படை உயிரிழப்பு 120ஆக உயர்வு, ஒரு பற்றாலியன் களமுனையில் இருந்து அற்றப்பட்டனர்


கிளிநொச்சி புதுமுறிப்பு, மற்றும் அறிவியல்நகர் நோக்கி சிறீலங்கா படையினர் நேற்று புதன்கிழமை மேற்கொண்ட முன்னகர்வு முறியடிப்பில் கொல்லப்பட்ட படையினரது எண்ணிக்கை 120ஆக உயர்வடைந்துள்ளதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 120 படையினர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை, மேலும் 280 படையினர் படுகாயம், மற்றும் காயமடைந்துள்ளனர்.

இதன்மூலம் சிறீலங்கா படைகளின் ஒரு பற்றாலியன் வரையிலான படையினர் ஒரு நாளில் களமுனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் வன்னிச் செய்தியாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

கொல்லப்பட்ட படையினரில் பலர் அண்மையில் படையில் இணைக்கப்பட்ட இள அகவையுடைய புதியவர்கள் என களமுனையில் உள்ள போராளிகள் தெரிவித்துள்ளனர்.

புதுமுறிப்பு நோக்கி முன்னேற முற்பட்ட படையினரும், மலையாளபுரத்தில் இருந்து அறிவியல்நகர் நோக்கி முன்னேற முற்பட்ட படையினரும் விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடியாது பின்வாங்கிச் சென்றனர்.

25இற்கும் மேற்பட்ட படையினது உடலங்கள் இரு தரப்பினாலும் மீட்க முயடியாத நிலையில், முன்னரங்க நிலைகளுக்கு இடையில் சிதறிக் கிடப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





நேற்றைய மோதலில் தமது தரப்பில் 20 படையினர் மட்டுமே கொல்லப்பட்டனர் எனவும், விடுதலைப் புலிகள் தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டதாகவும் சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது.

களமுனையில் அதிக படையினர் கொல்லப்படும்போது மோதல் பற்றிய தகவலை வெளியிடாது தவிர்க்கும் சிறீலங்கா அரசு, அதற்குப் பின்னர் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட உடலங்களின் எண்ணிக்கை அறிந்த பின்னர் தமது தரப்பு இழப்பினை வெளியிட்டு வருகின்றது.

நேற்றைய மோதலில் விடு்தலைப் புலிகளால் படையினரது 12 உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், தமது தரப்பில் 20 படையினர் கொல்லப்பட்டிருப்பதாக படைத் தரப்பு அறிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Comments