வலிகளிலிருந்து வலிமை பெறுவோம்


யூத மக்கள் மீதான இனப்படுகொலையை இந்த உலகம் தெரிந்து வைத்திருக்கிறது. வருடா வருடம் தவறாமல் நினைவு கூரவும் வேறு செய்கிறது. ஆனாலும், உலகெங்கும் தலைதூக்கும்இனக்குரோத உணர்வுகளையும், அதற்குத் தூபமிட்டு கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலைகளையும், புதிய புதிய ஹிட்லர்களையும இனங்கண்டு மனிதாபிமான முன்னெடுப்புக்களைச் செய்வதற்கான பொறுப்புணர்ச்சியோ அன்றி நாகரிக முதிர்ச்சியோ இன்னும் தான் சர்வதேசத்திற்கும் அதன் பல்வேறு பெயர் சூட்டல்களுடன் கூடிய நிறுவனங்களுக்கும் கிட்டிவிடவில்லை என்பதை ஒவ்வோர் ஈழத்தமிழனாலும் அதிகமாகவே உணரமுடிகிறது.

"பயங்கரவாத" த்தைப் போலவே விருப்பிற்கேற்ப ஒவ்வொருவரும் அர்த்தம் கற்பிக்கும் "சனநாயக" மான இவ்வுலகிலே இறைமையின் பேரால் மேற்கொள்ளப்படும் கொடுமைகள்யாவும் அங்கீகாரம் பெறுவது வேதனைக்குரியது. இப்படியான சூழலிலே தமது இருப்புக்களை கௌரவமாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக்கை மட்டுமே கொண்ட பல்தரப்பு பிரமுகர்களினதும் கண்டனம் அல்லாத கவலைகள் மற்றும் அக்களை போன்ற அனுதாப அறிக்கைகளால் அல்லலுறும் மக்களுக்கு ஆவது ஏதுமில்லை.

இவ்வாறிருக்க ஈழத்தமிழ் இனத்திற்கு வேறெந்த தீர்வு அல்லது தெரிவு எஞ்சியுள்ளது என்ற கேள்வி முக்கியம் பெறுகின்றது. இப்போது நம் தாயகம் எதிர்கொள்ளும் நிலைமையின் தீவிரமும் நெருக்கடியும் தமிழர் பலம் பலவீனமாகி விட்டதான கேள்வியை ஒரு சிலர் மத்தியில் எழுப்பக்கூடும். அவ்வாறு ஒரு சிலரிடையே எழும் எண்ணமானது தமிழினத்தின் எதிர்காலத்தை இல்லாமற்செய்ய விளையும் சிங்களப் பேரினவாதத்தின் விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் விதத்தில், சிலரால் விவாதிக்கப்படுவது குறித்து நாம் விழிப்பாயிருக்கவேண்டும்.

"இன்றிரவுதான் உனக்குக் கடைசி இரவு: நாளை என்பது உனக்கு இல்லவே இல்லை!"

என்று யாராவது நமக்குச் சொல்ல, அதையே நாமும் நம்பி எங்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதற்கான எமது ஆற்றலைக் கைவிடலாமோ?

'யுத்தங்களின் வெற்றிகள் களங்களில் தீர்மானிக்கப்படுவதில்லை மாறாக அதில் ஈடுபட்டுள்ளவர்களின் மனங்களிலேயே தீர்மானிக்கப்படுகிறது' என்கிறது. நீண்டகாலமாகவே தன்னை நிலைநிறுத்தி வரும் முதுமொழி ஒன்று.

ஆகவே நாளை மீதான நம்பிக்கையை மறுதலிக்கும் நச்சுக்கருத்துக்களை இனங்கண்டுடனே புறந்தள்ளவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.அதேவேளை தமிழர் பலர் இன்று பலவீனப்பட்டுள்ளது என்பது உண்மையல்ல! மாறாகச் சிங்களப் பேரினவாதம் மூன்றாமுலக நாடொன்றிற்கு முற்றிலும் பாதகமான விரலை மீறிய வீக்கத்துடன் தனது ஏனைய சகல ஒதுக்கீடுகளையும் வலுவாகவே மட்டுப்படுத்திக்கொண்டு, நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியாத விலையேற்றங்களின் துணையுடன் பற்களைக் கடித்துக்கொண்டு தனது முழுப்பலத்தையும் ஓரிடத்தில் குவித்து முக்கிக் கொண்டிருக்கிறது.

