இந்திய அரசினைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்ளையும் தமிழக மீனவர்களையும் படுகொலை புரியும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்வதைக் கண்டித்து சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

இது தொடர்பில் அனைத்து கட்சி மற்றும் அனைத்து தமிழ் அமைப்புக்களின் கூட்டுக்குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஈழத்தமிழர்ளையும் தமிழக மீனவர்களையும் படுகொலை புரியும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்வதைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் நாளை நடத்துவதாக இருந்த பேரணியை ஆர்ப்பாட்டமாக நடத்துமாறு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

எனவே, திட்டமிட்டபடி பெரியார் சிலை முன் கூடுவதற்கு பதில், அனைவரும் சேப்பாக்கம் விருந்தினர் விடுதிக்கு எதிரே வந்து கூடும்படியும் அங்கு சரியாக பிற்பகல் 4:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பெருந்திரளாகக் கூடி நமது கண்டனத்தை தெரிவிக்க முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments