சிறிலங்கா எறிகணைகளால் 30,000 வரையிலான மக்கள் ஊனமுற்றோர் ஆக்கப்பட்டுள்ளனர் - ரெலிகிறாவ் செய்தி

சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து வெளியேறிய 280,000 அகதி மக்களில் பத்தில் ஒரு பங்கினர் தங்களது அங்கத்தை இழந்தோ அல்லது மிக மோசமாக காயப்படுத்தப்பட்டோ உள்ளனர்.

அவர்களுக்கு மிக அவசரமாக செயற்கை அங்கங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் தேவைப்பட்டன, எனரெலிகிராவ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களில் ஊனமற்றோரின் எண்ணிக்கையானது, உலகில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருடன் வேலை பார்க்கும், விருது பெற்ற பிரன்ஜ் சர்வதேச ஊனமற்றோர் கருணை இல்லத்தால், வெளியிடப்பட்டுள்ளது.

“சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு வலயம் மீதான எறிகணைத் தாக்குதல்களால் 30,000 வரையிலான தமிழ் மக்கள் மிகக்கொடுமையாக ஊனமற்றோராக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்திருக்கிறது.” என இன்று ரெலிகிறாவ் செய்தி தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் செயற்கை அங்கங்கள் தயாரிக்கும் ஒரு சிறிய தொழிற்சாலையை வைத்திருக்கும் இக் கருணை இல்லம் போர் இடங்களில் இருந்து வந்த மக்களுக்காக ஒரு அவசரப்பிரிவைத் திறந்துள்ளதோடு மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்வதற்காக ஏனைய விநியோகஸ்தர்களோடும் சேர்ந்து வேலை செய்கிறது.

பணியாளர்களின் கூற்றின்படி அநேகமாக எல்லோருமே சிறிலங்காவினது பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்று அச் செய்தி குறிப்பிட்டுள்ளது.

இதுவானது, ‘இராணுவம் 280,000 மக்களை பாதிப்பு எதுவுமின்றி பிணையக்கைதில் இருந்து காப்பாற்றியுள்ளது’ என்ற சிறிலங்கா அரசின் கூற்றில் இருந்து மிக முரண்படுகிறது என்று ரெலிகிறாவ் மேலும் கூறியுள்ளது.

ஊடகங்களுக்கும் அநேக விசேட உதவிப் பணியாளர்களுக்கும் செல்வதற்கு அனுமதி கொடுக்காமல், காயப்பட்டவர்களை நாட்டில் உள்ள வைத்தியசாலைகளிலும், மற்றும் முகாம்களிலும் வைத்துள்ளார்கள்.

“மக்களின் முகாம்களுக்குச் செல்ல போதுமான அனுமதி இல்லாமையால் இச் செயற்கை உடல் அங்கங்களை அவர்களுக்கு பொருத்தமுடியாமல் உள்ளோம்.

அங்கங்கள் அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும் அத்தோடு அவற்றை எப்படிப் பாவிப்பதென்பதுக்கு தேவையான பயிற்சியும் அளிக்க வேண்டும்.” என்று இக்கருணை இல்லத்தின் இணைப்பாளர் சரிஷ் மிஸ்றா கூறியுள்ளதாக ரெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது

முகாம் ஒன்றுக்கு விஜயம் செய்த உதவிப் பணியாளர் டெய்லி ரெலிகிராவ் செய்திக்கு கூறினார்: “ஊனமற்றுள்ள மக்களின் எண்ணிக்கையைப் பார்த்து நான் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளேன். அதில் ஒருவர் தனது ஒரு காலை இழந்திருந்தார், அவரின் மனைவி தனது இரண்டு கால்களையும் இழந்திருந்தார்,

இத்தோடு அவர்களுக்கு ஒரு 8 மாதக் குழந்தையும் உள்ளது. குழந்தையை பதுங்குகழிக்குள் விட்டு தாம் உணவெடுக்கச் சென்ற போதே எறிகணையால் தாக்கப்பட்டதாகக் கூறினார்கள்.”

வவுனியா முகாம்களினதும் மற்றும் ஏனைய முகாம்களினதும் நிலைமைகளானது, உலகத்தின் யுத்த இடங்களில் அகதிகளுக்கு உதிவிகள் புரிந்த தனது 20 வருட தொழில்துறையிலேயே மிகவும் மோசமானது. ஏன்று அவ்வுதவிப் பணியாளர் ரெலிகிராவ் செய்திக்குத் தெரிவித்துள்ளார்.

Comments