![](http://www.pathivu.com/uploads/images/2009/nadesan_4_in.jpg)
நாங்கள் சரணடைவது மற்றும் ஆயுதங்களைக் கீழே போடுவது என்ற கேள்விகளுக்கு இங்கே இடமில்லை. மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை நாம் பெறும் வரையிலும் எமது போராட்டம் தொடரும் என நடேசன் கூறியுள்ளார்.
போரை நிறுத்தும் அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகள் அனைத்தையும் சிறீலங்கா அரசாங்கம் புறந்தள்ளி வருகின்றது. அனைத்துலக சமூகம் இந்தக் கொடுமையான போரை நிறுத்த முனவரவேண்டும். இக்கொடிய போரில் மக்களின் உயிர்களைக் காக்க அக்கறை இருந்தால் எந்த நாடென்றாலும் தனது இராஜதந்திர வரப்புகளைக் கடந்து இப்போரை நிறுத்த முன்வரவேண்டும் என அரசியற்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைமை உட்பட நாம் அனைவரும் எமது தாயத்தில் இருந்தவாறே போராட்டத்தை நடத்தி வருகின்றோம். சிறீலங்காப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தயா மாஸ்ரர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியமான உறுப்பினர் அல்ல எனவும் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments