நளினியை விடுதலை செய்யக்கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் தொடர்புடையதாகக் கூறி சிறையில் ஆயுள் தண்டனை பெற்றுவரும் நளியை விடுதலை செய்யக் கூடாது என தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினியால் முன்வைக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு கடந்த 19ம் நாள் எடுத்துக்கொண்ட நீதியாளர் நாகமுத்து வழங்கை தள்ளி வைத்தார். இன்று மனு மீதான வழக்கை எடுத்துக்கொண்ட நாகமுத்து நளினியை விடுதலையைச் கூடாது என்ற உத்தரவை சென்னை நீதிமன்றம் நிராகரித்துள்ளதோடு, சிறைதுறை விதிகளுக்கு உட்பட்டு தமிழக அரசு மனுவை மறுபரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவு செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி படுகொலையுடன் தொடர்புடையதாகக் குற்றம் சுமத்தப்பட்ட நளினிக்கு முதலில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

பொதுவாக இந்திய சிறைத்துறை விதிகளுக்கு அமைவாக குற்றவாளி ஒருவருக்கு ஆயுட்காலத் தண்டமை வழங்கப்பட்டால் அவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையைப் பெற்று வந்தால் அவரை விடுதலை செய்துவருகின்றது அரசு.

இந்த நிலையில் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று வரும் என்னை ஏன் விடுதலை செய்யவில்லை, நன்நடத்தை அதிகாரிகள் பரிந்துரை செய்தும் ஆலோசனை ஆணையகம் அதனைப் பரிசீலனை செய்யாது தனது விடுதலையை மறுத்து விட்டது என நளினி தனது மனுவில் குறிப்பிட்டு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

Comments