இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள்

2009ம் ஆண்டிற்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் எழுச்சி வணக்க நிகழ்வுகளும் எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இத்தாலி பலெர்மோ நகரில் 27.11.2009 வெள்ளிக்கிழமை மாலை 4மணிக்கு teatro Don Orione மண்டபத்தில் நடைபெற்றது.


ஆரம்ப நிகழ்வாக பொது சுடரினை மாவீரர் கப்டன் வண்ணன் அவர்களின் சகோதரன் ஏற்றி வைத்தார். சிறப்பு அழைப்பாளர் திரு. சத்தியதாசன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து மணியொலி எழுப்பப்பட்டு அகவணக்கம், சுடர்வணக்கம், மலர் வணக்கம் ஆகியன இடம்பெற்றது. தொடர்ந்து பலெர்மோ கலைபண்பாடடுக்கழகத்தினர் வழங்கிய மாவீர எழுச்சி கானங்களும் இடம்பெற்றது.


அடுத்து மாவீரர் பற்றிய விவரணம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தினால் விடுத்த கொள்ளை விளக்க அறிக்கை ஆகியவையின் தொகுப்பும் வெண்திரையில் காண்பிக்கப்பட்டது.


தொடர் நிகழ்வாக மாவீரர் நினைவு நடனங்கள், மாவீரர் நினைவுப் பேச்சுக்கள்இ எழுச்சி நடனங்கள்இ நாடகம் என்பன இடம்பெற்றன.


வணபிதா திரு. பீற்றர் அவர்களின் உரையும். சிறப்பு விருந்தினர் திரு. சத்தியதாசன் சிறப்புரையும் இடம்பெற்றது. அதனை அடுத்து மக்கள் அனைவரும் எமது லட்சியத்தை அடையும் வரை அதற்காக தொடர்ந்து உழைப்போம் என இவ்வீரர்களை நினைக்கும் புனித நாளில் உறுதி எடுத்து கொண்டனர்.


இறுதி நிகழ்வாக தேசியக் கொடி. இறக்களுடன் நம்புங்கள் தமிழீழம் பாடல் ஒலிக்க எமது தாரகமந்திரம் உச்சரித்து எழுச்சியுடன் இரவு 9:30 மணிக்கு நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றது.









Comments