வன்னியில் இன்றும் அகோர எறிகணைத் தாக்குதல் 35 தமிழர்கள் படுகொலை; 61 பேர் காயம்

வன்னியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இன அழிப்புப் போரில் இன்றும் எறிகணைத் தாக்குதல்களில் 35 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 61 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் மாத்தளன் பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை 5:30 நிமிடம் தொடக்கம் மாலை 5:30 நிமிடம் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 35 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 61 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களினதும் காயமடைந்தவர்களினதும் பெயர் விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

தொடர்புபட்ட செய்தி:

Ø வன்னியில் தொடரும் அகோர எறிகணைத் தாக்குதல்: நேற்றிரவு 17 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலை


Comments