தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குபவருக்கே ஆதரவு அளிப்போம்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குபவருக்கே ஆதரவு அளிப்போம் என வியாழக்கிழமை நடந்த புதுச்சேரி மக்கள் நல முன்னணியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கும் தேசிய கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பதென முடிவு செய்யப்பட்டது.

விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க உறுதி பூண்டிடும் அரசியல் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பதென முடிவு செய்யப்பட்டது. அக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக புதுச்சேரி மக்கள் நல முன்னணியின் சார்பில் மாநிலத்தின் அனைத்துப் பகுதியிலும் மக்கள் சந்திப்பு பிரசாரங்களை மேற்கொண்டு வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதென முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் இரா.சுந்தர் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் க.சத்தியானந்தம் முன்னிலை வகித்தார். மாநிலப் பொருளாளர் ச.சத்தியவேல்,மாநில இளைஞரணிச் செயலாளர் த.மணிமாறன், மிசா, ஏழுமலை, மாணவரணி ரகு, மகளிரணி கோதை அரிகிருஷ்ணன், உழவர்கரை தொகுதி செயலாளர் இரா.சண்முகம், வில்லியனூர் தொகுதி பக்த வெங்கடேசன், பாகூர் தொகுதி ரவி, முதலியார் பேட்டை தொகுதி ஏ.வடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments