காங்கிரஸ் அரசாங்கம் இந்தியாவின் எதிர்கால நலன்களுக்கு மிகப்பெரம் அச்சுறுத்தலாக அமையும்

இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம் இலங்கை தொடர்பில் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு இந்தியாவின் எதிர்கால நலன்களுக்கு மிகப்பெரம் அச்சுறுத்தலாக அமையும் என இந்திய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். காங்கிரஸுக்கு ஓட்டு போடாதீங்க

குறிப்பாக இலங்கையில் நடைபெற்று வரும் யுத்தத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இந்திய எதிர்பு நாடுகளின் அதிகரித்த ஈடுபாடு இந்தியாவை தற்போத கவலையடைய வைத்துள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் போரில் தமிழ் மக்கள் அதிகளவில் உயிரிழக்கும் நிலை இந்தியாவில் பதற்ற நிலையை ஏற்படுத்தம் என்பதோடு அரசியல் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் பலமான அரசாங்கம் ஏற்படுதை தடுக்கும் நோக்கிலேயே சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள்ன இந்திய பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் காலத்தில் இலங்கையில் யுத்தத்தை தீவிரப்படுத்துமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை தூண்டியுள்ளன.

தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் காரணமாக அனைத்துலக மட்டத்தில் எழும் எவ்விதமான அழுத்தங்களையும் தனது வீற்றோ அதிகாரம் மூலம் முறயிடித்து ஸ்ரீலங்காவிற்கு பாதுகாப்பளிக்க சீனா உறுதிவழங்கியுள்ளது.

இதன் காரணமாகவே ஐநா மற்றும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளின் யுத்த நிறுத்த கோரிக்கையினை ஸ்ரீலங்கா உதாசீனம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வரும் தமிழின அழிப்பு நடவடிக்கைக்கு சீனா மட்டுமே வெளிப்படையாக தனது ஆதரவை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வன்னியில் இடம்பெற்று வரும் போரில் சீனாவின் யுத்த தாங்கிகள் ஜியான் 7 மீயொலி தாக்குதல் விமானங்கள் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் வான் கண்காணிப்பு கருவிகள் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கத.

ஸ்ரீலங்கா அரசாங்கம் போரியல் வெற்றிகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பே காரணம் என்று கூறிவருவதன் பின்னணியிலும் சீனா இருப்பதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

இந்தியா மேற்கொண்ட சில தவறான நகர்வுகள் மற்றும் குறுகிய அரசியல் இலாப நோக்கம் கொண்ட முடிவுகள் தற்போது இந்தியாவிற்கு எதிரான மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

மகிந்த அரசாங்கம் முன்னெடுத்த வரும் யுத்த நடவடிக்கைக்கு சீனா வழங்கி வரும் ஆதரவிற்கு பிரதி உபகாரமாக மகிந்த ராஜபக்ச தனது பூர்வீக நகரமான ஹம்பாந்தோட்டையில் சீனா அதி நவீன துறைமுகம் ஒன்றை அமைக்க அனுமதி வழங்கியுள்ளார்

வெளிப்படையாக இது ஸ்ரீலங்காவிற்க நன்மையளிக்கும் ஒரு அபிவிருத்தி திட்டமான தோன்றினாலும் இந்த துறைமுகம் சீனாவின் ஆசிய கடலாதிக்க விரிவாக்கத்தின் முக்கிய புள்ளி என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறை முகத்தில் சீனா நிhடமாணிக்கவுள்ள அதி உயர் திற்ன கொண்ட சுதுவீகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் இந்து மகா சமுத்திரத்தின் அனைத்து கடல் சார் நடவடிக்கைகளையும் தொடர்பாடல்களையும் அவதானிக்க கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே மாலைதீவு, மியன்மார், மொரிசீயஸ், மடகாஸ்கர், சிசெயல் தீவுகள் என சிறிய தீவுகளில் எல்லாம் சீனா துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துள்ள போதிலும் அவற்றை விடவும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் திட்டம் மிகப் பாரிய நிதி ஒதுக்கீட்டை கொண்டது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்.

Comments