தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் வாசகர்களுக்கும் பணிவான வேண்டுகோள்

வலைப்பதிவுகளின் பெரிய வலிமை யாதெனில், அது சுயமான எழுத்து வெளிப்பாட்டிற்கு உதவுவது ஆகும். ஆரோக்கியமான சமூக மாற்றங்களுக்கு வழி வகுக்கும் வகையில் தமது சொந்த அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்வது வலைப்பதிவுகளின் நோக்கமாக இருப்பது சிறந்தது.

இதனை ஊக்குவிக்கும் பொருட்டு, வேறு இணைய/அச்சுப் பக்கங்களிலிருந்து வெட்டி ஒட்டி வெளிவரும் பதிவுகளைத் தமிழ்மணம் செய்திகள் பிரிவின் கீழ் திரட்டி வருகிறது. பிற தளங்களில் இருந்து ஒட்டி வெட்டப்படும் செய்திகளை மட்டுமே கொண்ட சில பதிவுகளை செய்திகள் பிரிவில் சேர்த்திருக்கிறோம் என்பதை அறியத்தருகிறோம்.

இப் பிரிவின் கீழ் வரத் தகுந்த பதிவுகள் ஏதேனும் விடுபட்டிருந்தால், அப்பதிவுகளை அறியத் தருமாறு பதிவர்களை வேண்டுகிறோம். செய்திகளை மட்டும் தேடி வாசிப்பவர்களுக்கும் இந்த ஏற்பாடு உதவிகரமாக இருக்கும்
என நம்புகிறோம்.

இவைத்தவிர தமிழ்மணம் திரட்டியில் இணைக்கப்பட்டு நீண்டகாலமாக புதுப்பிக்கப்படாத பதிவுகளையும், பழுதான பதிவு ஓடைகளையும் தமிழ்மணம் திரட்டியின் பராமரிப்பிற்காக நீக்க முடிவு செய்துள்ளோம் என்பதையும் பதிவர்களுக்கு அறியத்தருகிறோம்

இது குறித்த தனிப்பட்ட கேள்விகளுக்கு பதிவர்கள் தமிழ்மணத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிர்வாகம்,
தமிழ்மணம்

வலைப்பதிவுகளை ஒருங்கிணைத்து வெளியிடும் உங்கள் சேவைகளுக்கு முதற்கண் நன்றிகள் சுயமான எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை ஆனாலும்

ஈழத்தமிழர்களின் அவலங்களை ,செய்திகளை ,நியாங்களை சகல சர்வதேச ஊடகங்களும் சிறிலங்கா அரச பயங்கரவாதமும் இந்திய ஆளும் வர்க்கங்களும் அதன் அருவருடிகளும் சேர்ந்து இருட்டடிப்பு செய்து வரும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வரும் நேரத்தில்

ஒரு சில வலைப்பதிவாளர்களால் தான் அவை வெளிக் கொண்டு வரப்பட்டுக்கொண்டிருந்தது அதற்கும் இப்போது தமிழ்மணம் தனது திரட்டியில் ஆப்பு வைத்திருக்கிறது

தமிழ ஆளும் வர்க்கத்தாலும் இந்திய ஆளும் வர்க்கத்தாலும் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் பேச்சாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு பேச்சுரிமை சாகடிப்பட்டுக் கொண்டிருக்க வலைப்பூவிலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருப்பதன் தொடர்ச்சியே இப்படியான நடவடிக்கை என்று எண்ணத்தோன்றுகின்றது

தமிழ்மணத்தில் அண்மைக்காலமாக தமிழக மக்களின் எழுச்சியின் பதிவுகளே ஆக்கிரமித்திருந்தன ஆனால் முகப்பில் அவை எதுவும் காணப்படுவதில்லை நீங்களே பார்த்து விட்டு சொல்லுங்கள்

தற்போதைய தேர்தல் காலத்தில் இவை சந்தேகத்தை எழுப்புகின்றது ?????

முகப்பில் உள்ளவற்றை மட்டுமே பலராலும் பார்க்கப்படுகின்றன இது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை தவிர செய்திகள் என்று முகப்பில் நாலும் வரி மட்டும் காண்பிக்கப்படுகின்றது நானே எனது பதிவினைக் காணவில்லை என்று நிர்வாகத்திடம் முறையிட்ட பின்னர் தான் எனது பதிவு எங்கிருக்கும் என்று அறிந்து கொண்டேன்

எனது வலைப்பதிவு தற்போது 80 % குறைவடைந்து விட்டது

ஏன் நீங்கள் உங்கள் வலைப்பதிவுக்கு வருகையை கவனித்தீர்களா ??

ஈழத்து செய்திகள், அரசியல் தமிழகம் ,ஆய்வுகள் , கட்டுரைகள் , அறிவிப்புக்கள் , பரப்புரைகள் போன்ற பல வகைகளை செய்திகள் என்ற ஒன்றினுள் வகைப்படுத்தி ஒரு சிறிய விடயமாக்கி விட்டீர்கள்

இங்கு வலைப்பதிவுகளின் மூலம் தான் எமக்கு எதிரான இருட்டடிப்புக்களை ,அவதூறுகளை அம்பலப்படுத்தி வந்தோம் அதில் வெட்டி ஒட்டுவது தவிர்க்க முடியாதது

எமது நோக்கம் இவை பலருக்கு போய்ச்சேர வேண்டும் என்பதே ஒழிய விளம்பரப்படுத்தல் அல்ல

இதை நேயர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கின்றேன்

தவிர புலம் பெயர் நாடுகளில் உள்ள சிங்கள அருவருடிகளால் புலம் பெயர் நாடுகளில் நிகழ்வுகள் மிகக் குறுகிய கால நேரத்தில் அறிவிக்கப்படுகின்றன அவற்றினை பரப்புவதற்கு எமக்கு இந்த வலைப்பதிவு திரட்டிகள் பெரிய அளவில் உதவி புரிகின்றன

அவை முகப்பில் இருந்தாலொழிய பலரை சென்றடையமாட்டாது

ஆகவே இதற்கு மாற்றீடு செய்யும் வரையில் பழைய முறையை தற்காலிமாக அனுமதிப்பது தற்போதைய இந்திய தேர்தல் ஒட்டிய காலத்தில் தமிழகத்தில் மாற்றம் இந்திய அரசியல் மாற்றம் ஈழத்தமிழர்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரும் என்ற பின்னனியில்

இருட்டடிப்பு செய்வது தகுமா ?????

இது குறித்து தமிழ்மணம் நிர்வாகமும் உறுப்பினர்களும் ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்ப்பார்க்கின்றேன்

நன்றி

எல்லாளன்

Comments

தமிழ்மணம் இதைச்செய்யாமல் விட்டாலும் பலன் அளித்ததா? என்ன கண்டோம் நாம்? பதிவுகளினால் என்ன பயன் அடைந்திருக்கிறது ஈழம் உறவுகள்?
Anonymous said…
/* தமிழ்மணம் இதைச்செய்யாமல் விட்டாலும் பலன் அளித்ததா? என்ன கண்டோம் நாம்? பதிவுகளினால் என்ன பயன் அடைந்திருக்கிறது ஈழம் உறவுகள்?
*/

உங்களிடம் நிருப்பிப்பதற்கு என்னிடம் ஆதாரம் எதுவுமில்லை. ஆனால் பல மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

அப்படி பார்த்தால் நீங்கள் எழுதி என்ன நடந்து விட்டது, எதும் மாற்றங்கள் நிகழ்ந்ததா. ஏன் எழுதுகிறிர்கள்.