தமிழகத்தில் பேரெழுச்சி, ஈழப் போராட்ட வரலாற்றில் பெரும் மாறுதல்களைத் தோற்றுவித்துள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழகத்தில் உருவாகியுள்ள பேரெழுச்சி, ஈழப் போராட்ட வரலாற்றில் பெரும் மாறுதல்களைத் தோற்றுவித்துள்ளது. தடுத்து நிறுத்தும் தற்காப்புச் சம?னை ?ன்னெடுக்கும் விடுதலைப் புலிகள், அழித்தே தீருவோமென வ?ந்து கட்டிக் கொண்டு நிற்கும் தென்னிலங்கை மற்றும் இடம்பெயரும் மக்களென இறுக்க நிலையடைந்துள்ள களநிலைமைகள் மோசமடையும் போது தமிழக இன உணர்வலைகள் எழுந்து நிற்கின்றன.


தமிழின அழிப்பிற்கு, படைக்கல உதவி பு?ந்த இந்திய அரசின் மறை?கத் தலையீடு, வவுனியா படைத்தளம் மீதான தாக்குதலின் போது அம்பலமானதால் தமிழக எழுச்சிக்கான அடித்தளம் தோற்ற?ற்றது.

இந்திய பொதுவுடமைக் கட்சியின் உண்ணா விரதப் போராட்டத்தினூடாக பல செய்திகள், தமிழ் நாட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்திய அமெ?க்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கெதிராக கம்யூனிஸக் கட்சிகள் ?ன்னெடுத்த நாடாளுமன்றப் போராட்டங்கள் வழங்கிய தாக்கங்கள், அக்கட்சியினர் குறித்த அரசியல் விழிப்புணர்வினை தமிழக மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த ?ன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களின் அவலநிலை பற்றிய செய்திகளும், தமிழக மக்களை துன்பத்திலாழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அ.தி.?.க. தலைவி செல்வி ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் குறிப்பிட்ட இருவகைப்பட்ட ?ரண்நிலைக் கருத்துக்கள், பா?ய தாக்கத்தை தமிழக கட்சிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உ?மையை அங்கீக?க்கும் அதேவேளை விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை அவர் நிராக?த்துள்ளார். இதனையடுத்து சர்வகட்சி கூட்டத்திற்கான அழைப்பொன்று தமிழக ?தல்வ?னால் விடுக்கப்பட்டது. அதனைப் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.?.க. நிராக?த்து, வலுவற்ற விளக்கங்களை ?ன்வைத்தது.

இருப்பினும் 14 ஆம் திகதி கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் மத்திய அரசை நோக்கி ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) ஸ்ரீலங்காவில் போர் நிறுத்தம் உடனடியாக அ?ல்படுத்த வேண்டும்.


2) இந்திய அரசு ஆயுதம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.


3) போர் நிறுத்தம் நடைபெறாவிட்டால் இரண்டு வாரத்துள் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்.


4) போர் நிறுத்தம் நடை?றைக்குள்ளாகி, பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்தோர்க்கான அடிப்படை மனிதாபிமான உதவிகளை மத்திய அரசு செய்ய ?ன்வர வேண்டும்.


5) உதவிகள், பாதிப்புற்றோரை நேரடியாகச் சென்றடைவதனை உறுதி செய்ய, சர்வதேசெஞ்சிலுவைச் சங்கத்தின் துணையினை மத்திய அரசு பயன்படுத்த வேண்டும்.


6) ஸ்ரீலங்கா கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்தி, நிலையான தீர்வொன்றை எட்டி, அதனை நடை?றைப்படுத்த வேண்டும்.

இந்த அழுத்தமான ஆறு தீர்மானங்களையும் எவ்வாறு மத்திய அரசு உள்வாங்கி, தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்பதே மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ள கேள்வியாகும்.

வருகிற 28 ஆம் திகதிக்கு ?ன்பாக போர் நிறுத்தம் ஏற்படக் கூடிய சூழலை இந்திய மத்திய அரசால் உருவாக்க ?டியுமாவென்பது சந்தேகமே.

