பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு தேசியத் தலைவர், தளபதிகள் வீரவணக்கம்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மலர்வளையம் சாத்தி, ஈகைச்சுடர் ஏற்றி, மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினார்

மாரடைப்பினால் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை காலமான மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.
தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் மூத்த தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
மூத்த தளபதிகளான புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு, கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை, கட்டளைத் தளபதிகளான கேணல் பாணு, கேணல் தீபன், கேணல் ஜெயம், கேணல் சொர்ணம், கேணல் றமேஸ், கேணல் யாழினி, கேணல் துர்க்கா, அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் ஆகியோரும்
தளபதி மாசல், மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத்தளபதி கீர்த்தி ,திருகோணமலை மாவட்ட சிறப்புத்தளபதி வசந்தன்சிறப்பு வேவுப்பிரிவு தளபதி சசிக்குமார்படைத்துறை மூத்த ஆசிரியர் தினேஸ்முதன்மை உறுப்பினர் தமிழேந்திஉள்ளக புலனாய்வுத்துறைப் பெறுப்பாளர் கபிலன்தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன்கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத்தளபதி மணிவண்ணன்குட்டிசிறி மோட்டார் படையணித்தளபதி கோபால்குட்டிசிறி மோட்டார் படையணி மகளிர் தளபதி பவநிதிசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத்தளபதி கோபித்படையத் தொடக்க பயிற்சிக்கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன்படையப் புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் தளபதி இரத்தினம்மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் மாறன்தளபதி ஜெரிதளபதி விக்கீஸ்தளபதி லோறன்ஸ் உட்பட்ட தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து வித்துடல் வணக்கத்துக்காக மல்லாவியில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8:30 மணிக்கு மல்லாவியில் வீரவணக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து வித்துடல் மாங்குளத்தில் மலர் வணக்கத்துக்காக வைக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் வீரவணக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து வட்டக்கச்சி, விசுவமடு, புதுக்குடியிருப்பிலும் நாளை முல்லைத்தீவு, முள்ளியவளை ஆகிய பகுதிகளில் மக்கள் வணக்கத்துக்காக வித்துடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது



Comments