த நூல், உளவுத் துறையின் குரலை அப்படியே பிரதிபலிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது உளவுத் துறை பரப்பிய ‘அவதூறு’ பழிகளை அப்படியே நியாயப்படுத்துகிறது. அதே நேரத்தில், உளவுத் துறை மீது எந்த ஒரு ‘தூசும்’ விழாமல் நியாயப்படுத்துவதிலிருந்தே, இந்த நூலின் பின்னணியை புரிந்து கொள்ள முடியும்.</p> <p style="text-align: justify;">ஈழத் தமிழர் பிரச்சினையில் குழப்பங்கள், படுகொலைகளை உருவாக்கி திட்டமிட்டு, அரங்கேற்றிய சதிக் கும்பலே, உளவு நிறுவனங்கள்தான் என்ற உண்மையை முற்றாக ஒதுக்கிவிட்டு, உளவுத் துறையின் ஒலி குழலாகவே ஒலிக்கிறது இந்த நூல்.</p> <p style="text-align: justify;">1983 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் போராளிகளுக்குப் பயிற்சி தந்த காலத்திலிருந்தே ‘ரா’ உளவு நிறுவனங்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் தொடங்கி விட்டன. இந்திய உளவு நிறுவனத்தோடு நெருக்கமாக இருந்தவரும், உளவு நிறுவனங்கள் போற்றிப் பாராட்டுகிற நூலை எழுதியவருமான எம்.ஆர். நாராயணசாமி, தனது ‘இலங்கையின் புலிகள்’ (Tigers of Lanka)என்ற நூலில் – அவரே, இந்த உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு மட்டும் உளவு நிறுவனத்தின் பிடிக்குள் சிக்குவதற்கு தயாராக இல்லை. நாட்டின் விடுதலையில் மட்டுமே அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதுதான் அவர்களின் “குற்றம்”; ஆனால் ஈழத்தில் தொடங்கிய தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் வழியாக இலங்கை அரசுக்கு நெருக்கடி தந்து, இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் ஈழப் போராளிகளைக் கொண்டு வருவதுதான் இந்தியாவின் திட்டம். அதை செயல்படுத்துவதே உளவு நிறுவனங்களின் வேலை.</p> <p style="text-align: justify;"> </p> <h4 style="text-align: justify;">”நாட்டின் விடுதலையில் மட்டுமே அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதுதான் அவர்களின் குற்றம்”</h4> <p style="text-align: justify;"> </p> <p style="text-align: justify;">முதலில் ‘டெலோ’ என்ற அமைப்பை உளவு நிறுவனம் தனது ‘கைப்பாவை’யாக்கியது. அந்த அமைப்பு செயலிழந்தவுடன் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற அமைப்பை தங்களது பிடிக்குள் கொண்டு வந்தார்கள். பிறகு பல்வேறு போராளிகள் குழுக்களில் ஏற்பட்ட பிளவுகளைப் பயன்படுத்தி விலகி வந்தவர்களை எல்லாம் இணைத்து ‘ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி’ (ஈ.என்.டி.எல்.எப்.) என்ற அமைப்பை உளவு நிறுவனம் உருவாக்கியது. இந்திய உளவுத் துறைக்கு ஆதரவாக ‘இந்து’ பார்ப்பன நாளேட்டில் எழுதி வந்த டி.பி.எஸ். ஜெயராஜ் போன்ற பத்திரிகையாளர்களே, இந்த உண்மைகளை ஒப்புக் கொண்டு எழுதியிருக்கிறார்கள். உளவுத் துறை உருவாக்கிய, இந்த குழுக்களை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராகவும், தேவைப்படும்போது இலங்கை ஆட்சிக்கு எதிராகவும் உளவு நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன.</p> <p style="text-align: justify;">கடைசியாக உளவு நிறுவனம் தனது ஏவல் படையாக பிடித்து வைத்த ‘ஈ.என்.டி.எல்.எப்.’ அமைப்புக்கு தலைவராக சென்னையில் கொலை, கடத்தல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, 1989 ஆம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை தனது கைப்பிடிக்குள் உளவுத் துறையினர் கொண்டு வந்தனர். தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலிருந்தவரை விடுதுலை செய்து வெளியே கொண்டு வர முயற்சித்தவர்களே, ‘ரா’ உளவுத் துறையினர் தான். பிறகு உளவுத் துறையினரே, இந்திய ராணுவ விமானத்தை ஏற்பாடு செய்து, டக்ளஸ் தேவானந்தாவை – அந்த ராணுவ விமானத்தில் ஏற்றி யாழ்ப்பாணம் கொண்டு போய் துரோகம் – குழி பறிப்பு வேலைகளுக்காக இறக்கி விட்டார்கள். இந்த உண்மையை ‘டெகல்கா வார’ ஏடு (ஜூலை 1, 2006) வெளிக்கொண்டு வந்தது.</p> <p style="text-align: justify;">ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனாவுடன் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டு, அதை தமிழர்கள் மீது ஆயுத முனையில் திணித்தார். இந்தியாவின் ‘கைப்பாவைக் குழுக்கள்’ கண்களை மூடிக் கொண்டு ஒப்பந்தத்தை ஆதரித்தன. உண்மையான விடுதலைப் போராட்டத்தை நடத்திய விடுதலைப் புலிகள் மட்டும் ஏற்க மறுத்தனர். ஆனாலும் இந்திய அதிகார வர்க்கம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மிரட்டி பணிய வைத்தனர். ‘இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை; தமிழ் மக்களை இந்தியா பாதுகாக்கும் என்று நம்பி, ஆயுதங்களை ஒப்படைக் கிறோம்’ என்று, விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். விடுதலைபுலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் சில போட்டிக் குழுக்களுக்கு உளவுத் துறை ஆயுதங்களை வழங்கி வந்தது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், இதை வீடியோ படங்களுடன் ஆதாரத்தோடு அமைதிப் படை தளபதி ஹர்கிரத் சிங்கிடம் எடுத்துக் கூறினார். ஹர்கிரத் சிங்கும் உண்மையே என்று ஒப்புக் கொண்டார். இப்படி செய்வது தவறு, என்று இந்திய ராணுவத் தளபதியாக இருந்த கே.சுந்தர்ஜியிடம் சிங் புகார் கூறினார். சுந்தர்ஜியோ, ‘இது உயர்மட்டத்தின் முடிவு’ என்ற கூறிவிட்டார். இவையெல்லாம் ஹர்கிரத்சிங்கே வெளிப்படுத்திய உண்மைகள், மறுக்க முடியாது. அப்போதெல்லாம் ஹர்கிரத் சிங்கை பிரபாகரன் நேரில் சந்தித்துப் பேசி வந்தார்.</p> <p style="text-align: justify;">ஒரு கட்டத்தில் நேரில் பேசுவதற்கு பிரபாகரன் வரும்போது பிரபாகரனை சுட்டுவிடுமாறு ராஜிவின் ஆலோசனைக் குழு இலங்கைத் தூதுவரக இருந்த ஜெ.என்.தீட்சத் வழியாக உத்தரவிட்டது. ஆனால், நேர்மையான அதிகாரியாக இருந்த ஹர்கிரத்சிங் இந்த படுபாதகத்தை தன்னால் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை, அதன் போராட்டத்தைத் தொடரவிட்டால், அவர்கள் தமிழ் ஈழப் போராட்டத்தை விரைவுபடுத்தி விடுவார்கள் என்பதோடு, இந்தியாவின் ஏவல் படையாக எந்த காலத்திலும் மாறமாட்டார்கள் என்பதை உறுதியாக புரிந்து கொண்ட இராஜீவ் காந்தியும், அவரது ஆலோசனை குழுவும், உளவு நிறுவனமும், விடுதலைப்புலிகளின் தலைமையை தீர்த்துக் கட்டுவதற்கு திட்டங்கள் தீட்டின. விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தே ஆட்களைப் பிடித்தார்கள். பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக செயல்பட்ட மாத்தையா அந்த சதிவலையில் வீழ்ந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கொண்டே இந்திய உளவு நிறுவனத்துக்காக ரகசியமாக செயல்பட்டு வந்தார். இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், இந்தப் பின்னணியில்தான் ஈழத்தில் நடந்த ஒவ்வொரு செயல்பாடுகளையும் பார்க்க வேண்டும். ராஜீவ் சர்மாவின் இந்த நூல் உளவு நிறுவனங்களின் இந்த சதியை சூழ்ச்சிகளைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் மீது இந்த சதிகார நிறுவனங்கள் தமிழினப் பகைவர்கள் சுமத்திய களங்கத்தையும், வீண் பழிகளையும் அப்படியே நியாயப்படுத்துகிறது.</p> <p style="text-align: justify;">ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கிட்டு வந்த கப்பல் ஒன்றை இந்திய கப்பல் படைவழி மறித்தது. இந்த நிகழ்வை இந்த நூல் உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை தந்து நியாயப்படுத்துகிறது. ராஜீவ் கொலையை நடத்தி முடித்ததற்காகவே அதன் ‘வெகுமதியாக’ விடுதலைப் புலிகள் நவீன ஆயுதங்களையும், நவீன கப்பல்களையும் வெளிநாட்டு சக்திகளிடமிருந்து பெறத் தொடங்கினர் என்று இந்த நூல் குற்றம் சாட்டுகிறது. அப்படி ராஜீவ் கொலைக்காக கிடைத்த நவீன ஆயுதங்களை வெளிநாட்டு சக்திகளிடமிருந்து பெற்று கப்பலில் கொண்டு வரும்போது தான் கிட்டு பிடிபட்டார் என்று அபாண்டமாக பழி சுமத்துகிறது, இந்த நூல். உளவுத் துறையின் அவதூறுகளையும், பழியையும் நியாயப்படுத்துவதற்காக திட்டமிட்டு உண்மைகளையே மறைத்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.</p> <p style="text-align: justify;">“1993 ஜனவரி 13 ஆம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து 700 கி.மீட்டர் தொலைவில் இக்கப்பல் இடைமறிக்கப்பட்டது” என்கிறார் நூலாசிரியர். இந்திய எல்லைக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு கப்பலை, இந்திய கப்பல் படை சட்ட விரோதமாக சென்று வழி மறித்ததை இந்த நூல் குறிப்பிடாமல், அப்படியே மூடிமறைக்க விரும்புகிறது. ‘700 மைலுக்கு அப்பால் சென்ற கப்பல்’ என்ற வார்த்தையோடு நிறுத்தி விடுகிறார்கள். சர்வதேச கடற்பரப்பில் கப்பலை மடக்கி, இந்திய கடல் எல்லைக்குள் கொண்டு வரப்பட்ட உண்மையை மறைத்துவிட்டு, சென்னை துறைமுகத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும்போது, அதாவது இந்திய கடற்பரப்பில் இருக்கும்போது அக்கப்பல் கிட்டுவால் வெடிக்கச் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.</p> <p style="text-align: justify;">உண்மையில் என்ன நடந்தது? கிட்டுவின் கப்பல் – சர்வதேச கடல்பரப்பில் 440 கடல் மைலுக்கு அப்பால் வந்து கொண்டிருந்தபோது, உளவுத் துறைக்கு மாத்தையா வழியாக அத்தகவல் கிடைக்கப் பெற்றது. கப்பலை வழி மறிக்க இந்திய கப்பல் படை சென்றது. கப்பலை இந்திய கடல் எல்லைக்குள் கொண்டு வருமாறு கப்பல் படையினர் மிரட்டினர். அதற்கு கிட்டு ஒத்துழைக்காத நிலையில், அதிரடிப் படையினர் ஹெலிகாப்டர் துணையுடன் கப்பலுக்குள் குதித்தனர். அப்போது கிட்டுவும், உடன் வந்த போராளிகளும் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு வீரச் சாவைத் தழுவினர்.</p> <p style="text-align: justify;">கிட்டு என்ற மாவீரன் தனது இரு கால்களையும் இழந்த பிறகும் உள்ள உறுதியோடு விடுதலைக்காக களத்தில் நின்ற போராளி. இந்தியாவின் துரோகத்தினால் தன்னைத் தானே தீயிட்டுக் கொண்டு, வீரமரணத்தை தழுவினார்.</p> <p style="text-align: justify;">கப்பலில் உயிருடன் பிடிபட்ட 9 போராளிகள் மீது இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடந்தது. சம்பவம் நடந்த இடம் ஆந்திர மாநிலத்துக்கு உட்பட்டது. இந்திய கப்பல் படை சர்வதேச பரப்பில் அத்துமீறி நுழைந்து, மேற்கொண்ட இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது என்று அறிவித்த ஆந்திர உயர்நீதிமன்றம், 9 புலிகளையும் விடுதலை செய்தது மட்டுமல்ல, கப்பல் புறப்பட்ட இடமான மத்திய அமெரிக்காவுக்கு அவர்களை அரசாங்கமே சொந்த செலவில் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கன்னத்தில் அறைந்ததுபோல் தீர்ப்பளித்தது. ஈழ விடுதலையில் இந்தியாவின் சதிக்கும், கீழறுப்பு நடவடிக்கைகளுக்கும், இந்திய நீதிமன்றமே தந்த செருப்படிதான் இந்த தீர்ப்பு.</p> <p style="text-align: justify;">இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்ட இந்த நூல், இந்த வழக்கு தமிழ்நாடு நீதிமன்றத்தில் நடந்ததாக ஒரு பொய்யான தகவலைத் தருவதோடு, இந்த விசாரணைக்காக அரசு 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டும் பலன் கிடைக்காமல் போய் விட்டதே என்று கவலைப்பட்டு வருந்துகிறது.</p> <p style="text-align: justify;">இந்தக் கப்பல் பிடிபட்டதற்கு, புலிகள் இயக்கத்திற்குள்ளே நடந்த துரோகம் பற்றி இந்த நூல் மவுனம் சாதிக்கிறது. பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக செயல்பட்ட மாத்தையா தான் இந்த கப்பல் வரும் சேதியை ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு தந்தார். ஆதாரங்களோடுதான் கூறுகிறோம்.</p><h4 class="singlePageTitle">விடுதலை இராசேந்திரன்</h4> <p style="text-align: justify;"><em><a href="http://keetru.com/" target="_blank">நன்றி கீற்று இணையம்</a></em></p><p style="text-align: justify;"><em><a href="http://keetru.com/" target="_blank"></a></em></p><ul><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15272&Itemid=139">ராஜீவ் கொலை - காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள் (1)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15289&Itemid=139">மாவீரன் கிட்டு வந்த கப்பல் - காட்டிக் கொடுத்தது யார்? (2)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15387&Itemid=139">ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்? (3)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15505&Itemid=139">பிரேமதாசா மீது ஆத்திரம் - இந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம் (4)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15623&Itemid=139">அமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன? (5)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15749&Itemid=139">உளவுத் துறை அதிகாரி உன்னி கிருஷ்ணன்களின் கதை! (6)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15880&Itemid=139">பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்கும் கரங்கள்! (7)</a></em></li><li><em><a class="aisectionhref" style="text-decoration: none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15881&Itemid=139">பிரபாகரனை 'தீர்த்துக்கட்ட' சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு?</a></em></li></ul><em>-------------------------------------------------------------------------------------------<br /><ul><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15621&Itemid=139">ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15286&Itemid=139">இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14333&Itemid=139">இனப்படுகொலைக்கு துணை போன இந்திய அரசே</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14332&Itemid=139">இனப்படுகொலையில் இந்தியாவின் ரகசிய உதவிகள்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14331&Itemid=139">போர்க் குற்றம் புரிந்த ராஜபக்சே: பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14330&Itemid=139">வன்னியில் ஒரு லட்சம் தமிழர்களை ராணுவம் படுகொலை</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14329&Itemid=139">அய்.நா.வில் படுகொலைகளை மறைத்தவர் விஜய் நம்பியார்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14518&Itemid=139">போர்க்குற்றம் - “எங்களை இந்தியா காப்பாற்றும்” - இலங்கை அரசு</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=12349&Itemid=139">கி. வீரமணியின் ‘2010 ஆம் ஆண்டு’ கொள்கை துரோகங்கள்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11284&Itemid=139">அருந்ததிராய் பேசியதில் குற்றம் என்ன?</a></li></ul><br /><a href="http://www.keetru.com/index.php?option=com_aisection&id=15880&Itemid=139">http://www.keetru.com</a><br /><br /></em><p></p>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-54041264591139348092011-08-02T05:34:00.001-07:002011-08-02T05:59:39.492-07:00ராஜீவ் கொலை – காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள் (1)<img class="alignleft size-full wp-image-2148" title="<p>raw</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/raw.jpg" alt="" width="246" height="219" />ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்….’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் தொகுப்பு.<p></p> <p style="text-align: justify;">சவுக்குப் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூலை வெளியிடும் வாய்ப்பை எனக்கு வழங்கிய சவுக்கு பதிப்பகத்துக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 1998 ஆம் ஆண்டு ராஜிவ் சர்மா எழுதிய ‘Beyond the Tigers’ என்ற நூலை ஆனந்தராஜ், மிகச் சிறந்த நடையில் விறுவிறுப்பாக தமிழாக்கம் செய்துள்ளார். நூலின் பதிப்புரையில் குறிப்பிட் டுள்ளவாறு, “முடிவடையாத ஒரு விசாரணையின் அடிப்படையில் 7 பேர் 21 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் இருப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?………. சிறைக் கொட்டடியில் இருப்பவர்களின் பக்கம் மக்களின் கவனத்தைத் திருப்பினால், அதுவே இப்புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி” என்று எழுதியிருப்பதுபோல் நல்ல தமிழின உணர்வோடு, நல்ல நோக்கத்தோடு தான் இந்த நூல் வெளி யிடப்பட்டிருக்கிறது. சவுக்கு இணையதளத்தின் முகப்பிலேயே தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படம்தான் கம்பீரமாக காட்சி தரும். இந்நூலை வெளியிட்ட சவுக்கு பதிப்பகத்தின் உணர்வு – நோக்கம் மிகவும் மதிக்கத்தக்கது என்பதில் இரண்டுவித கருத்துகளுக்கு இடமில்லை.</p> <p style="text-align: justify;">ஆனால், என்னுடைய வருத்தமெல்லாம் – இந்த நோக்கத்துக்கு இந்த நூலின் உள்ளடக்கம் பயன்படுமா என்பது பற்றித்தான். இந்த நூலின் மய்யமான கருத்தை இப்படிக் கூறலாம். அதாவது ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப் புலிகள்தான் என்று உறுதி செய்கிறது இந்த நூல். அந்தக் கொலைக்குப் பின்னால், சில சர்வதேச சக்திகள் இருந்தன. அந்த சர்வதேச சக்திகளுக்காக விடுதலைப் புலிகள் இந்தக் கொலையை செய்து முடித்துவிட்டு, அதற்கு பிரதிபலன்களாக சக்தி வாய்ந்த கப்பல்களையும் ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டார்கள். ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகுதான் புலிகளுக்கு கப்பல்களில் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வரத் தொடங்கின. ‘கூலிப் படைகள்’ என்பதுபோல் விடுதலைப் புலிகள் இதில் செயல்பட் டிருக்கிறார்கள். எனவே வழக்கை மறு விசாரணைக்கு உட்படுத்தி, இந்த சதியில் ஈடுபட்டவர்களையும் விசாரணை நடத்த வேண்டும் என்பதே இந்நூலின் மய்யக் கருத்து. எனவேதான் “விடுதலைப்புலிக.ளுக்கு அப்பால்…”; என்று தலைப்பிடப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">இந் நூலுக்கு ராஜீவ் கொலை நடந்தபோது மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குனராக இருந்த விஜய்கரன் என்ற அதிகாரியே முன்னுரை எழுதியிருப்பதை சுட்டிக் காட்ட வேண்டும். அவர் இந்த நூல் ஒரு போலீஸ் டைரியைப் போல் இருப்பதாக குறிப்பிடுகிறார். போலீஸ் டைரியைப்போல் என்பதைவிட, காவல்துறை டைரியிலிருந்தே அப்படியே பிரதி எடுக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். ஆக, புலனாய்வுத் துறையில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரியே இந்த நூலை உருவாக்குவதில் பெரும்பங்கு கொண்டிருப்பார் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. நூலின் பின் இணைப்புகளாக தரப்பட்டுள்ள ஆவணங்கள் புலனாய்வுத் துறை தொடர்பானவைகளாகவே உள்ளன. நூலின் முதல் 8 அத்தியாயங்கள் விடுதலைப் புலிகள் ராஜிவ் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதையும், அதை நடத்தி முடித்ததையும் மிக மிக விரிவாக எழுதுகிறது.</p> <p style="text-align: justify;">அந்த அத்தியாயங்களில் விடுதலைப் புலிகள் மீது மிக மிக மோசமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதையே நோக்க மாகக் கொண்டு சிலர் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களின் நோக்கத்துக்கு இந்த நூல் வலிமையான சான்றாகிவிடும் என்ற கவலையால் நான் இதை மறுக்கவேண்டிய நிலையில் இருக்கிறேன். தமிழ் ஈழத்தின் விடுதலைக்காக மாவீரர்களை களப்பலி யாக்கி, கரும்புலிகளை உருவாக்கி, உலக விடுதலை இயக்கங்களாலே மிகவும் மதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தமிழ் ஈழ விடுதலையையும் ஆதரித்து நீண்டகாலமாகவே களத்தில் நின்று கடமையாற்றியவர்கள் என்ற முறையில் இதை மறுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்களுக்கு உண்டு.</p> <p style="text-align: justify;">ராஜீவ் கொலையில் அன்னிய சக்திகளின் பங்களிப்பை நாம் மறுக்கவில்லை. அவர்களின் பங்களிப்பு மூடி மறைக்கப்பட்டுவிட்டதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டி எழுதியுள்ளோம். 1998 ஆம் ஆண்டு நான் எழுதிய ‘ராஜீவ் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற நூல் ‘26 தமிழர் உயிர்க் காப்பு வழக்கு நிதிக் குழு’வால் வெளியிடப் பட்டு தமிழகம் முழுதும் பல்லாயிரக்கணக்கில் பரப்பப்பட்டது. ‘தொடர்ந்து ராஜீவ் கொலையில் பதுங்கி நிற்கும் சாமிகள்’ என்ற தலைப்பில் நான் எழுதி, பெரியார் திராவிடர் கழக சார்பில் வெளி யிடப்பட்ட நூலில் சுப்ரமணியசாமி, சந்திரா சாமி களுக்கு இதிலுள்ள தொடர்புகள் அம்பலப்படுத்தப் பட்டது. அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் நமக்கு கருத்து வேறுபாடு கிடையாது. அதைத் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறோம்.</p> <p style="text-align: justify;">ராஜீவ் கொலை தொடர்பாக மூன்று விசாரணைகள் நடந்தன. ஒன்று – கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை. இந்த விசாரணையின் அடிப்படையில் தான் 7 தமிழர்கள் 21 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள். அதில் 3 பேர் தூக்குத் தண்டனையை எதிர் நோக்கி இருக்கிறார்கள். மற்றொன்று – ராஜீவ் மரணமடைந்த 7 நாட்களில் ராஜீவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பதைக் கண்டறிய உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில், 1991 ஆம் ஆண்டு மே 27 ம் தேதி அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், ஓராண்டு காலத்தில் இந்த விசாரணை ஆணையம் தனது பணியை முடித்து 1992 ஜூன் மாதம் அரசிடம் பரிந்துரையை தாக்கல் செய்தது.</p> <p style="text-align: justify;">இந்த ஆணையம் நியமிக்கப்பட்டபோது பிரதமராக இருந்தவர் சந்திரசேகர். சுப்ரமணியசாமி சட்ட அமைச்சர். அறிக்கையை தாக்கல் செய்த போது காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நரசிம்மராவ் பிரதமர். மத்திய மாநில அரசின் புலனாய்வுப் பிரிவுகளையும், தமிழகப் போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இந்த ஆணையம் கடுமையாகக் .குறை கூறியது. அது மட்டுமல்ல, ராஜீவ் மரண மடைந்த திருப்பெரும்புதூர் கூட்டத்துக்கு வந்திருந்த காங்கிரசாரையும் கடுமையான வார்த்தைகளால், விமர்சனம் செய்திருந்தது. அங்கே காங்கிரசார், பொறுப்புணர்வோ, ஒழுங்கோ இல்லாதவர்களாக செயல்பட்டுள்ளனர் என்கிறது அந்த அறிக்கை. மூன்றாவதாக நியமிக்கப்பட்டதுதான் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயின் ஆணையம். நீதிபதி சர்மா பாது காப்பு குறைபாடுகள் பற்றித் தான் தம்மால் விசாரிக்க முடியுமே தவிர, சதித் திட்டம் பற்றி தம்மால் விசாரிக்க முடியாது என்று மறுத்து விட்டார். இந்த நிலையில் ராஜீவ் கொலைக்குப் பின்னால் நடந்த சதி, பின்னணி காரணங்கள் தொடர்புள்ள தனி நபர்கள், நிறுவனங்கள் பற்றி நீதிபதி ஜெயின் ஆணையம் விசாரணை நடத்தியது. 12 முறை கால நீட்டிப்புப் பெற்று 6 ஆண்டுகாலம் விசாரணை நடத்திய இந்த ஆணையம், கடைசியில் அவசர அவசரமாக இடைக்கால அறிக்கை ஒன்றை மட்டும் சமர்ப்பித்து விட்டு ஒதுங்கிக் கொண்டது. ராஜீவ் கொலைக்கு விடுதலைப்புலிகள் மற்றும் தி.மு.க. ஆட்சியைக் குற்றம் சாட்டியதோடு, தமிழ் நாட்டு மக்களையும் குற்றவாளிகளாக அதன் அறிக்கை கூறியது – இது கடும்புயலைக் கிளப்பியது.</p> <p style="text-align: justify;">ராஜீவுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் படவில்லை என்று வர்மா ஆணையம் கூறிய பிறகு, அப்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததற்கு யார் காரணம்? அவர்கள் மீது, ராஜீவுக்காக கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ் கட்சி, நடவடிக்கை எடுத்ததா என்றால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டுமல்ல, நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது ராஜீவ் கொலை விசாரணை தொடர்பான மிக முக்கியமான கோப்புகள் காணாமல் போய்விட்டன. அப்படி காணாமல் போன கோப்புகளை ஆதாரங்களுடன் அப்போது ‘அவுட் லுக்’ ஏடு (24.11.1999 இதழ்) பட்டியலிட்டுக் காட்டியது.