தமிழக தேர்தல் - தேர்தல் கூட்டணிக்கு முன் சதுரங்க போர்டுகளை உடைத்து நொறுக்கிப் போடும் காங்., மற்றும் தி,மு.க...!

காங்கிரஸ் பெருச்சாளிகளும் கருணாநிதி என்ற பழம் பெரும் பெருச்சாளியும் மோதுகின்றனர். இதில் ஏதாவது ஒரு பெருச்சாளி அழிந்து விடும். அல்லது என்ற ஒன்று கிடையாது. இந்த இரண்டு பெருச்சாளிகளும் மோதுகின்றனர், எனவே யாராவது ஒரு பெருச்சாளி மட்டுமே பிழைக்க முடியும்...! மரணத்தை தழுவும் அந்த பெருச்சாளி யார்...? இரண்டு பன்றிகள் சண்டையிட்டால் என்ன நடக்கும்..?


பல பன்றிக் குட்டிகள் இறந்து விடும். பின் பல பன்றிக் கூட்டம் வரும் என்றாலும், நமது கவலை என்னவென்றால், இந்த இரன்டு பெரும் பெருச்சாளிகள் மோதிக் கொள்வதால், சண்டை போட்டுக் கொள்வதால் என்ன நடக்கும்..? பார்வையாளனாக இருந்து பார்க்கும் பொழுது, ஒரு 'திரில்லிங்' சினிமா போல் உள்ளது. நமக்கு மட்டும் அல்ல இந்த சூழல்..! அரசியல் பார்வையாளர்களுக்கும் தான்..!

தமிழ் மொழியை கண்டு பிடித்த மு.க. அவர்கள் தான், இந்தியாவிலேயே மிகப்பெரும் சாணக்கியன் என்றும் சொல்கிறார்கள் பலபேர். நமக்கு இதில் மாற்று கருத்து உண்டு என்றாலும், விசயத்திற்கு வருவோம். ஆகா..! என்ன ஒரு அரசியல் முதிர்ச்சி என்றார்கள். பா.ம.க. வின் ராமதாஸ் கட்சியை எப்படி வழிக்கு கொண்டு வந்தார் நம்ம கலைஞர் என்றார்கள். அதாவது பா.ம.க. கூட்டணியில் இல்லை என்ற நிலையில், வழியே வந்து இடம் ஒதுக்கியதில் என்ன திறமை ? என்றார்கள். பிறகு இதையே காரணமாக கொண்டு காங் கூட்டத்திற்கு இடம் ஒதுக்குவதில் ஒரு நெருக்கடியை உருவாக்கி, சோனியா கூட்டத்தை தனது வழிக்கு கொண்டு வந்து விட்டார் நமது தலைவர் என்றார்கள்.

பிறகு இதுபோன்றும் சொன்னார்கள். அதாவது தமிழக தேர்தல் கூட்டணியில், விஜயகாந்த், காங்கிரஸ், பா.ம.க., கூட்டணி வந்து விடுவதை, எப்படி தலைவர் தடுத்து நிறுத்தியது மட்டும் அல்ல. அந்த சிந்தனைக்கே முற்றுப் புள்ளி வைத்து விட்டார் என்றார்கள். இதற்கெல்லாம் முன், இந்த அலைவரிசை ஊழல் வந்து ஆ.ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளே நுழைந்ததும், தனது பங்காளியான ஹிந்து பத்திரிக்கை மூலம் இஸ்ரோ ஜி ஊழலை கொண்டு வந்தார் நம்ம கலைஞர். அதாவது 1.70 லட்சம் கோடிகள் ஊழலை விட அதிகமான சுமார் 2 லட்சம் கோடி ஊழலை. இப்படி சதுரங்க போர்டுகளில் உள்ள காய்களை விட, வெளியில் கொண்டு வந்து பல காய்களை நகர்த்தி ஆட்டத்தை தொடர்ந்தார் நம்ம கலைஞர்.