ஏற்கனவே விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பினைப் பலவீனப்படுத்த வேண்டுமென்கிற நிலைப்பாடு, இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் மத்தியில் ஆழமாக வேரூன்றி உள்ளது.

ஆனாலும் ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ?துகெலும்பாகவும், ஆதர்ஷ சக்தியாகவும் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் விளங்குகிறார்கள்.

சர்வதேச சமாதான ஒப்பந்தங்களிலும் அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தைகளிலும் அங்கீக?க்கப்பட்ட தமிழர் தலைமையாக, விடுதலைப்புலிகள் அமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம், மிகத் தெளிவான உண்மையானது.

கிழக்குப் பின்னகர்வும் வன்னியில் மேற்கொள்ளும் தற்காப்புத் தாக்குதல் ப?மாண?ம், ஆயுதப் போராட்டத் தலைமையின் பலவீனமான பகுதியாக எடை போடும் இந்திய அரசு, தமிழக அழுத்தங்களோடு ஆசியப் பிராந்தியத்தில் உருவாகும் அரசியல் மாற்றங்களையும் தவறாக எடைபோட ?யற்சிக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை அமெ?க்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் ஸ்ரீலங்காவில் சீனா, பாகிஸ்தானின் செல்வாக்கு அதிக?க்கக் கூடாதென்கிற நிலைப்பாடு அவசியமான விடயமாகத் தென்படுகிறது.

தமிழக உறவினைச் சீர்குலைத்தால், ஆட்சியதிகாரம் பறிபோகும் நிலை தோன்றலாம்.

அதிகாரத்தைத் தக்கவைக்க இலங்கை மீது அரசியல் அழுத்தங்களைச் சுமத்தினால், போர்வெறி கொண்டு சன்னதமாடும் சிங்களம், தனக்கு எதிரான நிலைப்பாட்டை பகிரங்கமாக எடுத்து விடுமென்கிற அச்ச?ம் இந்திய மத்திய அரசிற்கு உண்டு

கடந்த ஒரு சில நாட்களாக சிங்கள ஆட்சியாளர்கள் விடுக்கும் அச்சுறுத்தல்கள், அணி மாற்றத்திற்கான செய்திகளை ?தன்மைப்படுத் துகின்றன.

தமிழ் நாட்டின் அழுத்தங்களுக்கு இசைவாக நடைபெறும் யுத்தத்தை நிறுத்த ?டியாதென ஊடகத்துறை அமைச்சர் லஷ்மன் யாப்பா, அபேயவர்த்தன தெ?வித்த கருத்து குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்படாதவாறு, மிகுந்த பு?ந்துணர்வோடு செயற்படும் அதேவேளை பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தியாவின் ஆதரவை வேண்டி நிற்பதாகக் கூறி, மத்திய அரசை மேலும் இக்கட்டான நிலைக்குள் தள்ள இலங்கை ?யற்சிக்கிறது.

அதேவேளை, தமிழகம் விரும்பும் போர் நிறுத்தத்திற்கான புறச்சூழலை, எவ்வாறு உருவாக்கலாமென்று இந்தியாவிற்கு அறிவுரை வழங்குகிறார் அமைச்சர் யாப்பா.

அதாவது விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து, பேச்சுவார்த்தை மேசைக்கு வரு மாறு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென்கிற மாற்றுச் சிந்தனையை சிங்களம் ?ன்வைத்துள்ளது.

ஆனாலும் விடுதலைப் புலிகள் குறித்த எந்தவொரு விடய?ம், கலைஞ?ன் சர்வகட்சிக் கூட்ட தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்படவில்லையென்பதை ஸ்ரீலங்கா அரசு பு?ந்துகொள்ளவில்லை.

பு?யாதது போல் பாசாங்கு செய்வதும், பயங்கரவாதத்திற்கெதிரான போர் இதுவெனக் கிளிப்பிள்ளை போல் கூறுவதும் சிங்களத்தின் இராஜதந்திரமாக கணித்துக் கொள்ளலாம்.

