வன்னியில் நேற்றும் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: 17 சிறுவர்கள் உட்பட 39 தமிழர்கள் படுகொலை

வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள் உட்பட 39 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கணைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெறி, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 17 சிறுவர்கள் உட்பட 39 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களினதும் காயமடைந்தவர்களினதும் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

Comments