நிஜமாகவே கோல்ப் விளையாடும் நம்ம அடுத்த இந்திய பிரதமர் ராகுல், என்ன ஐயா..! இந்த கிழவன் தொந்தரவு மேல் தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருக்க்றாரே..? இதே போல் முன்பு காங்., கட்சிக்கு பெரும் தொந்தரவு கொடுத்த என்.டி.திவாரியை எப்படி வழிக்கு கொண்டு வந்தோம்..? அதுபோல எல்லா தகுதியும் உள்ள இந்த செந்தமிழ் மொழியை உருவாக்கிய மு.க.வை ஏன் கொண்டு வர முடியாது நமது வழியில்..? என்று கருதி, அறிவாலயத்தில் உள்ளே புகுந்து சி.பி.ஐ. ரைடை நடத்தி ஒரு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார் நம்ம ராகுல் ஜி.

உடனே மு.க. அவர்கள் தங்களிடம் உள்ள மீடியாக்களின் உதவியோடு இந்த செய்திகள் எதிலும் வராதவாறு பார்த்துக் கொண்டார். வட நாட்டு மீடியாக்களில் வந்தால் என்ன..? தமிழ் நாட்டில் உள்ள மீடியாக்களில் வரவில்ல எனவே, மற்ற மாநிலங்களில் வரும் செய்திகளை 'பொய்' என்ற பார்க்கும் பக்குவம் திராவிடர்களுக்கு உண்டு, தமிழர்களுக்கு உண்டு... என்று நம்ம செந்தமிழ் காவலருக்கு தெரியாதா என்ன..? இதுபோல அரசியல் சதுரங்கப் போர்டுகளில் விளையாடி, அந்த போர்டுக்கே தாங்க முடியாமல் உடைந்து விட, புது அரசியல் சதுரங்க பலகையை கொண்டு வந்து மு.க. அவர்கள் வலுக்கட்டயாமாக விளையாட அழைத்து, பெரும் எரிச்சலை உருவாக்கிக் கொண்டு வந்து விட்டார் என்று பல சதுரங்க விளையாட்டு வீரர்கள் சொல்கிறார்கள். உண்மை என்ன என்று நமக்கு தெரியவில்லை.

அதாவது, புரட்சியை உருவாக்க இருக்கும் விஜகாந்த், அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து விடக் கூடாது என்பதில் அதிக கவனத்தை செலுத்திய நடை வண்டி பெரியவர், கொ.மு.க., இப்படி ஒரு கட்சி வந்து விட்டது கடந்து முடிந்த தேர்தலில்..ஈஸ்வரன்..? பெயர் எல்லாம் நன்றாக இருக்கிறது..எப்படி ஐயா..? சேர்ந்தீர்கள்..? உண்மையிலேயே நீங்கள் ரொம்ப நல்லவர். இல்லையென்றால் சவக்குழிக்கு செல்லும் ஒரு கட்சியின் பிட்டத்தை தாங்கி பிடிப்பது என்பது என்ன சாதாரண விசயமா..? இவருடன் கூட்டணி, இடையில் மீசையை மட்டும் அடையாளமாக கொண்ட தொல் அவர்கள் முன்பு சொன்னார்கள். அதாவது, எங்கள் உறவு என்பது தொகுதி அடிப்படையில் இல்லை, எத்துனை சீட்டு என்பதில் இல்லை என்று சொன்னார். புரட்சியை எந்த விதத்திலும் கொண்டு வர துடிக்கும் தொ..அவர்கள். கடைசியாக பத்து இடங்களை பெற்று விட்டார்.

