ஜேர்மனியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்கள்!

imagesநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை மே மாதம் 2 ஆம் திகதி உலகளாவியரீதியில் நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதனைத் தாங்கள் அறிவீர்கள்.

இவ் அடிப்படையில் ஜேர்மனியில் நடாத்தப்படவுள்ள தேர்தல்கள் தொடர்பான திட்டங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் அனைத்துலகச் செயலகத்தினால் வகுக்கப்பட்டுள்ளன.

82 மில்லியன் மக்கள் தொகையையும் 357112 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்ட இன்றைய ஜேர்மனி (கிழக்கும் மேற்கும் இணைந்த) பதினாறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கிழக்கு ஜேர்மனியில் (ஐந்து மாநிலங்கள்) மிகச் சொற்ப எண்ணிக்கையிலான தமிழர்களே வாழ்கிறார்கள். மிகுதியாகவுள்ள பதினொரு மாநிலங்களிலும் (மேற்கு ஜேர்மனி) தமிழர்கள் பரந்து வாழ்கிறார்கள். இவற்றை அடிப்படையாக வைத்தே ஜேர்மனியில் தேர்தல்களை நடாத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

நான்கு தேர்தல் தொகுதிகள்: 10 பிரதிநிதிகள்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்காக ஜேர்மனியில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள 10 பிரதிநிதிகளையும் தமிழர்கள் பரந்து வாழும் பிரதேசங்கள் முழுவதிலிருந்தும் தெரிவு செய்யும் நோக்கத்தில் பதினொரு மாநிலங்களையும் நாம் நான்கு தேர்தல் தொகுதிகளாகப் பிரித்துத் தேர்தலை நடாத்த எண்ணியுள்ளோம்.

இவை பற்றிய விபரங்கள் பின்வருமாறு:

தேர்தல் தொகுதி 1: Berlin மாநிலம் (தலைநகரை உள்ளடக்கியது) - 1பிரதிநிதி

தேர்தல் தொகுதி 2: வடக்கு ஜேர்மனி: Bremen, Hamburg, Niedersachsen, Schleswig-Holstein - 2 பிரதிநிகள்

தேர்தல் தொகுதி 3: மத்திய ஜேர்மனி: Nordrhein-Westfalen (தமிழ் மக்கள் மிகவும் செறிந்து வாழும் இடம்) - 4 பிரதிநிகள்

தேர்தல் தொகுதி 4: தெற்கு ஜேர்மனி: Baden-Württemberg, Bayern, Hessen, Rheinland-Pfalz, Saarland
- 3 பிரதிநிகள்

கிழக்கு ஜேர்மனியில் வாழும் சொற்ப எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் இத் தேர்தலின் போது பேர்லின் மாநிலத்துடன் (தேர்தல் தொகுதி1) இணைக்கப்படுவர்.

தேர்தல்களை ஒழுங்கு செய்து நடாத்துவதற்காக நான்கு தேர்தல் தொகுதிகளுக்கும் தனித்தனியே செயற்பாட்டுக்குழுக்கள் அமைக்கப்படும். இச் செயற்பாட்டுக்குழுக்கள் தேர்தல் ஆணையங்களை உருவாக்கி ஜேர்மனியின் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் தேர்தலை நடாத்துவர். இச் செயற்பாட்டுக்குழுக்கள் எமது அனைத்துலகச் செயலகத்தினால் ஒருங்கிணைக்கப்படும்.

இந் நான்கு தேர்தல் தொகுதிகளில் முதற்கட்டமாக தெற்கு ஜேர்மனிக்கான செயற்பாட்டுக்குழு விபரங்கள் இன்றைய தினம் அறிவிக்கப்படுகிறது. ஏனைய மூன்று தேர்தல் தொகுதிகளுக்கும் உரிய செயற்பாட்டுக்குழு விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.

தேர்தல் தொகுதி 4: தெற்கு ஜேர்மனிக்கான செயற்பாட்டுக்குழு

ஒருங்கிணைப்பாளர் திரு குலசேகரம் குலதீபன் 01773444282

Bayern மாநிலம்:
மயில்வாகனம் ரமணன் 01638638697
அரசரட்ணம் நகுலேந்திரன் 01772098267
கிருஸ்ணமூர்த்தி தவராசா 01781300627
ஆசீர்வாதம் வின்சன் 01602259496

Hessen மாநிலம்:
சாரா தவராஜா 01736978263
கிசோதனன் தேசிங்குராஜா 0277134786

Rheinland-Pfalz மாநிலம்:
சுப்பிரமணியம் சிவானந்தன் 017645111626
அப்பையா தேவதாஸ் 017641037065

Baden-Württemberg & Saarland மாநிலங்கள்:
கலைமகன் தங்கவேல் 01773430627
சஜீர்தன் பஞ்சலிங்கம் 017663348559
கவிதாஸ் சிவராஜா 01736275988
அன்புசெல்வன் பாலசுந்தரம் 01742117163
ஜெல்சன் ஜெகநாதன் 017665578202
வசந்தராணி பஞ்சலிங்கம் 017663348559
சாகித்தியா ஜெகதீஸ்ஐயர் 07191960739
ஜெயச்சந்திரன் பாலச்சந்திரமூர்த்தி 017682134527
அருள்தாஸ் பாலசுந்தரம் 01742117163
முகுந்தன் அன்னலிங்கம 01772023046


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை குறிப்பிட்ட காலத்தில் நடாத்தி முடித்து அரசாங்கத்தின் முதலாவது அமர்வினை மே மாதம் 17-19 காலப்பகுதிக்குள் கூட்டுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத் தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும்.

இத் தேர்தல்களை ஜேர்மனியில் வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு ஜேர்மனியில் உள்ள அனைத்துத் தமிழ் அமைப்புக்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைக்கும் திட்டத்துடன் இணைந்து இயங்க விரும்பும் அனைவரையும் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகிறோம்.

நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: infogermany@govtamileelam.org

Comments