பீரிசின் அழுத்தம், அடிபணிந்த அமெரிக்கா - பயண எசச்ரிக்கை தளர்த்தம்

அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொடுதத் அழுத்தத்திற்கு அடிபணிந்துள்ள அமெரிக்கா, சிறீலங்கா செல்லும் தனது பிரசைகளுக்கு விதித்திருந்த பயணத் தடையை நீக்கியுள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவித்தலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளும் தமது பயண எச்சரிக்கையை நீக்கினால், சிறீலங்கா அரசு தற்பொழுது வெளிநாட்டுப் பயணிகள் மூலம் பெறும் பெரும் வருவாய் மேலும் அதிகரிக்கும் என பொருண்மிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றம் பற்றிய விசாரணைகளை மெற்கொள்ளாது விட்டதன்மூலம் உலக சட்டத்தையும், நீதியையும் மறுதலித்திருப்பதாக அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் மீது பன்னாட்டு மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ள நிலையில், சிறீலங்காவிற்கான பயணத்தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

Comments