தனது தரப்பு இழப்புகளை வெளிவிடாத ரம்புக்வெல கூட கடந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் 3000 படையினர் (நாளொன்றுக்கு 33 படையினர்) கொல்லப்பட்டு 12,000 பேர்வரை காயமடைந்ததாக (அங்கவீனர்களாக) தெரிவித்துள்ளார்.

ஆக மூன்று மாதங்களில் 1500 0 படையினரை இழக்கும் இந்நிலையை சிறிலங்காவின் படைத்தரப்பால் தொடர்ந்தும் ஈடுசெய்து கொள்வது சாத்தியமானதா என்பதைத் தெளிவாகவே நம்மால் உணரமுடியும். அதேவேளை இப்படியானதொரு தீவிர விலைகொடுபப்ற்கு அது தயாராக உள்ளதற்கு வலுவான காரணம் இருக்கவே செய்கிறது.

ஒரு பெரும்பான்மை இனத்தின் அரச கட்டுமானத்துடன் கூடிய தனது படைகளுக்கு ஏற்படும் இழப்புக்களும் நெருக்கடிகளும் அதற்குக் காரணமான விடுதலைப்புலிகளுக்கும் ஏதோ ஒரு விகித அளவிலாவது ஏற்படத்தானே வேண்டும். ஆகவே தனக்கு இரண்டு கண்கள் போனாலும் போகட்டும்: புலிகளுக்கு ஒரு கண் ஆவதுபோகட்டும் என்ற கணிப்பிலே தன்னால் முடிந்ததற்கும் மேலான தளபாட வளங்களை உலகெங்கிலுமிருந்து கடனாகப் பெற்றுக்கொண்டு, தனது படைப்பலத்தை ஒன்று திரட்டி வன்னிக்கான முற்றுகைப்போரில் இறங்கியிருந்தது.

ஒப்பீட்டளவிலே சிங்களப் படைகளின் இழப்பு அதிகமாயினும், தமிழர் தாயகம் துண்டாடப்பட்டுள்ளநிலையில் தனது ஆளணி வன்னிக்குள்ளே மட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழலில் புலிகளால் நீண்ட காலத்திற்கு நின்று பிடிக்கமுடியாது என்ற இறுமாப்புக்கணிப்பீட்டிற்குள் சிங்களப் பேரினவாதம் மூழ்கியுள்ளது. இதை உணர்ந்தவர்களாகவே இன்று வன்னி வாழ் தமிழன் ஒவ்வொருவரும்ஃஒவ்வொருத்தியும் வீரச்சாவாகி விதைதவர் விட்டுச்சென்ற இடத்தை, கடமையைத் தம் தோளில் ஏற்றிக்கொண்டு தயாராகஉள்ளனர்.

ஆக்கிரமிப்பு வெறியர்களில் கடைசியானவானும் வீழ்த்தப்படும்வரை ஒவ்வொரு தமிழனும், குறிப்பாக எல்லைகள் மீட்க்கப்படும் வரைக்கும் இப்போதைய வன்னியில் சகலரும் ஈழத் தமிழினத்தின் தலைவிதியை எழுதும் தற்காலக் கடமையை ஆற்ற வேண்டியது அவசியம்.

