யேர்மனியில் அன்ரனி சுரேஸ்குமார் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் யேர்மனிக் கிளையில் பணியாற்றிய அன்ரனி சுரேஸ்குமார் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ தேசத்தை அமைப்பதற்காக தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் தமிழீழ விடுதலைக்காய் உழைத்த நாட்டுப்பற்றாளர் அன்ரனி சுரேஸ்குமார் அவர்களை நாம் இழந்துவிட்டோம்.

சிறுநீரகங்கள் பழுதடைந்த போதும், குருதி மாற்றுச் சுற்றின் மூலம் உயிர்வாழ்ந்துகொண்டிருந்த போதும் தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது தமிழீழ விடுதலைக்காக இறுதி நேரம் வரையிலும் தன்னை அர்பணித்து பணியாற்றியவர் அன்ரனி சுரேஸ்குமார்.

சமாதானம் எனும் மாயைான இருண்ட காலப்பகுதி தொடக்கம் இன்றுவரை மிகவும் இறுக்கமான காலகட்டங்களில் தமிழீழ தேசத்தின் தேவையறிந்து கொடிய நோயுடனும் விடுதலைக்காக பலம் சேர்ந்த செயற்பாட்டாளர்களில் அன்ரனி சுரேஸ்குமார் அவர்களும் ஒருவர்.

இவரின் விடுதலைப் பணியை மதிப்பளித்து தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளித்துள்ளனர். நாட்டுப்பற்றாளர் அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் வீரவணக்க நிகழ்வுகள் நேற்று புதன்கிழமை யேர்மனி லிவகூசன் நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்றது.


Comments