ஜெனரல் சரத்பொன்சேகா - இரா.சம்பந்தன் ஆகியோர் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்

முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர் கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தனுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனப்பிரச்சினை தீர்வு தவிர்த்து தமிழ் மக்களின் இயல்பு வாழ்வை ஏற்படுத்தும் வகையிலான உடனடி மீட்பு நடவடிக்கை குறித்து அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதாக சரத் பொன்சேகா ஒப்பமிட்டு உறுதியளித்துள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தை அடுத்தே சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதற்கு கூட்டமைப்பினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தடையாக உள்ள காரணிகளை இனம் கண்டு அகற்றுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதும் உடனடித் தேவை என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தல்இஅவசர காலச் சட்டத்தை நீக்குதல் துணை ஆயுதக் குழுக்களை கலைத்தல் உட்பட பல்வேறு உறுதி மொழிகளை சரத் பொன்சேகா தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனுக்கும் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பின்னவரும் 10 அம்சங்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்துதல்:

- கிராமசேவையாளர் அலுவலகம் முதற்கொண்டு அனைத்து சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளையும் மீள ஏற்படுத்துதல் இராணுவஇ பொலிஸ் மற்றும் அரசியல் தலையீடுகளிலிருந்து விடுவித்தல்.

- ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவொன்று அமைக்கப்படும். இக்குழுவில்
ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர்
பிரதேச செயலாளர்கள்
ஏனைய அதிகாரிகள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள்இ அவர்களது பிரதிநிதிகள்
உள்ளூர் அதிகார சபைகளின் பிரதிநிதிகள்
நீதித்துறை அதிகாரிகள்
பாதுகாப்புப் படையினர்இ அதன் தளபதிகள் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரிகள்
பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அதிகாரிகள்
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.

இவர்கள் ஒருமாத காலத்திற்குள் உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை உருவாக்குவர். இதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்த மாதாந்த அறிக்கைகள் ஜனாதிபதிஇ அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றிற்குச் சமர்பிக்கப்படும். இதில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணித்து அது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக ஜனாதிபதியின் கீழ் செயலகமொன்று அமைக்கப்படும்.

- உடனடியாக ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்தல்.

- தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் எடுத்த பின்னர்இ பாதுகாப்புப் படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மாத்திரம் நிறுத்துதல். பாதுகாப்புப் படையினரை மீள நிறுத்தும் போது உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல்.

- பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் தலையீடு இன்றி அனைவரும் நடமாடுவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்தல்.

- தமிழ் பேசக்கூடிய பொலிஸாரை சாத்தியமான அளவிற்குப் பணியில் ஈடுபடுத்தல்.

11. துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல்.

- அனைத்துத் துணை இராணுவக் குழுவினரையும் ஆயுதமேந்திய குழுவினரையும் உடனடியாகக் கலைத்தல்.

- பொதுமக்கள் வாழும் பகுதிகளை ஆயுதங்கள் அற்ற பகுதிகளாக்குதல்.

- படையினர்இ பொலிஸாரைத் தவிர அனுமதிப்பத்திரம் வைத்துள்ளவர்கள் மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவர்.

111. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல்இ புனர்வாழ்வளித்தல்.

- நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவினர் ஊடாக இந்த நடவடிக்கையைத் துரிதப்படுத்தல்.

- இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர். வீடுகள் அழிக்கப்பட்டவர்களுக்கு வேறு தங்குமிடங்கள் வழங்கப்படும். மேலும் தம்மை மீளக்கட்டியெழுப்பவும்இ வாழ்வாதாரத்தை மீண்டும் ஏற்படுத்தவும் நிதியுதவி வழங்கப்படும்.

- அத்தியாவசிய உணவு வழங்கப்படும். மருத்துவ நிலையங்கள்இ வைத்தியசாலைகள்இ பாடசாலைகள் போன்ற சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.


iv. நிலமும் விவசாயமும்

- தற்போது பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்.

- மேலே குறிப்பிடப்பட்ட குழுக்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.

- கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசு வழங்குவதற்கான திட்டமொன்றைக் குழு முன்வைக்கும்.

- பின்வரும் குழுவினர் தொடர்பாக ஆராய்ந்து நீதியானஇ சட்டரீதியான தீர்வு காணப்படும்.

(அ) அரசிற்கு உரிய காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.
(ஆ) அரச காணிகளில் இருப்பதற்கு உரித்திருந்தும் உரிமை மறுக்கப்பட்டவர்கள்.
(இ) அரச காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்கள்.
(ஈ) அரச காணிகளைக் கண்மூடித்தனமாக பாரதீனப்படுத்தல் நிறுத்தப்படும்.

இதுவரை இடம்பெற்றவைகள் குறித்து மீள ஆராயப்படும். அத்தகைய பாரதீன நடவடிக்கை நிறுத்தப்படும்.

