"தமிழீழமே தீர்வு" இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கான மீள் வாக்கெடுப்பு முடிவு

இத்தாலியில் நடைபெற்ற தமிழீழ தனியரசை வலியுறுத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கான மீள் வாக்கெடுப்பும், இத்தாலி ஈழத்தமிழர் மக்களவைக்கான பிரதிநிதிகள் தேர்தலும் இத்தாலி வாழ் தமிழ் மக்களின் அளப்பரிய பங்களிப்பாலும் தேர்தல் பணியாளர்களுடைய அற்பணிப்பு நிறைந்த செயற்பாடுகளாலும், இத்தாலிய அரச சார்பற்ற அமைப்புக்கள், நகரசபை, மாநகர சபை, பத்திரிகையாளர்களுடைய ஒத்துழைப்புக்கள் நிறைந்த செயற்பாடுகளால் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.


நடைபெற்று முடிந்த தேர்தல்களின் முடிவுகள் இத்தாலியில் அண்ணளவாக 4500 வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களில் 3680 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில்வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஏற்று ஆம் என்று 98.8 வீதமான மக்களும் இல்லை என்று 1.2 வீதமான மக்களும் வாக்களித்துள்ளனர்.


இத்தாலி ஈழத்தமிழர் மக்களவைக்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்

மாநில ரீதியாக தெரிவுசெய்யப்பட்டோர்

சாம்பசிவம் ஜெயதாஸ்

யேசுதாசன் ருலின்

வடிவேலு செல்வரத்தினம்

நாகமுத்து லலிதகுமார்

தங்கவேலு தங்கேஸ்வரன்

மகேந்திரன் நவீனதாஸ்

அருளானந்தம் மெ.ஆனந்தராஜன்

அந்தோனிப்பிள்ளை யூட் விலவராஜ்

தம்பிப்பிள்ளை விமலரூபன்

மகேசன் சேகர்

நவரத்தினம் சுஜிதரன்

தவராசசிங்கம் தக்சாயினி

ரட்ணசாமி பஞசாட்சரம் ஜசஸ்சிங்

வின்சென்ற் இம்மானுவல் றஞ்சித்

லீனப்பு வின்சன் ஜேசுதாசன்

தேசிய ரீதியாக தெரிவுசெய்யப்பட்டோர்

நாஜேந்திரம் சிந்துஜா

மயில்வாகனம் பாஸ்கரநாராயணன்

செபஸ்ரியாம்பிள்ளை டன்ஸ்ரன் ராஜ்க்குமார்

மகாதேவர் சிவதர்சன்

கமலநாதன் பிறேம்நாத்

மேலதிக விபரங்கள்: www.elezionitamil.it

Comments