பிரான்ஸ் றீப்பப்ளிக் சதுக்கத்தில் அவசர ஒன்றுகூடல்: தமிழ் மக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு
![](http://www.tamilwin.org/photos/thumbs/trademarks/flag_france001.jpg)
தொடர்ந்து 33 வது நாட்களாக உண்ணா நிலையிலிருக்கும் செல்வகுமார், நவநீதன் ஆகியோர் நீர் மட்டும் அருந்தியபடி மிகவும் உறுதியோடு இப்போராட்டத்தை தொடர்கின்றனர்.
தமிழினப்படுகொலையை தடுக்கக்கோரி பட்டினி கிடக்கும் இவர்களை பெருமளவான பிராஞ்சு அரசியல் ஆர்வலர்கள், சட்டவாதிகள், எழுத்தாளர்கள் என பெருமபாலானவர்கள்; பார்வையிட்டு செல்வதுடன், தன்னின மக்களின் விடிவுக்காய் மேற்கொள்ளப்படும் இந்த உண்ணாநிலைப் போராட்டம் வெற்றியளிக்கும் எனக்கூறிச் செல்கின்றனர்.
இலட்சியத்தின் இமயத்தில் நிற்கும் இளைஞர்களுக்கு உறுதுணையாக நிற்போம். அனைவரும் றீப்பப்ளிக் சதுக்கத்தில் ஒன்று கூடுவோம்.
Comments