ராமதாசின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் எதிர்வரும் 6ம் நாள் பொதுக்கூட்டம் என்கிறர் கலைஞர்



பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நேற்று மாலை கருத்து வெளியிட்டார்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்குவதற்கும் மத்திய அரசின் தலையீட்டை கோரியும் எதிர்வரும் 6 ஆம் திகதி பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகக் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதே வேளை நாளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்படவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜயகாந்தின் தேசிய முற்போக்குத் திராவிட கழகமும் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டினை விளக்கியும் மத்திய அரசின் தலையீட்டைக் கோரியும் தி.மு.க., எதிர்வரும் 6ஆம் திகதி பொதுக்கூட்டம் ஒன்றை சென்னையில் நடத்தவுள்ளது என்று அறிவித்திருக்கிறது.
இப்பொதுக்கூட்டத்திற்கு தமிழக முதல்வர் கருணாநிதி தலைமை வகிக்கவுள்ளார் என்று அக்கட்சி தெரிவித்திருக்கின்றது.


Comments