தமிழீழ அங்கீகார மாநாடு - திருமாவளவன்

விடுத்லைச்சிறுத்தைகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தி ஈழத்தமிழர்களின் நலன்கருதி மாநாட்டினை டிசம்பர் 14ம் தேதிக்கு சென்னையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தேதியே இறுதி அறிவாப்பாகவும் இதனை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாதென்றும், இந்த மாநாடு நடப்பதினால் ஏற்படும் எவ்விதமான பிரச்சனையையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறிவிட்டார்.

மேலும் இந்த மாநாட்டின் மூலம் நாங்கள் தனித்தமிழீதை அங்கீகரிக்கின்றோம். தனித்த்மிழீழத்தில் தமிழர்களுக்கு ஆட்சி அமைக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு என்பதை நாங்கள் கூறப்போகின்றோம்.

மேலும் தமிழர் தாயகமான தமிழீழத்தில் சிங்களப்படைகள் தற்போது ஆக்கிரமித்த்துள்ளன. சிங்கள்ப்படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருத்து விலகிவிட வேண்டும்.

அவ்வாறு படைகளை விலக்கிக் கொள்ளாவிட்டால், சிங்கள அரசு மிகக் கடும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்று சிங்களை எச்சரிக்கை விடவும் போகின்றோம் என்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.


Comments