விஸ்வமடுவில் பொதுமக்கள் மீது இராணுவத்தின் குண்டுத்தாக்குதல் தொடர்பான புதிய தகவல்கள்

முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசத்தில் பொதுமக்கள் மீது இராணுவத்தின் குண்டுத்தாக்குதல் தொடர்பான பல புதிய உண்மைத் தகவல்கள் வெளியாகியவண்ணமுள்ளது.

கடந்த திங்கக்கிழமை (09.02.2009) முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தற்கொலை குண்டுத் தாக்குதல் என இராணுவமும் அரசாங்கமும் தெரிவித்துள்ள நிலையில் அது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இல்லையெனவும், இராணுவத்தினாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட மற்றும் காயப்படுத்தப்பட்டுள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை இவர்களின் உடல்களில் தற்கொலைத் தாக்குதல்களுக்கான காயங்கள் காணப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

குண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளமை மேலும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன

நகுலன் (06)
செல்லகுமாரா (01)
கொஞ்சி (07)
சுந்தரன் (18)
நடராஜா (43)
ரி.ராகவன் (16)
கந்தசாமி
பரீடா (15)
எம்.மகேஸ்வரி (23)
எஸ்.கே.சந்திரா (32)
பபித் (61)
வீ.சிவமாலி (50)
எம்.ரொஷானா (33)
ருவனி அனீனா (26)
ஆர்.எஸ்.வள்ளியம்மா (30)
ராஜேஸ்வரி (49)
ததிஞ்சனி (16)
சீ.திவ்யா (18)
சாந்தி ராமன் (50)
பீ.மகேஸ்வரி (54)
ஏ.ராதிகா (15)
எஸ்.தர்ஷலா (16)
ராமேஸ்வரி (61)
சீ.யோகேஸ்வரி (18)
ஆர்.தேவி (36)
கே.பிரியங்கா (18)
மாலவி (19)
சரஸ்வதி (65)
மயூரா (18)

இதற்கு முன்பு வன்னியில் மிக மோசமான காயங்களுக்கு உட்பட்ட பலர் வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் கூட பாதுகாப்பு விடயங்களைக் காரணம் காட்டி அனுப்பி வைக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்கொலை குண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் என கூறி குருணாகல் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments