மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் உட்பட பல பகுதிகளில் நேற்றும் எறிகணைத் தாக்குதல்: 37 தமிழர்கள் படுகொலை

வன்னியில் உள்ள மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் பகுதி உட்பட பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நேற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் பகுதி, முள்ளிவாயக்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப்பாலைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை முற்பகல் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர்.

மே.மாக்கிறட் (வயது 40)

ந.அன்னம்மா (வயது 53)

ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சி.கயலவன் (வயது 23)

சி.தயாநிதி (வயது 34)

நா.தினேஸ் (வயது 14)

கோ.சர்மிளா (வயது 25)

லோ.புவனேஸ்வரி (வயது 57)

கு.பாக்கியம் (வயது 45)

வ.சசிகாந்தன் (வயது 25)

த.கென்சியா (வயது 04)

செ.சுமதி (வயது 28)

ம.குணம் (வயது 50)

கோ.கோபாலதரன் (வயது 27)

லோ.நடனசபேசன் (வயது 27)

மா.டெல்லிமாக்கிறட் (வயது 40)

ம.விஜித்குமார் (வயது 84)

வீ.ஞானவேலு (வயது 47)

ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளன் பகுதியில் நேற்று முன்நாள் இரவு 7:45 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இதில் 5 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.

ஞா.சங்கப்பதுமை (வயது 44)

வி.சரஸ்வதி (வயது 35)

சு.மதனகுமார் (வயது 23)

த.தவராசா (வயது 32)

ரா.இராஜேஸ்வரி (வயது 38)

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு வலய பகுதி என சிறிலங்கா அரசு அறிவித்த மாத்தளன் பகுதியில் படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை நடத்தி தமிழர்களை படுகொலை செய்து வருகின்றனர்.

இதேவேளை, அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

Comments