</p> <p style="text-align: justify;">1) 1989 நவம்பரிலிருந்து ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அதிகாரிகள் எழுதிய குறிப்புகளைக் கொண்ட கோப்பு பிரதமர் அலுவலகத்திலிருந்து 1991 ஆம் ஆண்டிலிருந்து காணாமல் போய் விட்டது. (8-1-WR/JSS/90/volIII) ஜெயின் ஆணையம் இந்தக் கோப்பை கேட்டபோது கோப்பைக் காண வில்லை. பிறகு பொய்யாக, ஒட்டு வேலைகள் செய்து ஒரு கோப்பை தயாரித்து, ஆணையத்தின் முன் சமர்ப்பித்தார்கள். இந்தக் கோப்புகளை எழுதிய அதிகாரிகளில் ஒருவர் வினோத் பாண்டே இவர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அமைச்சரவை செயலாளராக இருந்தவர். ஜெயின் ஆணையத்தின் முன் சாட்சியமளித்த அந்த அதிகாரி, கோப்புகளைப் பார்த்து அதிர்ச்சி யடைந்து, இந்தக் கோப்புகளில் தான் எழுதிய குறிப்புகள் இடம் பெறவில்லை; இவை திருத்தப் பட்டவை என்றார். அப்போது உள்துறையில் துணை அமைச்சராக இருந்தவர், இப்போது ‘இளம் தலைவர் ராஜீவு’க்காக கண்ணீர் வடிக்கும் ப. சிதம்பரம்தான். கோப்புகள் திருத்தி, ஒட்டி, போலியாக தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட் டுகள் எழுந்ததைத் தொடர்ந்து ஜெயின் ஆணை யம் உள்துறை அமைச்சகததை அழைத்துக் கேட்டது. ப. சிதம்பரம் கூண்டில் ஏற்றி, ‘ஆம் கோப்புகளை புதிதாக தயாரித்தது உண்மைதான்’ என்று ஒப்புக் கொண்டார். இவர்கள் தான் ராஜீவ் மரணத்துக்கு குடம் குடமாக கண்ணீர் வடிக் கிறார்கள்.</p> <p style="text-align: justify;">2) நீதிபதி வர்மா மற்றும் நீதிபதி ஜெயின் விசாரணை ஆணையத்துக்கான வரம்புகளை நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் அடங்கிய மற்றொரு கோப்பு 1995 ஆம் ஆண்டு முதல் காணாமல் போய் விட்டது. (கோப்பு எண்.1/120/14/5/911/A.S./DIII).</p> <p style="text-align: justify;">3) சந்திரசாமி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ர மணியசாமி ஆகியோருடன் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு பேசியபோது, இடைமறித்துக் கேட்கப்பட்ட உரையாடல் களைப் பதிவு செய்த கோப்பை பிரதமர் அலு வலக மூத்த அதிகாரிகளே அழித்து விட்டனர்.</p> <p style="text-align: justify;">4) 1987 ஆம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்திக்கும், அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில்சிங்குக்கும் இடையே மோதல் உருவானது. இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டவுடன், அப்போது எந்தப் பொறுப்பிலும் இல்லாத ராஜீவுக்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்து, நாட்டின் பிரதமராக்கியதே அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஜெயில் சிங் தான். பதவி அதிகாரத்துக்கு வந்த ராஜீவ் – அதிகார மமதை யில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தையே அவ மதிக்கத் தொடங்கிய நிலையில் ஒரு கட்டத்தில், குடியரசுத் தலைவரே ராஜீவ் ஆட்சியைக் கவிழ்க்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். அப்போது குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கும், சர்வதேச ஆயுதத் தரகரும், சாமியாரும், சுப்ர மணியசாமி நண்பருமான சந்திரசாமியும், மேற் கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் பற்றி இந்திய உளவு நிறுவனம் (i.b.) கண்டறிந்த உண்மைகளும், பரிந்துரைகளும் கொண்ட கோப்புகளும் காணாமல் போய் விட்டன.</p> <p style="text-align: justify;">நரசிம்மராவின் குருவாக செயல்பட்டவர் சந்திர சாமி. பிரதமராக இருந்த சந்திரசேகரின் குருவும் சந்திரசாமிதான். அன்னியச் செலவாணி மோசடி, தொடர்பாக பல வழக்குகளில் சிக்கியவர். சர்வதேசப் புள்ளிகளுடன் நெருக்கமான உறவு கொண்டவர். இவர் ஒரு பார்ப்பனர். நேர்மையான பொது வாழ் வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு, வி.பி.சிங் மகனுக்கு செயின்ட் கிட்ஸ் எனும் தீவில் ரகசிய வங்கிக் கணக்கு இருப்பதாக, ஒரு போலி ஆவணத்தைத் தயாரித்து, அன்றைய பிரதமர் நரசிம்ம ராவிடம் வழங்கி, வி.பி.சிங் மகனை கைது செய்ய இவர் முயற்சித்தார். இதற்கு பார்ப்பனர் நரசிம்ம ராவும் உடந்தை. பிறகு, அது போலி ஆவணம் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால், கிரிமினல் வழக்குக்கு உள்ளாகி நீண்டகாலம் டெல்லி திகார் சிறையில் அடைபட்டிருந்தார் இந்த சந்திரசாமி. ராஜீவ் கொலை தொடர்பாக – ஜெயின் ஆணையம், இந்த சந்திரசாமி, சுப்ரமணிய சாமிகளை விசாரணை நடத்தியது. ஆனால் இவர்களின் சதிச் செயல்களுக்கு ஆதாரமான பல அரசுக் கோப்புகள், நரசிம்மராவ் ஆட்சியில் அழிக்கப்பட்டு விட்டன. இந்த செய்தி களையெல்லாம் ‘அவுட்லுக்’ பத்திரிகை ஆதாரங் களை முன் வைத்து எழுதியதை நான் எழுதிய “ராஜீவ் படுகொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்” நூலில் 1998 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளேன்.</p> <p style="text-align: justify;">ராஜீவ் சர்மாவின் இந்த நூல் பிரபாகரனை ஈழத்துக்குள் சென்று ஏன் பிடித்து வந்து விசாரிக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பி, “இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப் பாட்டுக்கும் மிரட்டல்விடுக்கும் தீவிரவாத இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பிடிக்க, ஏன் புதுடில்லி தைரியமான வெளிப்படையான தாக்குதலைத் தொடங்கக் கூடாது?” (பக்.319) என்று கடும் கோபத்துடன் கேள்வி எழுப்புகிறது. ராஜீவ் கொலையில் நடந்த அன்னிய சதியை பிரபாகரனே மறைப்ப தாகவும், எனவே செயற்கைக் கோள் வசதியைப் பயன்படுத்தி பிரபாகரனைப் பிடித்து வர வேண்டும் என்றும் இந்த நூல் வலியுறுத்துகிறது.</p> <p style="text-align: justify;">‘எனது இந்தியா உயர்வானது’ என்று முழக்கத்தைத் தந்து நாட்டுக்கே கவுரவத்தைத் தந்த தலைவர் ராஜீவ் மரணத்தால் இந்தியாவின் கவுரவமே அந்தரத்தில் ஊசலாடுவதை (பக்.318) எப்படி பொறுத்துக் கொண்டிருக்க முடியும் என்று ஆவேசமாக ‘தேச பக்தி’ பேசுகிறது.</p> <p style="text-align: justify;">ராஜீவ் கொலையில் அன்னிய சக்திகளின் தலையீடு இருந்தது என்பது வேறு; அன்னிய சக்திகளின் கூலிப் படையாக விடுதலைப் புலிகள் செயல்பட்டார்கள் என்பது வேறு. இந்த நூல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது, அப்படி ஒரு இழிவான பழியை வெளிப்படையாகவே சுமத்துகிறது. இந்திய உளவுத் துறையும், ஊடகங்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக பரப்பிவரும் ஆதாரமற்ற அவதூறுகள் அத்தனையும் இந்த நூலில் இடம் பிடித்துள்ளன. இந்த அவதூறு களையும் குற்றச்சாட்டுகளையும் உரிய ஆதாரங்களோடு நம்மால் மறுக்க முடியும்.</p> <p style="text-align: justify;">- (தொடரும்)</p><h4 class="singlePageTitle"> - விடுதலை இராசேந்திரன்</h4> <p style="text-align: justify;"><a href="http://keetru.com/" target="_blank">நன்றி கீற்று இணையம்</a></p><p style="text-align: justify;"><a href="http://keetru.com/" target="_blank"></a></p><ul><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15272&Itemid=139">ராஜீவ் கொலை - காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள் (1)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15289&Itemid=139">மாவீரன் கிட்டு வந்த கப்பல் - காட்டிக் கொடுத்தது யார்? (2)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15387&Itemid=139">ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்? (3)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15505&Itemid=139">பிரேமதாசா மீது ஆத்திரம் - இந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம் (4)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15623&Itemid=139">அமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன? (5)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15749&Itemid=139">உளவுத் துறை அதிகாரி உன்னி கிருஷ்ணன்களின் கதை! (6)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15880&Itemid=139">பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்கும் கரங்கள்! (7)</a></li><li><a class="aisectionhref" style="text-decoration: none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15881&Itemid=139">பிரபாகரனை 'தீர்த்துக்கட்ட' சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு?</a></li></ul>-------------------------------------------------------------------------------------------<br /><ul><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15621&Itemid=139">ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15286&Itemid=139">இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14333&Itemid=139">இனப்படுகொலைக்கு துணை போன இந்திய அரசே</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14332&Itemid=139">இனப்படுகொலையில் இந்தியாவின் ரகசிய உதவிகள்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14331&Itemid=139">போர்க் குற்றம் புரிந்த ராஜபக்சே: பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14330&Itemid=139">வன்னியில் ஒரு லட்சம் தமிழர்களை ராணுவம் படுகொலை</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14329&Itemid=139">அய்.நா.வில் படுகொலைகளை மறைத்தவர் விஜய் நம்பியார்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14518&Itemid=139">போர்க்குற்றம் - “எங்களை இந்தியா காப்பாற்றும்” - இலங்கை அரசு</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=12349&Itemid=139">கி. வீரமணியின் ‘2010 ஆம் ஆண்டு’ கொள்கை துரோகங்கள்</a></li><li><a class="aisectionhref" style="text-decoration:none;" href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11284&Itemid=139">அருந்ததிராய் பேசியதில் குற்றம் என்ன?</a></li></ul><br /><a href="http://www.keetru.com/index.php?option=com_aisection&id=15880&Itemid=139">http://www.keetru.com</a><br /><br /><p></p>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-24706365183835732542011-08-02T05:32:00.001-07:002011-08-02T05:33:51.534-07:00புலிகள் எதிர்ப்பாளர்களே தங்களது நூலில் எழுதியுள்ள உண்மை!-6<p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/06/savukku_book_450.jpg"><img class="alignleft size-full wp-image-1696" title="<p>savukku_book_450</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/06/savukku_book_450.jpg" alt="" width="310" height="450" /></a>அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைகளை நடத்தியது புலிகள்தான் என்று பழிபோட்டது போல், அதற்கு முன்பே 1985 ஆம் ஆண்டில் இரண்டு நாடாளுமன்ற தலைவர்கள் கொல்லப்பட்டபோதும், புலிகள் மீதே வீண் பழி சுமத்தினர். கொல்லப்பட்ட வி.தர்மலிங்கம், எம்.ஆலால சுந்தரம் என்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்தனர். தர்மலிங்கம் 23 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, தமிழர்களுக்கு தொண்டு செய்தவர். அதேபோல் ஆலாலசுந்தரம் நியமன முறையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மிகவும் நயவஞ்சகமாக இவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். ஆலால சுந்தரம் வீட்டில் இருந்தபோது நன்னடத்தை சான்றிதழ் கேட்கச் சென்ற இரண்டு பேர், அவரை வீட்டிலிருந்து இழுத்து வந்து காரில் கடத்தினர். தர்மலிங்கம் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது, ஆலால சுந்தரம் அவரை அவசரமாக சந்திக்க விரும்புவதாகக் கூறி வெளியே அழைத்து வந்து காரில் பலவந்தமாக ஏற்றி கடத்தினர். அடுத்த நாள் – தர்மலிங்கம் சடலம் கல்லறை ஒன்றின் அருகே நெற்றியில் குண்டுக் காயங்களோடு கிடந்தது. அருகே கிடந்த ஒரு துண்டு காகிதத்தில், “தமிழினத்துக்கு துரோகமிழைத்தவருக்கு வழங்கப்பட்ட தண்டனை இது. ஈழத்தை அடகு வைப்பவர்களுக்கு குறிப்பாக தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணிக்கு – இப்படிக்கு தன்மானமுள்ள தமிழர்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.</p> <p style="text-align: justify;">ஆலால சுந்தரத்தின் சடலம் மார்பில் குண்டு காயங்களோடு யாழ்ப்பாணம் நகரில் கைப்பற்றப்பட்டது. இந்த படுகொலைகள் யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. அதிலும் தர்மலிங்கம், டி.யு.எல்.எப். தலைவர் அமிர்தலிங்கம் போக்கு பிடிக்காமல் அதிலிருந்த விலகி, அதிருப்தியாளர்கள் உருவாக்கியிருந்த தமிழ் ஈழ விடுதலை முன்னணி அமைப்பில் இணைந்திருந்தார். பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். மற்றவர்களுக்கு உதவக் கூடியவர். பல ஏழைக் குழந்தைகளை தனது சொந்த செலவிலேயே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தவர். அவரிடமிருந்த ஒரே வாகனம் சைக்கிள் தான். ஆலால சுந்தரம் – வழக்கறிஞர்; ஆனாலும் மிகவும் ஏழ்மையாகவே வாழ்ந்தவர். தன்னுடைய மகள், ஒரு சைக்கிள் கேட்டபோது, மனைவியின் நகையை விற்றுத்தான் வாங்கித்தர வேண்டிய நிலையில் இருந்தார். இந்த இருவரின் கொடூரமான கொலையும் யாழ்ப்பான மக்களின் நெஞ்சை உலுக்கியது. விடுதலைப் புலிகள் தான் ஈவிரக்கமின்றி, இந்தக் கொலையை செய்தார்கள் என்ற பிரச்சாரம் திட்டமிட்டு பரப்பப்பட்டது. பழிகள் புலிகள் மீது விழுந்தது.</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/telo.png"><img class="alignright size-full wp-image-2801" title="<p>telo</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/telo.png" alt="" width="139" height="169" /></a>இந்த சம்பவம் நடந்த 1985 ஆம் ஆண்டு கால கட்டத்தைப் பார்க்க வேண்டும். 1984 ஆம் ஆண்டுகளில் இந்திரா பிரதமராக இருந்தபோது போராளிகளுக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சி தர முன் வந்தார். ‘ரா’ உளவு நிறுவனம், அதற்கான ஏற்பாடுகளை செய்தது. அப்படிப் பயிற்சி பெறுவதற்கு ‘ரா’முதலில் தேர்ந்தெடுத்த அமைப்பு சபாரத்தினம் தலைமையில் இயங்கிய ‘டெலோ’ தான்! காரணம். இந்தியா சொல்வதை அப்படியே நிறைவேற்றும் அமைப்பாக ‘டெலோ’ இருந்தது. பிறகு படிப்படியாக ஏனைய அமைப்புகளுக்கும் பயிற்சி தர ‘ரா’ முன் வந்தது. ‘விடுதலைப்புலிகள்’ மட்டும் தனித்து விடப்பட்டனர். விடுதலைப் புலிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வர மாட்டார்கள் என்ற உறுதியான முடிவில் உளவு நிறுவனம் இருந்ததே இதற்குக் காரணம். ஏனைய குழுக்கள் இந்தியாவின் பயிற்சி மற்றும் ராணுவ உதவிகளோடு பலம் பொருந்தியவைகளாக மாறும்போது விடுதலைப் புலிகள் அழிக்கப்படக்கூடிய ஆபத்தை உணர்ந்த பிரபாகரன், இந்தியாவின் ராணுவப் பயிற்சியில் புலிகள் இயக்கத்தையும் இணைக்கவேண்டும் என்று வற்புறுத்தி இணைத்தார்.</p> <p style="text-align: justify;">இந்த சூழ்நிலையில் 1984இல் இந்திரா, தனது மெய்க் காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜீவ் பிரதமரானவுடன் இந்திராவின் ஈழத் தமிழர் ஆதரவு அணுகுறையில் அதிருப்தியுற்றிருந்த பார்ப்பன அதிகார வர்க்கம், ராஜீவை தங்கள் வழிக்கு திருப்பினர். அதுவரை ஈழத் தமிழர்ப் பிரச்சினைக்கு பொறுப்பேற்றிருந்த பார்த்தசாரதி என்ற அதிகாரி மாற்றப்பட்டு பண்டாரி என்ற அதிகாரி, அந்த பொறுப்புக்கு வந்தார். ஈழ விடுதலைப் போராட்டத்தில் சமரசத்துக்கு உட்படாத இந்தியாவின் வலையில் விழ மறுத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி, அவர்களை பலவீனப்படுத்தும் திட்டங்களை உளவு நிறுவனம் உருவாக்கியது. தர்மலிங்கம், ஆலால சுந்தரம் படுகொலைகள் அந்த நேரத்தில்தான் நடந்தன. இந்தப் படுகொலைகளை விடுதலைப் புலிகள் மறுத்தாலும் எந்த ஆதாரமும் இன்றி புலிகள் மீது பழி போட்டே பிரச்சாரங்கள் நடந்தன.</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/indira-gandhi.jpg"><img class="alignleft size-full wp-image-2806" title="<p>indira-gandhi</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/indira-gandhi.jpg" alt="" width="264" height="370" /></a>ராஜீவ் சர்மாவும் இந்த நூலில், “1980-1990-க்கும் இடைப்பட்ட காலத்தில் சக தமிழ் இயக்கங்களைச் சார்ந்த 300 போராளிகளை மற்றும் எல்.டி.டி.ஈ. இயக்கத்திற்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பல முக்கிய தலைவர்களை பிரபாகரன் கொன்றார்” என்று எந்த ஒரு சிறு ஆதாரமும் இன்றி புலனாய்வுத் துறை பரப்பிய அதே பொய்களை அப்படியே வாந்தி எடுத்து எழுதுகிறார். இதிலிருந்தே இந்த நூல், எந்த ‘எஜமானருடைய’ குரலை எதிரொலிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். எதைச் சொன்னாலும் நம்ப வைத்து விடலாம் என்று தமிழினம் ஏமாந்து இருந்த காலம் இப்போது இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பொய் புனைவுகளை கிழித்தெறிந்து மக்கள் மன்றத்தில் நாம் உண்மைகளை அம்பலப்படுத்தியே தீருவோம்.</p> <p style="text-align: justify;">அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் படுகொலைகளைப் போலவே, தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் படுகொலைகளும் புலிகள் மீது வீண்பழி சுமத்தவே அரங்கேற்றப்பட்டன. இதற்கு இரண்டு ஆதாரங்களை முன் வைக்க விரும்புகிறேன். ஒன்று – உளவு நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய ஆய்வாளர் நாராயணசாமி, விடுதலைப்புலிகளுக்கு எதிராக எழுதி, உளவுத் துறையால் போற்றப்படுகிற, அவரது நூலிலேயே இந்தக் கொலையில் டெலோ கண்டனத்துக்கு உள்ளானது என்று கூறுகிறார். ஆனால் உளவு நிறுவனங்கள் விடுதலைப் புலிகளையே குற்றம் சாட்டியதாக குறிப்பிடுகிறார். சுட்டுக் கொல்லப்பட்ட தர்மலிங்கத்தின் மகன் ‘புளோட்’ என்ற போராளிகள் குழுவில் சேர்ந்திருந்தார். அவரும் விடுதலைப் புலிகள் தான் இதைச் செய்தார்கள் என்று கூறவில்லை. அப்போது ‘எல்.டி.டி.ஈ – டெலோ – ஈரோஸ் – ஈ.பி.ஆர்.எஃப்.’ அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியிருந்தன. இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள ஏதோ ஓர் அமைப்பே தனது தந்தையை கொலை செய்ததாகவே கூறினார். ஆனால் உண்மையில் இந்தக் கொலையை செய்ய உத்தரவிட்டவர், இந்திய உளவு நிறுவனத்தின் உத்தரவுகளை ஏற்று செயல்பட்டு வந்த ‘டெலோ’ அமைப்பின் தலைவர் சிறீசபாரத்தினம் தான். இதற்கு சான்று விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்த்து எழுதப்பட்ட நூலான ‘முறிந்த பனை’ என்பதாகும்.</p> <p style="text-align: justify;">யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ராஜன் ஹுல் உள்ளிட்ட 4 பேராசிரியர்கள் எழுதிய இந்த நூல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எழுதப்பட்ட நூலாகும். அந்த நூலே தர்மலிங்கம், ஆலால சுந்தரம் படுகொலைகளைச் செய்தவர்களை பற்றி இவ்வாறு எழுதியுள்ளது:</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/book-murinthapanai.jpg"><img class="alignleft size-full wp-image-2802" title="<p>book-murinthapanai</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/book-murinthapanai.jpg" alt="" width="130" height="190" /></a>“தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணி, நாடாளுமன்ற உறுப்பினர்களுள் திருவாளர்கள் தர்மலிங்கமும், ஆலால சுந்தரமும், யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து வசித்து வந்தவர்கள். இந்தியாவில் வாழ்ந்து வந்த டெலோ, இயக்கத்தினருடன் பேசிய அநேகரின் சான்றாதாரங்களின்படி, இக் கொலைகள் பின் வருமாறு நடந்தனவென்று தெரிய வந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரான பிரபாகரன், தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியைக் கடுமையாக மிரட்டி உரையாற்றியபின், பிரபாகரன் இக் கொலைகள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு, மதிப்பிழக்கப்படுவார் என எதிர்பார்த்த டெலோ தலைவர் சிறீசபாரத்தினம், இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொலை செய்யுமாறு தனது ஆட்களுக்கு இரகசியமாக ஆணையிட்டார். எதிர்பார்த்ததுபோல், விடுதலைப் புலிகளே பெரும்பாலும் இக் கொலைகளுக்கு குற்றஞ்சாட்டப்பட்டனர். திரு.தர்மலிங்கத்தின் வீட்டுக்கு அண்மையில் காவல் நின்ற ஒரு புளோட் உறுப்பினர் கொலையாளிகள் வந்த வாகனம் ‘டெலோ’ வுக்குச் சொந்தமானதென இனங் கண்டார்.” – “முறிந்த பனை”, பக்.82</p> <p style="text-align: justify;">இதுதான் புலிகள் எதிர்ப்பாளர்களே தங்களது நூலில் எழுதியுள்ள உண்மை. இந்தியாவின் போராளிகளுக்கு பயிற்சி தரப்பட்ட காலகட்டங்களிலும் சரி, அதைத் தொடர்ந்து, ஈழத்தில் கொலைகள் நடந்த காலத்திலும், அவற்றில் இந்திய உளவு நிறுவனங்களின் பங்கு உண்டு என்பதற்கு, மற்றொரு முக்கிய தகவலை நாம் மக்கள் மன்றத்தில் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டில் பல்வேறு போராளிகள் குழுக்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கு ராணுவப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்த தரவேண்டிய பொறுப்பு ‘ரா’ உளவு நிறுவனத்தின் கள அதிகாரியாக டி.அய்.ஜி. நிலையில் பணியாற்றிய உன்னிகிருஷ்ணன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த உன்னி கிருஷ்ணன்தான் பயிற்சிக்கு முதல் அணியாக ‘டெலோ’வை தேர்ந்தெடுத்தார். இந்த உன்னி கிருஷ்ணனின் பின்னணி என்ன என்பதையும் நாம் சொல்லியாக வேண்டும்.</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/cia.png"><img class="alignleft size-full wp-image-2803" title="<p>cia</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/cia.png" alt="" width="200" height="200" /></a>“1981 இல் உன்னிகிருஷ்ணன் கொழும்பில் ‘ரா’வுக்காக வேலை செய்த போது – அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவருடன் நட்பு கொண்டார். இருவரும் நெருக்கமாகி, பல ‘ஒழுக்கக் கேடான’ செயல்களில் ஈடுபட்டனர். பல பெண்களுடன், பாலியல் உறவுகளை வைத்திருந்தனர். அப்போது – அமெரிக்க தூதரக அதிகாரி வழியாக – இந்திய உளவுத் துறையின் செய்திகளை அமெரிக்க உளவு நிறுவனமான ‘சி.அய்.ஏ.’க்கு அனுப்பி வந்தார். 1983 களில் தமிழ்ப் போராளிக் குழுக்களுடன் – நேரடி தொடர்பு கொண்டிருந்த காலத்தில், உன்னிகிருஷ்ணன், ‘ரா’வின் அதிகாரி மட்டுமல்ல; ‘சி.அய்.ஏ.’வுக்கும் உளவாளி! தமிழ்ப் போராளிக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்ற பிறகு, அவர் – சிறீலங்கா உளவுத் துறைக்கும் நெருக்கமானார். கொழும்பில் – அவருக்கு பல பெண்களுடன் இருந்த உறவை சிறீலங்கா உளவுத் துறைப் பயன்படுத்திக் கொண்டு, மிரட்டி, உன்னிகிருஷ்ணனை தனது வலையில் சிக்க வைத்தது.</p> <p style="text-align: justify;">ஒரே கட்டத்தில் ‘ரா’ – ‘சி.அய்.ஏ.’ – சிறீலங்கா உளவுத் துறைகளுடன், ரகசியமாக செயல்பட்டுக் கொண்டும், அதே காலத்தில் ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுடனும் நேரடி தொடர்பு கொண்டும் உன்னிகிருஷ்ணன் செயல்பட்டுள்ளார். 1985 இல் சென்னையில். இவர் தமிழ் ஈழப் போராளிக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தபோது – பம்பாயில் – அமெரிக்காவின் ‘பான் விமான சேவை’யில் வேலை செய்த ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்பை ஏற்படுத்தித் தந்தவரும் உன்னி கிருஷ்ணனின் நண்பரான கொழும்பில் இருந்த அமெரிக்க தூதரக அதே அதிகாரிதான். சென்னையிலிருந்து – பம்பாய்க்குப் பறந்து கொண்டு, விமானப் பணிப் பெண்ணுடன், அடிக்கடி சிங்கப்பூருக்குப் போய், உல்லாசமாக இருந்தார், உன்னி கிருஷ்ணன். ஆனால் எப்படியோ இவர்கள் இருவரும் ‘இணைந்த நிலையில்’ இருந்த படங்கள் ரகசியமாக எடுக்கப்பட்டன. ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள்; இந்தியாவின் வெளியுறவுத் துறை முடிவுகள்; ‘ரா’வின் திட்டங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் – உன்னிகிருஷ்ணன் வழியாக – சிறீலங்கா அரசுக்குக் கிடைத்து வந்தன.