இடம்பெயர்ந்த மக்களை நேரில் சென்று சந்தித்தார் தேசியத் தலைவர்

சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து அவலப்படும் மக்களை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வழங்கும் பணிப்புரை வழங்கினார்.

சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் பெருமளவில் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படும் சூழ்நிலை காணப்படுகின்றது.

அந்த மக்களின் அவலங்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு அவர்களுக்குரிய உதவிகளை வழங்குமாறு போராளிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மேலும் அவலப்படும் மக்களுக்கு தமிழீழ அரசியல்துறை மற்றும் தமிழீழக் கட்டமைப்புக்கள் உதவி செய்யும் நடவடிக்கைகளை துரிதமாக்கியுள்ளன.

இருப்பிடங்களை அமைப்பது இதற்கான இடங்களை தெரிவு செய்து வழங்குவது என பல்வேறு பணிகள் துரிதமாக தமிழீழக் கட்டமைப்புக்களால் வழங்கப்படுகின்றன.

மக்களின் நலப்பணிகள் மற்றும் ஊட்ட உணவளித்தல் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன.




Comments