மும்பாய் தாக்குதல் எதிரொலி: இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல்- எம்.கே.நாராயணன் பதவி விலகல்

இந்தியாவின் வர்த்தக நகரங்களில் ஒன்றான மும்பாயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

பொறுப்புள்ள அமைச்சர் என்ற அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு பதில் சொல்லும் வகையில் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அமைச்சர் சிவராஜ் பட்டீல் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் என புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, மும்பாய் தாக்குதலின் எதிரொலியாக தனது பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து விலகிய எம்.கே நாராயணன் இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த இருவரும் தமது பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்துள்ளனர்.

அதேவேளை, இந்திய பாதுகாப்பு மற்றும் உல்லாச பயண துறைகளுடன் தொடர்புபட்ட வேறு பல உயரதிகாரிகளும் தமது பதவிகளிலிருந்து விலகவுள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணனும் தனது பதவி விலக முன்வந்துள்ளார். எனினும் இன்னொரு ஆலோசகர் தெரிவு செய்யும் வரை அவரே தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த டிக்சிற்சின் மறைவிற்குப் பின்னர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வெற்றிடத்திற்கு எம்.கே.நாராயணன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திரா காந்தி குடும்பம்திற்கும், காங்கிரஸ் கட்சியையும் தூக்கிப் பிடித்தது, அவர்களுக்கு வக்காளத்து வாக்குவதைத் தவிர வேறு எந்தவொரு தகுதியும் நாராணயனுக்கு கிடையாது எனத் அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்திரா குடும்பத்துக்கு நெருக்கம் என்பதால் இருமுறை புலனாய்வுத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1992ம் ஆண்டில் இவர் ஓய்வு பெற்றார். 2004ம் ஆண்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கி்ன் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

தீட்சித் மறைந்த பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரானார். பாலக்காட்டைச் சேர்ந்தவரான இவர் தான் தேசிய பாதுகாப்பு விஷயத்தில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு உதவி வந்தவர். இருவரும் சேர்ந்து காட்டிய பொறுப்பின்மையும் செயலின்மையும் தான் நாட்டை இந்த அளவுக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது எனத் தெரிவிக்க்பட்டுள்ளது.



Comments