அரச காணிகள் வெளியாருக்குப் பாரதீனப்படுத்தப்பட்ட விடயத்தில் வெளிப்படையாக மேற்கொள்ளப்படாத சகலருக்கும் சம வாய்ப்பை வழங்காத மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அந்தந்தப்பகுதி பிரதிநிதிகளுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாத தேவையற்ற ஊழல் இடம்பெற்ற காணிக் கையளிப்பு விடயங்களிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்.

v. மீன்பிடித்துறை

- மீன் பிடிப்பதற்கான முழுமையான உரிமை வழங்கப்படும்.

- பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மீன்பிடித் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும்.

vi. வியாபார, வர்த்தகம்

- பயணிகள் செல்வதற்கும் பொருள்கள்இ விவசாயம்இ மீன்பிடித்துறைப் பொருட்கள் கொண்டுசெல்வதற்குமான சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.

- கப்பம் பெறுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

vii. போக்குவரத்து

- ரயில் சேவைஇ யாழ். குடாநாட்டிற்குள் எவ்வித தாமதமுமின்றி மீள ஏற்படுத்தப்படும்.

- கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்திற்கான சகல தடைகளும் அகற்றப்படும்.
இவற்றிற்கான கட்டணங்களும் குறைக்கப்படும்.

- பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை வரை தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.

viii. விசேட நிவாரணத் திட்டங்கள்

- யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களில் தங்கியிருப்பவர்களுக்கு

- யுத்தம் காரணமாக அங்கவீனர்களானவர்களுக்கு விசேட நிவாரணத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

ix. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்

- குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்.

- யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வளித்தல்.

தமிழ் மக்கள் சார்பில் பல்வேறு ஒப்பந்தங்கள் சிங்கள அரசியல் தலைமைகளோடு கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் அவை எவையும் நடைமுறைப்படுத்தப்பட்டற்கான வரலாற்று சான்றுகள் எவையும் இல்லாத நிலையில் சம்பந்தன் – சரத் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுவது தவிர்க்க முயடிாதது என்று ஆயர்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

எனினும் தமிழ் மக்களின் இன்றைய அவல வாழ்வின் பிரதான சூத்திரிதாரியும் அவரின் உறவினர்களையும் ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றுவதற்கு அவரின் முன்னாள் தளபதியை பயன்படுத்துவது தவறில்லை என்ற நிலைப்பாடும் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

சரத் பொன்சேகாவும் மகிந்த ராஜபக்சவும் தமிழ் மக்களை பொறுத்த வரையில் சிங்கள இனவாதத்தின் விம்பங்கள் தான்.’

இரு விம்பங்களும் தமிழர் விவகாரத்தில் நன்மையளிக்கும் நிலையில் இல்லாத போதிலும் தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணமாகி விட்ட ஒரு சிங்கள இனவாதத்தை மறு இனவாதம் கொண்டு வேரறுப்பது இன்று எதுவுமற்று போய்விட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு தவறாக படவில்லை.

இழப்பதற்கு எதுவுமற்ற நிலையில் தங்கள் வாக்குகள் மூலம் தம்மை நிர்கதியாக்கிய சக்தியை தங்கள் துயர வாழ்வின் ஒரு வருட நிறைவிற்கு முன்னபாக வீதிக்கு கொண்டு வருவதற்கு தமக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக இதனை கருதுகின்றனர்.

சரத் பொன்சேகா மீது எந்த வித எதிர் பார்புகளும் தமிழ் மக்களுக்கு இல்லை ஆனால் அவர் மூலமாக மகிந்தவை பழிவாங்க தமக்கு ஒரு சந்தாப்பம் அமைந்துள்ளதாகவே அவர்கள் இந்த தேர்தலை பார்கின்றனர்.

அழித்தவனை வைத்ததே அழிக்கச் செய்தவனை அழிப்பதற்கான உத்தியாகவே இந்த தேர்தலை தமிழ் மக்கள் நோக்குகின்றார்கள்.

தோ்தலை புறக்கணித்து தம்மை அழிக்கச் சொன்னவனை நிரந்தரமாக தம்மை அடிமைப்படுத்த அனுமதிப்பதை விடவும் கிடைத்துள்ள சந்தர்பத்தை சரியாக பயன்படுத்தி தம்மை அடிமைப்படுத்த நினைத்தவனை அழிப்பது தமிழ் மக்களின் தெரிவாக உள்ளது.

இது கூட ஒருவகையில் பதில் தாக்குதல் தான் உத்தி தான் சிங்களத்தின் ஆயுதங்கள் கொண்டு சிங்கள முகாம்களை தகர்த விடுதலைப் புலிகளின் வீரம் போல் இப்போது சிங்களத்தின் தளபதி மூலமே தலைமையை அழிக்கும் புது வியூகம் இது.

Comments