இந்தியா போன்று, ஸ்ரீலங்கா அரசிற்கும் இரட்டைத் தலைவலியொன்று உருவாகியுள்ளதை இத்தருணத்தில் நோக்க வேண்டும்.


தமிழக எழுச்சி ஒருபுறமாக, ஜீ.எஸ்.பி.

பிளஸ் என்கிற ஆடை ஏற்றுமதி வ?ச்சலுகை இன்னொரு புறமாக இரு?னை அழுத்தங்களை ஸ்ரீலங்கா அரசு தற்போது எதிர்கொள்கிறது.

இந்த வ?ச் சலுகையைப் பெற வேண்டுமாயின் சர்வதேச மனித உ?மை நியமங்களை நடை?றைப்படுத்த வேண்டுமென்கிற நிர்ப்பந்தம் அரசின் மேல் சுமத்தப்படுகிறது.

ஆனாலும் பயங்கரவாதத்திற்கெதிராகப் போராடும் புண்ணிய தேசத்தின் மீது இவ்வகை யான அழுத்தங்களைச் சுமத்தக் கூடாதென்பதே தென்னிலங்கையின் எதிர்வாதமாகும்.

இவ்விவகாரம் குறித்து மந்தி? சபைக் கூட்டத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேவர்த்தக அமைச்சருமான ஜீ. எல். பீ?ஸ் பல சிக்கலான விடயங்களை விளக்கியுள்ளார்.

இருப்பினும் சலுகை பெற வேண்டுமாயின், மனித உ?மை மீறல்கள் பற்றிய விடயங்களை விசாரணைக்குட்படுத்த வேண்டுமென்கிற ஐரோப்பிய யூனியனின் வேண்டுதலை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதøன ?ற்று?ழுதாக நிராக?த்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் இறையாண்மையையும், சுய கௌரவத்தையும் விட்டுக் கொடுக்க ?டியாதென அக் கூட்டத்தில் வலியுறுத்தியதோடு இதற்கு மாற்றீடான பொருளாதாரச் சந்தைகளை, லத்தீன் அமெ?க்க, மத்திய கிழக்கு நாடுகளில் தேடுமாறு பணித்துள்ளார்.

ஆகவே இந்திய, ஐரோப்பிய யூனியன் மேற்கொள்ளவிருக்கும் எந்தவிதமாக அரசியல், பொருளாதார அழுத்தங்களையும், இலங்கை அரசு எதிர்கொள்ள தயாரென்பதையே இவை எடுத்துக் காட்டுகின்றன. தீவிரமான யுத்தப் பயணத்தை இன்றைய அரசாங்கம் நிறுத்தப் போவதில்லை. அதனைத் தடுக்க ?னையும் பிராந்திய, மேற்குலக சக்திகளுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டினை திடமாக எடுப்பதில் அது பின்னிற்கப் போவதில்லை.

ஆதலால் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைச் செயலாளர், தமிழக சஞ்சிகையொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் நிரந்தர நண்பன் யாரென்பதை இந்தியா உணர வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

அதனை உணர்த்தும் வல்லமையும், க?சனையும், அதன் கொள்கை வகுப்பாளர்களுக்கு உண்டாவென்பது ?க்கிய விடயம்.

விடுதலைப் புலிகளைத் தவிர்த்து, தீர்வுகளையும், மாற்றங்களையும் கொண்டு வரலாமென இந்தியா கற்பிதம் கொண்டால், தென்னாசியாவின் கள நிலைமை மேலும் மோசமடையும்.

ஆகவே ஆசியப் பிராந்தியம் குறித்த இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றமேற்பட வேண்டிய தருணம் இது. தனது உறுதியான போர் வெறி நிலைப்பாட்டினை தென்னிலங்கை வெளிப்படுத்தியுள்ளது.

இனி இந்தியா அரசின் நிலைப்பாடு என்ன வென்பதை அறிய ஈழத் தமிழர்கள் மிகுந்த ஆவலாக உள்ளனர்.

- சி.இதயச்சந்திரன்


Comments