ஏற்கனவே, ஒரு விசயம் உள்ளது. இப்பொழுது நடக்கும் இந்திய மாநில தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஐந்து மாநிலங்களில் தேர்தல்.. அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளா மற்றும் தமிழ்நாடு. என்ன சிறப்பு இந்த ஐந்து மாநிலங்களில்..? அரசியல் தான் வேறு என்ன..? இவையெல்லாம் சாதாரண மாநிலங்கள் இல்லையே...! தமிழக தேர்தல் ஏப்ரல் 13 - ம் தேதி என்று அறிவித்து விட்டார் குரோசி என்ற தலைமை தேர்தல் அதிகாரி..! முடிவு மே மாதம் இறுதியில் என்ற நிலையில், நம்ம மு.க. அவர்கள் இந்த தேர்தல் தேதியை அறிவித்தவுடன், இந்த தேதியில் தேர்தல் நடத்துவது என்பது, உகந்தது இல்லை என்றார். மற்ற ஏனைய கட்சிகள் பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கிறது என்றார்கள். மாணவர்களை பாதிக்கும் என்றார்கள். இன்னும் பலவேறான காரணங்களை சொன்னார்கள்.

இறுதியில் சொல்லி விட்டார்கள் தமிழக தேர்தலை நடத்தும் கமிசன். தேதியை மாற்றவதற்கு வாய்ப்பே இல்லை என்று. நமக்கும் ஒரு மைல்டாக ஒரு டௌட் வந்தது. என்ன ஒரே குழப்பமா இருக்கே..? இந்த தேர்தல் தேதி அறிவித்ததில் என்று..? இப்பொழுது இந்த டவுட் சரியாகி விட்டது. எப்படியென்றால், ஏற்கனவே இந்த மம்தா பானர்ஜி அவர்கள், இந்த இத்துப்போன தி.மு.க. கும்பலை, கூட்டணியில் இருந்து கழற்றி விடாவிட்டால், நான் மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற முடியாது, இந்த மு.க. கும்பலுக்கு சற்றும் குறைவில்லாத சி.பி.எம். கும்பல் வேறு உள்ளது மாநிலத்தில் என்று. எனவே, இந்த தி.மு.க கட்சி...காங் கூட்டணியில் இருக்க கூடாது என்று கடும் நிபந்தனைகளை கூறி வருகிறார் நம்ம மம்தா அவர்கள்.

பாருங்கள் எப்படியெல்லாம் வருகிறது கெட்ட நேரம்..காலை விடாமல் கவ்விப் பிடித்து கொண்டிருக்கிறது. எல்லாம் ஒருவேளை, ஒரு லட்சம் காவல் தெய்வங்களின் சாபமோ..? அல்லது கெட்ட ஆவிகளின் பில்லி சூனியமோ..? உடனே, செந்தமிழ் காவலர் சங்கர மடத்திற்கு சென்று பரிகாரம் தேட முற்படுவாராயின் அதுவும் மேலும் கொள்ளிவாய் பிசாசை கொண்டு வந்தது போல ஆகிவிடக் கூடாது..! எப்படியெல்லாம் நாம் யோசிக்க வேண்டியுள்ளது இந்த தேத்தல் சதுரங்க ஆட்டத்தில்...!

எனவே, திருமதி மம்தா அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, தனது மேற்கு வங்க மாநிலத்தில் மே மாதம் தான் ஆறு கட்ட தேர்தல் நடக்கப் போகின்றன. அதற்குள் அதாவது ஏப்ரல் 13 அன்று, தமிழக தேர்தலை முடித்து விட்டால், பிறகு கனிமொழியை கைது செய்தால் என்ன..? 'காகிதப் பூ' நாயகியை கைது செய்தால் என்ன..? கொலைஞர் டி.வி யை முடக்கினால் என்ன..? என்று சதுரங்க விளையாட்டில் கொடி கட்டிப் பறந்த நமது செந்தமிழ் தலைவர் அவர்களுக்கு, கோல்ப் விளையாட்டு வீரர் அதாவது ஒரு சுள்ளான் எப்படி செக் வைத்திருக்கிறார் பாருங்கள்...!