</p> <p style="text-align: justify;">கொழும்பில் இந்திய தூதராகவிருந்த ஜே.என்.தீட்சித் இதை ஒப்புக் கொண்டு தனது நூலில் பதிவு செய்துள்ளார். தீட்சித் எழுதியிருப்பதைப் படிக்கிறேன்.</p> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/07/theeksith.jpg"><img class="alignleft size-full wp-image-2804" title="<p>theeksith</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/07/theeksith.jpg" alt="" width="238" height="296" /></a>“1986 ஆம் ஆண்டுகளில் – முதல் 6 மாதங்களில் – நான் லலித் அதுலத் முதலியுடன் (இவர் இலங்கையில் செல்வாக்குள்ள அமைச்சர்) நடத்திய உரையாடல்களில் – அவர் தெரிவித்த கருத்துக்கள் – என்னை வியப்பில் ஆழ்த்தின. இந்தியாவின் வெளிநாட்டுத் துறை அதிகாரிகள்; உளவு நிறுவன அதிகாரிகள்; இவர்களின் செயல்பாடுகள் பற்றி, ஏராளமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டது. என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டது. உடனே நான், இதுபற்றி டெல்லிக்கு தகவல் கொடுத்தேன்” - என்று எழுதியுள்ளார். (நூல்: Assignment Colombo) இப்படி – இந்திய உளவுத்துறை ரகசியங்களை சிறிலங்காவுக்கு கொடுத்தது யார் என்பதையும் – ஜே.என்.தீட்சித் குறிப்பிடுகிறார்.</p> <p style="text-align: justify;">“சிறீலங்காவுக்கு, இந்தத் தகவல்களைத் தந்தது, எங்களது உளவு அமைப்பில் பணிபுரிந்த அதிகாரி உன்னி கிருஷ்ணன்தான் அவர். அமெரிக்க விமானப்பணிப்பெண் ஒருவர் மூலமாக, அமெரிக்கர் வலையில் வீழ்ந்து விட்டார். அவரது ‘எதிர்மறையான’ நடவடிக்கைகள் 1986 மத்தியில் தெரிய வந்தது. தொடர்ந்து – அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உன்னிகிருஷ்ணன் “அமைதியாக்கப்பட்ட” பிறகு, சிறீலங்காவுக்கு இந்தியா பற்றி கிடைத்து வந்த தகவல்கள் கடுமையாகக் குறைந்துவிட்டன. சிறீலங்காவுக்கு உன்னி கிருஷ்ணன்தான் ரகசியத் தகவல்களைத் தந்தார் என்பது இதன் மூலம் உறுதியானது” – என்று மேலோட்டமாக – விரிவாக உண்மைகளை வெளியிடாமல், ஆனால் உண்மைகளை ஒப்புக் கொண்டு எழுதியுள்ளார், ஜே.என். தீட்சித்.</p> <p style="text-align: justify;">“The Sri Lanka source of information was a senior operative of our own intelligence agency, Unnikrishnan, who had been subverted most probably by the Americans through a foreign lady working for Pan-American Airlines. His negative activities were discovered sometime towards the middle of 1986, which was followed by appropriate procedural action against him. The fact that the Sri Lankan Government’s advance knowledge about Indian policies and intentions clearly diminished after Unnikrishnan was neutralized proved that he was a major source of information to the Sri Lankans. (Assignment Colombo-(1998) pg. 61)”</p> <p style="text-align: justify;">உண்மைகளை மறைக்க முடியாமல் – மென்மையான வடிவில் ஜே.என்.தீட்சித் தந்துள்ளார் என்றாலும், கே.வி.உன்னி கிருஷ்ணனின் நடவடிக்கைகளை அவரால் மறைக்க முடியவில்லை.</p> <p style="text-align: justify;">- ஆக அமெரிக்கா, இந்தியா, இலங்கை என்று மூன்று நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் உளவு வேலை பார்த்த ஒரு ‘ஒழுக்கசீலரிடம்’ தான், போராளி குழுக்களுக்கு பயிற்சி தரும் பொறுப்புகள் தரப்பட்டன. இந்த ‘தர்மபுத்திரர்களுக்கு’ தலைமையேற்று சென்னையில் செயல்பட்டவர் பார்த்தசாரதி என்ற வெளியுறவுத் துறையைச் சார்ந்த பார்ப்பன அதிகாரி! இந்திய ராணுவம் ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த காலத்தில், இவர், உளவுத் துறையினருடன் இணைந்து ஒவ்வொரு நாளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு தந்து வந்தார். அரசு கட்டுப்பாட்டிலிருந்த தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒவ்வொரு நாளும் புலிகளுக்கு எதிரான செய்திகளைப் பரப்பி வந்தன. (குறிப்பு : இந்த பார்த்தசாரதி என்ற பார்ப்பன அதிகாரி இப்போது ஓய்வு பெற்று விட்டார். கடந்த வாரம் ‘சேனல் 4’ தொலைக்காட்சி சிங்கள ராணுவத்தின் இனப்படுகொலை காட்சிகளை ஒட்டி ‘ஹெட்லைன்ஸ் டுடே’ நடத்திய விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோது, ‘பிரபாகரன் கோழை; அவர், மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தி யதால் தான், இலங்கை ராணுவத் தாக்குதலில் மக்கள் பலியாக நேர்ந்தது’ என்று இறுமாப்போடு கூறி இலங்கை ராணுவத்தை நியாயப்படுத்தி பேசினார்.)</p> <p style="text-align: justify;">இப்படிப்பட்ட ‘உன்னிகிருஷ்ணன்களைக்’ கொண்ட நயவஞ்சக இந்திய உளவு நிறுவனத்தின் பார்ப்பன முகத்தை ராஜீவ் சர்மா தனது நூலில் எழுதாமல் எல்லா கொலைகளுக்குமான பழியையும் விடுதலைப் புலிகள் மீதே போடுவது என்ன நியாயம்? எது எவரின் குரல்?</p> <p style="text-align: justify;">• தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் என்ற மக்கள் செல்வாக்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வஞ்சகமாகக் கொன்று பழியை புலிகள் மீது போட்டது – ‘டெலோ’ என்ற அமைப்பு.</p> <p style="text-align: justify;">• புலிகளை எதிர்ப்பவர்களே இந்த உண்மைகளை பதிவு செய்து விட்டனர்.</p> <p style="text-align: justify;">• அந்த ‘டெலோ’ உளவுத் துறையின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கிய அமைப்பு.</p> <p style="text-align: justify;">• இந்தியா, இலங்கை அமெரிக்கா என்று ஒரே நேரத்தில் 3 நாடுகளின் உளவாளியாகவும், அதே நேரத்தில் பல்வேறு போராளி குழுக்களுடனும் நெருக்கமாக உறவாடி, விடுதலைப் புலிகளுக்கு எதிராக திட்டங்களை வகுத்த உன்னி கிருஷ்ணன் தான் கொலைகளின் பின்னணியாக செயல்பட்டிருக்கிறார்.</p> <p style="text-align: justify;">- தொடரும்</p><h4 class="singlePageTitle">விடுதலை இராசேந்திரன்</h4> <p style="text-align: justify;"><em><a href="http://keetru.com/" target="_blank">நன்றி கீற்று இணையம்</a></em></p>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-7043361028916612392011-08-02T05:26:00.000-07:002011-08-02T05:30:59.238-07:00தலைவர் வே.பிரபாகரனை தீர்த்துக்கட்ட சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு?ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை சீர்குலைத்து, ராணுவ மோதலுக்கு ஊக்கப்படுத்தியது இந்தியாவும் – சோனியாவும் தான் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.<br /><h4 class="singlePageTitle"> </h4> <p style="text-align: justify;"><a href="http://rste.org/wp-content/uploads/2011/08/tamil-national-leader.jpg"><img class="alignnone size-full wp-image-2881" title="<p>tamil-national-leader</p>" src="http://rste.org/wp-content/uploads/2011/08/tamil-national-leader.jpg" alt="" width="495" height="278" /></a></p><br />தமிழ்நாட்டைச் சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழு, ராஜபக்சேவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் சோனியாவும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுபற்றி பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் மற்றும் ‘ஸ்டேட்ஸ்மென்’ ஆங்கில நாளேட்டின் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சாம் ராஜப்பா ஆகியோர் தனித்தனியாக எழுதிய கட்டுரைகள் – இணையதளங்களில் இடம் பெற்றுள்ளன.<br /><br /><span style="font-weight: bold;">குழுவில் இடம் பெற்றிருந்தவரும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான எம்.ஜி.தேவசகாயம் எழுதிய கட்டுரை:</span><br /><br />அண்மையில் உலக நாடுகளையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது ‘சேனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள். ஈழத் தமிழர்களை நிர்வாணமாக்கி, கண்களைக் கட்டி, சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்வதும், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதும் இதில் இடம் பெற்றுள்ளது.<br /><br />அண்மையில் இலங்கை சென்று திரும்பிய பிரிட்டிஷ் முன்னாள் வெளியுறவு அமைச்சர் டேவிட் மில்லி பாண்ட், பிரான்சு முன்னாள் வெளியுறவு அமைச்சர் பெர்னார்டு கவுச்னார் ஆகியோர், “யுத்தம் முடிந்த பிறகு, தமிழர்கள் நான்காம் தர, அய்ந்தாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். வெளிநாட்டுக் கொள்கை என்று ஏதேனும் ஒன்று இருக்குமானால், உடனடியாக இந்த மோசமான மனித விரோத நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்” என்று எழுதியிருந்தனர். இந்த கொடூரமான மனித அவலங்களுக்குப் பின்னால், இந்தியாவின் பங்கு உண்டு என்பது வெளிவராத உண்மை.<br /><br />2005 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்தியாவின் விருப்பத்துக்கு மாறாக ரணில் விக்ரமசிங்கே தோற்று, ராஜபக்சே வெற்றிப் பெற்றார். ராஜபக்சேவின் வெற்றியை விரும்பாத புதுடில்லி, அவரை அங்கீகரிக்காமல், ஓரம் கட்டி, ராஜபக்சேவை ஒதுக்கி வைத்துவிட்டது.<br /><br />இந்த நிலையில் தந்திரக்காரரான ராஜபக்சே, தன்னை நேர்மையாகக் காட்டிக் கொள்ளவும், இந்தியாவின் ஆதரவைப் பெறவும் விரும்பினார். அதற்காக ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ள முயன்றார். தமிழ்நாட்டைச் சார்ந்த தமிழின உணர்வு கொண்ட மூத்த அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு ஈழத் தமிழர் அரசியல் தீர்வுக்காக இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே உறவுப் பாலமாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.<br /><br />கொழும்பிலிருந்து வந்த இந்த வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள், மூத்த பத்திரிகையாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் நானும் (எம்.ஜி. தேவசகாயம்) இடம் பெற்றிருந்தேன்.<br /><br />குழுவின் முதல் கூட்டம் 2007 மே மாதம் 10 ஆம் தேதி சென்னையில் நடந்தது. ராஜபக்சேவின் மூத்த ஆலோசகர் கலந்து கொண்டார். இருதரப்பினரும் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வுக்கான திட்டம் ஒன்றை தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.<br /><br />அதனைத் தொடர்ந்து, தமிழக அதிகாரிகள் குழு கொழும்பு சென்று 2007 ஜூலை 17 அன்று ராஜபக்சேயையும் கொழும்பு உயர் மட்ட அதிகாரிகள் குழுவையும் சந்தித்தது. ராஜபக்சே விரிவாக பேசினார். அவரது பேச்சு மிகவும் ஈடுபாட்டுடனும், ஆக்கபூர்வமாகவும் இருந்தது. தமிழக குழுவின் கருத்துகளை ராஜபக்சே முழுமையாக ஒப்புக் கொண்டார்.<br /><br />பிரச்னைகளுக்கான தீர்வு முதலில் அந்த நாட்டு மக்களிடமிருந்தே உருவாக வேண்டும் என்றும், அந்தத் தீர்வுத் திட்டங்கள் சர்வதேச கருத்துகளோடு, குறிப்பாக, இந்தியாவின் கருத்தைப் பெற்று திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கூறினோம். ராஜபக்சேயும் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்புக்குப் பிறகு, தமிழர்கள் வாழும் வடக்கு – கிழக்குப் பகுதிகளை ஒன்றாக இணைத்து, சுயாட்சி வழங்கும் திட்டத்தை ராஜபக்சே அறிக்கையாகவே வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தமிழகக் குழு, ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் தொடர்ந்து பலமுறை சந்தித்து, தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டது.<br /><br />கடைசியாக, இலங்கை சட்ட அமைச்சர், ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசிய பிறகு ராஜபக்சேவுடன் முக்கியமான சந்திப்பு 2008 மார்ச் 25 இல் நடந்தது. அப்போது அரசியல் தீர்வு திட்டம் ஒன்று இறுதியாக்கப்பட்டது.<br /><br />உடனே, கொழும்பிலிருந்த இந்திய தூதரகம் இதை அறிந்து ஆத்திரமடைந்தது. அதன் துணை ஆணையர் ஏ. மாணிக்கம், என்னை சந்திக்க நேரம் கேட்டார். நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு மாலை 5 மணிக்கு வரச் சொன்னேன். ஆனால், அந்த அதிகாரி வரவில்லை. அதற்கு பதிலாக எங்களுடன் பேசிக் கொண்டிருந்த கொழும்பு அதிகாரிகள் குழுவிடம், அங்கீகாரம் இல்லாத நபர்களிடம் எப்படி பேசலாம் என்று இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது.<br /><br />பிறகு நான், நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளை விளக்கி, பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.எ. நாயருக்கு 2008 ஏப்ரல் முதல் தேதி விரிவான கடிதம் எழுதினேன். அவர், என்னுடன் பணியாற்றிய அதிகாரி நீண்ட காலப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு உருவாகியுள்ள இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் கேட்டிருந்தேன். ஆனால், எந்த பதிலும் வரவில்லை” என்று அய்.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.<br /><br />இது பற்றி மேலும் பல விவரங்களை ‘ஸ்டேட்ஸ்மென்’ ஏட்டின் ஓய்வு பெற்ற மூத்த செய்தியாளர் சாம் ராஜப்பா, தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.<br /><br />“தமிழக குழுவினர் அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதில் வெற்றிப் பெற்ற நிலையில், இந்தியா தனது போக்கை மாற்றிக் கொண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக முழு ராணுவத் தாக்குதலைத் தொடங்குமாறு, ராஜபக்சேவுக்கு பச்சைக் கொடி காட்டியது.<br /><br />பிரபாகரன், உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மன் ஆகியோரின் தலையை வெட்ட வேண்டும் என்றும், இதற்காக எந்த ராணுவ உதவியையும் இந்தியா வழங்கும் என்றும் சோனியா கூறினார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவித்தன. பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கரமேனன், பிரதமர் அலுவலகத்தில் செல்வாக்குள்ள அதிகாரிகள் குழு ஒன்றாக இணைந்து, நாட்டின் நலனைவிட சோனியாவின் விருப்பமே முக்கியம் என்று செயல்பட்டன.<br /><br />அதன் பிறகு, கொடூரமான இனப் படுகொலைகளை ராணுவம் நடத்தியது. அதுதான் ‘சேனல் 4’ வெளியிட்ட படுகொலை காட்சிகள். இலங்கையே இந்தப் புதைகுழியை வெட்டிக் கொண்டுவிட்டது. ‘சேனல் 4’ ஆவணங்களைப் பார்த்து உலக நாடுகள் எல்லாம் கண்டிக்கும்போது, இந்தியா மட்டும் எதுவுமே தெரியாதது போல் கள்ள மவுனம் சாதிப்பதற்கு காரணம் இதுதான்.<br /><br /><span style="font-weight: bold;">ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்படும்போது, புதுடில்லியும், இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததிலிருந்து தப்பிவிட முடியாது. அதற்கான மணி ஒலிக்கத் தொடங்கி விட்டது” – என்று சாம் ராஜப்பா எழுதியுள்ளார்.</span><br /><br />விடுதலை இராசேந்திரன்எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-49644996396271773052011-07-31T13:53:00.000-07:002011-07-31T13:57:10.162-07:00மன்மோகன் சிங் என்னும் கல்லுளி மங்கனின் திருட்டுத்தனம் அம்பலம் !<p>ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி பேரைக் கெடுக்கும் என்று தமிழ்நாட்டில் ஒரு சொலவடை உண்டு. இந்த சொலவடைக்கு பொருத்தமான நபர் யார் என்று கேட்டால் நமது பிரதமர் மன்மோகன் சிங் தான்.</p> <p> இந்த மன்மோகன் சிங் சாதாரணமான நபர் அல்ல. இன்று இந்தியாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஊழல்களுக்கும் மன்மோகனே காரணம் என்றால் அது மிகையாகாது.</p> <p> <img style="max-width: 645px; display: block; margin-left: auto; margin-right: auto; border: 0px initial initial;" src="http://savukku.net/images/stories/3_July_2011/manmohan.jpg" alt="manmohan" height="513" width="685" /></p> <p>மிஸ்டர்.க்ளீன் என்ற ஒரு இமேஜை வேறு வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நபர் என்றால் அது மன்மோகன் சிங் தான். இந்த மிஸ்டர்.க்ளீன் நினைத்திருந்தால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடைபெற்ற ஊழலை நிச்சயமாக தடுத்திருக்க முடியும்.</p> <p> </p> <p>25.10.2007 அன்று, அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலர் டி.எஸ்.மாத்தூர், குறைந்த பட்சம், ட்ராயின் கருத்தைக் கேட்டாவது முடிவெடுக்கலாம் என்றும், ராசாவின் பார்வைக்கு, ஒவ்வொரு மாநிலத்திலும், ஸ்பெக்ட்ரம் எவ்வளவு உள்ளது என்பதையும், பல மாநிலங்களில் கையிருப்பு மிகக் குறைவாக உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி அலுவலகக் குறிப்பு ஒன்றை வைக்கிறார். பின்னாளில் அளித்த ஒரு பேட்டியில், அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் டி.எஸ்.மாத்தூர் தெரிவித்தது என்ன தெரியுமா ?</p> <p> “மே 2007ல் மந்திரியாக ஆனதும், ராசா என்னை அழைத்தார். ‘சார் குறைஞ்சது 500 லைசென்ஸாவது குடுக்கனும். என்ன பண்ணலாம்னு சொல்லுங்க’ என்று கூறினார். அதற்கு மாத்தூர், ஸ்பெக்ட்ரம் அந்த அளவுக்கு இல்லை. கொடுக்க இயலாது என்று தெரிவிக்கிறார். உடனே ராசா ‘லாஸ்ட் டேட்ட மாத்திட்டா குடுக்கலாம்ல ?’ என்று எதிர்க் கேள்வி போடுகிறார். அதற்கு மாத்தூர், இது இயற்கை நீதிக்கு எதிரானது. 1 அக்டோபர் 2007 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் கடைசித் தேதியை மாற்றுவது என்பது தவறானது அதனால் அவ்வாறு செய்ய இயலாது” என்று கூறுகிறார். மாத்தூர் இவ்வாறு மறுத்ததும், அவர் லீவ் போட்ட அன்று, தொலைத் தொடர்புத் துறை கமிஷனின், தொழில்நுட்ப உறுப்பினராக இருந்த ஸ்ரீதரன் என்பரிடம் கையெழுத்து வாங்கி விடுகிறார் ராசா…. <em> </em></p> <p> இது போல ராசாவுக்கு, பல்வேறு எச்சரிக்கைகள் விடப்பட்டன.</p> <p> ராசா எச்சரிக்கையை சட்டை செய்பவரா என்ன ? பெயருக்கேற்றார் போல எதேச்சதிகாரமாக செயல்பட்டார். தகத்தகாய கதிரவனல்லவா ? 02.11.2007 அன்று, 25.09.2007 அன்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படும். அதுதான் கடைசித் தேதி என்று முடிவெடுக்கிறார். இந்த முடிவின் முக்கியப் பின்னணி, 25.09.2007 அன்று கடைசி தேதி என்று முடிவெடுத்தால், டெல்லியில் உள்ள ஒரே ஒரு நிறுவனத்துக்கான ஸ்பெக்ட்ரம், ராஜாதி ராசாவுக்கு நெருக்கமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு கொடுக்க இயலும்.</p> <p> சரி. நான் எடுத்ததுதான் முடிவு என்று தொலைத் தொடர்புத் துறையில் சொல்லியாகி விட்டது. ட்ராய் அமைப்புக்கு கூட தகவல் தெரிவிக்க மாட்டேன், என்றும் சொல்லியாகி விட்டது. இத்தோடு விவகாரம் முடிந்து விடுமா என்ன ? ராசாவுக்கு மேல் சக்கரவர்த்தி என்று ஒருவர் இருக்கிறாரே…. மன்மோகன் என்று. அவருக்கு சொல்ல வேண்டாமா ? </p> <p> 02.11.2007 அன்று, ராசா பிரதமர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். 25.09.2007தான் விண்ணப்பம் அளிக்க கடைசி தேதி என்ற விபரம் பத்திரிக்கைகளில் அறிவிப்பாக வந்ததாக கூசாமல் ஒரு பொய்யை எழுதுகிறார். அதோடு நில்லாமல், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம், ஸ்பெக்ட்ரம் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாளை நிர்மாணிப்பது தொடர்பான விவகாரத்தை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறிய கருத்து, தவறானது என்றும் குறிப்பிடுகிறார். எப்படி இருக்கிறது ? சட்டத்துறை அமைச்சகம் தவறாக கூறியதாம், சரியாகச் சொன்னாராம். இது மட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் வழங்குவது தொடர்பான விவகாரத்தில், தொலைத் தொடர்பு அமைச்சகம், சட்டத்திற்கு உட்பட்டு, நூல் பிசகாமல் நடந்து கொள்வதாகவும் ராசா தெரிவித்திருந்தார். 99ம் ஆண்டின் தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை பத்தி 3.1.1ல் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டதை ராசா வசதியாக குறிப்பிட மறந்தார்.</p> <p> <img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="http://savukku.net/images/stories/3_July_2011/Raja_2.jpg" alt="Raja_2" height="489" width="685" /></p> <p>இந்தக் கடிதத்தை ராசா அனுப்பிய 02.11.2007 அன்றே, பிரதமர் ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், “அன்பான ராசா, ஸ்பெக்ட்ரம் கொஞ்சூன்டு தான் இருக்கு. நெறய்யயய பேரு அப்பிளிகேசன் போட்ருக்காங்க.. நெறய்ய பேரு கேட்ருக்கதால, இன்னும் பல வருசத்துக்கு ஸ்பெக்ட்ரம் இருக்காதுன்றதால, அப்ளை பண்ண நெறய்ய பேருக்கு ஸ்பெக்ட்ரம் கெடைக்காம பூடும். அத்தோட இல்லாம, டெலிகாம் பாலிசின்னு ஒன்னு வச்சுருக்காங்க. அது படி பாத்தா, இருக்கற ஸ்பெக்ட்ரம்ம, எல்லாருக்கும் நயந்து குடுக்குனும்னு அதுல சொல்லிக்கீது. அதனால, எவ்ளோ ஸ்பெக்ட்ரம் கீதுன்னு, பாத்துப்புட்டு, அப்பாலிக்கா லைசென்ஸ் குடுங்க. ஸ்பெக்ட்ரமே இல்லாம வெறும் லைசென்ஸ் மட்டும் குடுத்தீங்கன்னாக்கா, அந்த கம்பேனிக்காரன் லைசென்ச வச்சுக்கிட்டு இன்னா பண்ணுவான் ?” என்று எழுதுகிறார்.</p> <p> <img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="http://savukku.net/images/stories/3_July_2011/manmohan_raja_2gspectrum_Page_01.jpg" alt="manmohan_raja_2gspectrum_Page_01" height="889" width="685" /></p> <p> </p> <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="http://savukku.net/images/stories/3_July_2011/manmohan_raja_2gspectrum_Page_02.jpg" alt="manmohan_raja_2gspectrum_Page_02" height="374" width="685" /></p> <p> </p> <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="http://savukku.net/images/stories/3_July_2011/manmohan_raja_2gspectrum_Page_03.jpg" alt="manmohan_raja_2gspectrum_Page_03" height="886" width="685" /></p> <p>அவ்வளவுதான், ராசாவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. என்னடா இது, நம்பளுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. நம்பகிட்டயே இவரு கேள்வி கேக்கறாரே என்று அதிசயித்த ராசா, இரவோடு இரவாக, அவருக்கு பதில் அனுப்ப முடிவு செய்கிறார். அது மட்டும் அல்லாமல், ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எல்லாவற்றையும் கரீட்டாக செய்திருக்கிறேன் என்று அனுப்பிய கடிதம், பிரதமர் அலுவலகத்தை அடையும் முன்பே, பிரதமரின் கடிதம் வந்து சேர்ந்ததால் ராசாவின் அதிர்ச்சி மேலும் கூடியது.</p> <p> அன்று இரவே பதில் கடிதம் தயாரிக்கலாம் என்ற முடிவெடுத்து, தனது செயலாளர் சந்தோலியாவை வரவழைக்கிறார். அவர் வந்தால் போதுமா… கடிதத்தை டைப் அடிக்க நம்பகமான ஆள் வேண்டுமில்லையா….. அதனால், 2004ம் ஆண்டு முதல், ராசாவின் காரியதரிசியாக இருந்த, ஆச்சார்யா ஆசீர்வாதம் என்பவரை, இரவு 8 மணிக்கு உடனே வீட்டுக்கு வாருங்கள் என்று கூறுகிறார். அனைவரும், ராசாவின் வீட்டில் கூடுகிறார்கள்.</p> <p> ஆசீர்வாதம் வீட்டுக்கு வந்ததும், ராசாவே அவரோடு அமர்ந்து கடிதத்தை டிக்டேட் செய்கிறார். “கண்மணி, அன்போட….” என்று அல்ல. “டியர் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்” என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில், ராசா, “எல்லாம் கரீட்டா நடந்துகினு கீது. ஒரு தப்பும் பண்ணல. இந்த மேரி வெளிப்படையா யாருமே நட்ந்து கிட்டது இல்ல. இப்போ மட்டும் இல்ல.. ப்யூச்சர்ல கூட, இதே மேரி நூல் புட்சா மாதிரி எல்லாம் நடக்கும். நீ ஒன்யும் கவலைப் படாதே வாத்யாரே” என்று பதில் எழுதுகிறார்.</p> <p> ராசா, சந்தோலியா, தொலைத் தொடர்புக் கமிஷன் உறுப்பினர் ஸ்ரீதர், ஆகியோர் சேர்ந்து இந்த கடிதத்தை தயார் செய்கிறார்கள். இரவு 11 மணிக்கு வேலை முடிகிறது. இரவோடு இரவாக, சிறப்புத் தூதுவர் மூலம், அந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.</p> <p> என்ன ஆயிற்றோ தெரியவில்லை. 26.12.2007 அன்று சந்தோலியா, அந்தக் கடிதத்தை தயாரித்த ஆசீர்வாதத்தை அழைத்து, நீங்கள் அடித்த கடிதம் எங்கே என்று கேட்கிறார். அவர் இந்தக் கம்ப்யூட்டரில் தான் இருக்கிறது என்று கூறியதும், அதை பென் டிரைவில் காப்பி செய்து, மீண்டும் ப்ரின்ட் எடுத்து, பிரதமருக்கு அனுப்பப் படுகிறது.