இந்தி தேசியத்தின் பின்னூட்டலிருந்து

இந்தியப் பேராயக்கட்சியினர் அதாவது காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் இந்திய விடுதலைக்காக அளப்பரிய தியாகங்களை செய்தவர்கள் என்றெல்லாம் இன்னமும் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தகுதியை இவர்கள் இழந்து நீண்ட நாட்களாகிவிட்டது.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில்; யுலியன் வாலாபாக் படுகொலை பிரித்தானிய முடியாட்சியின் கொடுரத்தனத்துக்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடப்பட்டு வருகிறது.அப்பாவி மக்களை நாயை சுடுவதைப் போல சுட்டுக் கொன்ற பிரித்தனிய படையினரின் கொலை வெறியை இந்திய வரலாற்றாளர்கள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிருக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியினர் இந்தகைய கொடுமைமிக்க அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி அளப்பரிய தியாகம் செய்து இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததாக மார் தட்டிக் கொள்கிறார்கள்.

ஆனால் அதே காங்கிரஸ் அரசால் வழி நடத்தப்பட்ட இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பேரில் ஈழத்தில் என்ன செய்தது?

யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்குள் புகுந்து அப்பாவி நோயாளர்கள் மருத்துவர்கள் மருத்துவ தாதிகள் என்று 20 க்கும் மேற்பட்டவர்களைவ ஈவிரக்கமின்றி சுட்டுப்படுகொலை செய்ததை சொல்லவா?…..

விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுக்க மறுத்த அப்பாவி மக்களை கட்டி இழுத்து வந்து தரையில் வரிசையாக படுக்க வைத்து யுத்த டாங்கியை ஏற்றிப்படுகொலை செய்த வெறித்தனத்தை செல்லவா?

வடமாரடாட்சிக் கோட்டம் உடுப்பிட்டி என்ற இடத்தில் கலைவிழி என்ற பெண் குழந்தை பெற்று 24 நாட்களே ஆன நிலையில் வீட்டில் இருக்க அவளைப் பார்ப்பதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த அவளது சொந்தத் தம்பி வந்திருந்தான்.

அவளது கணவன் அன்றைய சமையலுக்கு வேண்டிய பொருட்களை வாங்க சந்தைக்குச் சென்றிருந்தான்.

அந்த நேரம் பார்த்து இந்திய காங்கிரசின் அமைதிப்படை அந்த இடத்தை சுற்றிவழைத்த தேடுதல் நடத்தியவாறு அவளது வீட்டுக்கு வந்தது.

யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகள் அல்லது அவர்களை ஆதரிப்பவர்கள் என்று இந்திய படை கருதுகிறது என்பதையும் பல மாணவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது என்பதையும் பத்திரிகை செய்திகள் வாயிலாக அறிந்திருந்த அந்தப் பெண் தனது சொந்தச் சகோதரனை காப்பாற்றுவதற்காக அவனை தனது கணவன் என்று கூறிவிடுகிறாள்.

அந்த நேரம் பார்த்து அவளது கணவன் விடு திரும்ப அவன் மூலமாக உண்மையைத் தெரிந்து கொண்ட இந்திய படை “உனக்கு யார் உண்மையான கணவன் என்பதை நிருபிக்க அவளது சொந்தத் தம்பியுடன் அவளது கணவன் மற்றும் தங்களின் (16 பேர்) முன்பாக உடலுறவு கொள்ளுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டி அசிஙப்படுத்துகிறது.

அவளது 24 நான்கு நாள் குழந்தையினதும் அவளது கணவனதும் தலையில் துப்பாக்கியை வைத்து அந்த கொடூரத்தனத்தை அரங்கேற்ற வைத்த அதைப் பார்த்து இரசிக்கிறது.இறுதியில் அந்தப் பச்சிளம் குழந்தை உட்பட அந்த நால்வரையும் சுட்டு விட்டு செல்கிறது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் அந்தப் பெண் அவளது குழந்தை அவளது தம்பி அனைவரும் கொல்லப்பட அவளது கணவன் உயிர் தப்பி இதற்கான சாட்சியாக இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான்

குழந்தை பெற்று 24 நாட்களே ஆன ஒரு பெண்ணை அவளது தம்பியைக் கொண்டே பலர் முன்னிலையில் வல்லுறவுகொள்ள வைத்து ரசித்த கொடூரத்தை பிரித்தானிய காலணி இராணுவம் இந்திய சுந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் செய்ததாக வரலாறே இல்லை?

பிரித்தானிய காலணி அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி மேற்கொண்ட உண்ணா நோன்புப் போராட்டங்களைப் பற்றி பெருமை பேசும் காங்கிரசார் அதை வழியை பின் பற்றி உண்ணா நோன்பிருந்த தியாகி திலீபனுக்கும் அன்னை புபதிக்கு என்ன செய்தார்கள்?

காங்கிரஸ் காரர்களால் கொடுமையான பிரித்தானிய அரசு என்று வர்ணிக்கப்படும் அந்த அரசு மகாத்தா காந்தியை சாக விடவில்லையே. திலீபனையும் அன்னை புபதியையும் சாகவிடாமல் தடுத்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு உண்ணா நோன்பு அகிம்சை பற்றி பேசுவதற்கு தகுதி இருந்திருக்கும்.

இன்றைக்கு தமிழகத்தில் வீச்சருவாள் வெட்டுக்கம்பு அடிதடி கலாச்சார அரசில் நடத்தும் காங்கிரசார் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வாச்சவமால்களை விடும் காங்கிரசார் தங்களது ஆட்சிக்காலத்தில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் இழைத்த கொடுமைகளை விசாரிப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை அமைப்பதற்கு தயாரா?

ஆல்லது இந்திய மட்டத்திலேயாவது நேர்மையான நீதியாளர்களைக் கொண்டு நீதியான ஒரு விசாரணையை நடத்த தயாரா?

இதைச் செய்வதற்கு நீங்கள் தயாராக இல்லை என்றால் தயவு செய்து தியாகம் விடுதலை அகிம்மை என்பதைப் பற்றி எல்லாம் பேசாதீர்கள்.

இந்திய நலன் என்று செல்லிக் கொண்டு மேற்குலக ஏகாதிப்பத்தியங்களுக்கு அப்பாவி இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை விற்காதீர்கள்

சிவா சின்னப்பொடி

Comments