வட போர்முனைப் போராளிகளுடன் பொதுமக்கள் சந்திப்பு

வட போர்முனைப் போராளிகளுக்கு கண்டாவளை கோட்ட தொழிற் சங்கங்களின் இணையம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இணைந்து உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்வு கண்டாவளை கோட்ட போர் எழுச்சிக்குழு செயலாளர் சூரியப்பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் கருத்துரைகளை வட போர்முனைத் தளபதிகளில் ஒருவரான பெரியதம்பி, பொறுப்பாளர்களில் ஒருவரான மோகன் இரண்டு மாவீரர்களின் தந்தை சிறீதரன் ஆகியோர் நிகழ்த்த, சிறப்புரையினை கண்டாவைள கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன் நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, கண்டாவளை கோட்ட தொழிற்சங்க இணையம், மாதர் சங்கப் பிரதிநிதிகள், போர் எழுச்சிக் குழு, மாவீரர் செயற்பாட்டுக்குழு மற்றும் வணிகர்கள் உள்ளிட்டோரால் களமுனைப் போராளிகளுக்கு என கொண்டு செல்லப்பட்ட சமைத்த உணவும் உலருணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

தொடர்ந்து, போராளிகளுடன் மக்கள் கலந்துரையாடினர்.

"போர்க் களங்களுக்கு மக்கள் தேடி வந்து உணவுப் பொருட்களை வழங்கி போராளிகளுடன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்வைத் தருகின்றது” என வட போர்முனைப் பொறுப்பாளர்களில் ஒருவரான பெரியதம்பி தெரிவித்துள்ளார்.

"இடம்பெயர்ந்த நிலையிலும் மக்கள் களமுனைப் போராளிகளுக்கு உற்சாகமூட்டுகின்ற வகையில் வருவது எழுச்சியை தருகின்றது" என பொறுப்பாளர்களில் ஒருவரான மோகன் தெரிவித்தார்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]



Comments