இந்தியக் கம்யூனிட்ஸ் கட்சியின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு பெரியர் திராவிடர் கழகம் ஆதரவு



இந்தியக் கம்யூனிட்ஸ் கட்சியின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு பெரியர் திராவிடர் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது அந்த அறிக்கை வருமாறு..

இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கை இராணுவத்திற்கு ஆயுதமோ சிங்கள இராணுவ வீரர்களுக்கு பயிற்சியோ இந்திய அரசு அளிக்காது அளிக்கவும் இல்லை என்று இந்திய தலைமை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட பின்பு இலங்கையில் இந்திய இராணுவ பொறியாளர்கள் காயப்பட்டு கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு, இந்திய தலைமை அமைச்சர் அறிவித்தது பொய் என்பது ஆதாரத்துடன் வெட்டவெளிச்சமாகிவிட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இது போல் தவறான செய்திகளை பதிவு செய்வதென்பது ஒரு வெட்கக்கேடான செயலாகும்.

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் தங்கள் கண்டனத்தை தெரிவித்தும் மாற்றான் தாய் மனப்பான்மையோடு இந்திய அரசு நடந்துகொள்வது கண்டிக்கதக்கது.

இது போன்ற இந்திய அரசின் செயல்பாட்டைக்கண்டிக்கும் வகையில் வரும் அக் 2 இல் இந்தியப் பொதுவுடைமைக்கட்சி (CPI) அறிவித்திருக்கும் உண்ணாநிலை போராட்டம் உலகத் தமிழர்களுக்கு ஆறுதலான செய்தியாகும்.

உண்ணாநிலை போராட்டம் எனபது பெரியார் தொண்டர்களுக்கு ஏற்புடையது இல்லை என்றாலும் போராட்டதினுடைய நோக்கம் வரவேற்கத்தக்கது என்ற அடிப்படையில் இந்த போராட்டதினை வெற்றி பெற வாழ்த்தி எங்களுடைய ஆதரவினை தெரிவிக்கிறோம்.

தோழர்.பால்.பிரபாகரன்
தலைமைக்கழக உறுப்பினர்
பெரியார் திராவிடர்கழகம்
தமிழ்நாடு

Comments