![](http://athirvu.com/phpnews/images/Commission.jpg)
கண்டாவளையில் சாட்சியம் அளித்த பெண்ணொருவர் கூறும்போது, இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களை இராணுவத்தினர் 16 பஸ்களில் ஏற்றிச் சென்றனர் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அதன்பின்னர் சரணடைந்தவர்கள் குறித்த தகவல் இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதே நிலைப்பாட்டையே நேற்றும் அநேகமான பெண்கள் தெரிவிக்க இருந்தனர். ஆனால் அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இதையடுத்து அரசின் இந்த ஆணைக்குழு விசாரணை என்பது ஒரு கேலிக்கூத்தே என்றும் இதனால் தமிழ் மக்களாகிய எமக்கு எதுவித நியாயமும் கிடைக்கப்போவதில்லை என்றும் மக்கள் விசனப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் போரின் இறுதிக்கட்டச் சண்டை நடந்த இடமான முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் நேற்றையதினம் ஆணைக்குழு விஜயம் செய்துள்ளதாம்.
Comments