</p> <p> <img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="http://savukku.net/images/stories/3_July_2011/manmohan_raja_2gspectrum_Page_05.jpg" alt="manmohan_raja_2gspectrum_Page_05" height="886" width="685" /></p> <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="http://savukku.net/images/stories/3_July_2011/manmohan_raja_2gspectrum_Page_06.jpg" alt="manmohan_raja_2gspectrum_Page_06" height="886" width="685" /></p> <p> </p> <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="http://savukku.net/images/stories/3_July_2011/manmohan_raja_2gspectrum_Page_07.jpg" alt="manmohan_raja_2gspectrum_Page_07" height="886" width="685" /></p> <p>இந்த ஆசீர்வாதம், சிபிஐ ன் முக்கிய சாட்சியாக சேர்க்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவரின் முக்கியத்துவம் கருதி, இவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப் பட்டு, இவருக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.</p> <p> இந்த லைசென்ஸ் வழங்குவது குறித்த கோப்புகள், பல்வேறு அதிகாரிகளிடம் சென்று வந்த போது, நேர்மையான அதிகாரிகள் பலர், ராசாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே வந்துள்ளனர். அப்போது, தொலைத் தொடர்பு கமிஷனின் நிதிக்கான உறுப்பினராக இருந்த மஞ்சு மாதவன் என்பவர், இது வரை லைசென்ஸ் கொடுத்து வந்தது 2001ல் உள்ள விலை. இப்போது ஸ்பெக்ட்ரத்துக்கான தேவை (Demand) மிக அதிகமாக உள்ளது. அதனால், ஏலம் விட்டால், அதிகத் தொகையை ஏலத்தில் கேட்பவர்கள், ஸ்பெக்ட்ரம் பெற இயலும், மேலும், அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று, சம்பந்தப் பட்ட கோப்பிலேயே எழுதுகிறார். ஆனால், தகத்தகாய கதிரவன், அவ்வாறு எழுதப்பட்டதன் மீது, எந்த முடிவும் எடுக்காமல், டபாய்து விடுகிறார்.</p> <p> <img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="http://savukku.net/images/stories/3_July_2011/manmohan_raja_2gspectrum_Page_08.jpg" alt="manmohan_raja_2gspectrum_Page_08" height="886" width="685" /></p> <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="http://savukku.net/images/stories/3_July_2011/manmohan_raja_2gspectrum_Page_09.jpg" alt="manmohan_raja_2gspectrum_Page_09" height="886" width="685" /></p> <p>அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலர் மாத்தூர், இது தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் விவாதிக்கும் போதெல்லாம், ஏலமெல்லாம் விட முடியாது என்பதை தீர்மானமாக தெரிவித்தார். மேலும், 2001ல் உள்ள விலைக்குத் தான் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார் என்கிறார் மாத்தூர். ராசா 2001ல் வாங்கிய வீட்டை, இன்று அதே விலைக்கு கொடுப்பாரா ?</p> <p>26 டிசம்பர் அன்று எழுதிய கடிதத்தில் ராசா, நான் உங்களோடு தொலைத் தொடர்புத் துறை குறித்து விவாதித்தது போல என்று குறிப்பிட்டிருப்பதை கவனிக்க வேண்டும். மன்மோகனோடு விவாதித்த பிறகு ராசா முடிவெடுத்தார் என்றால், சிபிஐ மன்மோகனை ஒரு சாட்சியாகவாவது விசாரித்திருக்க வேண்டுமா வேண்டாமா ? ஆனால் மன்மோகன் கீழ் பணியாற்றும் சிபிஐக்கு, மன்மோகனை விசாரிக்க எப்படி தைரியம் வரும் ?</p> <p> <img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="http://savukku.net/images/stories/3_July_2011/manmohan_raja_2gspectrum_Page_13.jpg" alt="manmohan_raja_2gspectrum_Page_13" height="886" width="685" /></p> <p>இவ்வாறு ராசா பிரதமருக்கு கடிதம் அனுப்பியவுடன் பிரதமர் என்ன செய்திருக்க வேண்டும் ? சட்ட அமைச்சகம் அமைச்சரவை குழுவுக்கு அனுப்பவும் என்று தெரிவித்த கருத்தை மீறி, நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கக் கூடாது, அதனால் நான் அந்தக் கோப்பை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்புகிறேன் என்றல்லவா உத்தரவிட்டிருக்க வேண்டும். பிரதமரும் பதில் கடிதம் அனுப்பினார். ஆனால் அந்தக் கடிதத்தில், உங்களின் 26.12.2007 நாளிட்ட கடிதத்தை வரப்பெற்றேன் என்று பதில் எழுதுகிறார். அப்போது ராசா மன்மோகனோடு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விவாதித்ததை மறுக்கவில்லை என்றுதானே பொருள்.... ஏன் மவுனமானார் இந்த ஊமைச் சாமியார் ? </p> <p> ஏன் இவ்வாறு எழுதுகிறார் என்று கேட்கிறீர்களா ? ராசா திமுகவின் அமைச்சராயிற்றே….. மன்மோகன் பிரதமாராக இருக்க வேண்டாமா ? மன்மோகன் பிரதமர் பதவியில் நீடித்ததற்காகத் தான் இந்தியா ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை இழந்தது. அன்று மன்மோகன், அந்தக் கோப்பை ராசாவிடமிருந்து பறித்து, அமைச்சரவை குழுவுக்கோ, அல்லது தன்னிடமோ மாற்றியிருந்தால், இந்த நஷ்டம், ஊழல் விசாரணை இதெல்லாம் தேவையா ?</p> <p> கடந்த வாரம் பத்திரிக்கை ஆசிரியர்களோடு நடந்த சந்திப்பின் போது, மன்மோகனிடம், 2ஜி விவகாரம் தொடர்பாக கேள்விகள் கேட்கப் பட்டன.</p> <p> <img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="http://savukku.net/images/stories/3_July_2011/3408386309_72d31a3f26_o.jpg" alt="3408386309_72d31a3f26_o" height="457" width="685" /></p> <p>நீங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளை இன்னும் கடினமாக கையாண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “எது சரியான வழி என்று எனக்குத் தெரியவில்லை. சில விஷயங்களை (ஸ்பெக்ட்ரம்) தவிர்த்திருக்க முடியுமா என்பதும் தெரியவில்லை. 2ஜி விவகாரத்தை எடுத்துக் கொண்டால், நான் ராசாவிடம் ஏலம் விடலாம் என்று எழுதினேன். அவர் ட்ராய் ஏலம் விட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ட்ராய் அரசுக்கு ஆலோசனை வழங்கத் தானே இருக்கிறது என்பதால் அத்தோடு அதை விட்டு விட்டேன். நேர்மையாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் படும் என்று ராசா கூறியதை நம்பினேன். என்னுடன் பணியாற்றும் ஒரு நபர் இது போல சொல்லும் போது அதை நம்பாமல் நான் எப்படி இருப்பது ? அதற்குப் பிறகு சிவிசியிடம் புகார் அளிக்கப் பட்டது. சிபிஐ விசாரணையை தொடங்கியது. தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் சோதனையிடப் பட்டது” என்றார்.</p> <p> இந்த விவகாரம் செய்தித் தாள்களில் தினந்தோறும் வெளி வந்ததே என்ற கேள்விக்கு, “செய்தித் தாள்களை வைத்து முடிவெடுப்பதாக இருந்தால், நான் அத்தனை விவகாரங்களையும் சிபிஐயிடம் தினந்தோறும் அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும்” என்று இறுமாப்பாக பதிலளித்துள்ளார்.</p> <p> ராசாவை நான் நம்பினேன் என்று மன்மோகன் சிங் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கில்லை. இன்டெலிஜென்ஸ் ப்யூரோ என்னும், மத்திய உளவுத்துறை ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும். அவ்வாறு கண்காணித்து தினந்தோறும் பிரதமருக்கு அறிக்கை அளிக்கும். ராசாவை யார் சந்திக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறார், யாரோடு பேசுகிறார், என்பதையெல்லாம் தினமும் கண்காணிக்கும். அவ்வாறு கண்காணித்தன் விளைவே, ராசா 2.11.2007 அன்று தனக்கு கடிதம் எழுதிய விபரம் அறிந்த மன்மோகன், அந்தக் கடிதம் கிடைக்கும் முன்பே முந்திக் கொண்டு ராசாவுக்கு கடிதம் எழுதியது. அதனால் ராசாவை நான் நம்பினேன் என்பதை ஏற்பதற்கில்லை.</p> <p> பத்திரிக்கைகளை நான் நம்ப முடியாது என்ற மன்மோகனின் பேச்சு திமிர்த்தனமானது. ஸ்பெக்ட்ரம் விவகாரம், வெளி வந்ததும், இன்று ராசா, கனிமொழி உள்ளிட்டோர் சிறையில் இருப்பதற்கும், 80 சதவிகித காரணம் பத்திரிக்கைகளே…. பயனீர் நாளேடு, டிசம்பர் 2008ல் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த முதல் செய்தியை வெளியிடாமல் போயிருந்தால் இன்று ராசாவும் கனிமொழியும் சிறையில் இருந்திருப்பார்களா ?</p> <p> பத்திரிக்கைகள் என்ன பொறுப்பில்லாமல் எழுதுகிறார்களா என்ன ? அவ்வாறு எழுதினால் மன்மோகன் சிங் அரசு விட்டு விடுமா என்ன ?</p> <p> மன்மோகன் சிங்கின் அடுத்த அயோக்கியத்தனம் இன்னும் மோசமானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 1ல் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர், தமிழகத்தைச் சேர்ந்த மணி சங்கர் அய்யர். இவர் 9 மார்ச் 2006ல், இவர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில் “காமன் வெல்த் விளையாட்டுக் போட்டிகளுக்காக 150 கோடிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டும் என்று செய்யப் பட்ட மதிப்பீடு 500 கோடியாக உயர்ந்துள்ளது. 250 கோடி என்று நிர்ணயிக்கப் பட்ட விளையாட்டுக்களை நடத்துவதற்காக செலவுகள், 900 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மதிப்பீடு நம்ப முடியாத வண்ணம் உள்ளது. உடனடியாக என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்குவீர்களேயானால், விரிவாக எடுத்துரைக்கிறேன்“ என்று எழுதுகிறார்.</p> <p> <img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="http://savukku.net/images/stories/3_July_2011/manmohanpranab_20110614.jpg" alt="manmohanpranab_20110614" height="456" width="685" /></p> <p>மன்மோகன் என்ற ஊமைச் சாமியார் எதுவும் பேசவில்லை. 25 அக்டோபர் 2007ல் அடுத்த கடிதம் எழுதுகிறார் அய்யர். இந்தக் கடிதத்தில், “காமன் வெல்த் விளையாட்டுக்களில் பங்கேற்பது போன்ற முக்கால் அளவுக்கு விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற ராணுவ விளையாட்டுக்கள் 200 கோடி செலவில் நடந்து முடிந்தன. ஆனால், காமன் வெல்த் போட்டியை நடத்த 20 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவாகும் என்று நிர்ணயித்திருப்பது, மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. சுரேஷ் கல்மாடியின் நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது“ என்று எழுதினார். இதற்கும் இந்த ஊமைச் சாமியார் வாயைத் திறக்கவில்லை.</p> <p> சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த ஊமைச் சாமியாரிடம், மணி சங்கரின் கடிதம் குறித்து கேட்கப் பட்டது. அதற்கு மன்மோகன் சிங் “மணி சங்கர் அய்யரின் கடிதம் தத்துவார்த்த ரீதியானது. சுரேஷ் கல்மாடி காமன் வெல்த் விளையாட்டுக்களை நடத்தக் கூடாது என்பது தொடர்பானது. மணி சங்கர் அய்யர் பல கடிதங்களை எழுதியிருக்கிறார். காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதற்கான ஒப்பந்தம் 2003ல் முந்தைய அரசாங்கத்தால் கையொப்பம் இடப்பட்டது.”</p> <p> எப்பேர்பட்ட அயோக்கியத்தனம் பாருங்கள். முந்தைய அரசாங்கம் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டால் என்ன ? அவர்களா 20 ஆயிரம் கோடியை கொள்ளையடித்தார்கள் ? சுரேஷ் கல்மாடி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் என்பது நன்றாக தெரிந்தும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, இப்போது ஒன்றுமே தெரியாதது போல பசப்புவது இந்த ஊமையின் உச்சபட்ச குசும்பு.</p> <p> இந்த குசும்புகளைத் தவிர்த்து, மன்மோகனின் மற்றொரு சிறப்பு, அமெரிக்காவின் அடிமையாக இருப்பது. அமேரிக்காவின் காலை நக்குவது என்றால், மன்மோகனுக்கு அவ்வளவு பிடிக்கும். அணு ஆயுத ஒப்பந்தத்தைச் செய்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்த மன்மோகன், இடது சாரிகள் இதன் காரணமாக ஆதரவை வாபஸ் பெற்ற போது, பல ஆயிரம் கோடிகளை எம்.பி.க்களுக்கு லஞ்சமாக கொடுத்து, அரசைக் காப்பாற்றி, அணு ஆயுத ஒப்பந்தத்தை செயல்படுத்தியவர் தானே இந்த மன்மோகன் ? இவர் என்ன மிஸ்டர் க்ளீன்…. ?</p> <p> <img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="http://savukku.net/images/stories/3_July_2011/l2010110831650.jpg" alt="l2010110831650" height="462" width="685" /></p> <p>2004ல் நவம்பர் மாதத்தில், ப்ரான்ஸ் நாட்டில், பள்ளிக்குச் செல்லும், சீக்கிய மாணவர்கள் டர்பன் அணியக் கூடாது என்று உத்தரவு போட்ட போது, ப்ரான்ஸ் பிரதமரிடம் பேசி, உடனடியாக அந்தப் பிரச்சினையில் தலையிட்டவர் மன்மோகன் சிங். சீக்கியனின் மயிருக்காக துடித்த மன்மோகன், தமிழனின் உயிர் போன போது என்ன செய்தார் ? தமிழினத்தை அழித்தவனோடு கூட்டு சேர்ந்து அவனுக்கு ஆயுதம் வழங்கினார். இந்திய மீனவனை கொன்று குவிப்பவனோடு, கொஞ்சிக் குலவினார்.</p> <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="http://savukku.net/images/stories/3_July_2011/l2010101430992.jpg" alt="l2010101430992" height="490" width="685" /></p> <p> கடைசியாக இந்த ஊமை செய்த குசும்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து சிபிஐக்கு விலக்கு அளித்து போடப்பட்ட உத்தரவு. அப்படி விலக்கு அளிக்க வேண்டிய காரணம் என்ன ? ஏனென்றால், சோனியாவின் குடும்ப நண்பர் ஒட்டாவியோ கொட்டராச்சியின் மீது இருந்த ரெட் கார்னர் நோட்டிசை விலக்கிக் கொள்ளச் சொல்லியும், முடக்கப் பட்டிருந்த கொட்டரோச்சியின் வங்கிக் கணக்கை விடுவிக்கவும் இந்த ஊமை சிபிஐக்கு போட்ட உத்தரவுகளும், 2ஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடும் வரை அமைதி காத்த விவகாரமும் சந்திக்கு வந்து விடும் அல்லவா ? அதற்காகத் தான்.</p> <p> <img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="http://savukku.net/images/stories/3_July_2011/l2010110731628.jpg" alt="l2010110731628" height="460" width="685" /></p> <p>இப்படிப் பட்ட ஊமைக் குசும்பரை பிரதமராக இன்னும் நீட்டிக்கச் செய்வது சோனியாவுக்கு வசதியாக இருக்கிறது. இப்படி ஒரு விசுவாசமான அடிமை கிடைப்பாரா ? இவர் மிஸ்டர் க்ளீன் அல்ல. சென்னை மாநகரின் அத்தனை அழுக்குகளையும் சுமக்கும் கூவம் நதி.</p><p>http://savukku.net/home1/993-2011-07-03-07-26-33.html<br /></p>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-68624865702516613922011-07-30T03:03:00.001-07:002011-07-30T03:03:38.061-07:00கனடிய எதிர்க்கட்சித் தலைவர் ஜாக் மீண்டும் புது வலுப்பெற வாழ்த்தும் கனடியத் தமிழர்கள்<div class="brief"><div class="thumb"><img src="http://www.tamilwin.com/photos/thumbs/forgien_country/canada/jack_layton.jpg" class="ileftb" /></div>கனடா வாழ் தமிழர்கள் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் திரு. ஜாக் லேய்டன் அவர்களின் தற்காலிக மருத்துவ ஓய்வு விரைவில் சீரடைய வேண்டும் என வாழ்த்தி நிற்கின்றோம். முதன் முறை புற்றுநோயுடன் போராடி வெற்றி கண்ட இவர் மீண்டும் தனது மனவலுவின் வெளிப்பாடாய் இதிலிருந்து முற்றிலும் குணமடைவார் என்பதில் நாங்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளோம்.</div> <div class="remainder"><p>கனடியத் தமிழர்களைப் பொறுத்த வரையில் ஜாக் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதையும் தாண்டி ஒரு நலன்விரும்பியாகவும் ஆதரவாளராகவும் அன்புக்குரிய நண்பராகவும் இருந்து வந்துள்ளார். </p> <p>எங்களின் சமூகம் துவண்டு நின்ற போதெல்லாம் எங்களுக்காக மீண்டும் மீண்டும் குரல் கொடுத்து ஆதரவளித்துள்ளார். எங்களைப் பாதித்த விடயங்கள் தொடர்பாக எங்களுடன் தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றத்தை ஜாக் மேற்கொண்டு வந்துள்ளார். </p> <p>கடந்த வருடம் கனடியத் தமிழர்கள் கனடிய புற்றுநோய் சங்கத்துக்காக நடாத்திய நிதி திரட்டும் நடையின்போதும் அவர் எங்களுடன் பங்கு பற்றி தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி அவசரகால விவாதம் ஒன்றை ஒழுங்கமைப்பதில் ஜாக்கும் அவரது கட்சியும் மிகவும் முக்கிய பங்காற்றியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. </p> <p>அண்மையில் கூட எமது சமூகத்தை சந்தித்ததன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் நீதியையும் உண்மையையும் நிலைநாட்டுவதற்கு என தன்னிச்சையான பக்கச்சார்பற்ற விசாரணை நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என ஒரு தீர்மானத்தை வன்கூவரில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில புதிய ஜனநாயகக் கட்சி நிறைவேற்றியிருந்தது. </p> <p>அத்துடன் மட்டுமல்லாமல் அரசியல் நீரோட்டத்தில் கனடியத் தமிழர்களின் பங்கு தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதையும் ஜக் டேய்டன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார். </p> <p>இந்த வருடம் பாராளுமன்றில் முதலாவது கனடியத் தமிழராக புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராதிகா சிற்சபேசன் வெற்றி பெற்றது தமிழ் சமூகத்துக்கே பெருமை சேர்ப்பதாக அமைந்தது. ஜாக்கின் ஊக்கமும் அறிவுரைகளும், ஆலோசனைகளும் இல்லாமல் இந்த வெற்றியை நாம் அடைந்திருக்க முடியாது. </p> <p>நம்பிக்கை மற்றும் மனஉறுதி ஆகியவற்றின் வெளிப்பாடாக ஜாக் எங்களின் மத்தியில் இருந்து வந்துள்ளார். எங்களின் அன்பின் வெளிப்பாடாக நாங்கள் அவர் நலம்பெற வேண்டும் எனத் தொடர்ந்தும் வேண்டுகின்றோம். புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு இந்த நேரத்தில் உதவியையும் எமது சமூகத்தில் கோரி நிற்கின்றோம். </p> <p>இது தொடர்பாக பங்களிக்க விரும்புவர்கள் Canadian Cancer Society என்னும் பெயருக்கு உங்கள் காசோலைகளை எழுதி கனடியத் தமிழர் பேரவையின் ரொறன்ரோ அலுவலகத்தில் கொடுத்துவிடும் படியோ அல்லது ஆகஸ்ட் மாதம் 6ம் திகதிக்கு முன்னர் தபாலில் அனுப்பி விடுமாறோ கேட்டுக் கொள்கின்றோம். </p> <p>இதில் பெற்றுக் கொள்ளப்படும் அனைத்து நிதி உதவிகளும் ஜாக் லேய்டன் அவர்களின் பெயரால் கனடிய புற்றுநோய் ஆய்வு மையத்துக்கு வழங்கப்படும். </p> <p>ஜாக் நலம்பெற வாழ்த்த விரும்பும் எமது சமூகத்தினர் கனடியத் தமிழர் பேரவை அலுவலகத்துக்கு வந்து ஜாக் அவர்களுக்கு அனுப்ப இருக்கும் மடலில் ஆகஸ்ட் 6ம் திகதிக்கு முன்னர் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். </p> <p>இயற்கையின் இந்த புதிய சவாலை எதிர்கொள்ளும் அவரின் மன உறுதி எங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. மீண்டும் அவர் விரைவில் இந்தக் கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும் என வேண்டி நிற்கின்றோம். </p> <p>ஜாக் நீங்கள் எங்களுடன் தோளோடு தோள் நின்று எங்கள் சமூகத்துக்கு வழங்கிய ஆதரவை நாங்கள் வார்த்தையால் வடித்து விட இயலாது. உங்களைவிட மன உறுதி கொண்ட ஒருவரை நாம் அறிந்ததும் இல்லை. இந்த தற்காலிகத் தடையை உடைத்து கனடியர்களுக்காக பாராளுமன்றில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என எதிர்பார்த்து நிற்கின்றோம். </p> <p>கனடியத் தமிழர்கள்</p></div>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-31882709829224890452011-07-30T02:59:00.000-07:002011-07-30T03:00:29.551-07:00ஈழத் தமிழனைப்போல் புலம்பெயர் தமிழன் ஒன்றுபட வேண்டும்<img src="http://www.tamilwin.com/photos/thumbs/forgien_country/canada/DSC03465%20%5B%5D-1.JPG" class="ileftb" />வருடா வருடம் வருகின்ற எத்தனை சோக நாட்களை ஈழத் தமிழன் மனதில் சுமக்கின்றான்? நமது மக்களையும், மாவீரர்களையும், மாமனிதர்களையும் பறிகொடுத்த நாட்களெல்லாம் நினைவு தினங்களாகி ஈழத் தமிழனின் நாட்காட்டிகள் நிறைத்துவிட்டன.<br /><br />சுனாமி போன்ற இயற்கையின் கொடூரங்கள்கூட எமக்கு அழிவுகளைத் தந்து அதன் சோக நினைவுகளை பதிவு செய்துவிட்டு சென்றுள்ளன. அதுவும் ஆடி மாதம் என்றாலே 1983 இல் இலங்கை அரசினால் அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட அதிஉச்ச பயங்கரவாதக் ‘கொலைக்களமே’ அனைவருக்கும் நினைவில் வரும்.<br /><br />அதிக உயிர் உடமைகளை ஈழத் தமிழன் ஆரம்ப காலகட்டத்தில் பலிகொடுத்த ‘கறுப்பு ஜூலை’ என்பது ஈழத் தமிழன் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒன்று. அறுபது ஆண்டு உரிமைப் போராட்டம் இன்றுவரை தொடரவே செய்கிறது. இடையில் வந்த ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்தபோதும், அதனால் ஆயிரக்கணக்கில் நம் உறவுகளை இழந்தபோதும், சொந்த மண்ணில் தமக்கிருக்கும் உரிமைகளை பெற்று வாழவேண்டும் என்ற தமிழனின் உணர்வு இன்னும் சாகவில்லை என்பதை இவ்வருட ஆடிமாத நினைவு நாட்களில் இடம்பெற்ற உள்ள+ர் தேர்தலின் முடிவுகள் சுட்டி நிற்கிறன.<br /><br />கோடிக்கணக்கில் செலவு செய்து, வடகிழக்கில் தேவையில்லாத ஒரு தேர்தலை நடாத்தி மூக்குடைபட்டு நிற்கிறது இலங்கை அரசு. என்ன நோக்கத்துக்காக இந்தத் தேர்தல் இலங்கை அரசால் நடாத்தப் பட்டதோ, அதன் நோக்கம் நிறைவு பெறவில்லை. அதி உச்சமான கொடுமைகள் நடந்தேறி இரண்டு வருடங்கள் கடந்துவிட்டதால், ஏற்பட்ட அழிவுகளை தமிழன் மறந்திருப்பான் என்று தப்புக் கணக்குப் போட்டது அரச தரப்பு.<br /><br />அழிவுகளால் வாடி வதங்கி நிற்கும் தமிழன் அற்ப சலுகைகளுக்கும், பெய்யான வாக்குறுதிகளுக்கும், சாராயப் போத்தலுக்கும் அடிமையாகிவிடுவான் என்று நினைத்து அரச பரிவாரங்களை களத்தில் இறக்கியிருந்தார் இலங்கை அதிபர். கூடவே ஒட்டுக் குழுக்கள் புடைசூழ, அபிவிருத்திக்கு அடிக்கல் நாட்டும் போர்வையில் வடக்கை வலம்வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனாலும் எதையுமே சாதிக்க முடியவில்லை. ஈழத் தமிழர்கள் தங்கள் உணர்வில் உறுதியாக இருந்தது தேர்தல் முடிவில் வெளிவந்தது.<br /><br />‘அபிவிருத்தி...!’ என்ற சொல்லுக்கு தங்க முலாம் பூசி தேர்தலில் குதித்தது இலங்கை அரசு. ‘அரசியல் தீர்வு!’ என்ற அறுபது வருடகால அடிப்படைப் பிரச்சனையை முன்வைத்தது தமிழர் தரப்பு. முப்பது வருடகாலம் தொடர் இழப்புகளை சந்தித்தும், இன்னமும் மரத்தின் கீழும் குடிசைகளிலும் முகாம்களிலும் வாழும் நிலையிலும்கூட, பட்டினி வாழ்வு வாழ்ந்தாலும் தமது சொந்த மண்ணில் உரிமையுள்ள மனிதராய் வாழவேண்டும் என்பதே தங்கள் முடிவு என்பதை மக்கள் முதன்மைப் படுத்தியதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன<br /><br />நாடி பிடித்துப் பார்த்த இந்த ஆடி மாதத் தேர்தல் முடிவுகள் சம்பந்தப்பட்ட சிலரை ஆடி அடங்க வைத்திருக்கிறது. அனியாயமாக பணத்தை கொட்டிக் கொடுத்து தோற்று விட்டோமே என்று குமுறுவது அவர்களது வார்த்தைகளில் தெரிகிறது. அவர்கள் ஒன்றை புரிந்தகொள் வேண்டும்!<br /><br />எங்களது மக்களை கடந்த முப்பது ஆண்டுகளாக பட்டினியோடும், குடிசை வாழ்வோடும் வாழப் பழக்கிவிட்டவர்கள் இலங்கை அரசுகள்தான் என்பதும், அவற்றுக்கு பழக்கப் பட்டதனால்தான் அபிவிருத்தியை விடவும், தமது மண்ணில் நிம்மதியோடு தலை சாய்க்கும் உரிமை தமக்கு வேண்டும் என்பதை முதன்மைப் படுத்தி இலங்கை அரசுக்கு புரியவைத்திருக்கிறார்கள்.<br /><br />முப்பது ஆண்டுகளாக பொரளாதார தடை போட்டு, வெளிநாடுகள் கொடுத்த மாவையும் சீனியையும் மட்டுமே பிச்சையாகப் போட்டு மக்களை வாட்டி வதைத்து அவர்களது உயிர்களையே துச்சமாக மதித்தவர்கள்,<br /><br />சுனாமியால் தமிழினம் இழப்புகளை சந்தித்தபோது கூட, வெளிநாட்டு உதவிகள் வவுனியாவை நெருங்க முதலே பறித்து திசை திருப்பியவர்கள்,<br /><br />இப்போது வடகிழக்கின் அபிவிருத்தி என்ற பெயரில் வெளிநாட்டு உதவிகளை பெற்று தேர்தலில் வெல்ல நினைத்தார்கள். எதுவுமே பலிக்கவில்லை ஈழத் தமிழனிடம்.<br /><br />அரசியல் தீர்வின் மூலம் அன்னியப் படைகளின் ஆதிக்கம் இல்லாத, சம உரிமையுள்ள தீர்வைத் தந்தால், நாட்டின் அபிவிருத்தியை தமிழன் தானாகவே உயர வைப்பான் என்பது ஏனோ சிங்களவனுக்கு புரியவில்லை.<br /><br />அதேவேளை, தாயகத் தமிழனிடம் கற்றுக்கொள்ள வெண்டிய பாடம் நிறையவே புலம்பெயர் தமிழனுக்கு இருக்கிறது. ஒற்றுமைப் படவேண்டும் என்ற உணர்வு மட்டுமே தமிழனை வாழவைக்கும்.<br /><br />kana-ravi@hotmail.comஎல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-79342483643573764752011-07-29T05:55:00.000-07:002011-07-29T05:59:19.650-07:00சிங்கள அரசால் குறிவைக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகள்!<p>அண்மையில், மேற்குலக நாடொன்றைச் சேர்ந்த ஊடகவியலாளர் ‘சிறிலங்காவை நெருக்கிவரும் போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து உங்களால் எப்படி விடுபட முடியும்?’ என்ற கேள்வியை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்திருந்தார். </p><p>அதற்கு, அவர் சிரித்துக்கொண்டே ‘தமிழர்களைக் கொண்டே தமிழர்களது போராட்டத்தை அடக்கிய எனக்கு, தமிழர்களைக் கொண்டே அதிலிருந்து விடுபடத் தெரியாதா?’ என்று பதிலளித்தார்.</p> <p><img src="http://www.tamilkathir.com/uploads/images/Maveerar%20Kallarai/1.jpg" alt="" width="550" height="367" /></p> <p> ஆம், சிங்கள தேசம் நடாத்திமுடித்த தமிழினப் படுகொலைக்கான மிகப் பெரிய போராயுதமாகத் தமிழர்கள் சிலர் பயன்பட்டுள்ளார்கள். அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சிங்கள இராணுவம் பாரிய தாக்குதல்களை நிகழ்த்தி, தமிழீழ மண்ணைக் கைப்பற்றிக் கொண்டது. அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சிங்கள தேசம் எங்கும் பரவிப் படர்ந்திருந்த தமிழ் உளவாளிகள் படுகொலை செய்யப்பட்டு, ஆறுகளிலும், வீதிகளிலும் போடப்பட்டார்கள். அவர்கள் வழங்கிய தகவல்களைக் கொண்டே முற்றுகை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் உயர் தளபதிகள் முற்றாக அழிக்கப்பட்டர்கள்.</p> <p>அந்த ஈவிரக்கமற்ற கொலைக் களம் இப்போது புலம்பெயர் நாடுகளுக்கும் நகர்த்தப்பட்டுள்ளது புலப்பட ஆரம்பித்துள்ளது.</p> <p> இதுவரை காலமும், விடுதலைப் புலிகளது புலம்பெயர் தளங்களை நோக்கி ஏவப்பட்ட அதே கொலைக் கரங்கள், எதிர்வரும் மாவீரர் தினத்தைக் குறிபார்க்க ஆரம்பித்துவிட்டது. போட்டி, பொறாமைகள், பதவி ஆசை கொண்டு அலையும் எம்மவர்கள் சலரும் அதற்கு உடந்தையாகிவிட்ட கொடுமைகள் மனதை உலுக்குகின்றது. இதுவரை காலமும், தேசியத் தலைவரது ஆணையுடன் புலம்பெயர் தேசங்களில் தேசிய விடுதலைக் கட்டமைப்புக்களே மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்தியுள்ளன. விடுதலைப் புலிகளது கிளைகளாக இயங்கிய இந்தக் கட்டமைப்புக்கள் முள்ளிவாய்க்காலின் பின்னரும் தேசியத் தலைவரி ஆணைப்படி, வரலாற்றுக் கடமையாக மாவீரர் நிகழ்வுகளை நடாத்தி முடித்தன. அந்தத் தேசிய எழுச்சி நிகழ்வின் தொடர்ச்சி, சிங்கள தேசத்தின் நிகழ்ச்சிநிரலுக்குச் சவாலாக இருந்ததனால், அதன்மீது கடந்த வருடத்திலேயே குறி வைக்கப்பட்ட போதும், அது வெற்றியழிக்கவில்லை.</p> <p> இதனால், புலம்பெயர் தேசங்களில் கே.பி. குழுவினர் களத்தில் இறக்கப்பட்டு, அதற்கான வழங்கல்களும் வாரி இறைக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்கள் தங்களது மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செய்ய முடியாது தவிக்கும் நிலையில், மாவீரர் துயிலும் இல்லங்கள் முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் தமிழர்களது எழுச்சியை நிர்மூலமாக்கும் இந்த நிகழ்ச்சி நிரலில் நம்மவர் சிலரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஊடாக, மாவீரர் தின நிகழ்வைக் குழப்புவதற்கும், மக்களது பங்குபற்றலைச் சிதறடிப்பதற்கும் சிங்கள தேசம் முயற்சி செய்து வருகின்றது.</p> <p><img src="http://www.tamilkathir.com/uploads/images/Maveerar%20Kallarai/2.jpg" alt="" width="550" height="367" /></p> <p> உலகின் அனைத்து இனங்களையும், சமூகத்தையும் ஒன்றிணைக்கும் சக்தியாக, அந்த மக்கள் குழாமின் சமயங்களே செயற்படுகின்றன. கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும், பௌத்தர்களையும், யூதர்களையும் பலம் பெறச் செய்ததும், அணி திரள வைத்து அவர்களுக்கான தேசத்தை வென்றெடுத்ததிலும் அவர்களது சமயத்தின் பங்கு அளப்பரியது. இந்து மதத்தில் அவ்வாறான அணுகு முறையோ, அக்கறையோ இல்லாதது மட்டுமல்ல, இந்து மதம் தனது மக்கள் கூட்டத்தையும் சாதிகளாக்கிப் பிளவு படுத்தியதன் மூலம் ஒருங்கிணைந்த எழுச்சி பெறுதல் ஒன்றிற்கான சாத்தியத்தை இல்லாமலே ஆக்கிவிட்டது.</p> <p> ஆரம்ப காலத்தில் நடைபெற்ற ஆரியப் படையெடுப்பின்போது, ஆட்சியுரிமையுடன் திகழ்ந்த திராவிடர்களைத் தோற்கடிப்பதற்கான தந்திரமாக, ஆரியர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட சாதி முறைமையின் தொடர்ச்சியே இந்து மதம் சார்ந்த பல இனக் குழுமங்களால் ஆட்சி அதிகாரங்களுக்குட்பட்ட நிலப்பரப்புக்களைத் தமதாகத் தக்க வைத்துக்கொள்ள முடியாது போய்விட்டது. அதுவே, தமிழர்களது தலைவிதியாகவும் நிச்சயிக்கப்பட்டு விட்டது.</p> <p> இதன் காரணமாகவே, ஈழப் போரில் இந்து மதம் சார்ந்த மக்கள் கொன்றொழிக்கப்பட்ட போதும், தமிழர்களுக்குச் சொந்தமான இந்துக் கோவில்கள் தரைமட்டமாக்கப்படும்போதும் இந்துமத பீடங்கள் மவுனமாகவே தங்கள் வரலாற்றைத் தக்க வைத்துக்கொண்டனர்.</p> <p>இவற்றை எல்லாம் மீறி, ஈழத் தமிழர்களது ஒன்றிணைதலும், எழுச்சியும் விடுதலைப் புலிகளால் சாத்தியமாக்கப்பட்டது. தாய் மண்ணுக்காகத் தமது இன்னுயிரை ஈந்து, காவிய நாயகர்களான மாவீரர் தினம் இந்த ஒன்றிணைதலின் உச்சக் கட்டமாக உள்ளது. தாயகக் கனவுகளுடன் கண்ணுறங்கும் மாவீரர்களது நினைவுகளைச் சுமந்து, தமிழீழ விடுதலைக்கான மீளுறுதியைக் கொள்ளும் அந்தத் தேசிய தினத்தைச் சிதைக்கும் நோக்கில் முதலில் லண்டனை மையப்படுத்தி ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த பலர், தங்களது சம்மதமில்லாமலேயே தங்களது பெயர்கள் அதில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துத் தம்மை அசுத்தப்படுத்தலிலிருந்து விடுவித்துக்கொண்டர்கள்.</p> <p><img src="http://www.tamilkathir.com/uploads/images/Maveerar%20Kallarai/3.jpg" alt="" width="550" height="367" /></p> <p> தற்போது, பிரான்சை மையப்படுத்தி மாவீரர் தினத்தை சிதைக்கும் நிகழ்ச்சிநிரலுடன் 12 பேர் கொண்டதொரு குழு ‘ஈழநாதம்’ இணையத்தளம் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையாகவே, சிங்கள தேசத்தின் சதி வலைக்குள் இந்த 12 நபர்களும் சிக்கிக்கொண்டார்களா? அல்லது லண்டனில் நடைபெற்றதுபோல் வலிந்து இணைக்கப்பட்டார்களா? என்பதை அறிய முடியவில்லை.</p> <p> இதில், வெளிப்படுத்தப்பட்ட 12 பேர்களில், ஏற்கனவே தமிழ்த் தேசிய சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சிலரும் அடங்கியுள்ளார்கள். மாவீரர் தினத்தைச் சிதைக்கும் நோக்கோடு, சிங்கள தேசத்தால் விதைக்கப்படும் விஷ விதைகள் முளைக்குமுன்னர் களை எடுப்பதன் அவசியத்தைப் புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி, மாவீரர் கனவுகளைச் சிதைக்கும் தேசிய விரோத செயல்களில் சிங்கள தேசத்தின் கையாட்களாகச் செயற்பட வேண்டாம் என்ற கோரிக்கையினை வலியுறுத்த வேண்டும்.</p> <p> <strong>- இசைப்பிரியா</strong></p><div id="content-header"> <h2 class="title"><a href="http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">பிரான்சில் மாவீரர் நாள் குழு தேர்வு<br /></a></h2><h2 class="title"><a href="http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">eelanatham.net</a></h2> </div><div class="field field-type-date field-field-date"> <div class="field-items"> <div class="field-item odd"> <span class="date-display-single">திங்கட்கிழமை, யூலை 25, 2011</span> </div> </div> </div> <span> <div class="alignleft" style="width: 150px;"><a href="http://www.eelanatham.net/image/maaveerar-naal" title="maaveerar naal"><img src="http://www.eelanatham.net/sites/default/files/imagecache/small/Maaveerar%20naal.jpg" title="maaveerar naal" alt="maaveerar naal" width="150" height="96" /></a></div>எமது விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மகத்தான எம் மாவீரர் செல்வங்களின் தியாகங்களை போற்றிப் பூசிக்கின்ற புனிதமான அந்த நாளை சிறப்புற நடாத்துவதற்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் ஒன்றுகூடி மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு ஒன்றினை உருவாக்கியுள்ளனர். சமூகப் பிரதிநிதிகள், தமிழ் அமைப்புக்கள், மற்றும் நீண்டகால தேசியச் செயற்பாட்டாளர்கள், மாவீரர் குடும்ப அங்கத்தவர்கள், சட்டவல்லுனர்கள் போன்றோர்களை உள்ளடக்கியதாக இவ் ஏற்பாட்டுக் குழுவும், அதன் ஆதரவுக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.<br /><br /><span>ஏற்பாட்டுக் குழு</span><br /><br />1. திரு. றொனி மருசலின் ( முன்னால் தமிழ்ச் சோலை பொருப்பாளர், )<br />2. திரு. பரராசா குமாரசாமி ( பிரான்ஸ் தமிழர் கலைத்துறை செயற்பாட்டாளர். )<br />3. திரு. செல்லையா ஜெயச்சந்திரன் ( தேசியச் செயற்பாட்டாளர். )<br />4. செல்வி. பிரியதர்சினி ( மாவீரர் குடும்பம், )<br />5. திரு. ஜோர்ஜ் ஜெயராஜன் ( மாவீரர் குடும்பம், )<br />6. திரு. எஸ். என். ஜே. அன்ரனிப்பிள்ளை ( விளையாட்டுத்துறை, )<br />7. திருமதி. நாகபூசணி சுரேந்திரன் ( பெண்கள் அமைப்பு, )<br />8. திரு. சுதர்சன் சிவகுருநாதன் ( தேசியச் செயற்பாட்டாளர், )<br />9. திரு. அலன் ஆனந்தன் ( உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம், )<br />10. திரு. வல்லிபுரம் வைரமுத்து ( தேசியச் செயற்பாட்டாளர், )<br />11. திரு. சோமசுந்தரம் பிரபாகரன் ( மாவீரர் குடும்பம், )<br />12. திரு. கந்தசாமி கோபிநாத் ( தேசியச் செயற்பாட்டாளர்,)<br /><br />இந் நிகழ்வு சார்ந்த வரவு செலவு கணக்கு விபரம் யாவும் வெளிப்படையானதாகவும், குறிப்பிட்ட நாட்களுக்குள் மக்களின் பார்வைக்கும் கொண்டுவரப்படும்.<br /><br />எவற்றோடும் ஒப்பிட முடியாத அதியுயர் உன்னதமானவர்களை வணங்கும் இந் நாளை, வடுக்கள் ஏதும் இன்றி சிறப்புற செய்யவேண்டும் என்பதே முக்கிய நோக்காகும்.<br /><br />எனவே எமது தமிழ் உறவுகள் அனைவரும் இந் நன்னாளில் உணர்வால் ஒன்றிணைந்து எம் மாவீரர் செல்வங்களை மனதில் இருத்தி அவர்களின் கனவுகளை நனவாக்கும் அதே வேளை தியாக தீபங்களின் ஒளியில் இன்றைய யதார்த்தங்களை உணர்ந்து எமது பாதையில் தொடர்ந்து அடுத்த அடிகளை வைப்போம்.<br /><br /><strong>தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். </strong><br /><br /><br /><strong>மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்குழு</strong><br />பிரான்ஸ் - 2011</span>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-70677817092381009392011-07-28T11:42:00.000-07:002011-07-28T11:47:34.479-07:00“கொல்வதற்கான உரிமையை வழங்கினார் கோத்தாபய“ – இறுதிப்போரில் பங்கேற்ற படைஅதிகாரியின் பதறவைக்கும் வாக்குமூலம்<img src="http://www.puthinappalakai.com/images/t/war_crimes/Sri-Lankan-troops-crush-T-007.jpg" id="thumb" />சிறிலங்கா அதிபரால் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டு சரணடையும் தமிழ்ப் போராளித் தலைவர்களின் கதையை முடித்து விடுமாறு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்குப் பணித்திருந்ததாக சனல்-4 தொலைகாட்சியிடம் சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.<object id="flashObj" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,47,0" width="370" height="260"><param name="movie" value="http://c.brightcove.com/services/viewer/federated_f9?isVid=1"><param name="bgcolor" value="#FFFFFF"><param name="flashVars" value="videoId=1082790637001&playerID=69900095001&playerKey=AQ~~,AAAAAEabvr4~,Wtd2HT-p_VhJQ6tgdykx3j23oh1YN-2U&domain=embed&dynamicStreaming=true"><param name="base" value="http://admin.brightcove.com"><param name="seamlesstabbing" value="false"><param name="allowFullScreen" value="true"><param name="swLiveConnect" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://c.brightcove.com/services/viewer/federated_f9?isVid=1" bgcolor="#FFFFFF" flashvars="videoId=1082790637001&playerID=69900095001&playerKey=AQ~~,AAAAAEabvr4~,Wtd2HT-p_VhJQ6tgdykx3j23oh1YN-2U&domain=embed&dynamicStreaming=true" base="http://admin.brightcove.com" name="flashObj" seamlesstabbing="false" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" swliveconnect="true" allowscriptaccess="always" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash" width="370" height="260"></embed></object><br /><iframe src="http://www.youtube.com/embed/DCo0tNXfTXE" allowfullscreen="" width="560" frameborder="0" height="349"></iframe><br /><br />அதேவேளை, 58வது டிவிசனில் பணியாற்றிய மற்றொரு சிறிலங்கா இராணுவ அதிகாரி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வேலையை முடித்து விடுமாறு பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்கு கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.<br /><br />இது படையினர் கொலைகளைச் செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.<br /><br />சனல்-4 தொலைக்காட்சி சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான மேலும் இரண்டு புதிய சாட்சிகளின் செவ்விகளை நேற்று வெளியிட்டுள்ளது.<br /><br />இதில் இறுதிக்கட்டத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் படைப்பிரிவில் பங்கெடுத்த பெர்னான்டோ என்ற படை அதிகாரி, சிறிலங்கா படையினரால் பெண்களும் சிறுவர்களும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை விபரித்துள்ளார்.<br /><br />அவர் சனல்-4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில் அரசபடையினரால் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் சிறிய ஆயுதங்களால் இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.<br /><br />“நான் வெளியில் இருந்து பார்க்கும் போது அவர்களை வெறுமனே கொடூரமான விலங்குகள் என்று தான் நினைக்கிறேன். அவர்களுடைய இதயங்களில் மனித உணர்வு இல்லை. விலங்குகள் போன்று தான் உணர்கிறேன்.<br /><br />அவர்கள் பொதுமக்கள் மீது கண்டபடி சுட்டார்கள். பொதுமக்களைக் குத்தினார்கள். அவர்களின் நாக்குகளை அறுத்தார்கள். பெண்களின் மார்பகங்களை வெட்டினார்கள்.<br /><br />இவற்றையெல்லாம் நான் எனது கண்களால் பார்த்தேன். சிறுவர்கள் இறந்து கிடந்ததை கண்டேன்.<br /><br />பெருமளவு சிறுவர்கள் இறந்து கிடந்தார்கள். அவர்கள் அப்பாவிகள். பெருமளவு முதியவர்களும் கொல்லப்பட்டுக் கிடந்தனர்.<br /><br />நீரேரியைக் கடந்து வந்தபோது பெண்கள், சிறுவர்கள் என்று பொதுமக்கள் மீது படையினர் சுட்டார்கள். அவர்கள் புலிப்போராளிகள் அல்ல. சாதாரண பொதுமக்கள். சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டதை எனது கண்களால் பார்த்தேன்.<br /><br />தாயும் மூன்று குழந்தைகளுமாக ஒரு சிறிய குடும்பம் தப்பிச் சென்று கொண்டிருந்ததை நான் கண்டேன். அவர்களில் ஒரு சிறுவனின் காலில் சூடுபட்டு கிழே விழுந்தார்.<br /><br />அந்தக் குழந்தையை நான் இந்தக் கைகளால் தூக்கினேன். தாயார் கதறி அழுதார். அந்தத் துன்பத்தின் மத்தியிலும் என்னை நன்றியுணர்வோடு பார்த்தனர்.<br /><br />ஒரு நாள் ஆறு படையினர் தமிழ்ப் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்வதை எனது கண்களால் கண்டேன்.<br /><br />தான் ஒரு நடைப்பிணம் போலவே இருக்கிறேன்.<br /><br />ஒரு தமிழ் பெண்ணை வன்புணர்வு செய்ய வேண்டுமானால் அவளை அவர்களால் அடிக்க முடியும். அவளது பெற்றோர் அதைத் தடுக்க முனைந்தால் அவர்களை அடிக்கவோ கொல்லவோ முடியும்.<br /><br />அங்கு அவர்களின் ஆட்சி தான் இருந்தது.<br /><br />போர் முனையில் இருந்த படையினரின் இதயங்கள் கற்களாகிப் போயிருந்தன.<br /><br />இரத்தம், கொலைகள், மரணம் என்று பார்த்துப் பார்த்து அவர்கள் மனிதஉணர்வுகளை இழந்து விட்டார்கள்.<br /><br />அவர்களை என்னால் காட்டேறிகள் என்று தான் கூற முடியும்.<br /><br />தலை மற்றும் பிற உடற்பாகங்கள் இல்லாத பெண்களின் உடல்களை நான் கண்டேன்.<br />இறந்து கிடந்த தாய் மற்றும் குழந்தையின் சடலங்களையும் பார்த்தேன், ஆனால் குழுந்தையின் தலை இருக்கவில்லை.<br /><br />போரின் இறுதிக் கட்டத்தில் பெரும் எண்ணிக்கையான சிறுவர்களும், பெண்களும், ஆண்களும் கொல்லப்பட்டனர்.<br /><br />புதுமாத்தளனில் மட்டும் 1500இற்கும் அதிகமான பொதுமக்கள் இறந்து கிடந்ததை நான் கண்டேன்.<br /><br />அவை அனைத்தையும் அவர்களால் அடக்கம் செய்ய முடியவில்லை. அவற்றை ஒன்றாக அடுக்கி புல்டோசர் மூலம் மண் பரப்பி ஒரு அணைபோல அமைத்து அவை புதைக்கப்பட்டன.<br /><br />புதுமாத்தளனில் 1500 சடலங்களை நான் கண்டேன். ஆனால் அதுபோல 50,000 இற்கும் அதிகமான மக்களுக்கு நடந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.<br /><br />போரின் இறுதிக்கட்டத்தில் நான் கடைசியாக நுழைந்த போது புதுமாத்தளன் பகுதி முழுவதும் சடலங்களாக நிறைந்திருந்தது.<br /><br />அவற்றை அழிப்பதற்கு அவர்களுக்கு பாரிய வாகனம் ஒன்றைப் பெற்றனர். சடலங்களின் மீது மண்ணைப் போட்டு நிரப்பினார்கள்.<br /><br />சில இடங்களுக்கு நீங்கள் செல்ல முடியாதளவுக்கு அழிந்து போன உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசும்.<br /><br />அவர்கள் வெறும் அப்பாவி குடிமக்கள். போரிடும் தரப்பினருடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள்.<br /><br />அவர்களின் இறப்புக்காக தான் அழுகிறேன். இப்போது அதை வெளியே சொல்ல முடிவு செய்துள்ளேன்.<br /><br />ஏனென்றால் 2009 மே மாதம் கடற்கரையின் ஒரு சிறு துண்டுப் பகுதிக்குள் நடந்த கொடூரமான குற்றங்கள் குறித்து உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்.<br /><br />நான் நன்றாக இருக்கிறேன்.நான் பல சடலங்களைப் பார்த்துள்ளேன். காயமடைந்தவர்கள் பலரைப் பார்த்துள்ளேன். பல வன்புணர்வுக் காட்சிகளைக் கண்டுள்ளேன்.<br /><br />எனது இதயத்தை திறந்து வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் நன்றாக இருக்கிறேன்.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-1098436043500573892011-07-28T11:41:00.000-07:002011-07-28T11:42:22.827-07:00வாக்குப் புரட்சி - தினமணி நாளேடு<img src="http://www.puthinappalakai.com/images/t/logo/dinamani-logo.jpg" id="thumb" />இந்த வெற்றி சொல்லும் அறிவிப்புகள் பல. இலங்கையில் தமிழர்களுக்கு தமிழீழம் அளிக்கப்படாவிட்டாலும், தமிழர்கள் வாழும் பகுதிகள் அறிவிக்கப்படாத தமிழீழமாகத்தான் நீடிக்கும். இதை யாராலும் மாற்றிவிட முடியாது என்பது அதில் முதன்மையானது.<br /><br />இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்த வெளியாகும் 'தினமணி' நாளேடு 28-07-11ம் நாள் இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதன் முழுவிபரமாவது,<br /><br />மக்களாட்சியில் வாக்குச் சீட்டுகள் மக்களின் மனசாட்சியாக இருக்கின்றன என்பதற்கு இலங்கை உள்ளாட்சித் தேர்தல் மற்றொருமுறை உலகுக்குக் கட்டியம் கூறியுள்ளது.<br /><br />இலங்கை உள்ளாட்சித் தேர்தலில், அந்தத் தீவு முழுவதிலும் 65 மாகாணங்களில் போட்டியிட்ட ராஜபட்ச சார்ந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தம் 45 இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், தமிழர்கள் வசிப்பிடமாகிய இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள 6 மாகாணங்களில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.<br /><br />தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு 18 இடங்களில் வெற்றிபெற்றிருப்பதும், புலிகள் இயக்கத்துக்குக் கொள்கையளவில் மாறுபட்டிருந்த தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 2 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதும், ராஜபட்ச மீதான கோபத்தை, இலங்கைத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக உலகுக்கு அறிவித்துவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது.<br /><br />தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள் என்று ராஜபட்சவுக்கு அறிவுரைகூறும் வகையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, என்னுடைய தகப்பனார் பண்டாரநாயக தலைமையிலான அரசு உள்பட அனைத்து அரசுகளுமே தமிழர்களின் கோரிக்கைகளை முறையாகப் பரிசீலித்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால்தான் இந்தப் பிரச்னை இப்படிப் பூதாகரமாக வளர்ந்து இலங்கையை 30 ஆண்டுகளுக்கு நெருக்கடியில் தள்ளியது என்று கூறியிருப்பது, இலங்கைவாழ் தமிழர்களின் பலத்தையும் தமிழர் அரசியலையும் புரிந்துகொள்ளும் சூழலை இத் தேர்தல் வெற்றி உருவாக்கியுள்ளது என்பதை உணர்த்துகிறது.<br /><br />தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதால், நம் வலிமை குறைந்துவிடாது. மாறாக, அவர்களது உழைப்பு, திறமை, அறிவாற்றலால் இலங்கைக்கு எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும் என்று சந்திரிகா இன்று கூறுவதை, தமிழருக்கு ஆதரவுத் தெரிவித்துவரும் சிங்களர்களும் கூறிவருகிறார்கள்.<br /><br />அற்றை நாள் முதலாக இலங்கையின் வளர்ச்சி, தமிழர்கள் சார்ந்ததாகவே இருந்துவந்தது. தமிழரின் இந்த ஆற்றல் மீதும், அறிவுப்புலத்தின் மீதும் சிங்களர்கள் கொண்ட பொறாமையின் விதைகள்தான் கடந்த 30 ஆண்டுகளாக சிங்கள பேரினவாதக் கொள்கைக்கு இடமளித்து, இலங்கையின் பொருளாதாரத்தைச் சிதைத்தது. இப்போதுதான் அவர்களுக்குப் புரிகிறது, தமிழர்கள் நம்முடன் இருந்திருந்தால் பெரும் வளர்ச்சியைப் பெற்றிருப்போம் என்று!<br /><br />இந்த வெற்றி சொல்லும் அறிவிப்புகள் பல. இலங்கையில் தமிழர்களுக்கு தமிழீழம் அளிக்கப்படாவிட்டாலும், தமிழர்கள் வாழும் பகுதிகள் அறிவிக்கப்படாத தமிழீழமாகத்தான் நீடிக்கும். இதை யாராலும் மாற்றிவிட முடியாது என்பது அதில் முதன்மையானது.<br /><br />இலங்கை அரசியலில் தமிழர்களின் பங்கு இல்லாமல், தமிழர்களைத் தவிர்த்துவிட்டு எந்தவோர் ஆட்சியாளரும் எதையும் செய்துவிட முடியாது. எந்தவொரு கட்சியும் இலங்கையில் முழுமையான ஆட்சி அதிகாரத்தைப் பெறவேண்டுமானால் தமிழர் ஆதரவு கட்டாயமாகத் தேவை.<br /><br />அரசியல் சக்தியாக மாறும் முடிவை, தேர்தல் மூலம் ஆளும்கட்சிக்கு நெருக்கடிதரும் அரசியல் தீர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது இறுக்கத்தைத் தளர்த்தி, நிலைப்பாட்டை மாற்றியமைத்துக்கொண்டிருந்தால் ஒருவேளை பல இழப்புகளையும், பின்னடைவையும் தமிழீழப் போராளிகள் தவிர்த்திருக்கக் கூடும் என்கிற சிந்தனைக்கு இடமளித்திருக்கிறது இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள். இலங்கைத் தமிழர் இன்று அரசியல் களத்தில் கொள்கையளவில் ஒன்றுபட்டு நின்றபோதிலும் அவர்களை வழிநடத்த பலமான இயக்கமோ, தலைமையோ இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறதே என்கிற ஆதங்கம் மேலெழுகிறது.<br /><br />தமிழர் பகுதியில் சிங்களர்களைக் குடியமர்த்தி, சிங்களத் தமிழர் கலப்பினத்தை உருவாக்கி, தமிழர் குரலை ஒடுக்கிவிட முடியும் என்கிற இலங்கை அரசின் எண்ணத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் மண் விழுந்திருக்கிறது என்பது திண்ணம். இருபது ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு, துன்பப்பட்டு மடிந்து மடிந்து ஒரு தஞ்சமும் இல்லாமல் மடியும் நிலைமைக்குத் தள்ளப்பட்டபோதும், மீண்டும் எழுந்துநிற்கும் தமிழர்கள் மத்தியில் ஊடுருவிகளாகக் குடியேற சிங்களர்கள் இனிமேல் ஒரு முறைக்கு நான்கு முறை யோசிப்பார்கள். இனிமேல் சிங்களர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கைகளைத் தொடர இலங்கை அரசும் துணிவு கொள்ளுமா என்பதேகூட சந்தேகம்தான்.<br /><br />இந்த வெற்றியை இலங்கையின் ஆளும்கட்சியோ அல்லது எதிர்க்கட்சியும்கூட தாங்கிக் கொள்ளாது. இந்த வெற்றியைச் சிதைப்பதற்கு தமிழர் மத்தியில் புதிய புதிய கட்சிகளை உருவாக்கி, வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளும் வாய்ப்பும் அதிகம். இதற்காக எத்தனை கோடி கொடுத்தும், புதிய தமிழர் அமைப்புகளை உருவாக்க சிங்கள அமைப்புகளும் உதவக்கூடும்.