இவையெல்லாம் தெரியாமல், வைக்கோ மற்றும் ஏனைய இடது சாரிகள் சொல்கிறார்கள், மாணவர்கள் தேர்வு பாதிக்கப்படும் இந்த தேத்தல் நடந்தால் என்று. மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்..? ஏன் எதற்கு..? பாதிக்கப்பட்டால் என்ன நட்டம் நாட்டிற்கு..? மேலும் நமது தமிழ் மொழியை கண்டு பிடித்து நாட்டிற்கு இலவசமாக வழங்கிய செந்தமிழர் அவர்கள் இன்று ஒரு செய்தியை ஆந்திராவில் இருந்தும் மும்பையில் இருந்தும் வெளிவந்த 'மிட் டே' என்ற பினாமி செய்தி தாள் ( பின் என்ன..? இருக்கும் வட நாட்டு தொலைக்காட்சி மீடியாக்களில் வரும் செய்திகள் ஒன்றும் வர மாட்டேன்கிறது தமிழக மீடியாக்களில்....தி.மு.க. கும்பலின் ஊழல் மற்றும் பெரும் மோசடிகள்..) சொல்வதாக சொல்லுகிறார். புனே நாட்டில் அல்ல நகரில் உள்ள ஹசன் அலி வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்புப்பணம் இந்த ஜே. அம்மையாருடையது என்று.

அய்யா..! ஜே. ஒன்றும் உங்கள அளவிற்கு யோசனை சொல்லும் பன்றிக் கூட்டங்களை கொண்டவர் கிடையாது. அது எப்படி முபாரக், கடாபி இவர்கள் ரேஞ்சுக்கு மு.க. குடும்பம்..? நமல், இஸ்லாம் கடாபி, மாறன் வைகையறாக்கள் பின்னணி குறித்து எல்லாம் யோசிக்க வேண்டியுள்ளது..? கூட்டுக்கு மேல் கூட்டு..கொள்ளைக்கு மேல் கொள்ளை..! மக்களாவது... மயிராவது...? என்பதில் எல்லாரும் குவியும் புள்ளி தான் இதுவோ..? சுருங்கக்கூறின் மு.க. அவர்கள் சதுரங்கம் ஆடுகிறாராம்..! வார பத்திரிக்கைகள் சொல்லி சொல்லி மாய்ந்து போகின்றன. ஆனால் நாம் சொல்லுகிறோம்..! மு.க. அவர்கள் ஆடும் சதுரங்கத்தில் கண் தெரியாமல், நடக்க முடியாமல் உள்ள நம்ம மு.க. அவர்கள், இந்த பாழும் வயதில் காங் கூட்டம், இந்த இத்துப்போன திவாரி விசயங்களை கொண்டு வராமல் இருக்க வேண்டும்..!

இறுதியாக், மனோகரா வசனம் தான் நமக்கு வருகிறது..? ;நாளை நடப்பதை யார் அறிவார்..' ! என்றாலும் யாரும் அறிவார்கள் நாளை நடப்பதை என்றும் சொல்லலாம்...!

சங்கிலிக்கருப்பு
ஈழதேசம் பார்வையில்...!

Comments

Nalliah said…
தமிழக தேர்தல்
Nalliah said…
1967-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் தனியாகப் போட்டியிடும் வலிமையோ, துணிவோ தி.மு.க.வுக்குக் கிடையாது. 1972-ம் ஆண்டிலிருந்து அ.தி.மு.க.வும் தனித்துப்போட்டியிட துணியவில்லை.

கூட்டணிக் கட்சிகளின் தோள் மீது ஏறி இரு கழகங்களும் தங்களை உயரமாகக் காட்ட முற்படுகின்றனவே தவிர, தனித்து நின்று தங்களின் குள்ள உருவத்தை அம்பலப்படுத்திக் கொள்ள முன்வரவில்லை.

ஆனால், தாங்கள்தான் பெரிய கட்சிகள் என்பதைப் போலவும், கூட்டுசேரும் கட்சிகள் எதுவானாலும் தங்களின் தயவில்லாமல் வெற்றிபெற முடியாது என்பதைப் போலவும் ஒரு மாயையை உருவாக்கி, மற்ற கட்சிகளுக்குப் பிச்சை போடுவதைப் போல சில தொகுதிகளைக் கொடுத்து ஆட்டிப்படைக்க இரு கழகங்களும் தவறுவதில்லை.

