ஆசிய நாடொறு கொடுத்த நச்சுவாயு புதுக்குடியிருப்பு மோதலில் சிறிலங்கா படையினர் பாவிக்கப்பட்டது அம்பலம்

விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால்....

இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது. அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள்.

அதனால்,அங்கு நின்ற போராளிகள் மயக்கமுற்று கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று மயக்கமுற்றவர்களை சுட்டுக்கொன்றதாகவும் அறியமுடிகின்றது.

இச்சம்பவத்தில் தப்பி வந்தவர்களில் சிலருக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்று, வாந்தி போன்றன ஏற்பட்டதாகவும் கூறினார்கள்.

இராணுவத்தின் தொலைத்தொடர்பு உரைகளை ஒட்டுக் கேட்கப்பட்டபோது இவ் நச்சுக்குண்டை பாவிப்பதற்கு முன் வேறு சில அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டதாகவும், அவ்விடத்தில் நின்ற இராணுவத்திற்கு முகத்திற்கு அணியும் முகமூடி(மாஸ்க்) கொடுக்கப்பட்டதாகவும், இராணுவத்தை சற்று பின் நகர்த்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இவ் நடவடிக்கையால் இராணுவத்தினரும் மயக்கமுற்று பாதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

உலகிலே தடை செய்யப்பட்ட அயுதங்களை பாவித்தாவது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும், சிறிலங்கா கொடிய அரசும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அதற்கு சர்வதேசத்தின் ஆசியும் கிடைத்திருக்கின்றது.

உண்மையில் விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்கு தயாரான நிலையில் முக்கிய நாடொன்றின் நவீன ராடர் உதவியுடன் அதனை முன்கூட்டியே அறிந்து கொண்ட படையினர் புலிகளின் தாக்குதல் நேரத்திற்கு முன்பாகவே சுற்றி வளைத்து தாக்குதலை ஆரம்பித்ததாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல் ஒன்று கூறுகிறது.

அத்துடன் வியூகத்தை உடைத்து வெளியேறிய புலிகள் தமது கனரக ஆயுதங்களில் பெருமளவானவற்றை கொண்டு செல்ல சிறிய தொகையிலான ஆயுதங்களையே படையினர் கைப்பற்ற முடிந்ததாகவும் முக்கியமானவர்களின் சடலங்களையும் புலிகள் கொண்டு சென்றதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த இருநாள் மோதல்களில் காயம் அடைந்த 500ற்கு மேற்பட்ட படையினரை ஏற்றி இறக்குவதற்காக யாழ்ப்பாணத்திற்கான தனியார் வானூர்திச் சேவை இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று கூறுகிறது.

அரசாங்கப் படையில் கொல்லப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட 400ற்கும் அதிகமான சடலங்களில் படை அதிகாரிகளின் சடலங்கள் தவிர்ந்த படைச் சிப்பாய்களின் கைப்பற்றப்பட்ட சடலங்களும் புலிகளின் சடலங்களுடன் கணக்கிடப்பட்டு எரியூட்டப்படுவதாக வன்னிக் களமுனையின் படைத்தரப்பினை ஆதாரம் காட்டி அரசாங்கத்தின் முக்கிய தரப்பு தெரிவித்தது.

Comments