<br /><br />இத்தனை காலம் சிந்திய ரத்தத்தின் நிறம் மாறாத மண்ணுக்காகவும், தாங்கள் இழக்க நேர்ந்த தமிழர் உயிர்களுக்காகவும், இப்போதும்கூட காணாதோர் பட்டியலில் உள்ள 1.40 லட்சம் தமிழர்களைக் கருத்தில் கொண்டும், அந்த மண்ணில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சி மட்டுமே தனித்து நிற்கவும், அந்த அரசியல் பலத்தின் மூலம் இலங்கைவாழ் தமிழர்கள் தங்களது நியாயமான சம உரிமையைப் பெறவும் உறுதிபூண வேண்டும்.<br /><br />இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்த கட்சிகளுக்கு அதைப்பற்றி யோசிக்கவே நேரமில்லாதபடி காராகிரகக் கவலைகள் இருக்கின்றன. அதற்குப் பதிலாக இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கையின் வடபகுதியில் குடியமரச் செய்து, தமிழர்களின் வாக்கு வங்கியை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பதைப் பற்றி ஏன் யோசிக்கக் கூடாது?<br /><br />இலங்கையில் குடியரசுத் தலைவர் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சிமுறை அமலில் இருக்கும்வரை, சிறுபான்மைத் தமிழர்களின் நலன் பேணப்படாது. மீண்டும் நாடாளுமன்ற ஆட்சிமுறைக்கு இலங்கையின் அரசியல் சட்டம் மாற்றப்பட்டால் மட்டுமே, தமிழர்களுக்கு மரியாதையும், ஆட்சியில் உரிய பங்கும், தமிழர்கள் வாழும் பகுதியில் வளர்ச்சியும் உறுதிப்படுத்தப்படும். அதற்கு யார் குரல் கொடுக்கப் போவது என்பதுதான் கேள்வி.எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-81518748421736471042011-07-28T11:39:00.000-07:002011-07-28T11:40:17.990-07:00"தோட்டாவால் ஆளப்பட்ட பிரதேசங்கள் வாக்குகளால் வென்றெடுக்கப்பட்டுள்ளன"<img src="http://www.puthinappalakai.com/images/t/tamileelam/Mulli-SL.jpg" id="thumb" />யுத்த காலப்பகுதியில் சிறிலங்காவிற்கு மிகப் பக்கபலமாக இருந்த இந்தியாவானது, தற்போது அதிகாரப் பரவலாக்கம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் உறுதியாக நிற்பது ஆச்சரியமான விடயமாகும்.<br /><br />இவ்வாறு அமெரிக்காவை தளமாகக்கொண்டு பல நாடுகளில் வெளியாகும் TIME சஞ்சிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் எழுதப்பட்டுள்ளது. அதனை<br /><br />சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலானது சிறியதொரு தேர்தலாக இருந்தபோதிலும் தற்போது அது பெரும் முக்கியத்துவம் மிக்கதாகவும், பெறுமதி மிக்க குறியீடாகவும் உள்ளது.<br /><br />சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற பகுதியில் உள்ள இருபது உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த வார இறுதியில் நடைபெற்றது.<br /><br />சிறிலங்காவைத் தற்போது ஆளும் மகிந்த அரசாங்கத்தின் கைகளில் வடபகுதிக்கான அதிகாரம் அனைத்தும் குவிந்துள்ளபோதிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வடபகுதி மாவட்டங்களில் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் இணக்கப்பாட்டு முயற்சிகளுக்கான முதலாவது மக்கள் கருத்து வாக்கெடுப்பாகவே தற்போது நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தல் அமைந்துள்ளது. இத்தேர்தல் தொடர்பான பெறுபேறுகள் வெளிவந்த போது மக்களின் விருப்பம் எது என்பதும் தெளிவாகியுள்ளது.<br /><br />சிறிலங்காவின் ஏனைய பகுதிகளில் ராஜபக்சவிற்கான ஆதரவு குறையாத போதிலும் வடக்குப் பகுதியில் இந்த ஆதரவானது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.<br /><br />சிறிலங்கா அரச படைகளால் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்த, சிறிலங்கா நாடாளுமன்றில் எதிர்க்கட்சி ஆசனத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்போது நடந்து முடிந்த வடக்கிற்கான 20 உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 15 ஆசனங்களையும், பிறிதொரு தமிழ்க் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இரு ஆசனங்களையும், ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்று ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.<br /><br />யூலை 23 அன்று தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 65 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 45 ஆசனங்களைப் பெற்றுள்ளது.<br /><br />"சிறிலங்காவின் வடபகுதியில் வாழும் மக்கள் தமது விருப்பத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு சந்தர்ப்பமாக இத்தேர்தல் அமைந்துள்ளது" என கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் சூசைப்பிள்ளை கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.<br /><br />25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த சிறிலங்காவின் உள்நாட்டுப் போரானது மே 2009ல் முடிவிற்கு வந்ததன் பின்னர் மேற்குறிப்பிட்ட வடபகுதியின் மூன்று மாவட்டங்களிலும் யுத்தத்தின் அழிவுகள் எஞ்சிக்காணப்படுகின்றன.<br /><br />சிறிலங்காவின் வடபகுதியில் பெரும் தொகையில் வாழ்கின்ற தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்காக தனிநாடு வேண்டிப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது முற்று முழுதாக அழிக்கப்பட்டனர்.<br /><br />இந்த யுத்தத்தில் அகப்பட்டுக் கொண்ட 300,000 இற்கும் மேற்பட்ட மக்கள் தமது வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தனர். எண்ணுக்கணக்கற்ற மக்கள் இந்தப் போரின் போது கொல்லப்பட்டனர் மற்றும் காயங்களுக்கு உள்ளாகினர்.<br /><br />2009ன் இறுதிப்பகுதியில், இடம்பெயர்ந்தோர் முகாங்களில் வாழ்ந்த மக்களை சிறிலங்கா அரசாங்கம் மீளக் குடியேற்ற ஆரம்பித்தது. தற்போது 10,000 மக்கள் மட்டுமே முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.<br /><br />யுத்தம் இடம்பெற்ற வன்னிப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் பல பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. வடக்குப் பகுதியை ஊடறுத்துச் செல்லும் ஏ-09 நெடுஞ்சாலையானது செப்பனிடப்பட்டு வருகிறது. மின்சார வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.<br /><br />வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள 80 வீதமான பயிர்செய் நிலங்கள் மீளவும் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. யுத்தம் முடிவிற்கு வந்ததையடுத்து சிறிலங்கா அரசாங்கமானது பல்வேறு கடன் திட்டங்களுக்குக் கீழ் வடபகுதியில் 42 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியைச் செலவிட்டுள்ளது என மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.<br /><br />அண்மைய மாதங்களில் சிறிலங்காத் தீவில் அதிகம் கடன் திட்டங்கள் வழங்கப்படும் இடமாக வடக்குப் பகுதி அமைந்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.<br /><br />இவ்வாறான பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் வன்னி மக்கள் தமது நாளாந்த வாழ்வை கழிப்பதில் பெரும் பிரயத்தனப்படுகிறார்கள்.<br /><br />யுத்தத்தின் பின் தமது சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பிய மக்களில் 63 வீதமானோர் நாளொன்றுக்கு ஒரு டொலரைக் கூடச் செலவழிக்க முடியாதவர்களாக உள்ளதுடன், 20 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.<br /><br />இந்தப் பிரதேசத்தில் இராணுவ நடமாட்டங்கள் அதிகம் காணப்படுவதுடன், இங்கு வாழும் மக்கள் மிக மெதுவாகவே இயல்புநிலைக்குத் திரும்புவதுபோல் தெரிகிறது.<br /><br />"அரசாங்கத்தின் தேர்தல் பரப்புரையானது அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இங்கு வாழும் தமிழ் மக்கள் தமக்கு எது தேவை என்பதை தாம் வழங்கிய வாக்குகள் மூலம் காட்டியுள்ளனர்" என யாழ் மாவட்டத்திற்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.<br /><br />வட பிராந்தியத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் தமது ஆதரவுகளை வழங்கியதன் மூலம் மக்கள் தமது ஆணையை வழங்கியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.<br /><br />குருதி தோய்ந்த யுத்தத்தின் பாதிப்புக்களைச் சுமந்துள்ள சிறபான்மைத் தமிழர்கள் சிறந்த தேசிய ஒருமைப்பாட்டை அடைந்துகொள்வதற்கு அதிகார மாற்றம் என்பது மிக இன்றியமையாத ஒன்று என்பதை உணர்ந்து கொண்டு தமது ஆணையை வழங்கியுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.<br /><br />அமெரிக்கா, ஐரோப்பிய சங்கம் போன்ற வலும்மிக்க அனைத்துலக அதிகார சக்திகள், சிறிலங்காவில் தமிழர் வாழும் பகுதிகளில் அதிகாரப் பகிர்வு என்பது தேவைப்பாடுடைய ஒன்றாகும் எனவும், இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பான அனைத்தலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.<br /><br />தன் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்த மீறல்களை சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. சிறிலங்கா அரசாங்கமானது வடக்கில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் வென்றிருக்குமானால், தன் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்துலக அழுத்தங்களை முறியடிப்பதற்கான கருவியாக இத்தேர்தல் வெற்றியை பயன்படுத்தியிருக்கும் என பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.<br /><br />ஆனால் தேர்தல் வெற்றியானது சிறிலங்கா அரசாங்கத்திற்கு சாதகமாக அமையாததால், அனைத்துலகத்தை தனது பக்கம் கவருவதற்கான வேறு முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளலாம் எனவும் பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.<br /><br />யுத்த காலப்பகுதியில் சிறிலங்காவிற்கு மிகப் பக்கபலமாக இருந்த இந்தியாவானது, தற்போது அதிகாரப் பரவலாக்கம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் உறுதியாக நிற்பது ஆச்சரியமான விடயமாகும்.<br /><br />கடந்த யூனில் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிற்கு வருகை தந்திருந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் மற்றும் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளுடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.<br /><br />2006 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டு இறுதியுத்தத்தின் போது, சிறிலங்கா மீது மெற்கொள்ளப்பட்ட அனைத்துலக சமூகத்தினது அழுத்தங்களை ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் எதிர்த்து நின்றன. இதில் ரஷ்யா, சீனா ஆகிய இரண்டும் தமது ஆதரவுகளை சிறிலங்காவிற்கு வழங்கியவண்ணமுள்ளன.<br /><br />இந்த அடிப்படையில், சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளிவந்ததன் பின்னர், சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களில் அதிகம் தலையிட்ட முதலாவது நாடாக ரஷ்யா உள்ளது. சீனாவானது போருக்குப் பின்னான சிறிலங்கா அபிவிருத்தித் திட்டங்களில் அதிகளவான தனது நிதியை முதலீடு செய்துள்ளது.<br /><br />இவற்றுக்கு மாறாக, அனைத்துலக சமூகத்தால் மேற்கொள்ளப்படும் நேர்த்தியான மாற்றங்களை ராஜபக்ச அசட்டை செய்வாரானால் அவர் முட்டாளாகவே இருப்பார் என்பது அரசியல் அவதானிப்பாளர்களின் கருத்தாகும்.<br /><br />"சிறிலங்காவில் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை அடைந்து கொள்வதற்காகவே சிறிலங்கா மீது இந்நாடுகள் தமது செல்வாக்கைப் பிரயோகிக்கின்றன" என அனைத்துலக நெருக்கடிக்கான குழுவின் சிறிலங்காவிற்கான திட்ட இயக்குனரும் மூத்த ஆய்வாளருமான அலன் கீனன் தெரிவித்துள்ளார்.<br /><br />"அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்றவை சிறிலங்கா விடயத்தில் சாதகமானதொரு நிலைப்பாட்டை எடுப்பதில் கூட்டாக இணைந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யா, சீனா அகிய இரு நாடுகளும் சிறிலங்கா தொடர்பான தமது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் மாறாத நிலைப்பாட்டைக் கொண்டிருக்குமானால் அதில் எந்தவொரு பயனையும் பெற முடியாது" என அலன் கீனன் மேலும் தெரிவித்துள்ளார்.<br /><br />இந்த மாற்றம் ஏற்கனவே இடம்பெற்றுள்ளதற்கான ஒரு அறிகுறியாகவே கடந்த வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் கண்காணிப்பு செயற்பாட்டு அமைப்பான ஊயகுகுநு யின் தலைவர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.<br /><br />"தோட்டாவால் ஆளப்பட்ட பிரதேசங்கள் வாக்குகளால் வென்றெடுக்கப்பட்டுள்ளன" என தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.<br /><br />"நீண்ட காலமாக நாங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால் தற்போது நாம் அதில் நம்பிக்கை கொள்ளலாம்" என சிறிலங்காவின் யுத்தம் இடம்பெற்ற வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த வாக்களரான வேலாயுதம் றமணன் தெரிவித்துள்ளார்.<br /><br />நித்தியபாரதி.எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-39784310649791764142011-07-28T11:36:00.000-07:002011-07-28T11:38:21.739-07:00சிறிலங்கா இந்தியாவின் பக்கம் நிற்பதையே அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் விரும்புகின்றனர்மனித உரிமை மீறல்கள் குறித்த விடயத்தில் கவனம் செலுத்துவார்கள் என முதல்வர் ஜெயலலிதாமீதும் கிளின்ரன் அம்மையார்மீதும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த தமிழர் தரப்பிற்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. <strong></strong><p></p><strong> <p align="center"><img alt="" src="http://www.puthinappalakai.com/images/s/wall_street_bull.jpg" border="0" /></p> </strong><p><strong></strong>"எகிற வந்த மாடு அருகாலே ஓடிவிட்டது ஏதோ தப்பி விட்டோம்" என்பது போல அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிலாரி கிளின்ரனின் சென்னை பயணம் குறித்து கொழும்பு வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.<br /><br />கிளின்ரன் அம்மையார் சென்னை வருகிறார் என்று கேள்வியுற்ற செய்தியிலிருந்து சிறிலங்கா அரசு பெரும் சங்கடநிலையை அடைந்திருந்தது என்பதை அவர் வந்து சென்றதன் பின்பு தான் அரச அதிகாரிகள் ஏற்று கொண்டனர்.<br /><br />சிறிலங்காவின் இந்த பதட்டநிலைக்கான காரணங்கள் உலகம் பூராகவும் தற்போது தெரிந்த விடயமாகும்.<br /><br />கிளின்ரன் அம்மையாரின் இந்த பயணம் குறித்த செய்திகளை வெளியிட்ட அனைத்துலக ஊடகங்கள் அனைத்தும் சிறிலங்காவில் தமிழ்மக்களுக்கு எதிராக இடம் பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த செய்திகளையும் வெளியிட தவறவில்லை.<br /><br />அவற்றில் அமெரிக்காவின் புகழ்பெற்ற The Wall Street Journal பத்திரிகையாயினும் சரி சாதாரணமான தெற்கு, தென்கிழக்காசியாவின் பத்திரிகைகளில் ஏதாவது ஒன்றிலும் சரி கிளின்ரன் அம்மையாரின் முதன்முறையான சென்னை பயணம் குறித்த செய்திகளில் சிறிலங்கா அரசின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிரான எதேச்சதிகார மக்களாட்சிப்போக்கும், மனித விழுமியங்களுக்கு எதிரான கொலைகளும் முதன்மை அங்கங்களாக வெளிவந்திருந்தன.<br /><br />'சிறிலங்காவின் கொலைக்களம்' எனப்படும் காணொலி கூட அனைத்துலக அளவில் பல்வேறு நாடுகளிலும் தாக்கத்தை விளைவித்த வண்ணம் உள்ள இந்த நிலையில் சிறிலங்காவின் அரச நடவடிக்கைகள் அமெரிக்க இராஜாங்க அமைச்சகத்திற்கு தெரிந்திராத விடயமல்ல.<br /><br />இவை எல்லாவற்றிகும் மேலாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் பதில் இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் அவர்கள் மிக அண்மையிலேயே கிளிநொச்சிக்கும் சென்னைக்கும் கொழும்புக்கும் பயணங்களை மேற்கொண்டிருந்தார்.<br /><br />இவற்றுடன் தற்போது கிளின்ரன் அம்மையாரின் பயணமும் பேச்சும் தமிழ் நாட்டில் அண்மையில் இடம் பெற்ற ஆட்சிமாற்றமும் அதன் தன்மையும் பின்புலமும் அமெரிக்க இராஜாங்க அமைச்சினால் நன்கு ஆராயப்பட்ட தன்மை இந்த பயணத்தில் தெரிந்தது எனலாம்.<br /><br />தமிழ் நாட்டிற்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் இடையிலான பொருளாதார வியாபார நிலைமைகள் பற்றிய முக்கியத்துவமும் மீள்வலியுறுத்தல்களும் இப்பேச்சுகளில் முதன்மை பெற்றிருக்கிறன.<br /><br />கல்வி வளர்ச்சியிலும் தொழில்நுட்ப அறிவிலும் முதன்மைபெறும் தமிழ்நாடு, இந்தியாவின் தரத்தை பிராந்திய தலைமைத்துவத்திற்கு இட்டு செல்ல குறிகாட்டி நிற்பதாக கிளின்ரன் அம்மையார் குறிப்பிட்டிருக்கிறார்.<br /><br />ஆசியாவை இருகூறுகளாக பிரிப்பதில் இந்தப்பயணம் முன்னுரிமை வகுத்திருப்பதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு பகுதி சீனாவுடனும் இன்னுமெருபகுதி இந்தியாவுடனும் என உருமாற்றம் செய்வதில் கணிசமான அளவு முன்னேற்றமும் கண்டிருக்கிறது.<br /><br />இதன்பொருட்டே இந்தியாவின் கிழக்கு நோக்கிய பார்வை கொள்கையை வலியுறுத்துவதுடன் அதன் தலைமைத்துவத்திலும் அமெரிக்கா விருப்பம் கொண்டுள்ளதாக இவ்வாய்வாளர்கள் கருதுகின்றனர்.<br /><br />தமிழர்களின் தொன்மை குறித்த தகவல்கள் குறிப்பாக கம்போடிய அங்கோர் வற் என அழைக்கப்படும் புராதன கோயிற் கட்டட கலையின் பெருமையும் குறித்த தகவல்கள் என்பன கூட தமிழர்கள் கிழக்காசியாவில் செல்வாக்க செலுத்தியதை கிளின்ரன் அம்மையார் குறிப்பிடத் தவறவில்லை.<br /><br />அத்துடன் ஈழத்தமிழர்கள் மீதான தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு கோடி தமிழர்களது கரிசனை குறித்த தமது அறிவையும் பகிர்ந்து கொண்டிருந்தார் என்பது முக்கியமானதாகும்.<br /><br />கிளின்ரன் அம்மையார் இங்கு குறிப்பிடுமிடத்தில் சிறிலங்கா அரச பயங்கரவாதம் குறித்தும் பேரினவாத போக்கு கொண்ட மக்களாட்சிப்பண்புகள் குறித்த ஆழமான அறிவும் இருந்த போதிலும் அவர் இங்கு மிகவும் மென்மையாக "உதாரணமாக அனைத்து மக்களும் பங்கு கொள்ளும் வகையில் இந்திய அமைப்பை மாதிரியாகக் கொண்டு சிறிலங்காவிலும் புதியதொரு மாதிரியை உருவாக்குவது, இணக்க அரசியலை [ <span style="font-size:100%;">political reconciliation</span>] நாடிச்செல்ல முனையும் சிறிலங்காவிற்கு உதவுவதாக அமையலாம்" என கருத்து தெரிவித்திருந்தார்.<br /><br />தெற்கில் உள்ள சிறிலங்கா இந்தியாவின் பக்கம் நிற்பதையே அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் விரும்புகின்றனர்.<br /><br />மனித உரிமை மீறல்கள் குறித்த விடயத்தில் கவனம் செலுத்துவார்கள் என முதல்வர் ஜெயலலிதாமீதும் கிளின்ரன் அம்மையார்மீதும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த தமிழர் தரப்பிற்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.<br /><br />இருந்த போதிலும் தொடர்ச்சியான உயர் தொழில்நுட்ப வர்த்தகத்தின் வளர்ச்சியை மேம்படுத்த முனையும் முதன்முறையான உயர் நிலை சந்திப்பில் வர்த்தக நலன்கள் முன்னுரிமை பெற்றிருப்பதால் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பெரிது படுத்தபடவில்லை என கிளின்ரன்அம்மையாரின் சென்னை பயணத்தில் நன்மை நோக்கிய பார்வை கொண்டவர்களால் கூறப்படுகிறது.<br /><br />மறுபுறத்தில் எகிறுவார் என எதிர்பார்த்திருந்த கொழும்புத்தலைமை தப்பித்தோம் என்பது போல பெருமூச்சு ஒன்றுடன் விழிபிதுங்க மகிழ்ச்சி கொண்டது.<br /><br />முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் முன்மொழிவுக்கு அடுத்த படியாக சிறிலங்கா மீதான பொருளாதார தடைகுறித்த பேச்சுகள் வெளிவரும் என்றே சிறிலங்கா உட்பட பல்வேறு தரப்பிலும் எதிர்பார்ப்பு இருந்தது.<br /><br />திட்டமிட்ட வகையில் தமிழ் சமுதாயத்தின் மீது இழைத்து வரும் கொடுமைகளையும், இராணுவ அடக்குமுறைகளையும், தமிழர் பாரம்பரிய நிலங்களை அபகரிப்பதுடன், அவர்களின் பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் சொத்து நாசம், வாழ்வு முறைநாசம் என ஒரு இன அழிப்பை திட்டமிட்ட வேகத்தில் நிகழ்த்திவரும் சிறிலங்கா அரசு. அனைத்துலக மட்டத்தில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை மட்டத்தில்<span style="font-size:100%;"> political reconciliation </span> என்ற பெயரில் பல்வேறு சலுகைகளை பெற்று கொள்ள முனைகிறது.<br /><br />அத்துடன் உலக நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களில் கருத்தாதரவு செயற்பாடுளை பல்வேறு இணங்கி செல்லகூடியவர்கள் மூலமாக முடுக்கி விட்டிருக்கிறது.<br /><br />இது சிறிலங்கா அரசு புரிந்த இன அழிப்பையும் மனிதாபிமானத்திற்கு முரனான செயற்பாடுகளையும் மூடி மறைப்பற்காகவே என தெரிகிறது.<br /><br />இங்கே <span style="font-size:100%;">reconciliation </span>என்ற சொல் 'மன்னித்து - இணங்கி - போகசெய்தல்' என எடுத்து கொள்ளப்படுகிறது. தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பு, கெடுபிடிகளுக்குள் வாழும் மக்கள் எதை மன்னிப்பது யாரை மன்னிப்பது, எதனுடன் இணங்கிப்போவது யாருடன் இணங்கிப்போவது என்று தெரியாது தவிப்பது மிக முக்கியமான விடயமாகும்.<br /><br />இந்த நிலையில் கொழும்பு அதிகாரிகளின் சொல்லளவிலான கரிசனை வார்த்ததைகளை மேலை நாட்டு வெளியுறவு அமைச்சகங்களிலும் பன்னாட்டு நிறுவனங்கள் மத்தியிலும் இன்னமும் கருத்தில் எடுத்து கொள்ள தயாரான நிலையே உள்ளதை கிளின்ரன் அம்மையாரின் சென்னைப் பேச்சு குறிக்கிறது.<br /><br />இந்த பேச்சுக்கு பின்பு சிறிலங்கா வெளியுறவு அதிகாரிகள் முன்பு போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ளூர் தலைவர்களை உருவாக்குதல், மீள்குடியமர்வு முயற்சிகள் துணைப்படைகளை நிராயுதபாணிகளாக்குதல் போன்றவற்றுடன் மன்னித்து இணங்கிப்போகும் தன்மையை உருவாக்கவே தாம் முன்னுரிமை வகிப்பதான கருத்தை இறுக்கிப்பிடித்து கொண்டுள்ளனர்.<br /><br />இனப்படுகொலைகளின் பின்பு அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இன்னமும் தமிழர் பகுதிகள் இராணுவ அடக்கு முறைகளால் வாழ்வாதாரமற்ற நிலையில் கிடக்கிறது.<br /><br />இதிலே கிளின்ரன் அம்மையாரின் பேச்சு சிறிலங்கா அதிகாரிகளுக்கு புதிய ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. மேலும் பல மேலை நாடுகளை அணுகுவதற்குரிய கதவுகளை திறந்தது விட்டிருக்கிறது எனலாம்.<br /><br />கடந்த காலங்களில் இந்திய காங்கிரஸ் மத்திய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கங்களை பல்வேறு இடங்களில் துணை நின்று காத்துள்ளது. இராணுவ பொருளாதார வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.<br /><br />இருந்த போதிலும் சிறிலங்கா அரசாங்கமோ திசைமாறி போகும் நிலை போர்முடிவுக்கு வந்ததிலிருந்து வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.<br /><span style="font-size:100%;"><br />political reconciliation </span> என்பதன் மூலம் சிறிலங்காவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதுவும், ஆர்ப்பரித்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய தமிழ்நாட்டு மக்களுக்கு வல்லரசுகளின் பொறுப்பு குறித்து உணர்த்துவதன் மூலம் கொதிநிலையை அகற்றுவதும் முக்கிய கருப்பொருளாக கிளின்ரன் அம்மையாரின் பேச்சுகள் கணிக்கப்படுகிறது.<br /><br />அத்துடன் பிரிவினைகளை தடுத்து அணுகுமுறைகளுக்கு ஏதுவாக மென்மைப்படுத்தும் பாணியிலான போக்கு தென்படுகிறது.<br /><br />ஆனால் பேரினவாத மக்களாட்சியில் சிறுபான்மையினரை இணங்கிப்போக வற்புறுத்துவதோ அல்லது தூண்டுவதோ சிறுபான்மையினத்தவரின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்காத நிலையையே வெளிகாட்டுவதாக அமையும்.<br /><br />வல்லரசுகள் சொந்த நலன்களின் அடிப்படையில் தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு துணைபோவது நியாயமற்றது என்பது எந்த உலக ஒழுங்கு மாற்றத்தின் பின்பும் தெளிவடைந்ததாக தெரியவில்லை.<br /><br />ஈழத்தமிழ் மக்களை பொறுத்தவரையில் தமது தேவையை நன்கு வரையறை செய்து கொண்டு சலிப்பற்ற வகையில் செயற்பட்டு வருகின்றன. மேலும் திட்டமிட்ட தொடர்ச்சியான செயற்பாடுகளின் அவசியத்தையும் தமிழ் நாட்டின் இடைவிடாத எழுச்சியின் அவசியத்தையும் வல்லரசுகளின் நகர்வுகள் காட்டி நிற்கின்றன.