![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSTU8RrFsZauizwpk-1tY3MbFYfptkd5zC91yoK_sN8dOZbPR3n7FbKYk2MqoQMe_tqLCii3qcbZXleVN7UkdODfo3HK2k6qHcF2_yscGp94pIoLHUMgwz6KQqJ0nwmZrBAPCcYdlzOuwU/s400/26_11_08_vaiko_01.jpg)
தமிழர் - சிங்களவர்களை பிரித்து வைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு பிரித்தானியாவிற்கே உள்ளது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலர் வைகோ பிரித்தானியாவில் இடம்பெற்ற பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjt3OlIqlN8GpzcDNjryTKFVlBGDxTf9jGof59TjFRVFAI38rMS-DK4G0C1ua6LTNKP52Ou3KDhZGbVwU2zL6IdGwYnV4zZGrgpVMsH7_CcVvZw5k-uvdd6NEaDIGHUZdg0TYHeT-F83DQw/s400/26_11_08_vaiko_02.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFP0GO0IoeRdSrT8xaMFwZZYRr95VCxXkC_7BmJv2Ju3QIGwX0gVXknRarZmTbm451r8z2cCfI8matCJ7Kyt1OEl8z12vwamu7tB0c5GCd0jb96GdGIOUVuovGTy_huwY61BF374oEoyyx/s400/26_11_08_vaiko_06.jpg)
நேற்று முன்தினம் பிரித்தானிய வந்திருந்த வைகோ அவர்கள் நேற்று நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினர். 1833ம் ஆண்டு இலங்கையை ஆக்கிரமித்த பிரித்தானியா தங்களின் ஆட்சி வசதிக்காக சிங்கள மக்களின் தேசத்தையும் தமிழ் மக்களின் தேசத்தையும் ஒன்றாக இணைத்து ஆட்சி நடத்தினார்கள். 1948ம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறும் போது பெரும்பான்மை சிங்கள இனத்திடம் மட்டும் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு திரும்பிவிட்டார்கள்.
பிரித்தானியாவின் இந்த நடவடிக்கையே தமிழ் மக்களின் இத்தனை அவலங்களுக்கும் காரணம் என்பதை தெளிவு படுத்தியவர், இந்த நிலைமைக்கு காரணமான பிரித்தானியா தமிழ் மக்களுக்கான நீதி கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டியது அவர்களின் தார்மீக கடமை என்றும் எடுத்துக் கூறினார்.
இதேவேளை, நாளை பிரித்தானியாவில் இடம்பெறும் தமிழ் தேசிய மாவீரர் நாள் நினைவு நிகழ்விலும் வைகோ அவர்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments