கனேடிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழக் தேசியக்கொடி முன்மொழிவும் தொடர் விழிப்புணர்ச்சி நிகழ்வும்

உலகெங்கும் வாழும் அனைத்து மக்களும் தமது நாட்டுக்கென, தம்மை பிரதிநிதிதுவப்படுத்தும் தனித்துவமான கொடிகளைக் கொண்டுள்ளார்கள். இவ்வாறாக நாடுகளை பிரதிநிதிதுவப்படுத்தும் கொடிகளுக்கு வழங்கப்படும் மரியாதையே அந் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் மரியாதையாகக் கருதப்படும்.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழரனான எமக்கு தமிழீழத் தேசியக் கொடியே எமது வரலாறு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான தியாகங்களை எடுத்தியம்புகின்றது. இத்துடன் ஓர் நாட்டின் தேசியச் சின்னங்களானவை அந்நாட்டின், அந்த நாட்டு மக்களின், அரசியல் அபிலாசைகளைக் குறித்து நிற்கும்.

காலம் காலமாக தமிழீழ மக்கள் தொடர்ச்சியாக அந்நிய சக்திகளால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ் அந்நிய சக்திகளால் தமிழ் மக்களின் தேசிய இறையாண்மை தொடர்ச்சியாக நசுக்கப்பட்டு வந்தது. யாழ் பேரரசின் முடியாட்சி போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்டபோது நந்திக் கொடியை தமிழர்கள் இழந்து நின்றனர். பின்னர் வன்னி இராட்சியம் தனது வாள் பொறிக்கப்பட்ட கொடியை பண்டார வன்னியன் மன்னன்னது தோல்வியோடு இழந்தது. இவாறான அந்னிய அடக்குமுறைப் போர்களால் தமிழர்களது கொடியும் அவர்களது பாரம்பரிய தேசியச் சின்னங்களும் இழக்கப்பட்டு, தொடர்ந்து அவர்களது வரலாற்றிலிருந்தும் அழிக்கப்பட்டது.


தமிழீழரின் தேசியக்கொடியானது தமிழ் மக்கள் தம் பாரம்பரிய தாயகமாம் தமிழீழத் தேசியத்தின் மேற் கொண்டுள்ள அபிலாசைகளை எடுத்து காட்டுகின்றது. தமிழீழத் தமிழர் அனைவருமே தமது விடுதலைக்காக பாடுபட்ட மாவீரை நினைவூட்டும் தமிழீழக்கொடியை அவர் மனதில் வைத்து போற்றுகின்றனர்.

கனேடிய தமிழ் இளையோர் அமைப்பினால் இன்று கார்த்திகை 1ம் திகதியன்று பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி தமிழீழக் கொடி முன்மொழிவும் தொடர் விழிப்புணர்ச்சி நிகழ்வுகளும் ஆரம்பிக்கப்பட்டன.

தேசியக் கொடியின் கீழ் அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் ஈழத் தமிழர்கள் உலகுக்கு தமது அரசியல் அபிலாசைகளை ஆணித்தரமாக எடுத்துக் கூறியுள்ளனர். எமது தமிழீழக் கொடியை முன்மொழியும் இத் தொடர் விழிப்புணச்சி நிகழ்வின் மூலம் ஈழத் தமிழர்கள் உலகுக்கு தனித்தமிழீழமே தீர்வு என எடுத்துக் கூறவுள்ளனர்.

இன்றைய நினைவுதினத்தில் இவ் முன்மொழிவு நிகழ்வும் ஒவ்வொரு தமிழனும் தனது தமிழீழத் தேசியக் கொடியை முன்மொழியக் கூடியவாறு http://www.tamilnationalflag.com/ என்ற பிரத்தியோக இணையத்தளமும் மாவீரர் குடும்பத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களது நினைவுதினமான இன்று, அவரின் மற்றும் அனைத்து தியாகிகளின் வேட்கையான தமிழீழத்தை, எம் தமிழீழக் கொடியை மற்றும் தேசியச் சின்னங்களை அனைத்து தமிழரும், இளையோரும் எமது பாரம்பரியக் சின்னங்களாக முன்மொழிந்து எற்றுக்கொண்டனர்.

இத்தொடர் நிகழ்ச்சியில் அனைத்து உலகத் தமிழரையும் பங்குபெறுமாறு கனேடிய இளையோர் அமைப்பு வேண்டுகின்றது.

தேசிய சின்னங்கள்

கொடி
பூ
மரம்
விலங்கு
பறவை

Posted by எல்லாளன் on 10:11 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for கனேடிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழக் தேசியக்கொடி முன்மொழிவும் தொடர் விழிப்புணர்ச்சி நிகழ்வும்

Post a Comment

EelamView

EMAIL

tamilthesiyam@gmail.com

2010 Tamilthesiyam. All Rights Reserved.