தமிழகத் தமிழர்கள் அயல்இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும்: பெ.மணியரசன்

தமிழ்நாட்டுத்தமிழர்கள் விழிப்பணர்வுடன் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும்” என்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேசினார்.

கவிவீச்சு

சிதம்பரத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிசார்பில் “தமிழர்தொழில், வணிக, கல்வி பாதுகாப்பு மாநாடு” நடந்தது. சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் நடந்தஇம்மாநாட்டிற்கு, தோழர் பெ.சவுந்திரராசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர்கள் கவிபாஸ்கர்,இராசா இரகுநாதன், கோ.கவித்துவன், புலவர் நாகேந்திரன் உள்ளிட்டோர் கவிவீச்சு நிகழ்த்தினர்.

மலர் அரங்கம்

தமிழ்நாட்டுத்தமிழர்களின் தொழில், வணிகத்தை ஆக்கிரமித்துள்ள அயல் இனத்தார் குறித்த தகவல்கள்அடங்கிய மாநாட்டு மலரை குடந்தைத் தமிழ்க் கழகத்தின் செயலர் திரு. சா.பேகன் வெளியிட,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அ.பு.நடராசன், பொருளியல் துறைபேராசிரியர் ஜி.இரவி, சிதம்பரம் சிறுதொழில் முனைவர் அமைப்பின் திரு. செல்வ.கதிரவன்ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மலர் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினர்.

பாராட்டுஅரங்கம்

கடந்த09.03.2011 அன்று தஞ்சையில் மலையாள ஆலுக்காஸ் நகைக்கடை மறியல் போராட்டத்தில் சிறைசென்ற 120 த.தே.பொ.க. தோழர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு,மக்கள் உரிமைப் பேரவையின் அமைப்பாளர் வழக்குரைஞர் த.பானுமதி தலைமை தாங்கினார். தமிழ்நாடுமாநில ஐந்தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கோ.சேகர்பாராட்டுரை நிகழ்த்தினார்.

தீர்மானங்கள்

மாநாட்டுத்தீர்மானங்களை குடந்தை த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் கு.விடுதலைச்சுடர் முன்மொழிந்தார்.காசுமீர், மணிப்பூர் மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் வெளி மாநிலத்தவர்கள்வீடு, நிலம், மனை வாங்கத் தடை விதிக்க வேண்டும், தமிழ்நாட்டில்வெளிமாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டையோ, குடும்ப அட்டையோ வழங்கப்படக் கூடாது, 51விழுக்காட்டுப் பங்குதாரராக தமிழர்களை சேர்த்துக் கொள்ளாத வெளிமாநிலத்தவர் மற்றும்வெளிநாட்டவர் நிறுவனங்களை தொடங்க அனுமதிக்க்க் கூடாது, தமிழக கல்வி நிறுவனங்களில் 85விழுக்காட்டு இடங்களை தமிழக மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும், தமிழகத்தில் உள்ளஇந்திய அரசு நிறுவனங்களில் 85 விழுக்காட்டுப் பணி வாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்கவேண்டும், தமிழ்நாட்டை தனி வேளாண் மண்டலமாக அறிவித்து வெளிமாநில அரிசி மற்றும்வேளாண் விளைபொருட்களுக்கு வரம்பு விதிக்க வேண்டும் என ஆறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

சிறப்பரங்கம்

மாநாட்டின் சிறப்பரங்கத்திற்கு த.தே.பொ.க.தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். த.தே.பொ.க.நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர்தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் தே.அரவிந்தன், தமிழ்த்திரைப்பட இயக்குநர் திரு. வெ.சேகர் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

