வரலாறு காணாத கத்தோலிக்கர் கூட்டத்தில் சிவந்தன் துண்டுப்பிரசுரம்: காணொளி

போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்கள் இன்று மதியம் ஸ்காட்லாந்தில் முதல் முறையாக காலடி எடுத்துவைத்துள்ளார். பிரித்தானியா முழுவதும் சுமார் 6 மில்லியன் ரோமன் கத்தோலிக்க இனத்தவர் வாழ்கின்றபோதும், ஸ்காட்லாந்தில் அவர்களில் பெரும் தொகையானோர் வசித்து வருகின்றனர். மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெறும் இந்நிகழ்வில் போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்கள் மக்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெறும் இவ்வேளையில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இதில் கலந்து கொண்டுள்ள நிலையில் அங்கே சிவந்தன் துண்டுப்பிரசுரங்களை வினியோகிக்கிறார்.

ஈழத்திலும், இலங்கையின் தென்பகுதியிலும் கொல்லப்பட்ட கத்தோலிக்கர்களுக்காவும், அங்கு இராணுவத்தினரால் நிர்மூலமாக்கப்பட்ட கத்தோலிக்க தேவாலயங்கள் தொடர்பாக நீதிகேட்டும் இத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன். பல கத்தோலிக்கர்கள் தமது இனத்தவர் இலங்கையில் கொல்லப்பட்டது தொடர்பாகவும், தமது தேவாலயங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் விழிப்படைந்துள்ளனர். கவலையுற்ற பல கத்தோலிக்கர்கள் இலங்கை நிலைகுறித்து கேட்டறிந்ததாக உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் தெரிவித்தார்.

பி.பி.சி நிருபர்கள் உட்பட பலர் துண்டுப் பிரசுரங்களை தாமாகவே கேட்டு வாங்கிச் சென்றதாக பரமேஸ்வரன் மேலும் தெரிவித்தார். பல்லாயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்களை சிவந்தன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் இணைந்து மக்களுக்கு வழங்கி நீதிகேட்டு இருந்தது இலங்கையில் தமிழர்களுக்கு நீதிவேண்டும் என்ற கோட்பாட்டிற்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்திருந்ததை இங்கு காணக்கூடியதாக இருந்தது.





Comments