இலங்கையின் நிதி உதவியில் சர்வதேச ஆய்வுக்குழு [ICG] சாத்தான் வேதம் ஒதுகின்றது

ஆசியாவில் இயங்கிவரும் சர்வதேச சிக்கல் ஆய்வுக் குழுவின் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு பெரு நிதியுதவி வழங்கிவருவதாகக் கூறப்படுகிறது.

எனவே சர்வதேச சிக்கல் ஆய்வுக் குழு தற்போது கன்டிய அரசை எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதில் தமிழர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடப்போவதாக எந்த ஆதாரமும் இல்லாமல் இலங்கையின் இனவாத மகிந்த சிந்தனையை அப்படியே ஒப்புவிக்கின்றது

ஏன் இவர்களே ஒரு தாக்குதலை நடாத்திவிட்டு தமிழர்களின் மேல் பழி போடுவதற்கான ஒத்திகையா இது ?

ராஜீவ் காந்தி கொலையை வைத்து புலிகளை அழித்தது போல் புலம் பெயர் தமிழர்களை அழிக்க ஒரு தாக்குதல் உத்தியா ??
ஆனால் இலங்கை அரசு தமிழர்களில் பாதுகாப்புக் குறித்தும் இனப்பிரச்சனையின் மூலம் குறித்தும் கட்டாயம் கருத்தில் எடுக்கவேண்டும், இதற்கு ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்குலக நிதி வழங்கும் நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால், "கனடியன் தமிழர்களாக, கனடியத் தமிழ் காங்கிரஸ்காரர்களாக எந்தவொரு வன்முறையும் கனடாவில் மட்டுமன்றி உலகின் எப்பாகத்திலும் நடத்த அனுமதிக்கப் போவதில்லை" என கனடிய தமிழ்க் காங்கிரஸ் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இலங்கையில் ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கனடா போன்ற நாடுகளில் தமிழர்கள் மீதும் தமிழீழ ஆதரவாளர்கள் மீதும் கனடா அரசு ஒரு மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதனை ஒடுக்கி, முன்புபோல தமிழர்களை கனடிய அரசு நடத்தவேண்டும் என்பதே இலங்கை அரசின் நோக்கம், அதற்காக இலங்கை அரசு சர்வதேச சிக்கல் ஆய்வுக் குழுவினரைப் பயன்படுத்தி அறிக்கைகளைத் தயாரித்து கனடிய அரசுக்கு கொடுக்கிறது என்ற சந்தேகம் இங்கு வலுப்பெறுகிறது.

அதாவது விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில் கனடாவில் அதன் ஆதரவாளர்கள் செயல்பாட்டாளர்கள் மற்றும் தமிழ் தேசியம் பேசுவோர் எவ்வாறு கண்காணிக்கப்பட்டு வந்தனரோ அதை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க இலங்கை அரசு விரும்புகிறது என்பது நன்கு புலனாகிறது.

இதனை கனடிய தமிழர்கள் சரிவர கையாளவேண்டும்.

Comments