ஒற்றைத் துரோகியால் எம்மினம் ஒருபோதும் பலமிழந்து போகாது. ஏனெனில் ஆணிவேர்களுடன் பக்கவேர்களும் ஆயிரமாயிரமாய் அணிவகுத்து நிற்க, ஒட்டுண்ணியாகிவிட்ட ஒற்றைக் கோடரிக் காம்பைக் காட்டி ஒப்பாரிவைப்பதில் அர்த்தமில்லை. சூரியனுக்கு சொந்தமானவர்களான நாம் சோகத்தைச்சூட்டிக்கொள்ளக் கூடாது. வெறுமனே ஐந்து ஆண்டுகளில் மட்டுமே 60 இலட்சம் (ஆறுமில்லியன்) மக்களை இப்படுகொலைக்குப் பறிகொடுத்த யூத இனம் இவ்விடத்தில் எங்களுக்கு அநேகமான வரலாற்று படிப்பினைகளைத் தந்து நிற்கின்றது.

அதிலும் குறிப்பாக மிகவும் பகிரங்கமாகவே தனது இப்படுகொலையைத் தமிழர் மீது மேற்கொண்டுவரும் சிங்களத்தைக் கண்டிக்கும் நேர்மையற்று. வெற்றுச் சாட்டுப்போக்குகளை அறிக்கைகளால் விடுத்துவரும் பன்னாட்டு பிரமுகர்களின் பாராமுகம் பெருத்த ஏமாற்றத்தை நமக்கு அளித்து வருவதைப் போலவே யூதர்களின் அன்றைய ஏமாற்றமும் கொடூரமானது.

அதிலும் நேச நாடுகளால் மிகமோசமான கொலைகாரணக விமர்சிக்கப்பட்ட ஹிட்லரினால் 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதன் பின் மண (உழnஉநவெசயவழைnஉயஅpள) எனப்படும் தடுப்பு முகாம்களில் அரைப்பிணங்களாக உயிர்பிழைத்த யூதர்கள் இஸ்ரேலிற்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அவர்கள் அங்கே செல்வதை அரேபியர்கள் விரும்பவில்லை.

எண்ணெய் வழங்கும் அரேபியர்கள் விருப்பத்தை மறுதலிக்க மேற்குலகமும் தயாராக இருக்கவில்லை. விளைவு: யூதர்கள் சைப்ரஸ் தீவிலே நாசிகளின் தடுப்பு முகாம்களுக்கு இணையான, ஆனாலும் 'நலன்புரிமுகாம்' என்ற பெயரிலேமோசமான நிலைமைகளின் கீழ் அடைத்து வைக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் தளர்ந்து போய்விடவில்லை. யூதர்கள் அம்முகாம்களிலிருந்தும் ஏனைய இடங்களிலிருந்தும் தப்பி இஸ்ரேலிற்குச் சென்று பிரித்தானியர் மற்றும் பல்வேறு அரபு நாட்டுப் படைகளையும் எதிர்த்துப் போராடித்தாயகத்தை வென்றெடுத்தனர்.

இதற்கான பயிற்சிகளை சைப்ரஸ் முகாம்களில் இரவு வேளைகளிலே தும்புத்தடி, கற்கள், பொல்லுகளை துப்பாக்கிகளாகவும் எறிகுண்டுகளாகவும் எறிகுண்டுகளாகவும் பாவித்தே பெற்றிருந்தனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இன்றுங்கூட அரபு நாடுகளிடமே எண்ணெய் வளம் குவிந்து கிடக்கிறது. ஆனாலும் உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் தனக்குச் சார்பாக அல்லது குறைந்தபட்சம் தன்கெதிராகப் பேசமுடியாதவாறு சர்வதேச அரசியற்களத்தைத் தனக்குச் சாதகமாக இஸ்ரேல் வென்றெடுத்துள்ளது.

ஆகவே அடுத்தவர் நமக்கு ஆதரவாக வருவாரெனப் பார்த்துக்கிடக்காமல், ஆகவேண்டியதை நாம் முன்னெடுப்பதனூடாகவே உள்நாட்டிலும் உலக அரங்கிலும் எங்களுக்குச் சாதகமான சூழலைவென்றெடுக்கமுடியும்.

