நாம்தமிழர் ஊடக பணிக்கு உதவும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

வணக்கம் உறவுகளே,

தமிழர்களின் மண் மீட்சிக்கும், உரிமை மீட்சிக்கும் போராடும் நோக்கத்துடனே தமிழகத்தில் இயக்கமாக தொடங்கப்பட்டு இன்று அரசியல் கட்சியாக உருவெடுத்திருக்கிறது நாம்தமிழர் கட்சி.

அரசின் தமிழன விரோத போக்கிற்கு எதிரான கட்சியினரது ஜனநாயக ரீதியான போராட்டத்தை கூட ஒடுக்கி முடக்கவே நினைக்கிறது ஆளும் வர்க்கம். கட்சியினரது செயல்பாடுகள் எந்த ஊடகத்திலும் வெளிவராமல் தடுப்பதிலும் முன்முனைப்புடனே செயல்படுகிறது அரசு.

இந்நிலையில் உலகம் முழுவதும் வேர் பரப்பி வாழும் தமிழின மக்கள் தமிழகத்தில் எழும் ஒவ்வொரு போராட்டத்தாலும் ஊக்கம் பெறுகின்றனர், நம்பிக்கை கொள்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.

பாரெங்கும் வாழும் தமிழின மக்கள் நமது அண்ணன் சீமானின் பின் அணிதிரண்டு போராடும் தம்பிகளின் போராட்டங்களை அறிந்து கொள்ளவே naamtamilar.org இணையதளம் செயல்பட்டுவருகிறது.

இனவிடியலுக்காக போராடிவரும் உண்மை போராளியான தங்களது இனையதளத்தில் நாம்தமிழர்.காம் என்ற மேலுள்ள படத்தை போட்டு இயக்கத்தின் வளர்ச்சிக்கும் எங்களின் ஊடக பணிக்கும் உதவும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

நாம் தமிழர்
இணைய குழு.

Comments