விடுதலைப்புலிகளை என்றும் ஆதரிப்போம்; மதிமுக பொதுச் செயலாளர் வைகோ


விடுதலைப்புலிகளை என்றும் ஆதரிப்போம்; மதிமுக பொதுச் செயலாளர் வைகோ




தமிழீழ விடுதலைப்புலிகளை என்றும் ஆதரிப்போம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:

தந்தை பெரியாரின் சிலையை திறந்துவைப்பதில் பெருமைப்படுகிறேன். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகவும் சாதிக் கொடுமை ஒழியவும் தீண்டாமையை அகற்றவும் பெரியார் பாடுபட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேநாள் தாயகத்தை இழுத்து மூட சதி நடந்தது. அது முடியவில்லை. துயரங்கள் நீடிப்பது இல்லை.. லட்சியம் தோற்பது இல்லை.

இலங்கை தமிழர் நலனுக்காக விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம். புலிகளுக்காக அன்றும் குரல் கொடுத்தோம். இன்றும் குரல் கொடுக்கிறோம். நாளையும் குரல் கொடுப்போம். நாங்கள் வன்முறையில் ஈடுபடுவது கிடையாது. கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். 2009-ம் ஆண்டு மதிமுகவுக்கு விடிவுகாலம் பிறக்கும். இவ்வாறு வைகோ பேசினார்.

தமிழ்செய்தி

Comments