தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும் சிறிவாத்தி எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிவாத்தி எம்.பி அவர்கள் நேற்றைய தினம் பாராளுமன்றில் கன்னி உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அவர் உரையைக் கூர்ந்து கவனிப்போமேயானால், முதலில் ஏதோ தமிழர்கள் அழிக்கப்பட்டதை படம்போட்டுக் காட்டி, பின்னர் சர்வதேசம் சிங்கள அரசை நசுக்க முனைகிறது, எனவே தோழர்களே (சிங்களவரை) நாம் கரம்கோத்து நிற்போம் என்ற பாணியில் உரையை நிகழ்த்தியுள்ளார்.

அதாவது முதலில் தமிழர்கள் அழிக்கப்பட்டதைச் சொல்லி, பின்னர் 2ம் உலகப் போரில் ஜப்பான் அழிந்து மீண்டெழுந்த கதையைச் சொல்லி, அதன் பின்னர் சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை ஒன்றுபட்டு முறியடிக்கவேண்டியது அவசியம் என்கிறார் சிறிவாத்தி. அப்படியாயின் நடந்த யுத்தக்குற்றங்களை நியாப்படுத்துகிறாரா சிறிவாத்தி எம்.பி. அல்லது சர்வதேசத்தை பிழை என்கிறாரா? யுத்தக்குற்றம் இழைத்த சிங்களதேசத்தை நியாப்படுத்துகிராரா ?

தனது பாராளுமன்ற உரையின் தொடக்கத்தில், தமிழர்களின் துயர் துடைப்பது போலப் பேசி, பின்னர் சிங்களவர்களுடன் நட்புப் பாராட்டியுள்ளார் சிறிவாத்தி எம்.பி. அதாவது இதைத் தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்பார்கள். மெல்ல மெல்ல தமிழ் மக்களின் மனதில் நஞ்சைக் கலப்பது. நடந்த போர்க்குற்றங்களை மறைத்து, கொலைகளை மறைத்து, சிங்கள அரசின் அடிமைக்குள் தமிழனை நிரந்தரமாக தள்ள இவர் முயற்சிக்கிறார். அதுமட்டுமல்லாது சிங்கள தமிழ் இனப்பிரச்சனை ஏதோ சர்வதேசத்தால் தொடக்கப்பட்டது போல சர்வதேசத்தை சாடுகிறார்.

சர்வதேச அரசுகளை குறைகூற இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் ஆகும். இவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டி பல விடயங்கள் உள்ளன. உதாரணமாக எத்தனை லட்சம் தமிழர்கள் மற்றும் வேற்று நாட்டவர்கள் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு அடக்குமுறைகள் இல்லையே. வேற்றின மக்களாக இந்த அரசாங்கங்கள் இவர்களைப் பார்ப்பது இல்லையே. சர்வதேச அரசியல் புரியாத இவரைப் போன்ற சில ஞானசூனியங்களால், தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளத்தான் முடியும். பாவம் வேறு அரசியல் இவர்களுக்குத் தெரியாது.




comments by: சிவதரன்

உண்மைதான், நான் இந்த உரையைக் கேட்டேன். இதில் இவர் உரையால் பாராளுமன்றம் அதிர்ந்தது என்று வேறு சொல்கிறார்கள். இதில் என்ன அதிர்வதற்கு இருக்கு. இப்ப அதிர்வு தான் அதிரவைக்குது...
---------------------------------------------
comments by: Kavinaya UK

its True , he is trying to sabotage the war crime inquires ...
---------------------------------------------
comments by: Nada UK

போர் குற்ற விசாரணைகளை சர்வதேசம் நடத்த் இவர் விடமாட்டார் போல இருக்கு ! ஏன் இந்த ஆளுக்கு தேவையில்லாத வேலை
---------------------------------------------
comments by: முனுசாமி த.நாடு

யார் சார் இந்தாளு, ஏன் இப்டி குழப்புறான். இந்த ஆளைப் பத்தி நான் முன்ன கேள்விப்பட்டதே இல்லையே .
---------------------------------------------
comments by: chandran

i m from kilinochchi i know this guy very well,he just want personal welth.i mean he is a "pilaippuvaathi" thats all.
---------------------------------------------
comments by : Banda

He is a school teacher. He cannot be a good politician. Those voted for him should realize this, but it is not too late to kick his ass.
---------------------------------------------
comments by: Soorya

முனுசாமி சார், இவரை உங்களுக்குத் தெரிய நியாயமில்லை. ஆனால் இப்படியான பல கழுத்தறுப்புகள் இன்னும் வெளியே வரும், தமிழன் இளிச்சவாய் இன்னும் புடுங்கலாமென்று. இப்படியான ஆட்களுக்கு இருக்கவே இருக்கு பல இணையத் தளங்கள் விளம்பரம்செய்ய. எலியைக் காட்டி அது யானை என்று விள்ம்பரம் செய்தால் அதுக்கும் வோட்டுப் போடா ஆட்கள் நிறையவே இன்னும் இருக்கினம். இருந்து பாருங்க இவங்க எப்படி தமிழருக்கு விடுதலையும் சுதந்திரமும் வாங்கிக் கொடுக்கப் போராடப் போகினமென்று.
---------------------------------------------
comments by: Prabaharan Velluppillai

Sri is another one.may be he too sellakillai's brother....
---------------------------------------------
comments by: Sukumar D

Again Maveeran Prabhakaran will come with full force with LTTE. And defeat the singala, and present "Tamil Eelam".
---------------------------------------------

Comments