மேற்குலகின் தவறான அனுமானங்களால் அப்பாவி தமிழ் மக்களுக்கு இன்னல் - குளோபல் போஸ்ட்

மேற்குலகின் தவறான அனுமானங்களால் அப்பாவி தமிழ் மக்கள் இன்னல்களை அனுபவிப்பதாக குளோபல் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

பாலஸ்தீனிய விடுதலைப்போரும் தமிழர்களின் விடுதலைப்போரும் குறித்து ஒப்பீட்டு நோக்கில் கட்டுரை ஒன்றை குளோபல் போஸ்ட் சஞ்சிகை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் பலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் படை நடவடிக்கையை மேற்கொண்டதற்கு ஒப்பானதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்களின் தாயகப் பகுதிகளை ஆக்கிரிமிக்கும் யுத்தத்தை முன்னெடுத்து வருவதாகவும் இரு படை நடவடிக்கைகளிலும் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டமைக்கு மேற்குலகின் தவறான அணுகுமுறைகளே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

இஸ்ரேலிய அரசாங்கம் யுத்த பகுதிகளுக்கு சுயாதீன ஊடகவியலாளர்களை தடை செய்தமை போலவே ஸ்ரீலங்காவும் தடை செய்துள்ளது இஸ.ரேல் போலவே தட செய்யப்பட்ட ஆயதங்கள் மூலம் ஸ்ரீலங்கா படைகளும் மக்களின் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்த தாக்குதல்களில் அதிகளவில் அப்பாவிகள் பாதிக்கப்பட்ட போதிலும் உலகம் அதிகம் அக்கறை காட்டவில்லை என்றும் இது மேற்குலிகின் தறவான போக்க என்றும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது

பாலஸ்தீன மக்களுக்குக்காக போரடி வரும் ஹமாஸ் அமைப்பபையும் தமிழ் மக்களுக்காக போரடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்பையும் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

இதன் காரணமாக இவர்களின் பகுதிகளில் நடைபெறும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்த மேற்குலக சக்திகள் கவனி;ப்பதில்லை என்றும் இதன் காரணமாக ஆக்கிரமிப்பு சக்திகள் சுதந்திரமாக தமது படை நடவடிக்கைகளை மேற்கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றன.

இந்த நிலைமையினை மாற்றுவதன் மூலமே மனிதப் பேரவலங்கள் தொடர்வதை தடுக்க முடியும் என்றும் அந்த சஞ்சினை தெரிவித்துள்ளது.

Comments