
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நிராகரித்த ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையிலான தீர்வு திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் இருப்பவர்கள் தற்பொழுது முன்வைத்து வருவதாக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை நகர சபையின் தலைவரும், மாவட்ட முதன்மை வேட்பாளர் சண்முகராஜா கெளரிமுகுந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் திருக்கடலூர் பத்தரகாளி அம்பாள் ஆலய பரிபாலன சபையின் இளைஞர்களின் ஏற்பாட்டில் திருக்கடலூர் கடற்கரையில் கடந்த புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய கெளரிமுகுந்தன், தனக்கெதிராகப் பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும், தாம் ஒருபோதும் விலைபோக மாட்டேன் எனவும், தேசியக் கொள்கைகளைக் காப்பாற்ற பாடுபடுவேன் எனவும், மாவீரர்கள் மற்றும் மரணித்த மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் தமிழ் தலைவர்கள் செயற்பட்டு வருவதாகவும் கண்டனம் தெரிவித்தார்.
சண்முகராஜா கெளரிமுகுந்தன் தொடர்ந்து உரையாற்றுகையில்…
உரை கேட்க இங்கே அழுத்தவும்
Comments