பிரித்தானியாவில் கறுப்பு ஜுலை கவன ஈர்ப்பு நிகழ்வு


1983ஆம் ஆண்டு இனப்படுகொலையின் 25வது ஆண்டையும், 1958 படுகொலையின் 50வது ஆண்டு நினைவையும் முன்னிட்டு, புலம்பெயர் நாடுகளில் பல்வேறு நினைவு நிகழ்வுகள், மற்றும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் நேற்றிரவு இடம்பெற்ற நினைவு நிகழ்வு, மற்றும் கவன ஈர்ப்பு நடவடிக்கையில் 3,000இற்கும் மேற்பட்ட மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.

பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழ் நகரசபை உறுப்பினர்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு, பிரித்தானிய நேரம் இரவு 8:00 மணிமுதல் 10:00 மணிவரை இடம்பெற்றது.



1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையில் அரசினால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட 3,000 முதல் 4,000 வரையிலான தமிழர்களை நினைவுகூரும் வகையில், மெழுகுவர்த்தி ஏந்தி இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


கறுப்பு யூலை நிகழ்வுகளின் படத்தொகுப்பு




Comments