இவ்விடத்தில் 1ஆம் உலக நாடான போலந்து தேசம் நேற்றோ - கூட்டமைப்பிலே இணைந்து கொள்ள விண்ணப்பித்தபோது, அதன் வான்படையின் வளப்பற்றாக்குறை சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, ஜேர்மனி தன்னிடமிருந்த சில மிக்-27 விமானங்களை அதற்கு நன்கொடையாக வழங்கியிருந்தது. ஆரம்பித்தில் மிகவும் நன்றியுணர்வோடு இவற்றைப் பெற்றுக்கொண்ட போலந்து பின்னாளில் அவற்றின் பராமரிப்புச் செலவு பாரதூரம் என்பதனாலேயே சற்றே காலம் கடந்ததுடன் கைகழுவி விட்டது ஜேர்மனி என்பதை உணர்ந்துகொள்ளத் தொடங்கியிருந்து.

ஆக உலகின் முன்னணி நாடுகளான ஜேர்மனி மற்றும் போலந்திற்கே கட்டுப்படியாகாதவற்றையே சிறிலங்கா கொள்வனவு செய்துவைத்துள்ளது.

பணிப்பெண்களாக அனுப்பப்பட்ட தனது குடிமக்கள் துஷ்பிரயோககப் படுத்தப்பட்ட போதிலும் தட்டிக்கேட்காமல் அந்நியச் செலவணியை அறவிட்டாலே போதுமென அங்கலாய்த்துக்கிடக்கும் சிறிலங்காவின் பொருளாதாரம் விரைவிலேயே, நிலைகுலைந்து எரித்திரியாவை ஆக்கிரமித்த எதியோப்பியா ஈற்றில் தோல்வியுடன், எச்சில் நடாக உலகில் அடையாளம் பெற்றதைப் போன்ற இக்கட்டை அடையும் சில நாடுகளின் நயவஞ்சகமான முண்டுகொடுத்தல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே சாத்தியப்படும்.

மூழ்கும் கப்பலில் எந்த முட்டாளும் ஏறமாட்டான் என்பது இந்தப் பின்புல ஆதரவுநாடுகளுக்கு அதிகமே பொருந்தும். தயாகம் முற்றாக ஆக்கிரமிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்படும் பட்சத்தில் அழகாய் இருப்பதோ, ஆரோக்கியமாய் இருப்பதோ மட்டும் ஆபத்தில்லை: ஆக்கிரமிப்பாளனுக்குக் கீழே அடிமையாய் இருப்பதுவும்கூட ஆபத்துதான். ஏனெனில் இனப்படுகொலையின்போது அடிமைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதில்லை.

அதிலும் சிங்களப் பேரினவாதத்திற்கு அன்போ, மானுடமோ புரியாது. அதற்குப் புரியும் மொழி ஒன்று மட்டுமே! அதைப் பேச எழுவது ஒவ்வொரு ஈழத்தமிழ் மக்களினதும் உடனடிக் கடமையாகவுள்ளது. ஆகவே வலிகளுக்காக நொந்து கிடந்து அழுவதை விடுப்போம்: வலிகளிலிருந்தும் வலிழம பெறுபவர்களாய் எழுவோம்! வாழ்வோம்!! நாளையும் அதன் பின்வரும் நெடுங்கால மெங்கும் நிலைத்து வாழும் எங்களினம்!

அடக்கி, ஒடுங்கிப்போன 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். இனப்படுகொலை அவர்களின் வரலாறானது. எஞ்சிய 40 இலட்சம் யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டினை உருவாக்கி இன்று உலகின் விதியையே தீர்மானிக்கிறார்கள்! ஆகவே நாம் எப்படி இருப்போம் என்பதை நாமே தீர்மாகிக்கிறார்கள்! ஆகவே நாம் எப்படி இருப்போம் என்பதை நாமே தீர்மானிப்போம்! முடியாதவர்கள் மூக்கைச் சொறியட்டும், ஏனையவர்கள் எதிர்காலத்தை எமதாக்கட்டும்!!

சு.ஞாலவன்

Comments