1967-ம் ஆண்டிலிருந்து இன்று வரை 44 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தர்ப்பவாத அடிப்படையில் பதவிப் பங்கீட்டுக் கூட்டணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இரு கழகங்களின் பல்லக்குத் தூக்கிகளாகத்தான் கூட்டணிக் கட்சிகள் இருக்க வேண்டும் என இரு கழகத் தலைமைகளும் கருதுகின்றன.

கூட்டணியில் உள்ள கட்சிகளை எவ்விதக் காரணமும் இல்லாமல் கழற்றிவிடுவதும், மீண்டும் வெட்கமில்லாமல் சேர்த்துக் கொள்வதும் இரு கழகங்களுக்கும் ஆகிவந்த கலையாகும்.

கூட்டணியில் சேர்ந்த பாவத்துக்காகக் கட்சிகள் இரு கழகங்கள் குறித்து எவ்வித விமர்சனமும் செய்வதைச் சகித்துக்கொள்ளும் பக்குவம் கழகத் தலைமைகளுக்கு அறவே கிடையாது. ஜனநாயக ரீதியில் கழக ஆட்சிகளின் குறைகளைக் கூட்டணிக் கட்சிகள் சுட்டிக்காட்டினால் அதைப் பொறுத்துக்கொள்ளும் பக்குவமோ தவறுகளைத் திருத்திக் கொள்ளும் குணமோ கழகத் தலைமைகளுக்கு இருப்பதில்லை. மாறாகக் கூட்டணியில் உள்ள கட்சிகளை மிரட்டுவதும், அவதூறுகளை அள்ளி வீசுவதும், கூட்டணியில் இருந்து நீக்குவதும் போன்ற பாசிசப் போக்கு இரு கழகத் தலைமைகளுக்கும் நிறையவே உண்டு.

கூட்டணிகளில் யாரைச் சேர்ப்பது, யாரை நீக்குவது என்பது போன்ற முக்கிய பிரச்னைகளில் முடிவெடுப்பது கழகத் தலைமைகள் மட்டுமல்ல. தலைமைகளின் குடும்ப உறுப்பினர்களும் அல்லது குடும்பத்துக்கு நெருக்கமானவர்களும் இதில் தலையிடுகிறார்கள். அவர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப முடிவுகளை இரு கழகத் தலைமைகளும் எடுக்கின்றன. இதில் இருவருக்குமிடையே எவ்வித வேறுபாடும் கிடையாது.

குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்ல, வேறு சிலரும் கூட்டணிக் கட்சிகள், வேட்பாளர்கள், ஆகியோரின் தேர்விலும் தலையிடும் அவலப் போக்கு இரு கழகங்களிலும் நீடிக்கிறது.

மணல் திருடர்கள், கிரானைட் கொள்ளையர்கள், நாட்டு வளங்களைச் சூறையாடுபவர்கள், இயற்கைச் சூழலை மாசுபடுத்தும் மாபாவிகள், சாராய சாம்ராஜ்யவாதிகள் போன்ற சமூக விரோதக் கூட்டமும் இரு கழகங்களின் தலைமைகள் எடுக்கும் முடிவுகளைத் திருத்தவும், திசை திருப்பவும் சக்தி படைத்தவைகளாகத் திகழ்கின்றன.

தேர்தல் கூட்டணிக் கட்சிகளைவிட மிகஅதிகமான செல்வாக்குப் படைத்ததாக இந்தக் கொள்ளைக் கூட்டணிகள் விளங்குகின்றன. தேர்தல் கூட்டணிகளையே இவர்கள் தீர்மானிக்கிறார்கள். எவ்வித கூச்ச நாச்சமற்றவர்கள், மனசாட்சியை மறந்தவர்கள், தடித்த தோலர்கள், பஞ்சமா பாதகங்களுக்கும் அஞ்சாதவர்கள் கைகோத்து நிற்கிறார்கள். தமிழக அரசையும், அதை நடத்தும் இரு கழகத் தலைமைகளையும் தங்களின் பண வலிமையால் ஆட்டிப் படைக்கிறார்கள்.