புலம்பெயர்ந்த உறவுகளே! தாயக பணிப்புறக்கணிப்பில் இணைந்து கொள்ளுங்கள்!!

தமிழர் தாயகப் பகுதியில்
நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள பணிப்புறக்கணிப்பு

போராட்டத்துக்கு ஆதரவாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் அமைப்புக்கள் பல தாமும் தமது பணிகளுக்கு செல்வதனை தவிர்த்து தாயகத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளன.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கோரிக்கையை புதினம் இணையத்தளம் வரவேற்பதுடன் அனைத்து புலம்பெயர் உறவுகளும் இப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் படி நாம் உரிமையுடன் கோருகின்றோம்.

ரொரன்ரோ கனடாவில் மாபெரும் மனிதச் சங்கிலி விழிப்பு போராட்டம்!

ரொரன்ரோவில் உண்ணா நோன்புகள், வெளி நாட்டு தூதரங்கள் முன் விழிப்பு போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.

இன்று

தை 29ந் திகதி அமெரிக்க தூதரத்துக்கு முன்னான விழிப்பு போராட்டம் மாலை 3:00 மணியிலிருந்து 5:00 மணிவரை நடைபெறும்.

EMERGENCY RALLY

Thursday, January 29
6:00pm

United States Consulate
360 University Avenue
Toronto
TTC: Osgoode or St. Patrick

நாளை

தை 30ம் திகதி மதியம் 12 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மனிதச் சங்கிலி போராட்டம் ரொரன்ரோவின்

மையப்பகுதியான யூனியன் ஸ்டேசன் முன்பாகவும் அதிலிருந்து, சென் அன்ரு , சென் பற்றிக் ஸ்டேசன் என்பவற்றை சுற்றியுள்ள பகுதியில் நடை பெறுகின்றது. வேலை பார்ப்பவர்கள் நேர ஓய்வு எடுத்து வந்து எழுச்சியாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

பூச்சியத்திற்கு கீழ் வெப்ப நிலை உள்ள கால நிலை என்பதால் உடைகள், தொப்பி, சப்பாத்துக்களை கால நிலைக்கு ஏற்ப அணிந்து வருமாறு கேட்கப்படுகின்றார்கள்.

மேலதிக தகவல்களுக்கு ஊர்ச்சங்கங்கள் அல்லது உள்ளூர் வானொலிகளின் அறிவுறுத்தலை கேட்டுக் கொள்ளுங்கள்.


Sri Lankan Army fires artillery shells into government-declared "SAFETY ZONES"

Act now! Stop the genocide of Tamils!




CANDLE-LIGHT VIGIL

Wednesday, February 4
5:30pm to 7:00pm

Sri Lankan Consulate
40 St. Clair Avenue West
Toronto
TTC: St. Clair




Comments