திரைப்படஇயக்குநர் திரு வெ.சேகர் பேசும் போது, தமிழ்த் திரைப்பட உலகில் இன்று ஆதிக்கம் செலுத்தும் அயல் இனத்தாரின்நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். “ஈழத்தில் நம் இனம் செத்துக்கொண்டிருந்த போது திரை உலகின் சார்பில் இராமேசுவரத்தில் நாங்கள் கண்டனக் கூட்டம்நடத்த்த் திட்டமிட்டோம். அதற்கு, இயக்குநர்கள் சங்கத்தினர், தயாரிப்பாளர்சங்கத்தினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், நடிகர் சங்கத்தில் மட்டும்பேசிவிட்டு சொல்கிறோம் என்றனர். பின்னர் பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கும்,அதனால் வர முடியாது என்று சொல்லி விட்டனர். பின்னர் தான் தெரிந்தது, அயல் இனத்தைச்சேர்ந்த நடிகர்கள் நாங்கள் ஏன் இலங்கைத் தமிழர்களுக்காகப் பேராட வேண்டும் என்றுசொல்லிவிட்டு வர மறுத்தனர். இந்தளவிற்கு நடிகர்கள் சங்கத்தில் அயல் இனத்தார்ஆக்கிரமிப்பு உள்ளது” என்று அவர் பேசினார்.

மாநாட்டை நிறைவுசெய்து பேசிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர்பெ.மணியரசன், “தமிழ்இனம் அறிவுச் சமூகமாக திகழ்ந்து வந்த ஓர் இனம். அலெக்சாண்டருக்கு சேலத்திலிருந்து செய்யப்பட்டவாள் தான் கொண்டு செல்லப்பட்டதாக ஓர் ஆய்வாளர் கூறுகிறார். இப்படிப்பட்ட ஓர்அறிவுச் சமூகத்தில் பிறந்த தமிழ் பொற்கொல்லர்கள் இன்று அயல் இனத்தாரின்ஆதிக்கத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நீடித்து வருகின்றது.இந்நிலையை மாற்ற, தமிழ்நாட்டுத் தமிழர்கள் விழிப்பணர்வுடன் அயல் இனத்தாருக்கு எதிராகஅணி திரள வேண்டும்” என்றுபேசினார்.

கடலூர்மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி, தஞ்சை, ஓசூர், கோவை, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி,சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் த.தே.பொ.க தோழர்களும்,தமிழ் இன உணர்வாளர்களும் இந்நிகழ்வில் திரளாகப் பங்கேற்றனர். நிறைவில், தோழர் பா.பிரபாகரன்நன்றி நவின்றார்.

Comments

தமிழகத்திலுள்ள வட இந்தியர் கள் வெளியேற வேண்டும். அல்லது வெளியேற்றப்படுவார்கள் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் திட்டவட்ட மாகத் தெரிவித்திருக்கின்றனர் குறிப்பாக, மார்வாரி, குஜராத்தி ஆகிய இருதரப்பினர் மீதே திராவிட இயக்கத்தினர் நேரடித் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். தமிழ் நாட்டில் வாழும் மார்வாரி, குஜராத்தி மக்களின் ஜனத்தொகை அதிகமில்லை. 1941ம் ஆண்டு ஜனக் கணிதப்படி தமிழகத்தில் வாழும் குஜராத்தியர் 5309பேர். மார்வாரிகள் 1260பேர். இவர்களைத் தவிர வடஇந்திய மக்கள் என்ற பொதுக்கணக்கில் வருபவர்கள் 15,000 பேருக்கு மேல் இல்லை. இவர் களையெல்லாம் தமிழகத்திலிருந்து விரட்டிவிடுவதுதான் அல்லது இவர் களுக்கெல்லாம் தமிழகத்தில் வாணிபம், தொழில் செய்ய உரிமை இருக் கக்கூடாது என்பதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை என்றால், இதன் எதிரொலியாக வெளிநாடுகளில் வாழும் தமிழருக்கு நேரக்கூடிய இன் னல்களையும் கவனிக்கவேண்டும். இந் தியாவிலேயே பம்பாய் ராஜ்யத்தில் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். வங்காளத்திலும் 50 அல்லது 60 ஆயிரம் தமிழர்கள் வாழ் கிறார்கள். பொதுவாகச் சொன்னால் சுமார் ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வேங்கடத்துக்கு வடக்கே யுள்ள விந்தியப்பகுதிகளில் இருக்கின் றனர். தமிழகத்திலிருந்து சுமார் 20,000 வடஇந்தியர்களை விரட்டுவதானால், வடக்கேயுள்ள ஐந்து லட்சம் தமிழர்களும் விரட்டப்படுவது எதிர்பார்க்கப்பட வேண்டியதுதான். இந்த நிலையை ஏற்படுத்துவது தமிழருக்கு நன்மை செய்தாகுமா?

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14141&Itemid=139