தமிழீழ தனியரசு மலர்வது, இந்தியாவிற்கும், சிங்கள இனத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும்

தமிழீழ தனியரசு மலர்வது, இந்தியாவிற்கும், சிங்கள இனத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும் என்று, புலவர் புலமைப்பித்தன் கூறியுள்ளார்.

பெல்ஜியம் தலைநகர் பிறசல்ஸில், பொங்கு தமிழாக அணிதிரண்டு நின்ற தமிழீழ உறவுகளின் மத்தியில் சிறப்புரையாற்றியபுலவர் புலமைப்பித்தன்,

ராஜபக்~விற்கு இந்தியா துணைபோவது என்பது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழீழ தனியரசு மலர்வது, தமிழினத்திற்கு மட்டுமன்றி,இந்தியாவிற்கும், சிங்கள இனத்திற்கும் உகந்த தீர்வாக அமையும்என்றும், புலவர் புலமைப்பித்தன் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், உலகில் சகல வல்லமைகளையும் கொண்டஒரேயொரு விடுதலை இயக்கமாக,
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு திகழும் நிலையில்,
புலம்பெயர்ந்து வாழும் தமிழீழமக்களின் எழுச்சி,
போராளிகளின் கரங்களைப் பலப்படுத்தும்

என்றும் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments