![](http://athirvu.com/phpnews/images/Nandha.jpg)
அதுமட்டுமல்லாது, இறுதி 12 நாட்கள் படப்பிடிப்பின்போது, தான் உண்மையாகவே சாப்பிடாமல் நீரை மட்டும் அருந்தி படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக அதிரடியா அறிவித்தும் உள்ளார். தியாகி திலீபன் அவர்கள் எவ்வாறு தன்னை வருத்தி, உண்ணாவிரதம் இருந்தாரோ, அதன் வலி, ரணம், அதன் உண்மையான வடிவத்தை தான் நிச்சயம் பிரதிபலிப்பேன் எனக் கூறிய நடிகர் நந்தா, உணவை உட்கொள்ளாமல் நடிக்கவிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தியாகி திலீபனின் வாழ்க்கை வரலாறு படம் மிகவிரைவில் வெளியாகவுள்ளது. உண்மையான அர்பணிப்போடு நடிகர் நந்தா இந்தத் திரைப்படத்தில் நடிப்பதும், இப் படக்காட்சிகள் தத்துரூபமாக படமாக்கப்படவுள்ளதும் பாராட்டுதலுக்கு உரியவிடையமாகும். இப் படத்தில் வீரகாவியமாகிய தியாகி திலீபனின் பல உண்மைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
Comments