<br /><br /><span style="FONT-STYLE: normal"><span style="FONT-STYLE: normal"><span style="FONT-STYLE: normal"><span style="FONT-STYLE: normal"><span style="FONT-STYLE: normal"><span style="FONT-STYLE: normal"><span style="FONT-STYLE: normal">*<em>இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்து எழுதுவதற்கு</em>: <a href="mailto:loganparamasamy@yahoo.co.uk">loganparamasamy@yahoo.co.uk</a></span></span></span></span></span></span></span></p>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-71051215120582704342011-07-25T19:33:00.001-07:002011-07-25T19:33:44.861-07:00அமெரிக்கத் தரப்பின் இந்தியப் பயணங்கள்<img src="http://athirvu.com/phpnews/images/hiliry_clinton.jpg" alt="" style="border:none;" align="left" />இந்த வாரம் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. அமெரிக்க இராஜாங்க திணைக்களச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் இந்திய விஜயமும், வடக்கு கிழக்கில் நடை பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலும், ஊடகங்களை நிரப்பிய செய்திகளாக அமைந்துள்ளன. தென்னாசிய நாடுகளில் நடைபெறும் தேர்தல் குளறுபடிகளுக்குக் குறைவில்லாமல், இலங்கையிலும் அத்தகைய அதிகார வன்முறை கலந்த ஜனநாயகத் தேர்தல் நடைபெறுவதை மறுக்க முடியாது. சுவரொட்டிகள், பதாதைகளை அகற்றாவிட்டால், தேர்தலை நிறுத்தப் போவதாகவும் எச்சரிக்கைகள் வெளி வந்தன.<br /><br />ஈழப் போரில், லெபனான் தேசம் போலான சாவகச்சேரியில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, உயர்பாதுகாப்பு வலயங்கள் படிப்படியாக அகற்றப்படுமென உறுதியளித்திருந்தார். மக்களை சொந்த இடங்களில் அமர வைத்து, அவர்களின் இயல்பு வாழ்வினை உறுதிப்படுத்தாமல், தேர்தல் எதற்கெனக் கேள்வி எழுப்புவதற்கு, இந்த சர்வதேச ஜனநாயக காவலர்களுக்கு தெம்பு இல்லை. அதேவேளை வடமாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு, அரசிற்கு பரிந்துரை செய்கிறது, சர்வதேச நெருக்கடிக்குழு (ICG) என்கிற மேற்குலகின் சிந்தனைக் கோபுரம்.<br /><br />தமிழர்கள் சிறுபான்மையினர் என்று கூறுவதன் ஊடாக, சிங்கள தேசத்தின் இறைமையை ஏற்று, அவர்கள் தரும் அதிகாரப் பகிர்வினை ஏற்பதுதான் ஒரே வழியென அக்குழுவானது, அறிவுரையும் வழங்குகின்றது. இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்குவது கடினமான காரியமென தலைப்பிட்டு, ஆசிய அறிக்கை ஒன்றினை வெளியிட்ட இக் குழு, இணக்கப்பாட்டு அரசியலிற்கான முன் மொழிவுகளையே அதிகம் முன் வைப்பதைக் காணலாம். இதேவேளை, மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு, கடந்த திங்களன்று இந்தியா வருகை தந்த ஹிலாரி கிளிண்டன் அம்மையார், சென்னைக்கு விஜயம் செய்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த விவகாரமே, இலங்கை அரசிற்கு பல அதிர்ச்சியினை உருவாக்கி இருக்கிறது.<br /><br />ஹிலாரி ஜெயலலிதா அம்மையார்களின் சந்திப்பை அடுத்து, இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசமும், சென்னைக்கான தூதரக அதிகாரி வடிவேலும், தமிழக முதல்வரைச் சந்தித்துள்ளார்கள்.இலங்கையில் தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதைவிட, இந்திய ஆட்சியாளர்களுடன் சுமுகமான உறவினை ஏற்படுத்த இலங்கை ஆட்சியாளர்கள் அதீத கரிசனை கொள்வதில், சர்வதேச அழுத்தம் பாரிய பங்கினை வகிப்பதை இச்சந்திப்புக்கள் புலப்படுத்துகின்றன.<br /><br />அதேவேளை, கிளிண்டனின் விஜயம், இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து பார்க்க வேண்டும். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவும், ஹிலாரி கிளிண்டனும் இணைந்து, ஊடகவியலாளர்களுடன் மேற்கொண்ட சந்திப்பில், அணுசக்தி உடன்பாடு குறித்த விவகாரமே முதன்மைப்படுத்தப்பட்டது. அதாவது அணுசக்தித் தொழில்நுட்பங்களை, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப் பின்னடிக்கும், அமெரிக்காவின் தயக்கத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து கொள்ள ஊடகவியலாளர்கள் முயன்றார்கள்.<br /><br />2008 இல் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையானது, அணு ஆயுத உற்பத்திக்கானதல்ல என்கிற எச்சரிக்கையோடு மேற்கொள்ளப்பட்டதாக, கிளிண்டனின் உரை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியது. இந்த ஒப்பந்தம் ஊடாக, அணுசக்தியை உருவாக்கும் உலைகளை, அமெரிக்க நிறுவனங்களே வழங்கும் என்கிற எதிர்ப்பார்ப்பு அமெரிக்க அரசிடம் இருந்தது.<br /><br />ஆயினும் இவ்வுலைகளினால் வரும் பெரும் பாதிப்பினை, அவற்றினை வழங்கும் நிறுவனங்களே பெரியளவில் பொறுப்பேற்க வேண்டுமென்கிற இந்தியாவின் புதிய சட்டம் (NUCLEAR LIABILITY LAW), அமெரிக்காவை மட்டுமல்ல, அரசால் நிர்வகிக்கப்படும் அணு உலைகளைத் தயாரிக்கும் ரஷ்ய, பிரேஞ்சு (AREVA) போன்ற கம்பனிகளுக்கும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. அதாவது இச்சட்ட மசோதாவின் 17 ஆவது சரத்தானது, அணு உலைகளில் கசிவு அல்லது வெடிப்பு ஏற்படுமாயின், அதன் உற்பத்திப் பொருட்களை அல்லது உற்பத்தி சாதனங்களை வழங்கிய நிறுவனங்களே, அப் பாதிப்பிற்கான பொறுப்பினை ஏற்க வேண்டுமெனக் கூறுகி ன்றது.<br /><br />இதற்கான நஷ்டஈடு, பாரியளவில் இருக்கு மென்பதுதான் அமெரிக்காவின் அச்சம். இந்த வருடம் ஜப்பானின், புகுஷிமாவில் (FUKUSHIMA) நிகழ்ந்த அணு உலைப்பேரனர்த்தம், அதை நிர்வகித்த நிறுவனம் செலுத்திய நஷ்டஈடு போன்றவை, இத்தகைய அணு உலை வர்த்தகத்தில் பலத்த எச்சரிக்கையை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வழங்குகிறது. இங்கு இன்னுமொரு சிக்கலும் அமெரிக்கா இந்திய தரப்பினரிடையே உருவாகுவதைக் காணலாம். 1970 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி நடைமுறைக்கு வந்த அணு ஆயுத பரவலாக்கத் தடை ஒப்பந்தத்தில் (NON-PROLIFERATION TREATY) இந்தியா இன்னமும் கைச்சாத்திடாததால், யுரேனியம் மற்றும் புளுடோனிய செறிவாக்க தொழில்நுட்பத்தை [ENR - Enrichment & Reprocessing]பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.<br /><br />2004 இல், அமெரிக்க கொள்கையில் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட மாற்றமும், அதன் பிரகடனமும், இத்தகைய தொழில்நுட்ப பரிமாற்றத்தினைத் தடுத்துவிட்டதெனலாம். கடந்த மாதம், அணு மூலப் பொருள் வழங்குனர் குழு (NUCLEAR SUPPLIERS GROUP) கூட்டத்தில், இத் தொழில் நுட்பம் இந்தியாவிற்கு கிடைக்காமல் தடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே அணுசக்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அமெரிக்கா, இதனை வழங்க முன்வருமாவென்கிற எதிர்ப்பார்ப்பு, இந்திய மட்டத்தில் அதிகமிருப்பத்தையே நிருபர்களின் கேள்வி சுட்டிக்காட்டுகின்றது.<br /><br />தோரியத்தை அதிகளவு கொண்ட இந்தியா விற்கு, இத் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாக கருத இடமுண்டு. இப்பரவலாக்கத் தடைச்சட்டம் (NPT) குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது, நேட்டோ நட்பு நாடுகளுடன், அணு ஆயுத பரிமாற்றம் தொடர்பான இரகசிய உட ன்பாடு ஒன்றினை அமெரிக்கா ஏற்படுத்தி இருந்தது. அத்தோடு, நேட்டோ நாடுகளில் இருக்கும் இவ்வாயுதங்கள், தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக, புதிய நியாயங்களை முன்வைத்தது அமெரிக்கா. இது குறித்த எதிர்ப்புணர்வுகள், அணி சேரா நாடுகள் உட்பட, பல நாடுக ளிடையே இன்றும் காணப்படுகிறது.<br /><br />உலக ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக, அமெரிக்கா முன் வைக்கும் இத்தகைய வியாக்கியானங்களை ஏற்றுக் கொள்ளாத இந்தியா, அணு ஆயுத பரவலாக்கத் தடைச் சட்டத்தில் தான் கைச்சாத்திடாத நியாயப்பாட்டிற்கு இதனையும் ஒரு காரணியாக முன் வைக்கிறது. இவை தவிர, கிளிண்டனின் விஜயத்தின் போது, அமெரிக்கத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து முற்றாக வெளியேறுவதை இந்தியா சாதகமாகப் பார்க்கவில்லை என்கிற செய்தியையும் வெளியுறவு அமைச்சர் கிருஸ்ணா தெரிவித்தார். பாகிஸ்தான் இராணுவத்திற்கான வருடாந்த நிதியுதவி 800 மில்லியன் டொலர்கள், அமெரிக்காவால் நிறுத்தப்பட்டிருப்பதை வரவேற்கும் இந்தியா, பயங்கரவாதத்திற்கெதிரான போரில் அந்நாட்டோடு உறவு கொண்டிருப்பதை சந்தேகத்துடனே பார்க்கிறது.<br /><br />கிளிண்டனின் உரைகள் எதுவுமே, பாகிஸ்தானைக் கண்டிக்கவில்லை என்ற ஆதங்கமும், இந்திய உயர்மட்டத்தினரிடையே மேலோங்கி இருந்ததையும் உணரக் கூடியதாகவிருக்கிறது. இதேவேளை அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளிகளின் பட்டியலில், 12 ஆவது இட த்தைப் பிடித்திருக்கும் இந்தியாவுடனான இரு தரப்பு வர்த்தகம், 50 பில்லியன் டொலர்களை தற்போது எட்டியிருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. சென்னைக்கு முதல் தடவையாக விஜயம் செய்த ஹிலாரி கிளிண்டன் அம்மையார், வர்த்தக உறவினை மேம்படுத்துவது குறித்தே அதிகம் பேசியதாக செய்திகள் கூறுகின்றன.<br /><br />இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களின், அம்பாந்தோட்டை என்கிற எதிர்கால கனவுத் தொழிற்சாலைக்கு மாற்றீடாக, சென்னையை மையப்படுத்திய தென்னிந்தியாவை, பெரும் வணிக மையமாக (INDUSTRIAL HUB) உருவாக்கும் திட்டமொன்று இந்தியாவிற்கு இருப்பது போல் தெரிகிறது. இந்தியாவின், இத்தகைய நீண்டகால மூலோபாயத் திட்டத்தை, அமெரிக்கா புரிந்து கொள்வதை, கிளிண்டனின் விஜயம் உணர்த்துகிறது என்று கணிப்பிடலாம். ஆயினும் இரு தரப்பின் சந்தைகளையும், கட்டுப்பாடற்றவகையில் திறந்துவிடுவதன் ஊடாக, வர்த்தகப் பங்காளியாக, பத்தாவது நிலைக்கு இந்தியாவைக் கொண்டு வரலாமென அமெரிக்கா விரும்புகின்றது.<br /><br />2010 நவம்பரில், பராக் ஒபாமா, இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, 10 பில்லியன் டொலர் பெறுமதியான புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. முப்பது போயிங் 737 விமானங்கள், பத்து C-17 போயிங் ரக இராணுவ போக்குவரத்து விமானங்கள், 107 F414 ரக போர் விமான இயந்திரங்கள், 500 மில்லியன் டொலர் பெறுமதியான 6 கனரக வாயு டேர்பைன்கள் (TURBINES), 3 நீராவி டேர்பைன்கள் போன்றவற்றை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்பயணமானது, ஒரு இலட்சம் அமெரிக்கர்களின் தொழில் வாய்ப்பினை உறுதிப்படுத்தும் அல்லது தக்க வைக்கும் என்கிற செய்தி ஒபாமாவினால் வெளியிடப்பட்டது.<br /><br />ஆகவே பாரிய பொருளாதார சீரழிவினை எதிர்கொள்ளும் அமெரிக்கா, வளர்ச்சியுறும் ஆசிய நாடுகளில் தமது உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையைத் தேடுகிறது என்பதனையே கிளிண்டன் அம்மையாரின் பயணம் எடுத்துரைக்கிறதெனலாம். ஜனநாயக மயப்படுத்தல், திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை, அமெரி க்காவின் இராணுவ மேலாண்மையை ஏற்றுக் கொள்ளல் என்பதன் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும் தாராளவாத சர்வதேச கருத்துருவத்தினை (LIBERAL INTERNATIONALIST IDEAS), மேற்குலகம் சாராது பொருண்மிய வளர்ச்சியில் உச்சம் பெறும் சீனா, இந்தியா என்பன, உள்வாங்குமா என்ற சந்தேகம் ஸ்டீபக் ஹாப்பர் போன்ற அறிவிய லாளர் மத்தியில் எழுகிறது.<br /><br />அதாவது ஏதேச்சாதிகார முதலாளித்துவ முறைமையிலான, மேற்குலகின் நவதாராண்மைவாத சிந்தனைக் கருத்துருவத்திற்கு மாற்றீடாக முன்வைத்து விடுமோ, இந்த நாடுகள் என்பதே இவர்களின் ஆதங்கம். ஆனாலும் சீனா போன்ற மேலெழுந்து வரும் பாரிய சக்தி மையங்கள், தற்போது நிலவும் உலகளாவிய தாராளவாத சர்வதேச ஒழுங்கினை முழுமையாக நிராகரித்து விடுமென எதிர்ப்பார்க்க முடியாது.<br /><h5> -இதயச்சந்திரன் </h5><br /><p></p>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-76093007837825813212011-07-25T19:29:00.001-07:002011-07-25T19:29:40.663-07:00ராஜபக்க்ஷவுக்கு உதவிய இந்தியாவும் போர்க்குற்றவாளியே. அம்பலப்படுத்துவோம்<div class="PostMetadataHeader"> </div> <div class="PostContent"> <div class="article"> <p><img src="http://eeladhesam.com/images/stories/cartoon/kaddurai/india%20ilaingki.jpg" style="float: left;" border="0" width="313" height="155" />ஈழத்தின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, ஸ்ரீலங்கா அரச இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குற்றச்செயல்கள், மற்றும் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் விசாரணைசெய்ய, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. </p> <p>சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டிருக்கவில்லை. எனவே இலங்கையை விசாரணைக்குட்படுத்தும் தகுதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இல்லை என நீதிமன்றின் தலைவர் சாங் ஹியூங் சொங் தெரிவித்துள்ளார்.<br /><br />சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்படக்கூடிய முகாந்திரம் எதையும் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்..<br /><br />சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ரோம் பிரகடனத்தில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட சிலநாடுகள் கைச்சாத்திடவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் பரிந்துரை இருந்தாலன்றி தன்னிச்சையாக விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்ற நடைமுறையை அவர் தெரிவித்துள்ளார்.<br /><br />குறித்த சில நாடுகள் பிரகடனத்தில் கைச்சாத்திடாத காரணத்தினால் சில சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.<br /><br />ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் அங்கம்வகிக்கும் நாடுகளில் வீற்றோ (நிராகரிக்கும் அதிகாரம்) அதிகாரம் உடைய நாடுகள் ஐந்தில், ரஷ்யாவும் சீனாவும், இலங்கைக்கு சாதகமாக எதிர்நிலையில் நிற்கின்றன. இதனால் போர்க்குற்ற வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாதிருக்கிறது.<br /><br />சீனா, ஸ்ரீலங்காவின் நட்புச்சக்தி என்பதாலும், ரஷ்யா, இந்தியாவின் பாலிய நண்பன் என்பதாலும், கூட்டாக படுகொலை குற்றச்செயலில் ஈடுபட்ட நாடுகளான ஸ்ரீலங்காவையும், இந்தியாவையும், காப்பாற்றும் பொருட்டு அவ்விரு நாடுகளும் சர்வதேச மனிதாபிமான கருத்துக்கு எதிராக ஐநா பாதுகாப்புச்சபையில் முரண்பட்டு நிற்கின்றன.<br /><br />"மாற்றம் ஒன்றுதான் மாறாதது" என்ற தத்துவத்திற்கமைய குறித்த நாடுகளின் ஆட்சி மாற்றங்கள் நிகழும்போது, வெளியுறவுக்கொள்கை ஒரே சீராக நீண்டகாலங்களுக்கு அப்படியே இருக்கப்போவதுமில்லை.<br /><br /><img src="http://eeladhesam.com/images/stories/cartoon/kaddurai/india%20ilaingki%202.jpg" style="float: right;" border="0" width="300" height="300" />ஏற்கனவே 2009ம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது, மெக்சிக்கோவும், கோஸ்டாரிக்காவும் பாதுகாப்புச் சபையில் சிறிலங்கா விவகாரத்தை விவாதிக்க எடுத்த முயற்சிகளை ரஷ்யாவும், சீனாவும் இணைந்து தடுத்திருந்தன. இப்போ 2011ல் நிபுணர்கள் குழு அறிக்கையை பாதுகாப்புச்சபையில் விவாதிப்பதற்கும் சீனா, ரஷ்யா, ஆகிய இரு நாடுகளும் தமது எதிர்ப்பை மீண்டும் வெளிப்படுத்தின. இவற்றின் உந்து சக்தியாக இந்தியா இருந்துவருவதாக நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உண்டு.<br /><br />இவைகளில் சீனா இந்துசமுத்திர பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை ஸ்திரப்படுத்த வேண்டிய இராசதந்திரம் இருப்பதால் இலங்கையை தனது கட்டுக்குள் வைத்திருக்கவேண்டிய நலன் சார்ந்து இலங்கைக்கு ஆதரவாக நிற்கவேண்டிய தேவையிருக்கிறது. ரஷ்யாவுக்கு அந்தத்தேவை இருக்கவில்லை.<br /><br />ரஷ்யாவினுடைய பலவருட பாலிய நண்பனான இந்தியாவின் தற்போதய அமெரிக்க சார்பை குறைக்கும்பொருட்டு இந்தியாவின் கோரிக்கைக்கு ரஷ்யா கட்டுப்பட்டு இலங்கைக்கு சாதகமாக செயற்படுவதை காணலாம்.<br /><br />இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கைக்கான பொருளாதாரத்தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இத்தீர்மானம் தொடர்பில் அதிபர் பாரக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹவார்ட் பேர்மன், முன் மொழிந்தார். அதன் போது இலங்கை மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் எனவும், ஊடக சுதந்திரமின்மை, அவசரகால சட்டம் அமுலில் இருத்தல் என்பன தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.<br /><br />இத்தீர்மானத்தின் படி இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து நிதி உதவிகளையும் நிறுத்துவதற்கு அமெரிக்க காங்கிரஸ் வெளிநாட்டு விவகார குழு அனுமதி வழங்கியுள்ளது. இத்தீர்மானம் உடனடியாக நடைமுறைக்கு வந்தாலும், வராது விட்டாலும், யுத்தக்குற்றத்திற்கு எதிராக உலகநாடுகள் அணிவகுக்க முற்பட்டுவிட்டன என்பதை சந்தேகமில்லாமல் நம்பமுடியும்.<br /><br />அமெரிக்க காங்கிரஸ் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றம் எழுந்தமானத்தில் இத்தீர்மானத்தை இயற்றிவிடவில்லை, என்பதை உணர்ந்துகொள்ளலாம். பலதரப்பட்ட ஆவணங்கள் சட்ட ஆய்வுகளுக்கு பிற்பாடே உலகில் மிகப்பலம்வாய்ந்த அமெரிக்கா போன்ற ஒருநாடு இப்படியான ஒரு முடிவுக்கு வந்திருக்க முடியும்.<br /><br />சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக்களம் இறுவட்டு ஒன்று மட்டுத்தான் அமெரிக்காவின் பொருளாதாரத்தடைக்கு காரணமாக இருக்கமுடியாது. ஏற்கெனவே நீண்டகாலமாக கிடைத்து வந்த உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஆதாரங்களுடன் இறுதியில் நம்பகத்தன்மையுடன் வெளியான சனல்4 காணொளிக்காட்சிகளும் ஆவணமாக அதிக வலுவை அமெரிக்காவுக்கு வழங்கியிருக்கிறது.<br /><br />இப்படியான ஒரு நிலை ஈழத்தமிழர் தரப்பில் எதிர்பார்த்த ஒரு நிகழ்வுதான். என்றாலும், இலங்கைக்கு எதிரான பொருளாதாரத்தடை போன்ற நடவடிக்கைகள், ஒரு சிறிய நாட்டிலிருந்துதான் தொடங்கும் என எதிர்பார்த்த வேளையில். மிக உச்சத்திலுள்ள அமெரிக்கா அந்த சமிக்கையை காட்டியிருப்பது இன்னும் பல நாடுகளை இலங்கைக்கு எதிராக செயற்படவைக்கும்.<br /><br />அமெரிக்காவின் தீர்மானம் இலங்கை கிரிக்கெட் விளையாட்டிலும் நிச்சியம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் அதற்கான முஸ்தீபுகளில் ஏற்கெனவே அவுஸ்ரேலிய கிறிக்கற் அணி முனைப்பாக உள்ளதாக தெரிகிறது.<br /><br />இந்தியா அதைச்செய்யும் இதைச்செய்யும் என்பதெல்லாம் நடக்கப்போகும் ஒன்றல்ல. இந்திய மத்திய அரசிடம் ஈழத்தமிழரின் தீர்வுக்கான கோரிக்கை வைப்பதெல்லாம். நேர விரையமும் வீண் முயற்சியுமாகும்.<br /><br />இந்த தீர்க்கதரிசனத்தை தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னே உணர்ந்திருந்தார். இருந்தும் சில இராசதந்திர நகர்வுகளுக்காக அவர் எதையும் வெளிக்காட்டி அலட்டிக்கொள்ளவில்லை.<br /><br />வெளியிலிருந்து தீர்வு வாங்கித்தரும்படி கேட்டு இந்தியாவை தொழுது கையேந்தி நிற்பதாவது, இந்தியாதான் ஈழமக்களுக்கு தீர்வை ஏற்படுத்தி தரவல்ல முக்கிய பங்காளி என்று சர்வதேசத்தில் இனம் காட்டுவதற்கும், இந்தியாவின் திருட்டுத்தனமான இரட்டை வேசத்தை மறைக்க உதவுமே தவிர கால்க்காசுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை.<br /><br />தமிழகத்தின் ஆட்சியாளர்களின் நெருக்குதல் இருந்தாலன்றி, காங்கிரஸ் அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதுமில்லை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பதால் முதல்வர் அவர்களின் நெருக்குவாரம் ஒன்று மட்டும், இந்திய மத்திய அரசுக்கு அரசியல் ரீதியான சங்கடத்தை உண்டுபண்ணக்கூடியது.<br /><br />முதல்வர் ஜெயலலிதா தவிர்ந்த மற்றய சிறிய கட்சிகள், தங்கள் முகவரியை தொலையாமல் வைத்திருப்பதற்கு மட்டும். அவர்கள் தொடர்ச்சியாக போட்டுக்கொண்டிருக்கும் மத்திய அரசிற்கு எதிரான ஈழக்கோசம் உதவக்கூடும்.<br /><br />இதனால் சர்வதேச மட்டத்தில் ஈழ தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய முக்கிய சக்தி இந்தியா என்கிற பிம்பம் இருந்துகொண்டிருப்பதற்கு உதவும். இத் தந்திரத்தை இந்தியாவும் நன்கு உணர்ந்திருப்பதால் ஈழப்பிரச்சினையில் தனது பங்கு உயிர்ப்பு நிலையில் இருப்பதாகவே இந்தியா தொடர்ந்து காட்டி வந்திருக்கிறது.<br /><br />இதனால் சர்வதேச மட்டத்தில்க்கூட, ஈழப்பிரச்சினையிலிருந்து இந்தியாவை தள்ளி வைக்க முடியாத இராசதந்திர சங்கடம் தொடர்ச்சியாக இருந்து வருவதைக்காணலாம்.<br /><br />இந்தியாவும் சளைக்காமல் வருடத்திற்கு நான்குமுறை ஈழப்பிரச்சினையை கையிலெடுத்து ஸ்ரீலங்காவுக்கான போக்குவரத்தும், பேச்சுவார்த்தையும், என்று தனது அழுக்கு முகமூடியை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. இதுகூட ஒருவகையான கிலிசகேடான அருவருப்பான இராசதந்திரம்தான்.<br /><br />இன்றய நிலையில் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மட்டும் ஈழப்பிரச்சினையில் நல்ல ஒரு மாற்றத்தை கொண்டுவரக்கூடிய களம் ஒன்று கிடைத்திருக்கிறது. (இதை குளப்புவதற்கு பல சக்திகள் திரைமறைவில் போட்டி போடுகின்றன.)<br /><br />இச்சந்தற்ப்பத்தை பயன்படுத்தி ஈழமக்கள் பற்றிய முழுப் புரிதலை முதலமைச்சர் அவர்களுக்கு இன்னும் அதிகமாக ஏற்படுத்தி, தமிழகத்தின் சிறிய கட்சிகள். அமைப்புக்கள் அனைத்தும் தமிழக அரசுடன் இணைந்து முதலமைச்சரின் செயற்பாட்டுக்கு வலுச்சேர்த்து மத்திய அரசை இக்கட்டுக்குள் தள்ளலாமே தவிர, தனித்து நின்று எதையும் சாதிக்கப்போவதில்லை.<br /><br />போர்க்குற்றம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா அரசு இன்று எவ்வளவு உலகநெருக்கடியில் சிக்கியுள்ளதோ, அதேயளவு நெருக்கடி இந்தியாவுக்கும் உண்டு. ராஜபக்க்ஷ எங்காவது ஒரு குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரானால், ராஜபக்க்ஷ மூலம் இந்தியாவின் முகமூடி கிழிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அந்தப்பயம் காரணமாகவே போர்க்குற்றத்தை பூசி மெழுகி ராஜபக்க்ஷவை காப்பாற்றிவிட இந்தியா முனைப்புக்காட்டிக்கொண்டிருப்பதை காணலாம்.<br /><br />பின் விளைவுகள் எதையும் சிந்திக்காமல். காட்டுமிராண்டித்தனமாக போர்க்குற்றத்தில் பங்குபற்றி, ஸ்ரீலங்காவுக்கு இந்தியா உதவியிருந்தது. குறுமுட்டான திட்டங்களும் அதரப்பழசான சட்டங்களையும் கையாள பழக்கப்பட்ட இந்தியா இவ்வளவு விரைவில் சர்வதேசம் விழித்துக்கொள்ளுமென எதிர்பார்க்கவில்லை.<br /><br />இன்று அமெரிக்காவின் பொருளாதாரத்தடை வெளிவந்திருக்கும் சமையத்தில் அதிலிருந்தும் இலங்கையை காக்க நிச்சியம் இந்தியா முயலக்கூடும். அல்லது அமெரிக்காவுக்கு மாற்றீடாக ஸ்ரீலங்காவிற்கு இந்தியா நிதியுதவியும் செய்ய முன்வரலாம். ஆனாலும் அமெரிக்கா அளவிற்கு நிதி உதவி செய்யக்கூடிய தகுதியும் இந்தியாவிடம் கிடையாது.<br /><br />எது நடந்தாலும் ஒரு குறுகியகால நிவாரணமாக இருக்குமே தவிர ராஜபக்க்ஷவை காப்பாற்றி போர்க்குற்றத்தை நீண்டகாலத்திற்கு இழுத்து மூடிவிட இனி எவராலும் முடியாது.<br /><br />ஈழப்போரின்போது கணிசமான ஆயுத உதவிகளை இந்தியா செய்திருந்ததென்றும், இராணுவ ரீதியான பங்களிப்பிலும் இந்தியா ஈடுபட்டதற்கான ஆதாரங்கள். செய்திகளாக சில காலங்களுக்கு முன் பரவலாக வெளிவந்தன, பின் அதுபற்றிய தரவுகள் எதோ காரணங்களினால் தமிழர் தரப்பிலிருந்துகூட இடை நிறுத்தப்பட்டதுபோல் காணப்படுகிறது. ஒரு தருணத்தில் இந்தியப்பிரதமர் மன் மோஹன் சிங், ஸ்ரீலங்காவுக்கு ஆயுதம் வழங்கியதை ஒப்புக்கொண்டுமிருந்தார்.<br /><br />எனவே யுத்த குற்ற காணொளிகளில் இந்திய இராணுவ பங்கு பற்றிய ஆதாரங்களையும் தமிழ்த்தரப்பு தேடி கண்டுபிடித்து அம்பலப்படுத்தவேண்டிய தேவையும் இருக்கிறது. பல இடங்களில் ராஜபக்க்ஷவின் சகோதரர்களும் அரசின் உயர்மட்ட அமைச்சர்களும் இந்தியாவின் பங்களிப்பே போரில் வெற்றிகொள்ள முடிந்தது என்பதை பலமுறை பகிரங்கமாக தெரிவித்துமிருக்கின்றனர்.<br /><br />அந்த தரவுகளின் அடிப்படையில் இந்தியாவை தோலுரிக்கவேண்டிய தேவை தமிழினத்துக்குண்டு. சூட்டோடு சூடாக காரியமாற்ற முயல வேண்டும். ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாதிகளுடன், இந்திய அரசின் பயங்கரவாதிகளையும் உலகுக்கு இனங்காட்டவேண்டிய தேவை தமிழினத்துக்குண்டு.<br /><br />இந்தியா ஒருபோதும் தமிழருக்கு சாதகமாக நடந்ததுமில்லை, நடக்கப்போவதுமில்லை. இறுதிக்கட்ட போரின்போது இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த ஒரு தமிழனை இந்தியா தெரிவு செய்திருக்கவில்லை.<br /><br />பேச்சுவார்த்தை என்று ஸ்ரீலங்கா சென்று நாடகம் நடத்தியவர்கள் எவரும் தமிழர்கள் அல்லாதவர்களே. அந்த விடயத்தில்க்கூட இந்தியா மிக கவனமாக நச்சுத்தனமாக நடந்து வந்திருக்கிறது. மலையாள நாராயணன், சிவ்சங்கர் மேனன். கன்னட நிருபாமா ராவ், கிருஷ்ணா, ஹிந்தி பிரணாப் முகர்ஜி. ஆகியோரே. திருகுதாளங்களில் ஈடுபட்டிருந்தனர்.<br /><br />சாதாரண தூதுவர்களாக அமர்த்துவதற்கே இந்தியா ஒரு தமிழனை நம்பத்தயாராக இல்லை. இந்த லட்சணத்தில் இந்தியா கிண்டி கிளப்பும் என்று கனவுகூட காணக்கூடாது. விரோதியை விரோதியாகவே பார்க்கவேண்டும்.<br /><br />இன்றய கட்டத்தில் இந்தியாவின் குற்றச்செயல்களையெல்லாம் வெளியில் கொண்டுவந்து அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் ஊடகங்களுக்குண்டு. எதிரியை நம்பலாம் ஆனால் இந்தியா போன்ற குழிபறிக்கும் துரோக சக்திகளை காலத்துக்கும் தமிழன் மறக்கக்கூடாது.<br /><br />ஈழதேசம் இணையத்திற்காக<br />கனகதரன்,</p></div></div>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-81744464917526197432011-07-25T19:27:00.000-07:002011-07-25T19:28:20.521-07:00உள்ளாட்சித் தேர்தலில் ஈழத்தமிழர் தீர்ப்பு<img style="float: left; margin: 5px;" src="http://www.pathivu.com/uploads/images/Tamileelam/Karthikai%20Poo.jpg" alt="" width="220" height="250" />இடர்மிகு வந்தாலும் சுதந்திர தேவி உன்னை மறக்கிலேனே என்ற பாடல் வரிக்கு அமைவாக ஈழத் தமிழர்கள் விடுதலைக்கு வாக்களித்துள்ளனர். ஆளுங் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் அதன் சகபாடிக் கட்சி ஈபிடிபீயும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் படுதோல்வி அடைந்துள்ளன.<p></p> <p style="text-align: justify;"><span style="font-size:small;"> </span><br /><span style="font-size:small;">திருகோணமலை நகராட்சியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. 9 உறுப்பினர்கள் கொண்ட நகராட்சியில் கூட்டமைப்பு 5 தொகுதிகளைக் கைப்பற்றியதோடு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுள்ளது. ராஜபக்ச அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி3 தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.</span></p> <p style="text-align: justify;"><br /><span style="font-size:small;">திருகோணமலை கிரவெற்ஸ் பிரதேச சபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அமோக வெற்றி ஈட்டியதன் மூலம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் திருக்கோயில் உட்பட இரு முக்கிய பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வடக்கு, கிழக்குத் தமிழர் ஒன்றிணைவை யாராலும் பிரிக்க முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது.</span></p> <p style="text-align: justify;"><br /><span style="font-size:small;">யாழ் மாவட்டத்தின் வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, பருத்தித்துறை நகராட்சிகள் அனைத்தையும் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. யாழ் – கிளி மாவட்டங்களின் 18 பிரதேச சபைகளில் 16ல் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. நெடுந்தீவு, ஊர்காவற்துறை ஆகிய தொகுதிகளுக்குள் பிரசாரப் பணிகளுக்குச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை.</span></p> <p style="text-align: justify;"><br /><span style="font-size:small;">நெடுந்தீவு, ஊர்காவற்துறை தீர்வுத் தொகுதிகள் கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அங்கு வாழும் மக்கள் கடற்படையின் கட்டளைப்படி அரசின் சுதந்திர முன்னணி ஈபிடிபிக் கூட்டணிக்கு வாக்களிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். தீவகத்தின் முன்னாள் கடற்படை அதிகாரி இப்போது கிழக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகிக்கிறார்கள்.</span></p> <p style="text-align: justify;"><br /><span style="font-size:small;">அவர் தேர்தல் பிரசாரத்திற்காகத் தீவகம் வந்து தேர்தல் முடியும் வரை தங்கி விட்டார். அவரைப் போல் 13 அமைச்சர்கள், மகிந்த ராஜபக்ச ஆகியோர் வடக்கில் முகாமிட்டு மிரட்டல் பணியில் ஈடுபட்டனர். மகிந்தரின் மகன் நாமல் ராஜபக்ச தேர்தல் பிரசாரப் பொறுப்பை ஏற்று நடத்தினார்.</span></p> <p style="text-align: justify;"><br /><span style="font-size:small;">மக்களை மிரட்டிப் பணிய வைப்பதற்காக ஆக்கிரமிப்பு இராணுவம் பரவலாகப் பயன் படுத்தப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு வீடு வீடாகச் சென்ற இராணுவத்தினர். வாக்குச் சாவடிக்குச் செல்ல வேண்டாமென்று கூறித் தாக்குதல் நடத்தினர். மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் அட்டைகளை இராணுவத்தினர். பறிமுதல் செய்தனர். அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.</span></p> <p style="text-align: justify;"><br /><span style="font-size:small;">தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அமைப்புத் தலைவர் சுந்தரலிங்கம் லோகீஸ்வரன் கிளிநொச்சியில் ஈபிடிபி துணை இராணுக் குழுவினரால் தாக்கப்பட்டார். திருவையாறு தமிழ் வித்தியாசாலை ஆசிரியரான லோகீஸ்வரன் படுகாயமடைந்து யாழ் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பெறுகிறார்.</span></p> <p style="text-align: justify;"><span style="font-size:small;"> கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் மக்களைத் தாக்கும் படி நாமல் ராஜபக்ச கட்டளையிட்டார். பச்சிலைப்பள்ளி, கரைச்சி பிரதேச சபைத் தேர்தல் தொகுதிகளில் நியாயமான தேர்தல்கள் நடைபெறவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைவர் இரா. சம்பந்தன் மறு தேர்தல் நடத்தும்படி தேர்தல் ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.</span></p> <p style="text-align: justify;"><br /><span style="font-size:small;">கிளிநொச்சி வாக்களிப்பு குறைவாக இருந்தாலும் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. முல்லைத்தீவில் கூட்டணியினர். வெற்றியீட்டினர். பத்திரிகைக்குச் செய்தி வழங்கிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூட்டணி வெற்றி பெற்றாலும் ராஜபக்சவின் உதவியில்லாமல் அவர்களால் ஈழத்தமிழர்களுக்கு என்னத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்று கேட்டார்.</span></p> <p style="text-align: justify;"><br /><span style="font-size:small;">ஈழத்தமிழ் மக்களுக்கு நல்லிணக்கம், மேம்பாடு, புரிந்துணர்வு என்று பேசிய ராஜபக்ச விரித்த வலையில் தமிழர்கள் விழ மறுத்துவிட்டனர். தமிழரெல்லாம் உன் பக்கம் என்று தேர்தல் வெற்றி மூலம் காட்ட முயற்சித்த சிங்கள அரசிற்கு ஈழத்தமிழர்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்.</span></p> <p><img style="margin-top: 5px; margin-bottom: 5px; display: block; margin-left: auto; margin-right: auto; border: 1px solid black;" src="http://www.pathivu.com/uploads/images/2011/07/sl-el.JPG" alt="" width="550" height="652" /></p>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-16370436938640336152011-07-25T19:26:00.000-07:002011-07-25T19:27:22.491-07:00சனல் 4 ன் "கொலைக்களம்" தமிழில் ஜெயா தொலைக்காட்சியில்<div class="NewsPostDetailContent"> <p style="text-align: justify;"><span style="font-size: small;"><img style="float: left; margin: 5px; border: 0px initial initial;" src="http://www.pathivu.com/uploads/images/logo/jeya_tv.jpg" alt="" width="200" height="113" />சனல் 4 "கொலைக்களம்" காணொளி ஆவணப்படம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாகவும் அது விரைவில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெலலிதாவிற்குச் சொந்தமான ஜெயா தொலைக்கட்சியில் ஒளிபரப்புச் செய்யப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </span></p> <p style="text-align: justify;"><span style="font-size: small;">இன்று வெளியான சண்டே ரைம்ஸ் ஆங்கில வார இதழ் இத்தகவலை அரசியல் அலசல் பகுதியில் வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பிவிடும் என்பதில் சந்தேகமேயில்லை என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயா தொலைக்காட்சியை இலங்கையிலும் பார்க்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</span></p> <p style="text-align: justify;"><br /><span style="font-size: small;">இந்தியாவில் உள்ள ஸ்ரீலங்காவின் தூதர் பிரசாத் காரியவாசம் அண்மையில் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அப்போது ஜெயலலிதா தாம் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு இரண்டாவது பிரதான காரணம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தான் கொண்டிருந்த நிலைப்பாடு ஆகும் என்றும் இலங்கைத் தூதரிடம் தெரிவித்தார் என்றும் சண்டே ரைம்ஸ் அரசியல் அலசலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </span></p> <p style="text-align: justify;"><span style="font-size: small;">ஆகவே ஸ்ரீலங்கா பற்றி தாம் எடுக்கும் நடவடிக்கைகள் தனது மக்கள் மற்றும் தனது அரசாங்கத்தின் கூட்டாளிக்கட்சிகளின் ஆலோசனையுடன் தான் அமையும் என்றும் ஜெயலலிதா பிரசாத் காரியவாசத்திடம் தெரிவித்ததாகவும் சண்டே ரைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.</span></p> <p style="text-align: justify;"><br /><span style="font-size: small;">இதேவேளை ஜெயா ரிவியில் ஒளிபரப்பப்படும் இந் நிகழ்வுகளை இலங்கையிலும் பார்க்க முடியும் என்பதால் குறிப்பிட்ட நாளில் அவ் ஒளிபரப்புகளைத் தடைசெய்வது குறித்தும் இலங்கை அரசு ஆராய்ந்து வருகிறதாம்.</span></p> </div>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-32255736586362951542011-07-25T19:25:00.000-07:002011-07-25T19:26:32.926-07:00சிறிலங்காவைக் கைவிட அமெரிக்காவால் முடியாது! வெறும் மிரட்டல் மாத்திரமே<img style="float: right; margin: 5px; border: 1px solid black;" src="http://www.sangathie.com/uploads/images/2011/07/21-30/usa-1.png" alt="" width="225" height="300" />உலக நாடுகளுக்குச் செய்யும் நிதி உதவி வழங்கல் மூலம் அமெரிக்கா தனது தேசிய நலனை முன்னெடுக்கிறது. பணமாகவும், பொருளாகவும், ஆயுதமாகவும், இராணுவப் பயிற்சியாகவும் அமெரிக்க உதவிகள் வெளி நாடுகளுக்குச் செல்கின்றன.<p></p> <p style="text-align: justify;"><br /><span style="font-size:small;">இந்த உதவிகள் (Foreign AID) அதாவது வெளி உதவி என்று அமெரிக்க அரசினால் வகைப்படுத்தப்படுகிறது. மிகக் கூடுதலான இந்த வகை உதவிகளை வழங்கும் நாடாக அமெரிக்க இடம் பெறுகிறது. வருடமொன்றுக்கு 23பில்லியன் டாலர்களை வெளி உதவியாக அமெரிக்கா வழங்குகிறது.</span></p> <p style="text-align: justify;"><span style="font-size:small;">மிகக் கூடுதலான நிதி உதவிகளைப் பெறும் தெற்காசிய நாடாகச் சிறிலங்கா இடம்பெறுகிறது. அதனுடைய பொருளாதாரம் இலவச வழங்கல் தொடக்கம் சலுகை வட்டிக் கடனுதவி வரையில் தங்கியுள்ளது. உதவி வழங்கலில் சீனா முதலிடத்தையும், ஜப்பான் இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவும் இந்தியாவும் மூன்றாம் நான்காம் இடங்களையும் பிடித்துள்ளன.</span></p> <p style="text-align: justify;"><span style="font-size:small;"> </span><br /><span style="font-size:small;">இந்தியக் கடலாதிக்கத் தேவைக்காக சிறிலங்காத் தரையும் துறைமுகங்களும் தேவைப்படுகின்றன. மேற்கூறிய நாடுகள் சிறிலங்காவுக்குக் கொடுக்கும் உதவித் தொகைகளை “முற்பணம்” என்று வகைப்டுத்தலாம். பணத்தையும் பிற உதவிகளையும் கொடுத்துத் தீவில் இடம்பிடிக்க முயற்சிக்கிறார்கள். அவ்வளவும் தான்.</span></p> <p style="text-align: justify;"><br /><span style="font-size:small;">அமெரிக்க அரச நிர்வாகத்தில் கடும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது. பிரதிநிதிகள் சபையில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக் கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டது. எதிர் கட்சியான குடியரசுக் கட்சியின் கையோங்கிவிட்டது. இரு பகுதிக்கும் இடையில் எழும் முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதில் செனட்சபை உறுப்பினர்கள் ஈடுபடுகிறார்கள்.</span></p> <p style="text-align: justify;"><br /><span style="font-size:small;">அமெரிக்கா மீண்டும் பொருளாதார நெருக்கடியை எட்டிவிட்டது. பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அமெரிக்க வரவு செலவுக் கணக்கில் ஈடுசெய்யப்பட வேண்டிய தொகை 14.3 திரில்லியன் (Trillion) டாலர்கள் இருக்கின்றன.</span></p> <p style="text-align: justify;"><br /><span style="font-size:small;">இந்தத் தொகையைக் குறைப்பதற்காக கோடீஸ்வரர்கள், செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் ஒபாமா நிர்வாகத்தின் ஆலோசனையை எதிர் கட்சியினர் வன்மையாக எதிர்க்கின்றனர். அடுத்த வருடம் வரவிருக்கும் சனாதிபதித் தேர்தலில் ஒபாமாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அம்சமாக இட்டு நிரப்பவேண்டிய தொகை இடம்பெறுகிறது.</span></p> <p style="text-align: justify;"><br /><span style="font-size:small;">இரு நாடுகளுக்கு முன்பு சர்வதேசப் பொருளியல் நிபுணர்களும் வங்கி அதிகாரிகளும் உலகப் பொருளாதாரம் 2008ல் கண்ட வீழ்ச்சியைப் போல் (Recession) அமெரிக்காவின் இன்றைய நெருக்கடி மூலம் மீண்டும் சந்திக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவை எச்சரித்துள்ளனர்.</span></p> <p style="text-align: justify;"><br /><span style="font-size:small;">சிறிலங்காவுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தப் போவதாக அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் விடுக்கும் எச்சரிக்கை வெறும் மிரட்டல் மாத்திரமே. சிறிலங்காவைப் பணியச் செய்ய இந்த மிரட்டல்கள் போதுமனவையல்ல. சிறிலங்காவைக் கைவிட அமெரிக்காவுக்குக் கட்டுப்படியாகாது என்பதை சிறிலங்கா நன்கு அறியும்.</span></p>– இளந்திஎல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-77873337780293658792011-07-25T19:24:00.000-07:002011-07-25T19:25:47.649-07:00போர்க்குற்றங்கள் புரிந்த ருவாண்டா இராணுவ மதகுருவுக்கு 25 ஆண்டு சிறை – சிறிலங்கா நீதிபதியின் தீர்ப்பு<img src="http://www.puthinappalakai.com/images/t/war_crimes/Rwanda-genocide-anniversary.jpg" id="thumb" />ருவான்டாவில் போர்க்குற்றங்கள் புரிந்த இராணுவ மதகுருவுக்கு சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் அசோக டி சில்வா 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளார்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">அப்படியானல் ராஜபக்சே குடும்பத்திற்கும் இதே தீர்ப்பு வழங்குவாரா ? </span><br /><br />ருவாண்டா ஆயுதப்படைகளின் மதகுருவாகப் பணியாற்றிய இம்மானுவல் ருகுண்டோ மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் இனப்படுகொலைகளைச் செய்தது, கொலைகளை, இனச்சுத்திகரிப்பு செய்தது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.<br /><br />சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு இந்த வழக்கை விசாரணை செய்தது.<br /><br />1993ல் ருவாண்டா ஆயுதப்படைகளின் மதகுருவாக நியமிக்கப்பட்ட இம்மானுவெல் ருகுண்டோ 1994 மே மாதம் கிகாலியில் பணியாற்றிய போதே மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றங்களைச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.<br /><br />அங்கு இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ருவாண்டா ஆயுதப்படைகள் தோற்கடிக்கப்பட 1994 செப்ரெம்பரில் அங்கிருந்து வெளியேறிய ருகுண்டோ, புருண்டியிலும் பின்னர் சுவிற்சர்லாந்திலும் தங்கியிருந்தார்.<br /><br />அப்போது ஜெனிவாவில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் அனைத்துலக தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.<br /><br />அசோக டி சில்வா தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு இவர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்தபோது, அவருக்கு எதிராக 18 பேர் சாட்சியம் அளித்தனர்.<br /><br />இந்த விசாரணைகளில் இனப்படுகொலைகளைச் செய்தது, படுகொலைகள் செய்தது, இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டது போன்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்தது உறுதி செய்யப்பட்டது.<br /><br />இதையடுத்து அவருக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதிகள் குழு தீர்ப்பளித்தது.<br /><br />இதையடுத்து நீதிபதிகளிடம் மதகுரு ருகுண்டோ மேல்முறையீடு செய்ததை அடுத்து அவரது சிறைத்தண்டனை 23 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7915611935427924053.post-11709778249349808152011-07-25T19:18:00.000-07:002011-07-25T19:20:57.151-07:00உலக தமிழ் இனமே உஷார்.....துளிர்விடத்துடிக்கும் தி.மு.க.வும் துளிர்க்க நினைக்கும் காங்கிரசும்<img src="http://eeladhesam.com/images/stories/cartoon/karunaay1425.jpg" style="float: left;" border="0" width="130" height="85" />உலக தமிழ் இனத்தின் புவிசார் நலன்களும்,ராஜ தந்திர பலமும் தாயக தமிழகத்தோடு தொடர்புடையதாகத்தான் இருக்கிறது, இப்போது தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம்,ஈழத்து தமிழ் இனத்தை காட்டிக்கொடுத்த காங்கிரசுக்கும்,கூட்டிக்கொடுத்த கருணாநிதிக்கும் மரண அடி கொடுத்திருப்பதாக நினைக்கும் தமிழர்களே...உண்மையில் காங்கிரசும்,கருணாநிதியும் காயப்பட்டிருக்கிறார்கள்,மீண்டு எழுவதற்கு அவர்கள் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள்,அந்த ஓநாய்கள் எழுந்துவிட்டால்,முத்துக்குமார் தொடங்கிய தியாக மறவர்களின் போராட்டம் வீணாகிவிடும் ஆபத்து,அண்மிக்கிறது.<br /><br />சீமான்,மற்றும் தமிழ் இயக்கவாதிகளின் அளப்பரிய பிரச்சாரத்தாலும் ,தன்னை அடையாளப்படுத்திய தமிழ்நாட்டு தமிழன் காங்கிரசுக்கு சாவுமணி அடித்தான்,ஒரு மாத காலம் வாய் மூடி இருந்த காங்கிரசு கயவன்,மெல்ல வாயை திறந்தான்,தமிழ்நாட்டில் காங்கிரசின் தோல்விக்கு தமிழீழ பிரச்சனை ஒரு காரணம் அல்ல என்றான்,இதோ இப்போது சீமான் காங்கிரசையும் அதன் தலைவி சோனியாகாந்தியையும் அவதூறாக பேசுகிறார்,தடை செய்யப்பட இயக்கமான விடுதலை புலிகளை ஆதரித்து பேசுகிறார் எனவே சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டு காவல் துறை டி.ஜி.பி.இடம் புகார் மனு அளித்திருக்கிறான்,இந்திய உச்ச நீதிமன்றமே தடை செய்யப்பட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது குற்றம் ஆகாது என்று தீர்ப்பு வழங்கிய நிலையில் காங்கிரசுக்காரன் இந்த புகார்மனு<br />கொடுக்கிறான் என்றால்,தமிழ்நாட்டு தமிழர்களை எல்லாம் இளிச்சவாயன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறான்,இலங்கை தமிழர்களுக்கு 200 கோடி ரூபாய் நிதி உதவி அளித்திருக்கிரானாம் காங்கிரசுக்காரன்,உயிர்போகும்<br />வேளையில் காப்பாற்ற திராணி இல்லை... அமைதியாக இருந்திருந்தாலும் பரவாஇல்லை...ஆயுத உதவிகள் வேறு...ஆயுதம் கொண்டுவந்த கப்பல்களை காட்டிக்கொடுத்திட்ட துரோகங்கள் வேறு...200 கோடி ரூபாய்<br />நிதி உதவியாம் ... சரி எழவு வீட்டில் மொய் எழுதும் பழக்கம் தமிழ்நாட்டில் இன்றும் இருக்கிறது... சரி.... மொய் யாரிடம் எழுதினான்.... கொலை காரனிடம் எழுதினான்... அதையும் பெருமையாக சொல்கிறான் என்றால்<br />இதையும் இன்றைய தொலைகாட்சி பேட்டியில் சொல்லி இருக்கிறான்.<br /><br />உலகத்தில் முற்றிலும் பத்தினிகள் உள்ள இனமும் சாதியும் எதுவும் இல்லை இது உண்மை.அதே போல இந்த தமிழ்நாட்டில் இருக்கும் இழிமகன் இளைஞர் காங்கிரசு தலைவன்,வன்முறைக்கான வார்த்தையை வடிகட்டி பேசி இருக்கிறான்,தமிழீழத்து தமிழன் யாராவது இந்த டில்லி ஓநாய்களிடம் நிதி உதவி கேட்டார்களா எங்கே இருந்து வந்தது அவனுக்கு இந்த துணிச்சல்,தேர்தலோடு காங்கிரசு எதிர்ப்பு பிரசாரம்,அடங்கி இருப்பதுதான் காரணம்.<br /><br />கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும்,எழவு வீட்டில் பிணமாகவும் எப்போதும் மாலை மரியாதைகளுடன் வாழ்ந்து பழக்கப்பட்ட கருணாநிதி,இன்றைக்கும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கட்சியாகத்தான் இருக்கிறார்,அ.தி.மு.க பெற்ற ஓட்டுக்கள் 39 சதவீதம்,தி.மு.க.பெற்ற சதவீதம் 22 .இடைப்பட்ட வித்தியாசம் வெறும் 17 சதவீதம்,வெறும் 9 சதவீத மாற்றம் போதும்,மீண்டும் இந்த ஓநாய்களின் ஆட்டம் தொடங்கலாம் என்று மீண்டும் கனவுகான தொடங்கி இருக்கிறார்கள்,இவர்கள் காயப்பட்டு தான் இருக்கிறார்கள்,கொஞ்சம் அசந்தாலும் போதும் டில்லி ஓநாய் மீண்டும் தன் சுயரூபத்தை காட்ட தொடங்கிவிடும் தமிழ்நாட்டு அரசியல் மாற்றம் டில்லிக்காரனின் செயல் பாடுகளின் தீவீரத்தை தனித்துள்ளது.தமிழ் நாட்டு சட்டப்பேரவையின் தீர்மானம்,நடந்து முடிந்த சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் இந்தியா ஊமையாக நின்றது,டில்லிக்காரன் தமிழனுக்கு மரியாதை கொடுப்பது போல நடிக்கிறான் உண்மையில் தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு டில்லி மதிப்பளித்திருந்தால்,சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியபின்னர் தூத்துக்குடியில் இருந்து கொழும்புவுக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குகிறான்,பொருளாதாரத்தடை கோருகிற தீர்மானத்திற்க்கு காங்கிரசு கயவன் கொடுத்த மரியாதை என்ன தெரியுமா,சிங்களத்துடன் 300 கோடி ரூபாயில் அதி விரைவு படகுகளுக்கான வர்த்தக ஒப்பந்தம்.<br /><br />இப்போது தமிழ்நாட்டு தமிழனுக்கு ஞாபக மறதி நோய் உண்டு என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு மண்ணிலேயே பயிற்சி அளித்து நம்மை நாடி பிடித்து பார்க்கிறான்.இப்போது சீமானை வம்புக்கு இழுத்து பார்க்கிறான் காலம் காட்டுகிற உண்மை என்னவென்றால் காங்கிரசுகட்சியும் தி.மு.கவும் புதை குழியில் அமுக்கி அழித்து ஒழித்து சமாதி கட்டப்படவேண்டும்.ஓய்வு ஒழிச்சல்,இருக்கக்கூடாது என்பதை தமிழ் இனத்தை கூட்டி கொடுத்தவனும் காட்டி கொடுத்தவனும் கோடிட்டு காட்டி இருக்கிறார்கள்.<br /><br />பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அடித்தால் பாகிஸ்த்தான் வரைக்கும் வலிக்கறது.லண்டனில் சுரங்க ரயில் பாதையில் குண்டு<br />வெடித்தால் ஆஸ்திரேலியா நியுசிலாந்து வரைக்கும் வலிக்கறது.ஆனால் தமிழா நமக்கு மட்டும் எப்படி வந்தது இந்த இழிவான மனநிலை?நமது தலைமை பீடத்தில் மானம் இழந்தவர்களும் தன்மானம் சுயமரியாதை எல்லாவற்றையும் இழந்த இழி பிறவிகளும் சுயநல பேய்களும் ஆண்ட காரணத்தால் இப்போதுவரையிலும் துடித்து கொண்டு இருக்கிறோம் போதும் காங்கிரசு தி.மு.க. அழிவே தமிழ் இனத்தின் எழுச்சிக்கும் வாழ்வுக்கும் அவசியம் என்பதை உணர்ந்து தமிழ் இன விரோத சக்திகளை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்திட தாயக தமிழ் இனமே ஓய்வு ஒழிச்சல் இன்றி ஒற்றுமையாய் செயல்படவேண்டும் என்பதை நம் உலக தமிழ் இன துரோகியும் எதிரியும் உணர்த்தி இருக்கிறார்கள் ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்.<br /><br /><strong><br />ஈழதேசம் இணையத்தளத்திற்காக மூர்த்தி</strong><p></p>எல்லாளன்http://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.com0