ரொறன்ரோவில் நாளை மறுநாள் பேரணியும் நடைபவனியும்

இலங்கையில் படுகொலையை நிறுத்துறுமாறும் இன அழிப்பை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியும் கனடாவின் ரொறன்ரோ நகரில் பேரணியும் நடைபவனியும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக கனடிய தேசிய அமைப்புக்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக மேற்பார்வையில் இடம்பெற்ற போர் நிறுத்ததை உடன்படிக்கையை ஒரு தலைப்னபட்சமாக கைவிட்டு விட்டு, சிறுபான்மைத் தமிழருக்கு எதிரான போரில் அப்பாவிப் பொதுமக்களைப் கொன்று குவிக்கின்றது.

ஜனவரி தொடக்கம் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர், லட்சக்கணக்கானோர் இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர்.

அனைத்துலக சமூகமும் இப்படுகொலையை நிறுத்தவில்லை. தமிழர் தாயகத்தில் படுகொலையை நிறுத்தக் கோர எங்களோடு இணையவும். உண்மைக்காகவும், நீதிக்காகவும், தன்னாட்சி உரிமைக்காகவும் நிமிர்ந்து நிற்போம்.

கனடிய மக்களாகிய நாம் தமிழின அழிப்பைப் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள் என்று கனடா அரசாங்கத்திற்குத் தெரிவிப்போம்.

சனிக்கிழமை, மே 9, 2009
அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக
360 யூனிவெர்சிட்டி அவனியூ
ரொறன்ரோ

தொடருந்து நிலையம்: சென்ற். பற்றிக் அல்லது ஒஸ்கூட்

Canadian Federation of Students – Ontario
Canadian Peace Alliance
Toronto Coalition to Stop the War

ஆகிய அமைப்புக்கள் முன்னெடுக்கும் இந்த பேரணி மற்றும் நடைபவனி போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழ் சமூகமும் கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் கேட்டுக்கொள்கின்றனர்.

மேலதிக விவரங்களுக்கோ, ஆதரவு அளிப்பதற்கோ Canadian Peace Alliance ஐ தொடர்புகொள்ளவும்:

தொலைபேசி: 416-588-5555
மின்னஞ்சல்: cpa@web.ca
இணையம்: http://www.acp-cpa.ca

Comments