அறிவித்த பாதுகாப்பு வலயங்களில் பல நூறு அப்பாவி மக்களைப் படுகொலை செய்திருப்பது பாரிய போர்க்குற்றம்: பா.நடேசன் கண்டனம்

சிறிலங்கா அரசாங்கமே அறிவித்த பாதுகாப்பு வலயங்களில் பல நூறு அப்பாவி தமிழ் மக்களை மனிதாபிமானம் இன்றி படுகொலை செய்திருப்பது பாரிய போர்க் குற்றம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நெட் இணையத்தளத்துக்கு அவர் திங்கட்கிழமை இரவு அளித்த நேர்காணல்:

தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் கேடயங்களாக பயன்படுத்தவில்லை. ஆனால், இனப்படுகொலை செய்யும் சிறிலங்கா படையினரிடம் இருந்து தப்பி தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காக போராடும் புலிகளின் பகுதிகளை நோக்கியே அவர்கள் வருகின்றனர்.

வன்னி நிலைமைகளை அவதானிக்க ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்துலக சமூகமும் தவறிவிட்டன.

சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கும் மக்கள் பாதுகாப்பு வலயங்களில் எதுவித அடிப்படை வசதிகளுமே இல்லை.

இந்த பாதுகாப்பு வலயங்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ நம்பவும் இல்லை.

புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்களில் ஒருவரும் படுகாயமடைந்திருக்கின்றார்.

அனைத்துலக சமூக அமைப்புக்கள் போரை உடனே நிறுத்தி பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழ் மக்களுக்குரிய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றார் பா. நடேசன்.



Comments