கனடாவில் “பிரபாகரன்” திரைப்படத்தை தடைசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது

கனடாவில் எதிர்வரும் 20 மற்றும் 21ம் திகதிகளில் திரையிடப்படவுள்ள “பிரபாகரன்” என்ற திரைப்படத்தைத் திரையிடக் கூடாதென வலியுறுத்தும் வகையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கனடிய அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது.

பிரபாகன் திரைப்படம் திரையிடப்படுவதனை தடுக்கும் வகையில் பொலிஸாரிடமும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அனுமதி கோரியுள்ளது.


இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான கோரிக்கைக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என கனேடிய அரச வட்டாரத் தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments